06-22-2003, 08:46 AM
நகரங்களை நோக்கி நகரும் மக்கள் வெறிச்சோடிப்போகும் கிராமங்கள்
மக்களின் மனதில் புதிய தெம்பு. ஊரை இழந்து உறவை இழந்து சொத்து இழந்து என்று இழந்தவற்றின் விபரத்தையே நீளமான பட்டியலாக வைத்திருந்து இனி இதுதான் கதி மீட்சிக்கு விமோசன மேயில்லை என்று நொந்துபோன மக்களின் மனதிலும் ஒரு வகையான திருப்தி இருந்தது.
வரலாறு காணாத வெற்றிகள் பலவற்றிற்குப் பின்தளத்தில் நின்று ஆக்கபுூர்வமான பங்களிப்பினை மனந்திறந்து ஆற்றியதன் வெளிப்பாடுகள்தான் அது.
நாடு எனக்கு செய்தது என்பதற்கு அப்பால் நாட்டுக்கு நான் ஆற்றியதன் வகையிலான மனத்திருப்தி என்றும் சொல்லலாம். புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு முன்பிருந்த வன்னி மக்களின் எண்ணங்களின் பிரதிபலிப்பு இவ வாறுதான் அமைந்திருந்தது.
யுத்தநிறுத்தம், உடன்படிக்கை, பாதை திறப்பு என அதன்பின்பு ஏற்பட்டுள்ள சமூக மாறுதல்கள் மக்களின்சிந்தனை வீச்சை சற்றுவேகமாக்கியது.
பல்வேறு இடப்பெயர் வின்போது அவ வப்போது அடைக்கலம் தந்த காணியின் ஒதுக்குபுறமான தற்காலிக காட்டுத்தடிகளால் அமைக்கப்பட்ட அந்த கொட்டில் வீடுகள் சிறிது சிறிதாக நகரங்களை நோக்கி நகரத் தொடங்குகின்றன. இது சமாதான உடன்படிக்கைக்கு பின்னான வெளிப்பாடுகள்.
ஐந்து வருடங்களாக வாழ்வுக்கு புகலிடம் அளித்து அடைக்கலம் தந்த அந்த சூழலுக்கு நன்றி சொல்லி மக்கள் புதுயுகம் ஒன்றினை நோக்கி நகர ஆரம்பித்துள்ளனா
இவ்வாறான நகர்வுகள் ஒரு சமூகத்தேவையின் அழுத்தத்தினால் இடம் பெறுகின்றதே தவிர நகர்விற்கான குடிசார் பொருண்மிய விழுக்காடு என்பது இம்மக்க ளிடையே புூச்சியமாகவேயுள்ளது.
காலம் ஏற்படுத்தியிருக்கின்ற மாற்றம் மக்களை மீண்டும் சொந்த இடங்களை நோக்கி இடம்பெயரச் செய்துள்ளது. கடுமையான போரியல் சூழல் ஒன்றுக்குள் எவ வித ஆடம்பர அபிவிருத்தியையோ அல்லது நவீன அறிவியல்துறைசார் நடைமுறையையோ தன்னுள் ஈடுபடுத்திக் கொள்ள முடியாத, இதற்கு வாய்ப்பில்லாத மக்கள் புதிய கலாச்சாரத்தோடும், புதுவகையான பொருளாதார பண்புகளோடும் கூடிய தமது பழைய நகர்ப்புறங்களுக்குச் செல்கையில் வேறுபட்ட நகர சூழலொன்றுக்குள் தங்களையும் திணித்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இவ வாறு நகரச்சூழலுக் கேற்றவாறு தங்களைத் திணிக்க முற்படுகின்றபோது நகர்ச் சூழலின் சமஅந்தஸ்துடன் தாங்களும் முகம்கொடுக்க முடியாது திணறுவதுதான் இன்று நாளாந்தம் காண்பதும் கேட்பது மான விடயங்களாக உள்ளது.
புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு பின்பு ஏற்பட்டுள்ள சொந்த இடங்களுக்கான இடப்பெயர்வில் சுமார் ஒரு லட்சம் மக்கள் திரும்பியுள்ளதாக பன்னாட்டு தொண்டர் நிறுவனம் ஒன்றின் புள்ளிவிபரம் தெரிவிக்கின்றது.
வன்னியின் சத்ஜெய நடவடிக்கைக்கு பின்பு நகரங்களாகவே மாறியிருந்த மல்லாவி, கந்தபுரம், புதுக்குடியிருப்பு, ஜெயபுரம், நாச்சிக்குடா போன்ற இடங்கள் மக்களின் சொந்த இடங்களுக்கான இடப்பெயர்வின் பின்பு மீண்டும் கிராமங்களாக காட்சி யளிக்கத்தொடங்கியுள்ளன.
சத்ஜயவுக்கு முன்பு கிராம கலாச்சாரத்தோடு ஒன்றித்திருந்த மக்கள் சத்ஜய இடப்பெயர்வின் பின்னான ஐந்து வருடங்கள் சாதாரண நகர்ப்புற வாழ்க்கையில் தங்களை இணைத்துக்கொண்ட வாழ்வியலுக்குப் பின் மீண்டும் கிராமங்களாக மாறும் தமது சொந்த இடங்களில் இருப்புக்கொள்ளாது அவர்களில் சிலரும் நகர்ப்புறங்களை நோக்கி நகருவதும் இயல்பாகிவிட்டது.
பல்வேறு இடப்பெயர்வுகளின் பின் ஏற்பட்ட புதிய உறவுக்குள் கலப்புத் திருமணங்களுக் கூடாக ஏற்பட்ட உறவுகள்கூட இவ வாறான நகர்ப்புறங்களை நோக்கிய நகர்விற்கு ஒரு து}ண்டுதலாக அமைந்தள்ளது.
இவ வாறான நகர்வுகள் ஒன்றும் வியப்புக்குரியவையல்ல. இருப்பினும் இவ வாறு நகரும் மக்கள் ஏற்கனவே நகர்ப்புற வாழ்க்கையில் இணைந்து ஒன்றித்திருக்கும் இவ வேளையில் தமது உறவினர்கள் தமது நண்பர்களின் நிலைகளுக்கேற்ப தங்களையும் அதற்கு ஈடாக்கிக் கொள்வதில் உருவாகியிருக்கின்ற உள்ளார்ந்த உளவியல் வெளிப்பாடுகள் என்பது மக்களின் பொருண்மிய பின்னடைவை பறைசாற்றுகின்றது.
நகர்ப்புற உறவுகளின் மனப்பதிவுகளில் ஏற்படுகின்ற மாறுதல்கள்தான் வன்னியி லிருந்த மக்களுக்கு அடுத்தகட்ட நகர்வொன்றை நோக்கிய சிந்தனை வெகுவிரைவாக து}ண்டப்படுவதற்கு காரணமாக அமைகின்றது.
ஏ-9 சாலையின் முதலாம் கட்டமாக ஓமாந்தையுூடான போக்குவரத்து திறந்து விடப்பட்டவுடன் ஏற்கனவே இடம்பெயர்ந்து வவுனியா நகர்ப்புறங்களில் தங்களை நிலைப்படுத்திக் கொண்ட மக்கள் தங்களின் தற்போதைய கலாச்சாரத்துடன் வருகைதர தொடங்கியவுடன் வன்னியிலுள்ள தங்களது உறவுகளுக்கு ஒருவகை வியப்பு வெளிப்படத் தொடங்கியது.
ஆனால் தத்துவார்த்தமான நோக்கில் எம்மக்களிடையே வன்னியின் அலையெழுந்த வெற்றிகளின் பின்னால் எல்லைகாத்த பெருமையின் உத்வேகத்தை வன்னிக்குள் வந்த மக்கள் பிரமிப்புடன் நோக்கியதானது அதைவிட பன்மடங்கு வியப்பை ஏற்படுத்தியிருந்தமைதான் குறிப்பிடத்தக்கது.
இவ வாறு வன்னிக்குள் வந்தவர்களில் ஒருவரான 55வயதுடைய சிவஞானம் வன்னியின் தனது உறவுகளை சுகம் கேட்டு உளப்புூர்வமாக விசாரிப்புகள் செய்கையில்தான் அவரின் தங்கையின் மகன் தனது நேசிப்புக்குரியவன் சிவகரன் கிளாலி சண்டையில் வீரச்சாவு என்பதை கேட்டு அதிர்ந்து போனவராய் திருவுருவப்படத்தைக் கட்டிப்பிடித்தவராய்லு}
எஸ்.வி.ஆர். கஜனி
மக்களின் மனதில் புதிய தெம்பு. ஊரை இழந்து உறவை இழந்து சொத்து இழந்து என்று இழந்தவற்றின் விபரத்தையே நீளமான பட்டியலாக வைத்திருந்து இனி இதுதான் கதி மீட்சிக்கு விமோசன மேயில்லை என்று நொந்துபோன மக்களின் மனதிலும் ஒரு வகையான திருப்தி இருந்தது.
வரலாறு காணாத வெற்றிகள் பலவற்றிற்குப் பின்தளத்தில் நின்று ஆக்கபுூர்வமான பங்களிப்பினை மனந்திறந்து ஆற்றியதன் வெளிப்பாடுகள்தான் அது.
நாடு எனக்கு செய்தது என்பதற்கு அப்பால் நாட்டுக்கு நான் ஆற்றியதன் வகையிலான மனத்திருப்தி என்றும் சொல்லலாம். புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு முன்பிருந்த வன்னி மக்களின் எண்ணங்களின் பிரதிபலிப்பு இவ வாறுதான் அமைந்திருந்தது.
யுத்தநிறுத்தம், உடன்படிக்கை, பாதை திறப்பு என அதன்பின்பு ஏற்பட்டுள்ள சமூக மாறுதல்கள் மக்களின்சிந்தனை வீச்சை சற்றுவேகமாக்கியது.
பல்வேறு இடப்பெயர் வின்போது அவ வப்போது அடைக்கலம் தந்த காணியின் ஒதுக்குபுறமான தற்காலிக காட்டுத்தடிகளால் அமைக்கப்பட்ட அந்த கொட்டில் வீடுகள் சிறிது சிறிதாக நகரங்களை நோக்கி நகரத் தொடங்குகின்றன. இது சமாதான உடன்படிக்கைக்கு பின்னான வெளிப்பாடுகள்.
ஐந்து வருடங்களாக வாழ்வுக்கு புகலிடம் அளித்து அடைக்கலம் தந்த அந்த சூழலுக்கு நன்றி சொல்லி மக்கள் புதுயுகம் ஒன்றினை நோக்கி நகர ஆரம்பித்துள்ளனா
இவ்வாறான நகர்வுகள் ஒரு சமூகத்தேவையின் அழுத்தத்தினால் இடம் பெறுகின்றதே தவிர நகர்விற்கான குடிசார் பொருண்மிய விழுக்காடு என்பது இம்மக்க ளிடையே புூச்சியமாகவேயுள்ளது.
காலம் ஏற்படுத்தியிருக்கின்ற மாற்றம் மக்களை மீண்டும் சொந்த இடங்களை நோக்கி இடம்பெயரச் செய்துள்ளது. கடுமையான போரியல் சூழல் ஒன்றுக்குள் எவ வித ஆடம்பர அபிவிருத்தியையோ அல்லது நவீன அறிவியல்துறைசார் நடைமுறையையோ தன்னுள் ஈடுபடுத்திக் கொள்ள முடியாத, இதற்கு வாய்ப்பில்லாத மக்கள் புதிய கலாச்சாரத்தோடும், புதுவகையான பொருளாதார பண்புகளோடும் கூடிய தமது பழைய நகர்ப்புறங்களுக்குச் செல்கையில் வேறுபட்ட நகர சூழலொன்றுக்குள் தங்களையும் திணித்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இவ வாறு நகரச்சூழலுக் கேற்றவாறு தங்களைத் திணிக்க முற்படுகின்றபோது நகர்ச் சூழலின் சமஅந்தஸ்துடன் தாங்களும் முகம்கொடுக்க முடியாது திணறுவதுதான் இன்று நாளாந்தம் காண்பதும் கேட்பது மான விடயங்களாக உள்ளது.
புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு பின்பு ஏற்பட்டுள்ள சொந்த இடங்களுக்கான இடப்பெயர்வில் சுமார் ஒரு லட்சம் மக்கள் திரும்பியுள்ளதாக பன்னாட்டு தொண்டர் நிறுவனம் ஒன்றின் புள்ளிவிபரம் தெரிவிக்கின்றது.
வன்னியின் சத்ஜெய நடவடிக்கைக்கு பின்பு நகரங்களாகவே மாறியிருந்த மல்லாவி, கந்தபுரம், புதுக்குடியிருப்பு, ஜெயபுரம், நாச்சிக்குடா போன்ற இடங்கள் மக்களின் சொந்த இடங்களுக்கான இடப்பெயர்வின் பின்பு மீண்டும் கிராமங்களாக காட்சி யளிக்கத்தொடங்கியுள்ளன.
சத்ஜயவுக்கு முன்பு கிராம கலாச்சாரத்தோடு ஒன்றித்திருந்த மக்கள் சத்ஜய இடப்பெயர்வின் பின்னான ஐந்து வருடங்கள் சாதாரண நகர்ப்புற வாழ்க்கையில் தங்களை இணைத்துக்கொண்ட வாழ்வியலுக்குப் பின் மீண்டும் கிராமங்களாக மாறும் தமது சொந்த இடங்களில் இருப்புக்கொள்ளாது அவர்களில் சிலரும் நகர்ப்புறங்களை நோக்கி நகருவதும் இயல்பாகிவிட்டது.
பல்வேறு இடப்பெயர்வுகளின் பின் ஏற்பட்ட புதிய உறவுக்குள் கலப்புத் திருமணங்களுக் கூடாக ஏற்பட்ட உறவுகள்கூட இவ வாறான நகர்ப்புறங்களை நோக்கிய நகர்விற்கு ஒரு து}ண்டுதலாக அமைந்தள்ளது.
இவ வாறான நகர்வுகள் ஒன்றும் வியப்புக்குரியவையல்ல. இருப்பினும் இவ வாறு நகரும் மக்கள் ஏற்கனவே நகர்ப்புற வாழ்க்கையில் இணைந்து ஒன்றித்திருக்கும் இவ வேளையில் தமது உறவினர்கள் தமது நண்பர்களின் நிலைகளுக்கேற்ப தங்களையும் அதற்கு ஈடாக்கிக் கொள்வதில் உருவாகியிருக்கின்ற உள்ளார்ந்த உளவியல் வெளிப்பாடுகள் என்பது மக்களின் பொருண்மிய பின்னடைவை பறைசாற்றுகின்றது.
நகர்ப்புற உறவுகளின் மனப்பதிவுகளில் ஏற்படுகின்ற மாறுதல்கள்தான் வன்னியி லிருந்த மக்களுக்கு அடுத்தகட்ட நகர்வொன்றை நோக்கிய சிந்தனை வெகுவிரைவாக து}ண்டப்படுவதற்கு காரணமாக அமைகின்றது.
ஏ-9 சாலையின் முதலாம் கட்டமாக ஓமாந்தையுூடான போக்குவரத்து திறந்து விடப்பட்டவுடன் ஏற்கனவே இடம்பெயர்ந்து வவுனியா நகர்ப்புறங்களில் தங்களை நிலைப்படுத்திக் கொண்ட மக்கள் தங்களின் தற்போதைய கலாச்சாரத்துடன் வருகைதர தொடங்கியவுடன் வன்னியிலுள்ள தங்களது உறவுகளுக்கு ஒருவகை வியப்பு வெளிப்படத் தொடங்கியது.
ஆனால் தத்துவார்த்தமான நோக்கில் எம்மக்களிடையே வன்னியின் அலையெழுந்த வெற்றிகளின் பின்னால் எல்லைகாத்த பெருமையின் உத்வேகத்தை வன்னிக்குள் வந்த மக்கள் பிரமிப்புடன் நோக்கியதானது அதைவிட பன்மடங்கு வியப்பை ஏற்படுத்தியிருந்தமைதான் குறிப்பிடத்தக்கது.
இவ வாறு வன்னிக்குள் வந்தவர்களில் ஒருவரான 55வயதுடைய சிவஞானம் வன்னியின் தனது உறவுகளை சுகம் கேட்டு உளப்புூர்வமாக விசாரிப்புகள் செய்கையில்தான் அவரின் தங்கையின் மகன் தனது நேசிப்புக்குரியவன் சிவகரன் கிளாலி சண்டையில் வீரச்சாவு என்பதை கேட்டு அதிர்ந்து போனவராய் திருவுருவப்படத்தைக் கட்டிப்பிடித்தவராய்லு}
எஸ்.வி.ஆர். கஜனி

