10-28-2005, 03:31 PM
பொருள்முதல்வாதத்தை மூலக்கருவாக கொண்டு உருவாக்கப்பட்ட மாக்சியம் பல உயர்ந்த சிந்தனைகளை உள்ளடக்கியபோதும் அதனை நடைமுறைக்கு ஏற்றவகையில் பிரயோகிக்க கூடியவழியில் சிந்திக்கவில்லை என்பது பொதுவான குற்றச்சாட்டு. உற்பத்திக்காரணிகள் பொதுவானதாயிருந்தால் சிக்கல்கள் தீர்ந்துவிடும் என எண்ணிய மாக்சு அத்தகைய சந்தர்ப்பங்களில் தனிமனித நடத்தை எப்படி பொருளாதாரத்தை பாதிக்கும் என்பதை கருத்தில் எடுக்கவில்லை. எல்லோருக்கும் எல்லாம் பொது என்ற நிலைப்பாடு வரும்போது தனிமனித உத்வேகம் குறைந்து விடும். இந்த அம்சம் பொருளாதார வளர்ச்சிக்கு மிக முக்கியமானது.
சோவியத்தின் வீழ்ச்சிக்கு அமெரிக்கா ஒரு முக்கிய காரணியாக இருந்தபோதும் அதுதான் முழுமுதல் காரணி என்று சொல்லிவிடுவதற்கில்லை. உள்நாட்டு பொருளாதார அரசியல் கொள்கைகளின் உறுதியற்ற தன்மையுடன் இறுக்கமற்ற அரசியல்தலைமை கைகோர்த்தபோது புறக்காரணிகள் இலகுவாக சோவியத்தை உடைக்க வழிகோலின.
முதலாளித்துவத்தின் வலிமையாதனில் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அது தனிமனித நடத்தைக்கு சமாந்தரமாக செல்வதுதான். முதலாளித்துவமும் தனிமனித நடத்தையும் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் ஒன்றையொன்று குறுக்கிடுவதில்லை. ஒன்றுக்கொன்று உறுதுனை செய்தவாறு முன்னோக்கி நகரும். இது எப்போதும் ஒரு ஆரோக்கியமான நகர்வு என்பது எனது வாதமல்ல. இந்த முனைப்பு கடிவாளமிடப்பட்டு வினைத்திறனுடன் கையாளப்படுமெனில் பலருக்கும் பலனளிக்கும்
சோவியத்தின் வீழ்ச்சிக்கு அமெரிக்கா ஒரு முக்கிய காரணியாக இருந்தபோதும் அதுதான் முழுமுதல் காரணி என்று சொல்லிவிடுவதற்கில்லை. உள்நாட்டு பொருளாதார அரசியல் கொள்கைகளின் உறுதியற்ற தன்மையுடன் இறுக்கமற்ற அரசியல்தலைமை கைகோர்த்தபோது புறக்காரணிகள் இலகுவாக சோவியத்தை உடைக்க வழிகோலின.
முதலாளித்துவத்தின் வலிமையாதனில் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அது தனிமனித நடத்தைக்கு சமாந்தரமாக செல்வதுதான். முதலாளித்துவமும் தனிமனித நடத்தையும் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் ஒன்றையொன்று குறுக்கிடுவதில்லை. ஒன்றுக்கொன்று உறுதுனை செய்தவாறு முன்னோக்கி நகரும். இது எப்போதும் ஒரு ஆரோக்கியமான நகர்வு என்பது எனது வாதமல்ல. இந்த முனைப்பு கடிவாளமிடப்பட்டு வினைத்திறனுடன் கையாளப்படுமெனில் பலருக்கும் பலனளிக்கும்

