06-22-2003, 08:43 AM
மனிதனை
மனிதனாக்குவது உணர்ச்சிகள்தான்.
உணர்ச்சிகள் இல்லாமல் மனிதன் வாழ முடியாது. அதேபோல் வெறும் சிந்தனைகளோடும் மனிதன் வாழமுடியாது. சிந்தனைகளும் உணர்ச்சிகளும் ஒன்றோடொன்று கலந்துதான் வாழ்க்கை அமைகிறது. இவ உணர்ச்சிகள்தான் மனிதன் பிழைத்திருக்க வழி செய்வதோடு அவனின் உடல் உள வளர்ச்சிக்கும் ஏதுவாக அமைகின்றது.
வைத்திய கலாநிதி
எழுமதி கரிகாலன்
னிதனை மனிதனாக்குவது உணர்ச்சிகள்தான். உணர்ச்சிகள் இல்லாமல் மனிதன் வாழ முடியாது. அதேபோல் வெறும் சிந்தனைகளோடும் மனிதன் வாழமுடியாது. சிந்தனைகளும் உணர்ச்சிகளும் ஒன்றோடொன்று கலந்துதான் வாழ்க்கை அமைகிறது. இவ உணர்ச்சிகள்தான் மனிதன் பிழைத்திருக்க வழி செய்வதோடு அவனின் உடல் உள வளர்ச்சிக்கும் ஏதுவாக அமைகின்றது.
பொதுவாக மனித உணர்ச்சிகளில் அன்பு, இரக்கம், மகிழ்ச்சி, கோபம், கவலை, பயம், தயக்கம் என்பன முக்கியமாக அடங்குகின்றன. மேலும் இம் மனித உணர்ச்சிகள் எப்போதும் நிலையாக இருப்பதில்லை மாறி மாறி வருபவைகள். இவ வாறான உணர்ச்சி மாற்றங்களை நாம், நமது அன்றாட வாழ்வில் காணலாம். ஆனால் இவ உணர்ச்சிகள் அளவிற்கு அதிகமாக அல்லது குறைவாக வெளிப்படுகின்ற போது அவை நோயாக பரிணமிக்கின்றன. இவற்றையே நாம் உள நோய்கள் என்கின்றோம். மனித உணர்வுகள் எப்போதும் அளவுடன் இருந்தால்தான் வாழ்க்கை சுகமாகவும், சீராகவும் ஓடிக்கொண்டிருக்கும். எனவே மனித வாழ்வை உருவாக்குவது உணர்ச்சிகள்தான் என்பதனை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
இனி, நோய்கள் ஏற்படுவதற்குரிய காரணங்களை ஆராய்ந்து பார்த்தால்,
1. மூளைநரம்பு மண்டலத்தின் பாதிப்பு
2. பாரம்பரியம்
3. குடும்பத்திலுள்ள குறைபாடுகள்
4. சமூக பொருளாதாரக் குறைபாடுகள்
5. அதிர்ச்சியுூட்டும் நிகழ்வுகள்
ரூசூ009;போன்றவற்றை முக்கியமாக எடுத்துக் கொள்ளலாம். மேலும், இக்காரணங்களினால் ஒருவரின் ஆளுமை வளர்ச்சியிலும் குறைவு ஏற்பட்டு அதனாலும் உள நோய் உண்டாகின்றது. இங்கு உள நோய்கள் 2 வகையாகப் பிரிக்கப்படுகின்றன.
1. பாரது}ரமானவை- இதற்கு மருத்துவ
சிகிச்சை அவசியம்.
2. பாரது}ரமற்றவை- இதனைக் குணப்படுத்துவதற்குச் சரியான காரணங்களைக் கண்டறிந்து அதை நிவர்த்தி செய்தலும், தகுந்த உளவளத்துணை வழங்குதலும் போதுமானதாகும்.
இங்கு நாம் பாரது}ரமற்ற உளத்தாக்கங்களில்
1. பதட்ட நிலை
2. மனத்தளர்ச்சி
3. மன அழுத்தம்
4. அதிகரித்த பயம்
5. கிஸ்hPரியா
6.உணர்ச்சிகளால் தோன்றும் உடல்
நோய்கள்
உ-ம்: குடற்புண், தொய்வு, உடல் இரத்த அழுத்தம், கபாலக்குத்து போன்றவற்றை முக்கியமாகக் கொள்ளலாம். மனிதனின் உணர்வுகளை அளவிடுவதற்குப் பின்வரும் வழிமுறைகள் கையாளப்படுகின்றன.
1. முகப்பிரதிபலிப்பு
2. செயற்பாடு
3. நடத்தை
ஒருவரின் முகத்தில் ஏற்படுகின்ற மாற்றங்களை வைத்துக்கொண்டு கவலை, பயம், சந்தோசம், ஆவல், கோபம், வெறுப்பு போன்ற உணர்வுகளைக் கண்டறியலாம். இங்கு கண் இல்லாக் குழந்தைகளும், ஐந்தறிவு படைத்த மிருகங்களும் கூட தம் உணர்வுகளை முகத்தில் பிரதிபலிக்கின்றன. ஆகவே இப்பிரதிபலிப்பானது பிறப்பிலிருந்தே வருகின்றது.
இங்கு இவ வகையான உளத் தாக்கங்கள் ஏற்பட்டு அதற்கு சிகிச்சை பெறுவதனைவிட இவ வாறான பாதிப்புக்கள் வராமல் தடுப்பதே வாழ்க்கையை இடையுூறு இன்றி நடாத்திச் செல்ல வழிவகுக்கும்.
இவ வுளப்பாதிப்புக்கள் வராமல் தடுப்பதற்கு என்னென்ன விதங்களில் வாழ்வில் எண்ணங்களுக்கும் அதன் பிரதிபலிப்புகளுக்கும் செயல்வடிவம் கொடுக்கலாம் என்பதனைப் பற்றிப் பார்ப்போம்.
பொதுவாகப் பெண்கள்தான் ஆண்களைவிடக் கூடுதலாக உணர்ச்சித் தாக்கங்களுக்கு ஆட்கொள்ளப்படுகின்றனர் என்ற கருத்து நிலவுகின்றது. ஆனால் இருவரும் ஒரே அளவிலேயே தாக்கங்களுக்கு உள்ளாகின்றனர் என்று ஆய்வுகள் கூறுகின்றன. எனினும் பெண்கள் ஆண்களைவிடத் தம் உணர்வுகளை கூடுதலாக வெளிக்காட்டுகின்றனர் என்றும் ஆண்கள் தம் உணர்வுகளை அடக்கி வைப்பதனால் இவர்கள் கூடுதலாக உணர்ச்சிகளால் ஏற்படும் உடல் நோய்களுக்கு ஆளாகின்றனர் என்றும் தெரியவந்துள்ளது.
மன அழுத்தத்தில் இருந்து மீள்வதற்குத் தன்னம்பிக்கையும் தன்மதிப்பும் அவசியம். மேலும் திறமைகளையும் சக்திகளையும் வளர்த்துக்கொள்ளவும் வேண்டும். படிப்பு, பணம் இல்லாவிட்டால் கூட ஏன் கை, கால் இல்லாமலும் ஒருவனால் வாழ்க்கையில் வெற்றிகளையும், சாதனைகளையும் படைக்க முடியும் என்பதற்குப் பல சான்றுகள் உண்டு. இதற்குப் பொறுப்பைத் தட்டிக்கழிக்கின்ற குணம் இல்லாமலும் உடற்பயிற்சியிலும் மனப் பயிற்சியிலும் தேர்வு பெறும் எண்ணம் இருக்க வேண்டும்.
வாழ்க்கை என்பது நிகழ்ச்சி நிரல் மட்டுப்போட்டு நடக்கின்ற நிகழ்வல்ல. அங்கு எதிர்பாராத சம்பவங்களும் வாய்ப்புக்களும் மாறிமாறி கலந்து வருவதைக் காணலாம். இப்படி வருகின்ற எதிர்பாராத வாய்ப்புக்களில் ஒன்றுதான் பிரச்சினை ஆகும். இங்கு பிரச்சினையை பெரும் பிரச்சினையாக பார்ப்பதுதான் எமக்கு பிரச்சினையாகின்றது.
இங்கு சிலர் சிறிய பிரச்சினையை புூதாகரமாகப் பார்ப்பார்கள். இது பிரச்சினையை மேலும் கூட்டுமே தவிர ஒருபோதும் குறைக்காது. நாம் எப்போதும் பிரச்சினையை ஓர் தண்டனையாக எடுத்துக் கொள்ளாமல் சவாலாக எடுத்துக்கொண்டு செயற்பட வேண்டும்.
ரூசூ009;அடுத்ததாக கவலை எல்லோருக்கும் பொதுவாக ஏற்படுகின்ற ஒன்றுதான். ஆனால் பலர் இக்கவலையை வாழ்க்கையில் இன்றியமையாத ஒன்றாக எடுத்துக்கொண்டு வேதனையில் வாழ்கின்றதைக் காண்கின்றோம். இங்கு நாம் இழப்பிற்காக வருந்த வேண்டும். ஆனால் அதை பின் விட்டுவிட்டுச் செயற்பட வேண்டும். சிலர் வாழ்வில் நடைபெற்ற சந்தோச, வெற்றி நிகழ்வுகளை விட்டுவிட்டு எப்போதும் தம் வாழ்வில் ஏற்பட்ட துன்ப, தோல்வி நிகழ்வுகளையே மீண்டும் மீண்டும் நினைவு கூர்ந்து கவலைப்பட்டுக்கொண்டே இருப்பர். இதனால் நட்டமேயொழிய லாபம் எதுவுமில்லை. இங்கு மேலும் சிலர் எதிர்காலத்தைப் பற்றியும் கடந்த காலத்தைப் பற்றியும் கவலைப்படுவர்.
வேறு சிலர் காரணமின்றி கவலைப்படுவர். இன்னும் சிலர் தம் இயலாமையை நினைத்து தம்மைத்தாமே தாழ்த்திக் கவலைப்படுவர். அத்துடன் சந்தோசமான விடயங்களை விட கோபமான நிகழ்வுகளே ஆழ்மனதில் பதிகின்றன.
இங்கு கடந்த காலம் என்பது துயர் அல்லது கனவு. எதிர்காலமென்பது புதிர் அல்லது கற்பனை. நிகழ்காலம் என்பது தான் எமக்குக் கிடைத்த பரிசு. எனவே நாம் இன்றைய நாளைப் பற்றிச் சிந்திப்போம், செயற்படுவோம்.
நாம் பார்க்கும் கோணம் எப்போதும் சரியானதாக இருக்க வேண்டும். சிலர் கண்ணுக்குத் தெரிந்த நல்ல விடயங்களை விட்டுவிட்டு அதில் தெரியும் சிறிய விடயங்களை எடுத்துக்கொண்டு கவலைப்பட்டு இதனால் சந்தோசத்தைத் தொலைத்துவிட்டுத் திரிகின்றார்கள்.
இதேபோலத்தான் காது கொடுத்துக் கேட்பதிலும் கோட்டை விட்டு விடுகின்றோம். பார்த்தல், கேட்டல் ஆகிய இரு விடயங்களையும் முறையே கண், காது மட்டும் செய்வதில்லை. இத்துடன் நாம் ஒவ வொரு மனிதனைப் பற்றிக் கொண்டிருக்கும் தெளிவில்லா ஆதாரம் இல்லா அபிப்பிராயம் என்கின்ற ஒரு சிறு துவாரத்தின் ஊடாகவும் பார்க்கின்றோம். ஒவ வொருவருக்கும் மற்றவர்மீது எப்போதும் ஓர் அபிப்பிராயப் பார்வை இருக்கும். அடுத்ததாக ஒவ வொரு தாக்கத்திற்கும் இரண்டு பெறுபேறுகள் இருக்கும். உதாரணமாக வெற்றி, தோல்வி. எந்தவித ஒரு தாக்கமும் ஆட்டிப்படைத்தாலும் அதில் இருந்து சிறப்பான அனுபவத்தைப் பெறமுயல வேண்டும். முடியாது என்ற வார்த்தை எம் அகராதியில் வரவே கூடாது. ஓர் முயற்சி பலதடவைகள் தோற்றால் அது தோல்வி அல்ல. அவற்றை வெற்றிக்கான படிகளாக எடுத்துக்கொள்ள வேண்டும். அத்தோல்விகளிலிருந்து தோல்விக்கான காரணத்தை கண்டறிந்து எதிர்காலத்தில் நிவர்த்தி செய்ய வேண்டும். இதனை நாம் எமது தேசியத் தலைவரின் வழிகாட்டலில் கண்டறிந்து கொள்ளலாம்.
ரூசூ009;நம் வாழ்க்கையில் தோல்விகள், பிரச்சினைகள், கவலைகள், குழப்பங்கள் இல்லாத இடமென்றால் சுடுகாடு மட்டும்தான். இங்கு கடந்தகால பிரச்சினைகள் பாதிப்புக்கள் நமக்கு பாடமாக இருக்க வேண்டுமே தவிர ஒரு போதும் பாரமாக இருக்கக் கூடாது. எமக்கு மந்தம் சாதனையின் பின்பும் வரும். இதனை அசதி என்போம். சோதனையின் பின்பும் வரும் இதனைச் சோர்வு என்போம். எமக்கு அசதி வரலாம். ஆனால் சோர்வு வரக்கூடாது.
மேலும் எம் வாழ்வில் சலிப்பு அல்லது விரக்தி ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நாம் பொதுவாக எதிர்பார்த்த குறிக்கோளை எட்டாவிட்டால் சலிப்படைகின்றோம். இது தவிர ஏமாற்றங்களும் ஒருவித தோல்விதான். அவைகளும் எம் வாழ்வில் வரத்தான் செய்யும். எம்மை நாமே உற்சாகப்படுத்துவதுதான் சலிப்பைப் போக்குவதற்குச் சிறந்த வழி. இதைவிட எமது செயற்திறனை மாற்றி அமைப்பதினாலும் உற்சாகம் ஏற்படலாம் இதற்கு உதாரணமாக சம்பள உயர்வு அல்லது பதவி உயர்வு கொடுக்கலாம். இடமாற்றம் அல்லது பதவிமாற்றம் செய்யலாம்.
அடுத்ததாக தாழ்வு மனப்பான்மை எம்மை அணுகாதவாறு பார்த்துக் கொள்ளவேண்டும்.
இதில் மூன்று வகைகள் உண்டு.
1. உடல் சார்ந்த தாழ்வுமனம்
2. அறிவு சார்ந்த தாழ்வுமனம்
3. செயல் சார்ந்த தாழ்வுமனம்
ஒருவர் தன் தைரியத்தையும், நம்பிக்கையையும் இழக்கின்ற போதும் தன்னோடு மற்றவரை உடல், அறிவு, செயல் hPதியாக ஒப்பிட்டுப் பார்க்கின்றபோதும் அவருக்குத் தாழ்வு மனப்பான்மை உண்டாகின்றது. இவர்கள் தனிமை விரும்பிகளாக இருப்பார்கள். பிறரோடு பழக முன்வரமாட்டார்கள். எந்தசெயலிலும் பின்னடிப்பார்கள். சிலசமயம் தற்கொலை முயற்சியிலும் ஈடுபடுவார்கள். இத்தாழ்வு மனப்பள்ளத்தாக்கில் இருந்து வெளியேறுவதற்கு ஆக்கபுூர்வமான சிந்தனைகளை பிரயோகித்து, பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும். ஒருபோதும் அவநம்பிக்கை கொள்ளக்கூடாது. எதிர்மறையாகச் சிந்திக்கக் கூடாது. "இயலாது, முடியாது" என்ற வார்த்தைகளை இயலுமானவரையில் தவிர்க்கவேண்டும். இவ அவநம்பிக்கையினால் முன்னேற வேண்டும் என்று நினைத்தாலும்கூட முடியாமல் இருக்கும் எப்போதும் முற்போக்காக சிந்திக்க வேண்டும். ஆனால் இம் முற்போக்கு சிந்தனைகூட கொஞ்ச நாட்களுக்குத்தான் நீடிக்கும் என்பதால் சிந்தனைகளை நீண்ட கால நோக்கோடு தள்ளிநின்று கவனித்து சகல உள மாற்றங்களையும் அனுபவங்களாக ஏற்றுக் கொள்கின்ற மனநிலையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
அத்துடன் எம்மிடமுள்ள குறைகளைக்கூட வாழ்க்கைக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அடுத்ததாக நாம் தவறுகளை ஒருபோதும் ஏற்றுக்கொள்வதில்லை. அவற்றை எப்போதும் நியாயப்படுத்தவே முனைகின்றோம். இது தவறானது. இதனையே குதர்க்க புத்தி என்பர்.
எனவே நாம் தவறுகளை ஏற்றுக்கொண்டு திருந்த முயலவேண்டும். மேலும் நாம் மற்றவர்மீது வீண்பழி சுமத்துவதையும் தவிர்க்கவேண்டும். இங்கு தவறுகள் சுட்டிக்காட்டப்பட வேண்டுமேயொழிய தவறு பிடிக்க வேண்டும் என்று அலையக்கூடாது. ஒருவருக்கு இன்னொருவர் மீது தப்பான அபிப்பிராயம், சந்தேகம் என்பன வந்துவிட்டால் அவர் செய்யும் நல்ல விடயங்கள்கூட தப்பாகவே தெரியும். இதனை வாழ்வில் தவிர்க்கவேண்டும். நாம் எப்போதும் ஒருவரை ஆற்றல்திறன் ஊடாகவே பார்க்கவேண்டும். ஒருவர் பிழை செய்துவிட்டால் அதை பிழையென்று அடித்துச்சொல்லாமல் அவர் தான் செய்தவற்றைத் தானாகவே உணரும் வகையில் புரியவைக்கவேண்டும்.
மேலும் ஒரு மனிதனின் அடிமனம் தன்னை எதிராளி இகழும்போது, கசப்பான வார்த்தை கூறும்போது காயப்படுவதைவிடத் தன்னை ஒரு பொருட்டாக மதிக்காத போதே கூடுதலாகக் காயப்படுகின்றது. எனவே மனிதனை மதிக்கத் தெரியவேண்டும்.
அடுத்ததாக நம்மை நாமே தாழ்த்திக் கொண்டு சிந்திக்கும்போது நம்மிடமிருந்து வெளிப்படும் எதிர்விளைவு கோபமாகும். நாம் மற்றவர்கள் மீது கோபப்படும் போது நிதானத்தை இழக்கின்றோம். கை, கால் படபடக்கின்றது. இரத்தம் கொதிக்கின்றது. இது எதிரி செய்த தவறை ஜீரணித்துக்கொள்ள இயலாமல் எமக்கு நாமே கொடுக்கின்ற தண்டனையாக எடுத்துக்கொள்ளலாமல்லவா? ஆனால் கோபப்படாமல் இருக்கமுடியாது. கோபம் வருகின்றபோது அதனை அடக்குவதனாலும் உடலுக்குத்தான் பாதிப்பு. எனவே அளவாகத் தேவையோடு கோபப்படுவோம். நிதானமாகப் பிரச்சினைகளை ஆராய்வோம். காரணத்தைக் கண்டறிந்து சுமுகமாகத் தீர்ப்போம். மேலும் நாம் சந்தோசப்படுகின்றபோதுகூட எதனையும் எதிர்பார்ப்பது தவறு. நாம் எமக்கொரு பொருளைப் பரிசாகப் பெறுவதிலுள்ள சந்தோசத்திலும் பார்க்க மற்றவர்களுக்கு கொடுப்பதில்தான் அதிக சந்தோசம் கொள்ளவேண்டும். நாம் சந்தோசப்படுகின்றபோது எல்லாம் மனம்விட்டுச் சிரிக்கவேண்டும். சந்தர்ப்பங்கள் கிடைக்கும் போது பாட வேண்டும், ஆட வேண்டும். இவ வாறு செய்வதினால் மனதில் பாரம் குறையும், கவலைகள் கரையும், மன இறுக்கம் தளரும், புத்துணர்ச்சி ஏற்படும். ஒரு மனிதன் முன்னுக்கு வருவதற்கு 35வீதம் அறிவும் 65 வீதம் உறவைப்பலமாக்கும் ஆற்றல் அல்லது திறனும் அவசியமாகின்றது. இதில் இருந்து படிப்பறிவில்லாத ஒருவன்கூட சிறந்த மனிதனாக விளங்க முடியும் என்று தெரிகின்றதல்லவா? அத்துடன் ஒரு மனிதனின் வாழ்க்கையானது நான்கு கட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவையாவன,
1. தனிப்பட்ட வாழ்க்கை
2. குடும்ப வாழ்க்கை
3. தொழில் hPதியான வாழ்க்கை
4. சமூக வாழ்க்கை
இந்த நான்கு வகையான வாழ்க்கையையும் ஒரே சீராக கொண்டு செல்லக்கூடிய மனநிலையை ஒவ வொரு மனிதனும் பெற வேண்டும். இதுதான் வாழ்வின் வெற்றிக்கு வழி வகுக்கும்.
இறுதியாக நாம் வாழ்க்கையில் இழந்தால் மீளப்பெறமுடியாத விடயங்களில்
1. சொல்லப்பட்ட வார்த்தை
2. தவறவிடப்பட்ட வாய்ப்பு
3. கடந்துபோன நிமிடம்
போன்றவற்றை முக்கியமாக எடுத்துக்கொண்டு வார்த்தைகளைக் கவனமாக உதிர்க்கவேண்டும். வாய்ப்புக்களை சரியான முறையில் பயன்படுத்தவேண்டும். நிகழ்காலத்திற்குரிய விழிப்புக்களை ஏற்படுத்த வேண்டும்.
மனிதனாக்குவது உணர்ச்சிகள்தான்.
உணர்ச்சிகள் இல்லாமல் மனிதன் வாழ முடியாது. அதேபோல் வெறும் சிந்தனைகளோடும் மனிதன் வாழமுடியாது. சிந்தனைகளும் உணர்ச்சிகளும் ஒன்றோடொன்று கலந்துதான் வாழ்க்கை அமைகிறது. இவ உணர்ச்சிகள்தான் மனிதன் பிழைத்திருக்க வழி செய்வதோடு அவனின் உடல் உள வளர்ச்சிக்கும் ஏதுவாக அமைகின்றது.
வைத்திய கலாநிதி
எழுமதி கரிகாலன்
னிதனை மனிதனாக்குவது உணர்ச்சிகள்தான். உணர்ச்சிகள் இல்லாமல் மனிதன் வாழ முடியாது. அதேபோல் வெறும் சிந்தனைகளோடும் மனிதன் வாழமுடியாது. சிந்தனைகளும் உணர்ச்சிகளும் ஒன்றோடொன்று கலந்துதான் வாழ்க்கை அமைகிறது. இவ உணர்ச்சிகள்தான் மனிதன் பிழைத்திருக்க வழி செய்வதோடு அவனின் உடல் உள வளர்ச்சிக்கும் ஏதுவாக அமைகின்றது.
பொதுவாக மனித உணர்ச்சிகளில் அன்பு, இரக்கம், மகிழ்ச்சி, கோபம், கவலை, பயம், தயக்கம் என்பன முக்கியமாக அடங்குகின்றன. மேலும் இம் மனித உணர்ச்சிகள் எப்போதும் நிலையாக இருப்பதில்லை மாறி மாறி வருபவைகள். இவ வாறான உணர்ச்சி மாற்றங்களை நாம், நமது அன்றாட வாழ்வில் காணலாம். ஆனால் இவ உணர்ச்சிகள் அளவிற்கு அதிகமாக அல்லது குறைவாக வெளிப்படுகின்ற போது அவை நோயாக பரிணமிக்கின்றன. இவற்றையே நாம் உள நோய்கள் என்கின்றோம். மனித உணர்வுகள் எப்போதும் அளவுடன் இருந்தால்தான் வாழ்க்கை சுகமாகவும், சீராகவும் ஓடிக்கொண்டிருக்கும். எனவே மனித வாழ்வை உருவாக்குவது உணர்ச்சிகள்தான் என்பதனை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
இனி, நோய்கள் ஏற்படுவதற்குரிய காரணங்களை ஆராய்ந்து பார்த்தால்,
1. மூளைநரம்பு மண்டலத்தின் பாதிப்பு
2. பாரம்பரியம்
3. குடும்பத்திலுள்ள குறைபாடுகள்
4. சமூக பொருளாதாரக் குறைபாடுகள்
5. அதிர்ச்சியுூட்டும் நிகழ்வுகள்
ரூசூ009;போன்றவற்றை முக்கியமாக எடுத்துக் கொள்ளலாம். மேலும், இக்காரணங்களினால் ஒருவரின் ஆளுமை வளர்ச்சியிலும் குறைவு ஏற்பட்டு அதனாலும் உள நோய் உண்டாகின்றது. இங்கு உள நோய்கள் 2 வகையாகப் பிரிக்கப்படுகின்றன.
1. பாரது}ரமானவை- இதற்கு மருத்துவ
சிகிச்சை அவசியம்.
2. பாரது}ரமற்றவை- இதனைக் குணப்படுத்துவதற்குச் சரியான காரணங்களைக் கண்டறிந்து அதை நிவர்த்தி செய்தலும், தகுந்த உளவளத்துணை வழங்குதலும் போதுமானதாகும்.
இங்கு நாம் பாரது}ரமற்ற உளத்தாக்கங்களில்
1. பதட்ட நிலை
2. மனத்தளர்ச்சி
3. மன அழுத்தம்
4. அதிகரித்த பயம்
5. கிஸ்hPரியா
6.உணர்ச்சிகளால் தோன்றும் உடல்
நோய்கள்
உ-ம்: குடற்புண், தொய்வு, உடல் இரத்த அழுத்தம், கபாலக்குத்து போன்றவற்றை முக்கியமாகக் கொள்ளலாம். மனிதனின் உணர்வுகளை அளவிடுவதற்குப் பின்வரும் வழிமுறைகள் கையாளப்படுகின்றன.
1. முகப்பிரதிபலிப்பு
2. செயற்பாடு
3. நடத்தை
ஒருவரின் முகத்தில் ஏற்படுகின்ற மாற்றங்களை வைத்துக்கொண்டு கவலை, பயம், சந்தோசம், ஆவல், கோபம், வெறுப்பு போன்ற உணர்வுகளைக் கண்டறியலாம். இங்கு கண் இல்லாக் குழந்தைகளும், ஐந்தறிவு படைத்த மிருகங்களும் கூட தம் உணர்வுகளை முகத்தில் பிரதிபலிக்கின்றன. ஆகவே இப்பிரதிபலிப்பானது பிறப்பிலிருந்தே வருகின்றது.
இங்கு இவ வகையான உளத் தாக்கங்கள் ஏற்பட்டு அதற்கு சிகிச்சை பெறுவதனைவிட இவ வாறான பாதிப்புக்கள் வராமல் தடுப்பதே வாழ்க்கையை இடையுூறு இன்றி நடாத்திச் செல்ல வழிவகுக்கும்.
இவ வுளப்பாதிப்புக்கள் வராமல் தடுப்பதற்கு என்னென்ன விதங்களில் வாழ்வில் எண்ணங்களுக்கும் அதன் பிரதிபலிப்புகளுக்கும் செயல்வடிவம் கொடுக்கலாம் என்பதனைப் பற்றிப் பார்ப்போம்.
பொதுவாகப் பெண்கள்தான் ஆண்களைவிடக் கூடுதலாக உணர்ச்சித் தாக்கங்களுக்கு ஆட்கொள்ளப்படுகின்றனர் என்ற கருத்து நிலவுகின்றது. ஆனால் இருவரும் ஒரே அளவிலேயே தாக்கங்களுக்கு உள்ளாகின்றனர் என்று ஆய்வுகள் கூறுகின்றன. எனினும் பெண்கள் ஆண்களைவிடத் தம் உணர்வுகளை கூடுதலாக வெளிக்காட்டுகின்றனர் என்றும் ஆண்கள் தம் உணர்வுகளை அடக்கி வைப்பதனால் இவர்கள் கூடுதலாக உணர்ச்சிகளால் ஏற்படும் உடல் நோய்களுக்கு ஆளாகின்றனர் என்றும் தெரியவந்துள்ளது.
மன அழுத்தத்தில் இருந்து மீள்வதற்குத் தன்னம்பிக்கையும் தன்மதிப்பும் அவசியம். மேலும் திறமைகளையும் சக்திகளையும் வளர்த்துக்கொள்ளவும் வேண்டும். படிப்பு, பணம் இல்லாவிட்டால் கூட ஏன் கை, கால் இல்லாமலும் ஒருவனால் வாழ்க்கையில் வெற்றிகளையும், சாதனைகளையும் படைக்க முடியும் என்பதற்குப் பல சான்றுகள் உண்டு. இதற்குப் பொறுப்பைத் தட்டிக்கழிக்கின்ற குணம் இல்லாமலும் உடற்பயிற்சியிலும் மனப் பயிற்சியிலும் தேர்வு பெறும் எண்ணம் இருக்க வேண்டும்.
வாழ்க்கை என்பது நிகழ்ச்சி நிரல் மட்டுப்போட்டு நடக்கின்ற நிகழ்வல்ல. அங்கு எதிர்பாராத சம்பவங்களும் வாய்ப்புக்களும் மாறிமாறி கலந்து வருவதைக் காணலாம். இப்படி வருகின்ற எதிர்பாராத வாய்ப்புக்களில் ஒன்றுதான் பிரச்சினை ஆகும். இங்கு பிரச்சினையை பெரும் பிரச்சினையாக பார்ப்பதுதான் எமக்கு பிரச்சினையாகின்றது.
இங்கு சிலர் சிறிய பிரச்சினையை புூதாகரமாகப் பார்ப்பார்கள். இது பிரச்சினையை மேலும் கூட்டுமே தவிர ஒருபோதும் குறைக்காது. நாம் எப்போதும் பிரச்சினையை ஓர் தண்டனையாக எடுத்துக் கொள்ளாமல் சவாலாக எடுத்துக்கொண்டு செயற்பட வேண்டும்.
ரூசூ009;அடுத்ததாக கவலை எல்லோருக்கும் பொதுவாக ஏற்படுகின்ற ஒன்றுதான். ஆனால் பலர் இக்கவலையை வாழ்க்கையில் இன்றியமையாத ஒன்றாக எடுத்துக்கொண்டு வேதனையில் வாழ்கின்றதைக் காண்கின்றோம். இங்கு நாம் இழப்பிற்காக வருந்த வேண்டும். ஆனால் அதை பின் விட்டுவிட்டுச் செயற்பட வேண்டும். சிலர் வாழ்வில் நடைபெற்ற சந்தோச, வெற்றி நிகழ்வுகளை விட்டுவிட்டு எப்போதும் தம் வாழ்வில் ஏற்பட்ட துன்ப, தோல்வி நிகழ்வுகளையே மீண்டும் மீண்டும் நினைவு கூர்ந்து கவலைப்பட்டுக்கொண்டே இருப்பர். இதனால் நட்டமேயொழிய லாபம் எதுவுமில்லை. இங்கு மேலும் சிலர் எதிர்காலத்தைப் பற்றியும் கடந்த காலத்தைப் பற்றியும் கவலைப்படுவர்.
வேறு சிலர் காரணமின்றி கவலைப்படுவர். இன்னும் சிலர் தம் இயலாமையை நினைத்து தம்மைத்தாமே தாழ்த்திக் கவலைப்படுவர். அத்துடன் சந்தோசமான விடயங்களை விட கோபமான நிகழ்வுகளே ஆழ்மனதில் பதிகின்றன.
இங்கு கடந்த காலம் என்பது துயர் அல்லது கனவு. எதிர்காலமென்பது புதிர் அல்லது கற்பனை. நிகழ்காலம் என்பது தான் எமக்குக் கிடைத்த பரிசு. எனவே நாம் இன்றைய நாளைப் பற்றிச் சிந்திப்போம், செயற்படுவோம்.
நாம் பார்க்கும் கோணம் எப்போதும் சரியானதாக இருக்க வேண்டும். சிலர் கண்ணுக்குத் தெரிந்த நல்ல விடயங்களை விட்டுவிட்டு அதில் தெரியும் சிறிய விடயங்களை எடுத்துக்கொண்டு கவலைப்பட்டு இதனால் சந்தோசத்தைத் தொலைத்துவிட்டுத் திரிகின்றார்கள்.
இதேபோலத்தான் காது கொடுத்துக் கேட்பதிலும் கோட்டை விட்டு விடுகின்றோம். பார்த்தல், கேட்டல் ஆகிய இரு விடயங்களையும் முறையே கண், காது மட்டும் செய்வதில்லை. இத்துடன் நாம் ஒவ வொரு மனிதனைப் பற்றிக் கொண்டிருக்கும் தெளிவில்லா ஆதாரம் இல்லா அபிப்பிராயம் என்கின்ற ஒரு சிறு துவாரத்தின் ஊடாகவும் பார்க்கின்றோம். ஒவ வொருவருக்கும் மற்றவர்மீது எப்போதும் ஓர் அபிப்பிராயப் பார்வை இருக்கும். அடுத்ததாக ஒவ வொரு தாக்கத்திற்கும் இரண்டு பெறுபேறுகள் இருக்கும். உதாரணமாக வெற்றி, தோல்வி. எந்தவித ஒரு தாக்கமும் ஆட்டிப்படைத்தாலும் அதில் இருந்து சிறப்பான அனுபவத்தைப் பெறமுயல வேண்டும். முடியாது என்ற வார்த்தை எம் அகராதியில் வரவே கூடாது. ஓர் முயற்சி பலதடவைகள் தோற்றால் அது தோல்வி அல்ல. அவற்றை வெற்றிக்கான படிகளாக எடுத்துக்கொள்ள வேண்டும். அத்தோல்விகளிலிருந்து தோல்விக்கான காரணத்தை கண்டறிந்து எதிர்காலத்தில் நிவர்த்தி செய்ய வேண்டும். இதனை நாம் எமது தேசியத் தலைவரின் வழிகாட்டலில் கண்டறிந்து கொள்ளலாம்.
ரூசூ009;நம் வாழ்க்கையில் தோல்விகள், பிரச்சினைகள், கவலைகள், குழப்பங்கள் இல்லாத இடமென்றால் சுடுகாடு மட்டும்தான். இங்கு கடந்தகால பிரச்சினைகள் பாதிப்புக்கள் நமக்கு பாடமாக இருக்க வேண்டுமே தவிர ஒரு போதும் பாரமாக இருக்கக் கூடாது. எமக்கு மந்தம் சாதனையின் பின்பும் வரும். இதனை அசதி என்போம். சோதனையின் பின்பும் வரும் இதனைச் சோர்வு என்போம். எமக்கு அசதி வரலாம். ஆனால் சோர்வு வரக்கூடாது.
மேலும் எம் வாழ்வில் சலிப்பு அல்லது விரக்தி ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நாம் பொதுவாக எதிர்பார்த்த குறிக்கோளை எட்டாவிட்டால் சலிப்படைகின்றோம். இது தவிர ஏமாற்றங்களும் ஒருவித தோல்விதான். அவைகளும் எம் வாழ்வில் வரத்தான் செய்யும். எம்மை நாமே உற்சாகப்படுத்துவதுதான் சலிப்பைப் போக்குவதற்குச் சிறந்த வழி. இதைவிட எமது செயற்திறனை மாற்றி அமைப்பதினாலும் உற்சாகம் ஏற்படலாம் இதற்கு உதாரணமாக சம்பள உயர்வு அல்லது பதவி உயர்வு கொடுக்கலாம். இடமாற்றம் அல்லது பதவிமாற்றம் செய்யலாம்.
அடுத்ததாக தாழ்வு மனப்பான்மை எம்மை அணுகாதவாறு பார்த்துக் கொள்ளவேண்டும்.
இதில் மூன்று வகைகள் உண்டு.
1. உடல் சார்ந்த தாழ்வுமனம்
2. அறிவு சார்ந்த தாழ்வுமனம்
3. செயல் சார்ந்த தாழ்வுமனம்
ஒருவர் தன் தைரியத்தையும், நம்பிக்கையையும் இழக்கின்ற போதும் தன்னோடு மற்றவரை உடல், அறிவு, செயல் hPதியாக ஒப்பிட்டுப் பார்க்கின்றபோதும் அவருக்குத் தாழ்வு மனப்பான்மை உண்டாகின்றது. இவர்கள் தனிமை விரும்பிகளாக இருப்பார்கள். பிறரோடு பழக முன்வரமாட்டார்கள். எந்தசெயலிலும் பின்னடிப்பார்கள். சிலசமயம் தற்கொலை முயற்சியிலும் ஈடுபடுவார்கள். இத்தாழ்வு மனப்பள்ளத்தாக்கில் இருந்து வெளியேறுவதற்கு ஆக்கபுூர்வமான சிந்தனைகளை பிரயோகித்து, பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும். ஒருபோதும் அவநம்பிக்கை கொள்ளக்கூடாது. எதிர்மறையாகச் சிந்திக்கக் கூடாது. "இயலாது, முடியாது" என்ற வார்த்தைகளை இயலுமானவரையில் தவிர்க்கவேண்டும். இவ அவநம்பிக்கையினால் முன்னேற வேண்டும் என்று நினைத்தாலும்கூட முடியாமல் இருக்கும் எப்போதும் முற்போக்காக சிந்திக்க வேண்டும். ஆனால் இம் முற்போக்கு சிந்தனைகூட கொஞ்ச நாட்களுக்குத்தான் நீடிக்கும் என்பதால் சிந்தனைகளை நீண்ட கால நோக்கோடு தள்ளிநின்று கவனித்து சகல உள மாற்றங்களையும் அனுபவங்களாக ஏற்றுக் கொள்கின்ற மனநிலையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
அத்துடன் எம்மிடமுள்ள குறைகளைக்கூட வாழ்க்கைக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அடுத்ததாக நாம் தவறுகளை ஒருபோதும் ஏற்றுக்கொள்வதில்லை. அவற்றை எப்போதும் நியாயப்படுத்தவே முனைகின்றோம். இது தவறானது. இதனையே குதர்க்க புத்தி என்பர்.
எனவே நாம் தவறுகளை ஏற்றுக்கொண்டு திருந்த முயலவேண்டும். மேலும் நாம் மற்றவர்மீது வீண்பழி சுமத்துவதையும் தவிர்க்கவேண்டும். இங்கு தவறுகள் சுட்டிக்காட்டப்பட வேண்டுமேயொழிய தவறு பிடிக்க வேண்டும் என்று அலையக்கூடாது. ஒருவருக்கு இன்னொருவர் மீது தப்பான அபிப்பிராயம், சந்தேகம் என்பன வந்துவிட்டால் அவர் செய்யும் நல்ல விடயங்கள்கூட தப்பாகவே தெரியும். இதனை வாழ்வில் தவிர்க்கவேண்டும். நாம் எப்போதும் ஒருவரை ஆற்றல்திறன் ஊடாகவே பார்க்கவேண்டும். ஒருவர் பிழை செய்துவிட்டால் அதை பிழையென்று அடித்துச்சொல்லாமல் அவர் தான் செய்தவற்றைத் தானாகவே உணரும் வகையில் புரியவைக்கவேண்டும்.
மேலும் ஒரு மனிதனின் அடிமனம் தன்னை எதிராளி இகழும்போது, கசப்பான வார்த்தை கூறும்போது காயப்படுவதைவிடத் தன்னை ஒரு பொருட்டாக மதிக்காத போதே கூடுதலாகக் காயப்படுகின்றது. எனவே மனிதனை மதிக்கத் தெரியவேண்டும்.
அடுத்ததாக நம்மை நாமே தாழ்த்திக் கொண்டு சிந்திக்கும்போது நம்மிடமிருந்து வெளிப்படும் எதிர்விளைவு கோபமாகும். நாம் மற்றவர்கள் மீது கோபப்படும் போது நிதானத்தை இழக்கின்றோம். கை, கால் படபடக்கின்றது. இரத்தம் கொதிக்கின்றது. இது எதிரி செய்த தவறை ஜீரணித்துக்கொள்ள இயலாமல் எமக்கு நாமே கொடுக்கின்ற தண்டனையாக எடுத்துக்கொள்ளலாமல்லவா? ஆனால் கோபப்படாமல் இருக்கமுடியாது. கோபம் வருகின்றபோது அதனை அடக்குவதனாலும் உடலுக்குத்தான் பாதிப்பு. எனவே அளவாகத் தேவையோடு கோபப்படுவோம். நிதானமாகப் பிரச்சினைகளை ஆராய்வோம். காரணத்தைக் கண்டறிந்து சுமுகமாகத் தீர்ப்போம். மேலும் நாம் சந்தோசப்படுகின்றபோதுகூட எதனையும் எதிர்பார்ப்பது தவறு. நாம் எமக்கொரு பொருளைப் பரிசாகப் பெறுவதிலுள்ள சந்தோசத்திலும் பார்க்க மற்றவர்களுக்கு கொடுப்பதில்தான் அதிக சந்தோசம் கொள்ளவேண்டும். நாம் சந்தோசப்படுகின்றபோது எல்லாம் மனம்விட்டுச் சிரிக்கவேண்டும். சந்தர்ப்பங்கள் கிடைக்கும் போது பாட வேண்டும், ஆட வேண்டும். இவ வாறு செய்வதினால் மனதில் பாரம் குறையும், கவலைகள் கரையும், மன இறுக்கம் தளரும், புத்துணர்ச்சி ஏற்படும். ஒரு மனிதன் முன்னுக்கு வருவதற்கு 35வீதம் அறிவும் 65 வீதம் உறவைப்பலமாக்கும் ஆற்றல் அல்லது திறனும் அவசியமாகின்றது. இதில் இருந்து படிப்பறிவில்லாத ஒருவன்கூட சிறந்த மனிதனாக விளங்க முடியும் என்று தெரிகின்றதல்லவா? அத்துடன் ஒரு மனிதனின் வாழ்க்கையானது நான்கு கட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவையாவன,
1. தனிப்பட்ட வாழ்க்கை
2. குடும்ப வாழ்க்கை
3. தொழில் hPதியான வாழ்க்கை
4. சமூக வாழ்க்கை
இந்த நான்கு வகையான வாழ்க்கையையும் ஒரே சீராக கொண்டு செல்லக்கூடிய மனநிலையை ஒவ வொரு மனிதனும் பெற வேண்டும். இதுதான் வாழ்வின் வெற்றிக்கு வழி வகுக்கும்.
இறுதியாக நாம் வாழ்க்கையில் இழந்தால் மீளப்பெறமுடியாத விடயங்களில்
1. சொல்லப்பட்ட வார்த்தை
2. தவறவிடப்பட்ட வாய்ப்பு
3. கடந்துபோன நிமிடம்
போன்றவற்றை முக்கியமாக எடுத்துக்கொண்டு வார்த்தைகளைக் கவனமாக உதிர்க்கவேண்டும். வாய்ப்புக்களை சரியான முறையில் பயன்படுத்தவேண்டும். நிகழ்காலத்திற்குரிய விழிப்புக்களை ஏற்படுத்த வேண்டும்.

