06-22-2003, 08:42 AM
18.08.2002 அன்று விடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாணத்திற்கான கடல்வழிப் பயணம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
நான்கு பீரங்கிப்படகுகளில் போராளிகள் கிழக்கு மாகாணத்திற்கான தமது பயணத்தை மேற்கொண்டதன் மூலம் ஒரு வித்தியாசமானதொரு பாதை திறப்பு நிகழ்வு நடந்துள்ளது.
விடுதலைப் புலிகளிற்கும் அரசிற்கும் இடையில் பல கட்டங்கள் தீர்வு காணப்படாது இழுபறி நிலையிலிருந்த இப்பிரச்சினை அரசு ஒரு இணக்கப்பாட்டிற்கு வந்ததையடுத்து ஒரு தீர்விற்கு வந்துள்ளது.
அரசு புரிந்துணர்வு உடன்படிக்கையில் ஏனைய விவகாரங்களிற்கு ஒரு இணக்கப் பாட்டிற்கு வந்தது போன்று விடுதலைப் புலிகளின் கடற் போக்குவரத்திற்கு ஒரு இணக்கப்பாட்டிற்கு வராமையினால் இவ விழுபறி நிலை நீடித்தது.
புரிந்துணர்வு உடன்படிக்கையில் விடுதலைப்புலிகளின் நிலைகளிற்கும் அரசபடைகளின் இராணுவ நிலைகளிற்குமிடையில் எவ வாறு ஒரு கட்டுப்பாட்டுக் கோடு வரையப்பட்டு விடுதலைப் புலிகளின் தேசிய இராணுவத்தை அங்கிகரித்ததோ அதேபோன்று கடலில் ஒரு இணக்கத்திற்கு வந்து விடுதலைப் புலிகளின் கடற்படையை அங்கிகரிக்க மறுத்தமையே நீண்டகாலம் இப்பிரச்சினை இழுபடுவதற்கு காரணமாகவிருந்தது.
இறுதியில் அரசிற்கும் விடுதலைப் புலிகளிற்குமிடையில் சர்வதேச யுத்தநிறுத்த கண்காணிப்பு குழுவினர் தொடர்ச்சியாக மேற்கொண்ட பேச்சின் பயனாக புரிந்துணர்வு உடன்படிக்கை செய்து கொள்ளப்பட்ட பின்னர் தீர்வு காணப்படாத ஒரு முக்கிய பிரச்சினை தீர்விற்கு வந்துள்ளது.
இக்கடல்வழிப் பாதை திறப்பு ஏனைய யாழ் கண்டி ஏ-9 பாதைதிறப்பு போன்றோ அல்லது ஏ-5 பாதைதிறப்பு போன்றதோர் நிகழ்வல்ல. இது முற்றிலும் மாறுபட்ட அரசியல் இராணுவ யதார்த்தத்தைக் கொண்டது.
இக்கடல்வழிப் பிரயாணம் மூலம் விடுதலைப் புலிகளின் கடற்புலிகளிற்கு ஒரு அங்கிகாரம் கிடைக்கப்பெற்றுள்ளது. இதன் மூலம் கடற்புலிகள் கடந்துள்ள பத்தாண்டுகளில் மிகப்பெரிய ஒரு அரசியல் வெற்றியினை தமிழ் மக்களிற்குப் பெற்றுக் கொடுத்துள்ளனர்.
புரிந்துணர்வு உடன்படிக்கையின் பின் அரசபடைகளோடோ அல்லது புரிந்துணர்வு உடன்படிக்கை சரத்துக்களை மீறும் வகையிலோ விடுதலைப் புலிகள் நடந்து கொள்ளவில்லை.
ஆயினும் சிறீலங்காக் கடற்படையினர் பல சந்தர்ப்பங்களில் விடுதலைப் புலிகளின் கடற்புலிகளை வலுச்சண்டைக்கு இழுக்கும் வகையில் கடலில் பல்வேறு சம்பவங்களைத் தோற்றுவித்தனர். ஆயினும் கடற்புலிகள் பொறுமைகாத்து சமாதான நடவடிக்கையை உறுதிப்படுத்த உதவினர்.
இதன் ஒரு முயற்சியாகவே புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு முன்னர் தமது இராணுவபலம் மூலம் கிழக்கிற்கு சாதாரணமாக மேற்கொண்ட கடல் பயணத்தை விடுதலைப் புலிகள் நான்கு மாதகாலம் நிறுத்தி வைத்திருந்தனர்.
கடற்புலிகளின் இப்பொறுமை காப்பு மூலம் தரையில் விடுதலைப் புலிகளிற்கு எவ வளவு உரிமையிருக்கிறதோ அவ வளவு உரிமை கடலிலும் இருக்கிறது என்பதை பறைசாற்றியுள்ளனர்.
அத்தோடு சிறீலங்காவில் இரண்டு தரைப்படைகள் மட்டுமல்ல இரண்டு கடற் படைகளும் இருக்கிறது என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளனர். இதனை விடுதலைப் புலிகளின் நான்கு பீரங்கிப் படகுகளின் கிழக்கிற்கான பிரயாணம் தெளிவுபடுத்துகின்றது.
இது சமாதானத்தை விரும்பாத சக்திகளிற்கும் தென்னிலங்கையிலிருந்து கொண்டு களயதார்த்தை புரிந்து கொள்ளாது கூக்குரலிடும் சிங்கள பேரினவாத சக்திகளுக்கும் நன்கு உணர்த்தும்.
இந்நிலையில் இன்று தீர்வு எட்டப்பட்டிருக்கும் இக்கடல் வழிப் பயணத்தையும் தீர்வையும் சிக்கலானதொரு பிரச்சினையாக மாறாது பார்த்துக் கொள்வது அரசினுடைய கைகளிலேயே தங்கியுள்ளது
ஏனெனில் சிறீலங்காக் கடற்படையினரின் எதேச்சகரமான போக்கும் புரிந்துணர்வு உடன் படிக்கையினை குழப்பும் வகையில் அவர்கள் நடந்து கொள்ளுகின்ற முறையுமேயாகும்.
இதனையே முல்லையிலிருந்து கிழக்கு மாகாணத்திற்கான கடற்பயணம் ஆரம்பித்த அன்று உரையாற்றிய கடற்புலிகளின் சிறப்புத் தளபதி கேணல் சூசை அவர்கள் "இப்பயணம் தொடர்ந்து நடைபெறுவதும் நடைபெறாது விடுவதும் அரசைப் பொறுத்ததுலு}" எனத் தெரிவித்தார்.
அதேநேரம் விடுதலைப் புலிகளின் தரப்பிலிருந்து எந்த தடங்கலும் ஏற்படாது என்பதையும் உறுதிப்படுத்தி சமாதான முயற்சிகளிற்கான நல்லெண்ண சமிக்ஞைகளை தெளிவுற வெளிப்படுத்தியுள்ளார்.
கடற்புலிகள் சிறீலங்கா அரசோடு மிகப்பெரும் சண்டைகள் நடந்தபோது தமது சக்தியை நிலைநாட்டியவர்கள்.
சமாதான காலத்திலும் தமது சக்தியை நிலைநாட்டியுள்ளனர்.
சிறி.இந்திரகுமார்
நான்கு பீரங்கிப்படகுகளில் போராளிகள் கிழக்கு மாகாணத்திற்கான தமது பயணத்தை மேற்கொண்டதன் மூலம் ஒரு வித்தியாசமானதொரு பாதை திறப்பு நிகழ்வு நடந்துள்ளது.
விடுதலைப் புலிகளிற்கும் அரசிற்கும் இடையில் பல கட்டங்கள் தீர்வு காணப்படாது இழுபறி நிலையிலிருந்த இப்பிரச்சினை அரசு ஒரு இணக்கப்பாட்டிற்கு வந்ததையடுத்து ஒரு தீர்விற்கு வந்துள்ளது.
அரசு புரிந்துணர்வு உடன்படிக்கையில் ஏனைய விவகாரங்களிற்கு ஒரு இணக்கப் பாட்டிற்கு வந்தது போன்று விடுதலைப் புலிகளின் கடற் போக்குவரத்திற்கு ஒரு இணக்கப்பாட்டிற்கு வராமையினால் இவ விழுபறி நிலை நீடித்தது.
புரிந்துணர்வு உடன்படிக்கையில் விடுதலைப்புலிகளின் நிலைகளிற்கும் அரசபடைகளின் இராணுவ நிலைகளிற்குமிடையில் எவ வாறு ஒரு கட்டுப்பாட்டுக் கோடு வரையப்பட்டு விடுதலைப் புலிகளின் தேசிய இராணுவத்தை அங்கிகரித்ததோ அதேபோன்று கடலில் ஒரு இணக்கத்திற்கு வந்து விடுதலைப் புலிகளின் கடற்படையை அங்கிகரிக்க மறுத்தமையே நீண்டகாலம் இப்பிரச்சினை இழுபடுவதற்கு காரணமாகவிருந்தது.
இறுதியில் அரசிற்கும் விடுதலைப் புலிகளிற்குமிடையில் சர்வதேச யுத்தநிறுத்த கண்காணிப்பு குழுவினர் தொடர்ச்சியாக மேற்கொண்ட பேச்சின் பயனாக புரிந்துணர்வு உடன்படிக்கை செய்து கொள்ளப்பட்ட பின்னர் தீர்வு காணப்படாத ஒரு முக்கிய பிரச்சினை தீர்விற்கு வந்துள்ளது.
இக்கடல்வழிப் பாதை திறப்பு ஏனைய யாழ் கண்டி ஏ-9 பாதைதிறப்பு போன்றோ அல்லது ஏ-5 பாதைதிறப்பு போன்றதோர் நிகழ்வல்ல. இது முற்றிலும் மாறுபட்ட அரசியல் இராணுவ யதார்த்தத்தைக் கொண்டது.
இக்கடல்வழிப் பிரயாணம் மூலம் விடுதலைப் புலிகளின் கடற்புலிகளிற்கு ஒரு அங்கிகாரம் கிடைக்கப்பெற்றுள்ளது. இதன் மூலம் கடற்புலிகள் கடந்துள்ள பத்தாண்டுகளில் மிகப்பெரிய ஒரு அரசியல் வெற்றியினை தமிழ் மக்களிற்குப் பெற்றுக் கொடுத்துள்ளனர்.
புரிந்துணர்வு உடன்படிக்கையின் பின் அரசபடைகளோடோ அல்லது புரிந்துணர்வு உடன்படிக்கை சரத்துக்களை மீறும் வகையிலோ விடுதலைப் புலிகள் நடந்து கொள்ளவில்லை.
ஆயினும் சிறீலங்காக் கடற்படையினர் பல சந்தர்ப்பங்களில் விடுதலைப் புலிகளின் கடற்புலிகளை வலுச்சண்டைக்கு இழுக்கும் வகையில் கடலில் பல்வேறு சம்பவங்களைத் தோற்றுவித்தனர். ஆயினும் கடற்புலிகள் பொறுமைகாத்து சமாதான நடவடிக்கையை உறுதிப்படுத்த உதவினர்.
இதன் ஒரு முயற்சியாகவே புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு முன்னர் தமது இராணுவபலம் மூலம் கிழக்கிற்கு சாதாரணமாக மேற்கொண்ட கடல் பயணத்தை விடுதலைப் புலிகள் நான்கு மாதகாலம் நிறுத்தி வைத்திருந்தனர்.
கடற்புலிகளின் இப்பொறுமை காப்பு மூலம் தரையில் விடுதலைப் புலிகளிற்கு எவ வளவு உரிமையிருக்கிறதோ அவ வளவு உரிமை கடலிலும் இருக்கிறது என்பதை பறைசாற்றியுள்ளனர்.
அத்தோடு சிறீலங்காவில் இரண்டு தரைப்படைகள் மட்டுமல்ல இரண்டு கடற் படைகளும் இருக்கிறது என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளனர். இதனை விடுதலைப் புலிகளின் நான்கு பீரங்கிப் படகுகளின் கிழக்கிற்கான பிரயாணம் தெளிவுபடுத்துகின்றது.
இது சமாதானத்தை விரும்பாத சக்திகளிற்கும் தென்னிலங்கையிலிருந்து கொண்டு களயதார்த்தை புரிந்து கொள்ளாது கூக்குரலிடும் சிங்கள பேரினவாத சக்திகளுக்கும் நன்கு உணர்த்தும்.
இந்நிலையில் இன்று தீர்வு எட்டப்பட்டிருக்கும் இக்கடல் வழிப் பயணத்தையும் தீர்வையும் சிக்கலானதொரு பிரச்சினையாக மாறாது பார்த்துக் கொள்வது அரசினுடைய கைகளிலேயே தங்கியுள்ளது
ஏனெனில் சிறீலங்காக் கடற்படையினரின் எதேச்சகரமான போக்கும் புரிந்துணர்வு உடன் படிக்கையினை குழப்பும் வகையில் அவர்கள் நடந்து கொள்ளுகின்ற முறையுமேயாகும்.
இதனையே முல்லையிலிருந்து கிழக்கு மாகாணத்திற்கான கடற்பயணம் ஆரம்பித்த அன்று உரையாற்றிய கடற்புலிகளின் சிறப்புத் தளபதி கேணல் சூசை அவர்கள் "இப்பயணம் தொடர்ந்து நடைபெறுவதும் நடைபெறாது விடுவதும் அரசைப் பொறுத்ததுலு}" எனத் தெரிவித்தார்.
அதேநேரம் விடுதலைப் புலிகளின் தரப்பிலிருந்து எந்த தடங்கலும் ஏற்படாது என்பதையும் உறுதிப்படுத்தி சமாதான முயற்சிகளிற்கான நல்லெண்ண சமிக்ஞைகளை தெளிவுற வெளிப்படுத்தியுள்ளார்.
கடற்புலிகள் சிறீலங்கா அரசோடு மிகப்பெரும் சண்டைகள் நடந்தபோது தமது சக்தியை நிலைநாட்டியவர்கள்.
சமாதான காலத்திலும் தமது சக்தியை நிலைநாட்டியுள்ளனர்.
சிறி.இந்திரகுமார்

