10-27-2005, 08:47 AM
Quote:நாங்கள் எத்தனை பேரை மனதில் எண்ணினாலும்
மெதுவாகச் சொல்லுங்க.. தமிழ்க் கலாசாரத்தில ஒரு பெண் ஒருத்தனைத் தான் மனசாலை நினைக்க முடியும்.!
நான் ஒன்று மட்டும் சொல்ல முடியும்! காதலில் ஆரம்பத்தில் பாலியல் கவர்ச்சியும் இணைந்தே இருக்கின்றது. காதலில் காமமும் கலந்திருப்பதனாலேயே ஒரு ஆண் பெண்ணையும் ஒரு பெண் ஆணையும் காதலிக்கிறார்கள். ஒரு ஆண் ஒரு பூனைக்குட்டியையோ அல்லது ஒரு பெண் சிட்டுக்குருவியையோ காதலிப்பதில்லை. (தகவல் உதவி - வைரமுத்து)
ஆனால் காமம் கலந்து உருவான காதல் பிற்காலத்தில் காமத் தேவைகள் அடங்கிய பின்னரும் தொடர்கின்றதென்றால் அங்கே காமத்தோடு உண்டான அன்பு மட்டும் நிலைத்திருக்கின்றது என்பது அர்த்தம்.

