10-27-2005, 04:33 AM
காதல் என்பது என்ன என்று ஆராய்வதை விட அதலினால் வரும் நன்மை தீமைகளைப் பற்றி கதைப்பது தான் சிறந்தது... காதல் என்ற உணர்ச்சி எல்லோரையும் எதோ ஒரு சந்தர்ப்பத்தில் தடுமாற வைக்கின்றது... காதலில் முதல் தேவை பொறுமை... எல்லாவற்றிலும் பொறுமை. அதாவது காதலை தெரியப்படுத்துவதிலிருந்து கலியாணம் வரை பொறுமை காக்க வேண்டும்... திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றது என்பது உண்மை... நாங்கள் எத்தனை பேரை மனதில் எண்ணினாலும் கடைசியில் யாரோ ஒருவருக்கு மாலை இடப்போகின்றோம்... அதற்காக காதல் எல்லாமே தோல்வியில் தான் முடிகின்றது என்று சொல்ல வரலை.... காதலித்தவரை கலியாணம் கட்டி வாழ்க்கை தோல்வியில் முடிவதை விட காதல் தோல்வியில் முடிவது எவ்வளவோ நல்லம்.... வாழ்க்கை வாழ்பவதற்கே.. எமக்கு அடுத்த பிறப்பு எப்படியோ சாவுக்கு பிறகு என்ன என்பதையே நாம் அறியமாட்டோம்... அதற்காக கடவுள் தந்த அற்புதமான வாழ்வை ஏன் வீணாக சீரளிக்க வேண்டும்... இந்த புலத்தை பொறுத்தவரையில் காதலில் பொறுமையாய் இருப்பதே மேல்... இது எனது தாழ்மையான கருத்து

