06-22-2003, 08:41 AM
வல்வை ந. அனந்தராஜ்
காலம் காலமாகத் தமது சொந்த வீடுகளில் உண்டு, உறங்கி வாழ்ந்த மக்களை ஒரே இரவில் விரட்டி அடித்து, அகதிகளாக்கிவிட்ட அந்த அவலத்தைச் சுமந்து நின்ற யாழ்ப்பாணத்தை விட்டுக் கண்ணீருடன் வெளியேறிய இலட்சக்கணக்கான தமிழர்களில் செல்லம்மாவும் ஒருத்தியாக ஓடிவந்த அந்தத் துயரம் நிறைந்த இரவுகளை அவளால் எப்படி மறக்கமுடியும்.
மாகழி மாதக் கடுங்குளிர் அந்தப் பிரதேசத்தையே உறைய வைத்துக் கொண்டிருந்தது. உயர்ந்து, அடர்த்தியாக வளர்ந்திருந்த காட்டு மரங்களிடையே வெள்ளைப் பஞ்சுகளைத் தூவிவிட்டது போல், ஆங்காங்கே பனிமூட்டம் பரவி இருந்தது.
அந்தக் காலை நேரத்தில் வன்னி மண் இன்னும் விழித்துக் கொள்ளவில்லைலு} அந்த அளவுக்கு குளிர்காற்று எல்லோரையும் உலுப்பிக்கொண்டிருந்தது.
காட்டுக் குயில்களின் மனதைக் கிறுங்க வைக்கும் மெல்லிய ஓசை மட்டும் காற்றில் கலந்து இதமாக ஒலித்துக்கொண்டிருந்தது. அந்த இனிய ஒலிக்குமேலாக 'கீச்சுலு} கீச்சு' என்று குரங்குக் குட்டிகளை வயிற்றில் காவியபடி மரங்களிடையே தாவித்திரியும் மந்திக் குரங்குகளின் சத்தங்களும், தூரத்தில் எங்கோ காட்டுப் பகுதிக்குள் இருந்து இடையிடையே விட்டு விட்டுக் கேட்டுக்கொண்டிருக்கும் துப்பாக்கிச் சத்தங்களும்தான், அந்த மண்ணின இயற்கை ஒலிகளாகிவிட்டன.
வன்னிப் பெருநிலப்பரப்பில் உள்ள மாவட்டங்களில், முல்லைத்தீவு மாவட்டம் என்றதுமே, அடங்காத் தமிழன் பண்டாரவன்னியனின் பெயர்தான் நினைவுக்கு வரும்லு} தூங்கிக் கிடக்கும் குழந்தை கூட ஒரு கணம் தன்னுடைய உடலைச் சிலிர்த்துக் கொள்ளும்.
அன்று யாழ்ப்பாண அரசு, அந்நிய ஏகாதிபத்தியவாதிகளின் ஆக்கிரமிப்புக்குள் கொண்டு வரப்பட்ட பின்னரும்கூட, வன்னிமையை அடிபணியவிடாது இறுதிவரை போராடி அந்த மண்ணைக் காத்த மாவீரன் பண்டாரவன்னியன் திரிந்த மண்ணல்லவா அதுலு}
அதனால் தானோ என்னவோ, இன்றும்கூட அந்த மண் வளையாது நிற்கின்றது.
வந்தாரை வாழவைக்கும் மண் என்றும், வீரத்தின் விளை நிலம் என்றும் ஈழத்துத் தமிழ் இலக்கியப் பாரம்பரியத்தில் பேசப்பட்டு வந்த மண்லு} இன்று.
அவலம் நிறைந்த மக்களால் நிரம்பிப் போய் சிவந்து காணப்படுகின்றதுலு} யாழ்ப்பாண மண்ணைக் கைப்பற்றி அதன் பாரம்பரியத்தையும், தனித்துவத்தையுமே வேரோடு அழித்துவிட வேண்டுமென்பதற்காகவே மேற்கொள்ளப்பட்ட 'ரிவிரெச' படையெடுப்பு, அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஒவ வொரு சிங்களப் பெயரிலும் அமைந்த இராணுவ நடவடிக்கைகளும் அந்த மண்ணையே இன்று அல்லோலகல்லோலப் படுத்திவிட்டன.
காலம் காலமாகத் தமது சொந்த வீடுகளில் உண்டு, உறங்கி வாழ்ந்த மக்களை ஒரே இரவில் விரட்டி அடித்து, அகதிகளாக்கிவிட்ட அந்த அவலத்தைச் சுமந்து நின்ற யாழ்ப்பாணத்தை விட்டுக் கண்ணீருடன் வெளியேறிய இலட்சக்கணக்கான தமிழர்களில் செல்லம்மாவும் ஒருத்தியாக ஓடிவந்த அந்தத் துயரம் நிறைந்த இரவுகளை அவளால் எப்படி மறக்கமுடியும்.
'அம்மாலு} இன்னும் வயிற்று நோக் குறைஞ்சதாத் தெரியேல்லையம்மா வரவர அடிவயிறு எரியிறமாதிரிக்கிடக்குதணைலு} ஆலு} கடவுளேலு} வலி தாங்க முடியேல்லைலு}'
செல்லம்மாவின் மூத்த மகள் வானதி அடி வயிற்றை அழுத்திப் பிடித்தபடி, அழுது புலம்பிக் கொண்டிருந்தாள். ஒருவாரத்திற்கு மேலாகச் சாப்பிடாமல் இருந்ததால், கடந்த மூன்று நாட்களாக வயிற்றுவலியினாலும், தொடர்ச்சியான வாந்தியினாலும் துடித்துத் துவண்டு போய் இருந்தாள்.
'பிள்ளை இப்பத்தானை தேத்தண்ணி குடிச்சனீலு} இன்னும் கொஞ்சத்தாலை எல்லாம் குணமாப் போயிடும்லு}'
கடந்த மூன்று நாட்களாகப் பழகிப் போய்விட்ட, அந்த முனகல் செல்லம்மாவுக்குப் புதிதாகத் தெரியவில்லை.
செல்லம்மா ஏதோ ஒரு சாட்டுக்குச் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே, துக்கம் தொண்டையை அடைத்துக் கொண்டு வந்ததுலு} ஒருநாளைக்கு, ஒரு நேர உணவினாலாவது அரைகுறையாக நிரப்பித்திருப்திப்படுத்த வேண்டிய வயிற்றை, எத்தனை நாட்கள்தான், வெறும் பனங்கட்டித் தேநீரைக் காட்டி ஏமாற்ற முடியும்?
பலாலியில் இருந்து ஏவப்பட்ட மூர்க்கத்தனமான எறிகணைத் தாக்குதல்களினால் தெல்லிப்பளையில் இருந்தும் இடம்பெயர்ந்து, நவாலி சென்.பீற்றேர்ஸ் தேவாலயத்தில் தஞ்சமடைந்திருந்தபோது, வீசப்பட்ட 'புக்காரா' போர் விமானங்களின் குண்டுகள், அந்தப் புனித கத்தோலிக்கத் தேவாலயத்தை மட்டுமா தாக்கி அழித்தனலு}?
அந்த ஆலயத்தினுள் தஞ்சமடைந்திருந்த குழந்தைகள், பெண்கள், வயோதிபர் என்று நூற்றுக் கணக்கான அப்பாவிகளின் உடல்கள், சிதறிப் பலியானபோது, அவளுடைய கணவனையுமல்லவா பறிகொடுத்துவிட்டு நிர்க்கதியாக நின்றவள்.
அன்று, அவள் அனுபவித்த, அந்த வேதனையின் கொடூரத்தைவிட, இன்று அந்த அகதி முகாமில் அனுபவிக்கும் துயரமோ மிகவும் கொடூரமானது.
புதுக்குடியிருப்பு ஆனந்தபுரம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் அகதி முகாமில் கழிந்த அந்த ஆறுமாத அவல வாழ்க்கையில் அவள் அனுபவித்த துயரங்களோ ஏராளம்.
பாயில் படுத்திருந்தபடியே, வலி தாங்கமுடியாது முக்கிமுனகிக் கொண்டிருந்த, வானதியின் கோலத்தைப் பார்த்ததுமே, செல்லம்மாவின் பெற்ற வயிறு பற்றி எரிந்துகொண்டிருந்ததுலு} சேர்த்து வந்த பணத்தைச் செலவழிக்க வழி தெரியாது, உண்டு குடித்துக் கழித்து வாழ்பவர்களுக்கு அதனாலேயே நோய்களும் வந்துவிடுகின்றதுலு} ஆனால், வானதியைப் போன்று நிர்க்கதியாக்கப்பட்டுவிட்ட ஏழைகளின் 'பசிப்பிணிக்கு' யாரால் தான் மருந்துகொடுக்க முடியும்லு}?
'சே என்ன வடிவாய் இருந்த பிள்ளைலு} ஊரைவிட்டு வந்து தேப்பனையும் பறிகுடுத்திட்டு இப்பிடிக்கோலம் மாறிப்போய்லு} கடவுளேலு} நான் என்ன பாவம் செய்து பிறந்திட்டன்லு} கலியாணம் முடிக்கவேண்டிய வயதில், இப்படி எலும்பும் தோலுமாய்ப் பார்த்துக் கொண்டிருக்கிறதைவிட, அண்டைக்கே அவரோடை செத்துத் துலைஞ்சிருக்கலாம்'
நீண்ட பெருமூச்சு விட்டபடியே தன்னையே நொந்து, சபித்துக் கொண்டாள்லு} முதலாம் கட்டம், இரண்டாம் கட்டம் என்று அடுத்தடுத்து மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கைகளினால், யாழ்ப்பாணத்தில் இருந்து இடம்பெயர்ந்த மக்களாலும், 'சத்ஜெய' இராணுவ நடவடிக்கையினால் கிளிநொச்சியில் இருந்து இடம்பெயர்ந்த மக்களாலும் அந்த அகதி முகாம் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது.
அங்கேதான், அவர்களுக்கும் ஒரு சிறிய பகுதி ஒதுக்கிக்கொடுக்கப்பட்டிருந்ததுலு} ஒரு வகுப்பறையினுள் மூன்று தனிக்குடும்பங்கள் எப்படியோ இருந்தே ஆக வேண்டும்.
'அம்மாலு} என்னம்மாலு}? இண்டைக்கும் சாப்பாடு தரமாட்டியளோலு}? ரெண்டு நாளா வெறும் தேத்தண்ணியைக் குடிச்சுக் குடிச்சு வாயெல்லாம் கைக்குதுலு} இண்டைக்குப் பள்ளிக்கூடத்திலை வகுப்பேற்றச் சோதனை என்றும் சொல்லி விட்டவைலு}'
படுக்கையில் இருந்தும், எழும்ப மனமில்லாமல் சோம்பலை முறித்துக் கொண்டே எழுந்த பிரதீபன், தாயின் முகத்தையே பார்த்து அனுங்கிக் கொண்டிருந்தான்.
அவன் புதுக்குடியிருப்பு மகா வித்தியாலயத்தில் ஒன்பதாம் வகுப்பில் படித்துக்கொண்டிருக்கிறான். எந்தக் கஸ்டம் வந்தாலும் அவனை எப்படியும் படித்து ஆளாக்கிவிட வேண்டும் என்ற ஆதங்கம் செல்லம்மாவிடம் இருந்தாலும், அதற்குரிய வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க மட்டும் அவளால் முடியவில்லை.
'என்ரை ராசன்லு} இண்டைக்கு மட்டும் போய்ச் சோதனையைச் செய்துட்டு வா நான் எப்பிடியும் இண்டைக்கு கால் கிலோ அரிசியாவது கொண்டு வந்து கஞ்சி வைத்துத் தருவன்லு}'
'சும்மா போணைலு} நேற்றும் இப்படித்தானை சொல்லிப்போட்டுப் போய் மத்தியானம் வெறுங்கையோடை வந்தனிங்கள் ஏன் இப்படி ஒவ வொரு நாளும் ஏமாத்திறியள்?'
பிரதீபனின் ஆற்றாமையும், பசியின் கொடூரமும் அவனை அப்படிப் பேசவைத்துவிட்டது.
'தம்பி.. அம்மாவை அப்படிப் பேசாதைலு} பாவம் அவ என்ன செய்வா..? தன்ரை கழுத்திலை, காதிலை கிடந்த நகை எல்லாத்தையும் விற்று இவ வளவு காலமும் சமாளிச்சாலு} அதுக்குப் பிறகும் கூட பக்கத்துச் சனங்களிட்டைப் போய்ப் பிடி அரிசி சேர்த்துக் கஞ்சி காய்ச்சித் தந்தாலு} எத்தினை நாள் வீடுகளுக்குப் போய், அரிசி இடிச்சுக் கொடுத்து எங்களுக்குச் சாப்பாடு போட்டிருப்பாலு} இதெல்லாம் தெரிஞ்சும் ஏன் இப்படி, கதைச்சு அவவின்ரை மனதை நோக வைக்கிறாய்.. ம்லு} எங்கடை தலைவிதி, இப்படி எங்களை அலைக் கழிக்குதுலு}'
வானதியின் மூச்சு இளைத்துக் கொண்டிருந்ததுலு} படுக்கையில் இருந்தும், மெதுவாக எழும்பி இருந்த வானதி, அந்த வயிறு எரியும் நிலையில் இருந்தும்கூடத் தன்னுடைய தம்பியைச் செல்லமாகக் கடிந்துகொண்டாள்.
'அக்காலு} என்னைக் கோவிக்காதீங்கோலு} அம்மா பாவம் எங்களுக்காக கஸ்டப்படுறதை நான் உணராமல் இல்லை. அக்காலு}. இது எங்கடை விதி மட்டுமல்லலு} இந்த நாட்டிலை தமிழனாய்ப் பிறந்ததாலை ஏற்படுத்தப்பட்ட சதி அக்காலு} அந்த விதியை நாங்கள்தான் மாற்றி அமைக்கவேணும்'
தாயுடன் சேர்த்து நாட் கணக்காகச் சாப்பிடாமலேயே இருக்கும், அவர்களுடைய வயிற்றில் மூண்டெழுந்த அந்தப் பசித்தீயை மட்டும் அவர்களால் எப்படி அணைக்க முடியும்?
செல்லம்மாவுக்கும், எங்காவது வேலைக்குப்போய், கூலி வேலையாவது செய்து அன்றாடம் செலவுக்குத் தன்னும் உழைக்கவேண்டும் என்ற ஆசைதான்லு}
இன்று, வன்னிப் பெருநிலப் பரப்பில் வளம் கொழிக்கும் நூற்றுக் கணக்கான ஏக்கர் வயல் நிலங்கள், இராணுவ ஆக்கிரமிப்புக்குள்ளும், எறிகணை வீச்சு எல்லைக்குள்ளும் கொண்டுவரப்பட்ட பின்னர் அவை எல்லாமே இன்று வானம் பார்த்த புூமிகளாகிவிட்டன. இந்த நிலையில், எத்தனையோ உடல் வலிமையுள்ள ஆண்களுக்கே வேலை வழங்கமுடியாத நிலையில், வலுவிழந்து மெலிந்து, எலும்புக்கூடாகி விட்ட செல்லம்மாவுக்கு, அங்கே யார்தான் வேலை கொடுக்கப்போகிறார்கள்?
வன்னிப் பெருநிலப்பரப்பைத் தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியாத நிலையில் அங்கே வாழ்கின்ற மக்களைப் பட்டினி போட்டுப் பணிய வைப்பதற்கு உணவுத் தடையைப் போராயுதமாகப் பயன்படுத்தும் அந்த, அநாகரிகம் உலகில் வேறு எந்த நாட்டிலுமே நடந்திருக்கமுடியாது.
இராணுவ நடவடிக்கைகளினால் இடம் பெயர்ந்தவர்களுக்குச் சில மாதங்கள் வரை ஏதோ பெயரளவில் வாரத்திற்கு முன்னூறு ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொருட்களை நிவாரணமாகக் கொடுத்து வந்தார்கள். அதற்குப் பிறகு மாதத்திற்கு ஒரு தடவையாகக் குறைத்து, இப்போது 'அகதிகளுக்கான நிவாரணம்' முற்றாகவே நிறுத்தப்பட்டுவிட்டது.
அகதிகளுக்கென வெளிநாடுகளில் இருந்துவரும் உதவிகள் தொடர்ந்தும் வந்துகொண்டிருக்கின்றன. ஆனால், அந்த ஏழைகளின் வயிறுகள் மட்டும் வெறுமையாகிக்கொண்டு வந்தனலு}
'தம்பிலு} எழும்பித் தேத்தண்ணியைக் குடிச்சிட்டுப் போயிற்று வாலு} நான், என்ன சும்மாதிரிஞ்சிட்டே வாறன்லு} நேற்றுக்கூட ஒரு கொத்து அரிசிக்காக அலையாத இடமில்லைலு} ஏறி இறங்காத படலை இல்லைலு} உண்ணாண இண்டைக்கு எப்படியும், உனக்குக் கஞ்சி காய்ச்சி வைப்பன்'
அவள் உறுதியாகக் கூறிக்கொண்டே, மகனின் தலையை வாஞ்சையுடன் தடவி விட்டாள்.
'சரிலு} அம்மா, நான் இண்டைக்கு போறன்லு} அம்மாலு} நான் கதைச்சதைப் பற்றிக் கவலைப்படாதையுங்கோ ஏதோ தெரியாமல் கதைச்சிட்டன்..'
அவன் இப்படிக் கூறியதும், செல்லம்மாவின் நெஞ்சுக்குள் அடக்கி வைத்திருந்த துயரம் இன்னும் பீரிட்டுக் கொண்டு வந்ததுலு} சேலைத் தலைப்பினால் வாயையும், கண்களையும் மூடிக்கொண்டு விம்மி, விம்மி அழத் தொடங்கிவிட்டாள்.
அவர்களுக்கு எதிரில், பாயில் படுத்திருந்தபடியே, பிரதீபனையே பார்த்துக்கொண்டிருந்த வானதியின் கண்களில் கண்ணீர் முட்டிக்கொண்டு வந்ததுலு} அவளுக்கு, அந்த நேரம், 'ஓவென்று' வாய்விட்டே கதறி அழவேண்டும் போல் இருந்தது. தன்னுடைய முகத்தை அடுத்த பக்கம் திரும்பி சட்டைத் தலைப்பினால், வழிந்து கொண்டிருந்த கண்ணீரைத் துடைத்துவிட்டாள்.
ஆம்.. அங்கே பசிக்கும், பாசத்திற்கும் இடையே அவர்களுடைய உணர்வுகள் போராடிக்கொண்டிருந்தனலு}
அந்த அகதிமுகாமின், 'ஒரு லயம்' மெல்ல, மெல்ல விழித்துக் கொண்டிருந்ததுலு} அந்த முகாமில் உள்ளவர்கள், அன்றும் வழமைபோலக் கலகலப்பாக இயங்கத் தொடங்கிவிட்டனர். செல்லம்மா மட்டும், அந்த விடியப் போகும் பொழுதை நினைத்து நடுங்கிக்கொண்டிருந்தாள்.
'பிள்ளை இண்டைக்கு எங்கையாவது போய்ப் பிடி அரிசி சேர்த்தெண்டாலும் கொண்டுவாறன்..'
தெல்லிப்பளையில் இருந்தபொழுது, அவளுடைய கணவன் ஒரு முழு நேர விவசாயியாக இருந்து, வீட்டுக்கு வரும் விருந்தினர்களுக்கெல்லாம், தாராளமாக உணவைக் கொடுத்து அனுப்பும் அளவுக்கு வீட்டில் நெல்லை மூடை மூடையாக அடுக்கி வைத்திருப்பான்.
இன்று வீடு வீடாகச்சென்று, அவர்கள் சமைக்கும் அரிசியில் இருந்து, ஒருபிடி அரிசியாகச் சேர்த்துக் கஞ்சி காய்ச்சி வாழ வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டதை நினைத்துப் பார்த்ததும் செல்லம்மாவின் உடல் கூனிக்குறுகியது.
போர் நெருக்கடிகள், அரசின் உணவுத் தடை என்பவற்றால் வன்னியின் பல வீடுகள் இன்று அரிசிக்காகவும், மாவுக்காகவும் ஏங்கிக்கொண்டிருக்கின்ற நிலையில், பிடி அரிசி கொடுக்கின்ற நிலையில் எத்தனைபேர் இருப்பார்கள்?
'அம்மா ஏனணை அப்பிடி வீடு வீடாச் சென்று பிச்சை எடுக்கிற மாதிரிக் கேட்க வேணும்? இண்டைக்கும், அந்த உதவி அரசாங்க அதிபரிட்டையே எங்கட நிலைமையைச் சொல்லிக் கேட்டுப் பாருங்கோலு}'
வானதி, இதைச் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே, அடிவயிற்றில் பலமாக வலி ஏற்பட்டதால், வயிற்றை அப்படியே அழுத்திப் பிடித்தபடி படுத்திருந்தாள்.
'சரிலு} பிள்ளைலு} எதுக்கும் இண்டைக்கு ஒருக்கால் போய் அவரிட்டையே கேட்டுப் பார்த்துட்டு வாறன்லு} ஏதோ கடவுள் விட்டவழி'
செல்லம்மா கொடியிலிருந்த சேலையை எடுத்துக் கட்டிக்கொண்டு, புதுக்குடியிருப்பு உதவி அரசாங்க அதிபர் பணிமனைக்குப் போவதற்கு ஆயத்தப்படுத்தினாள்.
இதயத்தை அழுத்திப் பிடித்த துயரத்துடன், அந்த முகாமைவிட்டு வெளியேறிய செல்லம்மா ஒருவாறு நடந்து சுமார், ஒரு மைல் தூரத்தில் உள்ள உதவி அரசாங்க அதிபர் பணிமனையை அடையவும், அங்கு அலுவலகப் பணிகள் ஆரம்பமாகவும் சரியாக இருந்தது.
வசதிகளும் வாய்ப்புக்களும் நிறைந்த நகரப் புறங்களில் கிடைக்கின்ற வளங்களை, எல்லாம் அனுபவித்துக்கொண்டு, ஏனோதானோ என்று இருக்கின்ற அதிகாரிகளைப் போன்றவர்களை அங்கே, வன்னியில் காணமுடியாதுலு} அவர்களை யாருமே மேற்பார்வை செய்வதில்லை.. ஆனால் பற்றுறுதியோடும், மனிதாபிமானத்தோடும் பணியாற்றுகின்ற மனிதர்களைக் கொண்டுதான். அங்கே உள்ள அலுவலகங்கள் எல்லாமே இயங்குகின்றன.
'என்னம்மாலு} இண்டைக்கும் நேரத்தோடையே வந்துவிட்டியள்போல கிடக்கு சரி உள்ளை நடவுங்க. நான் சைக்கிளை விட்டுட்டுவாறன்..'
அந்த அலுவலகத்தினுள் தனது, மோட்டார் சைக்கிளில் வந்து சேர்ந்த உதவி அரசாங்க அதிபர் சிவானந்தா, தூரத்தில் வரும்பொழுதே செல்லம்மாவைக் கண்டுவிட்டார்.
வழமையாகவே சோகத்துடன் வந்துபோகும் செல்லம்மாவைக் கண்டதும் அன்றும் அவரையறியாமலேயே அவள் மீது ஒருவித இரக்கம் ஏற்பட்டது. அலுவலக அறையை நோக்கி நடந்துகொண்டிருந்த சிவானந்தாவைத் தொடா ந்து செல்லம்மாவும் தயங்கித் தயங்கிய படியே பின் தொடர்ந்து போய்க்கொண்டிருந்தாள்.
'சண்முகம்லு} அந்த அம்மாவை இன்னும் கொஞ்சநேரத்திலை உள்ளை அனுப்பு'
வாசலில் எழுந்து நின்ற வாச்சரிடம், கூறியபடியே, கதவைத் திறந்து தனது அலுவலக மேசையை நோக்கிச் சென்ற சிவானந்தா, அன்று மேற்கொள்ளவேண்டிய வேலைத் திட்டங்களை மேலோட்டமாக ஒரு தடவை பார்த்துக் கொண்டார்.
அன்றைய பணிக்கான தனது ஆரம்ப வேலைகளை முடித்துவிட்டு, வாசலில் நின்ற சண்முகத்தைப் பார்த்துச் சைகை காட்டினார்.
அவரது அனுமதி கிடைத்ததும், சண்முகம் செல்லம்மாவை உள்ளே செல்லுமாறு கூறிக் கதவைத் திறந்துவிட்டான்.
உதவி அரசாங்க அதிபரின் அலுவலக மேசையை நோக்கி மெதுவாகச் சென்றுகொண்டிருந்த செல்லம்மா அவருக்கு அருகே வந்ததும் கையைக் கட்டிக்கொண்டு அவரையே பார்த்துக்கொண்டு நின்றாள்.
'அம்மா.. இந்தக் கதிரையிலை இருங்க..'
அச்சம் கலந்த பார்வையுடன், அவரையே பார்த்துக் கொண்டிருந்த செல்லம்மாவையே பார்த்துக்கொண்டிருந்த அந்த இளம் உதவி அரசாங்க அதிபருக்கே, அரசு மேற்கொள்ளும் பாரபட்சமான நடவடிக்கைகளை நினைத்துப் பார்த்தது ஆத்திரம் பற்றிக்கொண்டு வந்தது.
'சேலு} என்ன போக்கிரித்தனமான வேலைலு} சந்தோசமாகத் தங்கடை, தங்கடை வீடுகளில் இருந்து உழைத்துச் சாப்பிட்டு நிம்மதியாக வாழ்ந்த சனத்தைத் சமாதானத்திற்கான யுத்தம் என்ற போர்வையிலை துரத்தி அடித்து அகதிகளாக்கிவிட்டு, பட்டினி போட்டுக் கொல்லும், இந்தக் கொடுமையை ஆரிட்டைப் போய் சொல்லி அழுகிறது?'
அவருடைய இதயம் குமுறிக்கொண்டிருந்தது. இதனை வாய்விட்டு எவரிடமும் கூறினாலோ, அல்லது அறிக்கையாக அனுப்பி வைத்தாலோ 'ராஜத் துரோகி' என்ற பெயரும் சூட்டப்பட்டு தண்டனை இடமாற்றமும் கிடைத்துவிடும் என்பதால் அவருடைய உள்ளத்து உணர்வுகளை இதயத்திற்குள்ளேயே அமுக்கிக்கொண்டார்.
'ஐயாலு} என்ரை பிள்ளைகள் இரண்டும், நாலு நாளா அன்னத்தைக் காணாமல் அப்பிடியே வாடி வதங்கிப் போய்க்கிடக்குதுகள். இந்த முறை மட்டும் ஏதோ பார்த்து நிவாரணம் தந்தியள் எண்டால் உங்களுக்குக் கோடி புண்ணியம் கிடைக்கும்லு}'
அவருடைய காலில் விழாத குறையாக, சர்வாங்கமும் ஒடுங்கிக் கண்ணீர்விட்டுக் கொண்டிருந்த செல்லம்மாவின் கைகள் தளர்ந்து நடுங்கிக் கொண்டிருந்தன.
'அம்மாலு} நீங்கள் இப்படிக் கதைக்கிறதைப் பார்க்கவே எனக்குக் கஸ்டமாக இருக்குதுலு} எனக்குத் தாறதுக்கு விருப்பமில்லை என்று நினைக்காதீங்கலு} அரசாங்கம்தான் இரண்டாம் கட்ட நிவாரணத்தை நிறுத்திட்டுதுலு} அப்படியிருந்தும் இடைக்கிடை எங்களுடைய வேறு நிதியில் இருந்துதான் உங்களுக்கு நிவாரணம் தந்தனாங்கள்..'
சிவானந்தா ஒரே மூச்சில் கூறிவிட்டு தனது கோவையில் இருந்து சில படிவங்களை எடுத்து எதையோ எழுதிக்கொண்டிருந்தார். அவருடைய செய்கை, செல்லம்மாவுக்கு ஏமாற்றத்தைத்தான் கொடுத்ததுலு} அவரையே ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.
'அம்மாலு} உங்கடை கஸ்டம் எனக்கு விளங்குதுலு} இண்டைக்கு உங்களை மாதிரி ஆயிரக்கணக்கான சனங்கள் இதேமாதிரிச் சாப்பாட்டுக்கே வழியில்லாமல் இருக்குதுகள்லு} என்ன செய்வது, இண்டைக்கு எங்கடை வேறு உதவி நிதியில் இருந்து, உங்களுக்கு நானூற்றைம்பது ரூபாவுக்குரிய உலர் உணவுப் பொருட்களை வாங்குவதற்குப் 'பெர்மிட்' தாறன்.. இதற்கு மேல் என்னாலை ஒன்றுமே செய்யமுடியாது. உங்கடை அடையாள அட்டையையும் அகதிக் காட்டையும் எடுத்துத் தாங்க'
அவர் இப்படிப் 'பெர்மிட் தருவதாகக் கூறியதும், செல்லம்மாவின் தலையில் இருந்து உள்ளங்கால் வரை மின்சாரம் பாய்ந்ததுபோல் இருந்தது. ஏதோ, 'ஜாக்பொட்' பரிசுகிடைத்துவிட்டது போல் குதூகலித்தாள்.
இப்படி ஒரு பெரிய தொகைக்கு 'நிவாரண பெர்மிட்' தருவார் என்று அவள் எதிர்பார்த்திருக்கவில்லை.
'ஐயா நீங்கள் நல்லா இருக்க வேணும்லு} தெய்வம் போல வந்து இண்டைக்குச் செய்த உதவியை என்னால மறக்கேலாது. அந்தப் பெர்மிட்டுக்கு அரிசி வாங்கினன் எண்டால், கடவுளே என்ரை பிள்ளையளுக்கு ஒரு நேரக் கஞ்சியைத் தன்னும் கொஞ்ச நாளைக்குக் காய்ச்சிக் கொடுப்பன்'
'பிடி அரிசியை' எதிர்பார்த்து வந்தவளுக்கு, கொத்துக் கணக்காக அரிசி கிடைக்கப் போவதை நினைத்ததும், கைகால் புரியாத மகிழ்ச்சிலு}
அவளுடைய அந்த மகிழ்ச்சியைக் கண்டதும் சிவானந்தாவின் கண்கள் குளமாகிக் கொண்டு வந்தன. செல்லம்மா, தன்னுடைய பையில் இருந்தும் தேசிய அடையாள அட்டையையும், அகதிகளுக்கான அடையாள அட்டையையும் எடுத்துக்கொடுத்தாள். அங்கே உள்ளவர்கள், எப்பொழுதாவது இருந்து விட்டுத்தான் இப்படி ஏதாவது ஒரு தேவைக்கு அடையாள அட்டையைக் காட்டவேண்டிவரும். ஆனால் வன்னிக்கு வெளியே வாழ்கின்றவர்களைப் பொறுத்தவரையில் அடையாள அட்டை இல்லாமல் எங்குமே செல்லமுடியாது. அந்த அளவுக்கு ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்குச் சுதந்திரமாக நடமாட முடியாத நிலைலு} நாய்களுக்கு பட்டிகட்டி இலக்கமிடப்பட்டிருப்பதுபோல், மனிதருக்கும் அந்த அடையாள அட்டையில்தான் உயிரேட இருக்கின்றது.
நாய்களின் கழுத்தில் பட்டி இல்லாவிட்டால், நகரசபைக்காரர்கள் பிடித்துக்கொண்டு போய்ச்சுட்டுப் புதைத்து விடுவார்கள். ஆனால் மனிதர்களின் கைகளில் அது இருந்தாலும் கூட சில வேளைகளில் பிடித்துக்கொண்டுபோய் விடுவார்கள்.
செல்லம்மாவிடம் இருந்து பெற்ற அடையாள அட்டையையும், அகதிகளுக்கான அடையாள அட்டையையும் வாங்கிப்பதிந்துவிட்டு, அவற்றுடன் நானூற்றைம்பது ரூபாவுக்கான நிவாரணப் பெர்மிட்டையும், சேர்த்துச் செல்லம்மாவின் கைகளில் கொடுத்தார்.
அதை, அவரிடமிருந்து வாங்கிய செல்லம்மா, கண்ணீர் கனக்க, கையெடுத்துக் கும்பிட்டுவிட்டு அங்கிருந்து வெளியேறி, கூட்டுறவுச் சங்கக் கடையை நோக்கி நடந்தாள்.
'முருகாலு} இண்டைக்குத்தான் உன்ரை கண் திறந்திருக்குதுலு}. ஐயோ, என்ரை பிள்ளைகள் எத்தினை நாளாச் சாப்பாடு இல்லாமல் துடித்துக்கொண்டிருக்குதுகள். போன உடனை கஞ்சி காய்ச்சிக்கொடுத்து அந்தப் பிள்ளையள் சிரிக்கிறதைப் பார்க்கவேணும்'
மனதிற்குள் நினைத்தபடியே இன்னும் வேகமாக நடக்கத் தொடங்கினாள்லு} அவளுக்கு எங்கிருந்துதான் அந்த உத்வேகம் வந்ததோ தெரியவில்லை இன்னும் இன்னும் வேகமாக நடக்கத் தொடங்கினாள்.
கூட்டுறவுச் சங்கக் கடையில் இருந்தும், அரிசியை வாங்கிக் கொண்டு, ஆனந்தபுரம் அகதி முகாமை நோக்கி ஓட்டமும், நடையுமாகச் சென்றடைந்தாள்.
ஒரு நாளா இரண்டு நாளாலு} பத்து நாட்கள் அல்லவாலு} வானதி பசியால் துடித்துக்கொண்டிருக்கின்றாள்லு} எப்பொழுதாவது, இடையிடையே கிடைக்கின்றவற்றை ஆண்பிள்ளை என்றபடியாலோ என்னவோ பிரதீபனுக்குக்கொடுத்துவிட்டு, வெறுங் கண்ணீருடன் கனன்று கொண்டிருக்கும் வானதியின் வயிற்றில், வெறுங் கஞ்சியையாவது வார்த்துவிட வேண்டும் என்ற ஆதங்கம், அவளை ஒரு புதிய உலகத்திற்கு இழுத்துச் செல்வது போல் இருந்தது.
'பிள்ளைலு} பிள்ளைலு} வானதி.. இஞ்சை அரிசி கொண்டு வந்திட்டன்லு} எழும்பிக் கெதியாய் வாணைலு}'
செல்லம்மாவின் கால்கள் ஒரு நிலையில் நிற்கவில்லை. கொண்டுவந்த அரிசியை காய்ச்சிக்கொடுக்க வேண்டும் என்ற ஆவலில் அவள் மனம் துடித்துக்கொண்டிருந்தது.
அந்த வகுப்பறையின் வாசலையும் தாண்டி சேலைத் துணியினால் மறைப்புக் கட்டியிருந்த அந்த 'அறையை' எட்டிப்பார்த்தாள். நீண்ட நேரம் வயிற்று வலியினால் துடித்துக்கொண்டிருந்ததாலோ என்னவோ, அந்தப் பாயில் அப்படியே நிம்மதியாகத் தூங்கிக்கொண்டிருந்தாள்.
ஒரு நாளா இரண்டு நாளாலு} பத்து நாட்கள் அல்லவாலு} வானதி பசியால் துடித்துக்கொண்டிருக்கின்றாள்லு} எப்பொழுதாவது, இடையிடையே கிடைக்கின்றவற்றை ஆண்பிள்ளை என்றபடியாலோ என்னவோ பிரதீபனுக்குக்கொடுத்துவிட்டு, வெறுங் கண்ணீருடன் கனன்று கொண்டிருக்கும் வானதியின் வயிற்றில், வெறுங் கஞ்சியையாவது வார்த்துவிட வேண்டும் என்ற ஆதங்கம், அவளை ஒரு புதிய உலகத்திற்கு இழுத்துச் செல்வது போல் இருந்தது.
காலம் காலமாகத் தமது சொந்த வீடுகளில் உண்டு, உறங்கி வாழ்ந்த மக்களை ஒரே இரவில் விரட்டி அடித்து, அகதிகளாக்கிவிட்ட அந்த அவலத்தைச் சுமந்து நின்ற யாழ்ப்பாணத்தை விட்டுக் கண்ணீருடன் வெளியேறிய இலட்சக்கணக்கான தமிழர்களில் செல்லம்மாவும் ஒருத்தியாக ஓடிவந்த அந்தத் துயரம் நிறைந்த இரவுகளை அவளால் எப்படி மறக்கமுடியும்.
மாகழி மாதக் கடுங்குளிர் அந்தப் பிரதேசத்தையே உறைய வைத்துக் கொண்டிருந்தது. உயர்ந்து, அடர்த்தியாக வளர்ந்திருந்த காட்டு மரங்களிடையே வெள்ளைப் பஞ்சுகளைத் தூவிவிட்டது போல், ஆங்காங்கே பனிமூட்டம் பரவி இருந்தது.
அந்தக் காலை நேரத்தில் வன்னி மண் இன்னும் விழித்துக் கொள்ளவில்லைலு} அந்த அளவுக்கு குளிர்காற்று எல்லோரையும் உலுப்பிக்கொண்டிருந்தது.
காட்டுக் குயில்களின் மனதைக் கிறுங்க வைக்கும் மெல்லிய ஓசை மட்டும் காற்றில் கலந்து இதமாக ஒலித்துக்கொண்டிருந்தது. அந்த இனிய ஒலிக்குமேலாக 'கீச்சுலு} கீச்சு' என்று குரங்குக் குட்டிகளை வயிற்றில் காவியபடி மரங்களிடையே தாவித்திரியும் மந்திக் குரங்குகளின் சத்தங்களும், தூரத்தில் எங்கோ காட்டுப் பகுதிக்குள் இருந்து இடையிடையே விட்டு விட்டுக் கேட்டுக்கொண்டிருக்கும் துப்பாக்கிச் சத்தங்களும்தான், அந்த மண்ணின இயற்கை ஒலிகளாகிவிட்டன.
வன்னிப் பெருநிலப்பரப்பில் உள்ள மாவட்டங்களில், முல்லைத்தீவு மாவட்டம் என்றதுமே, அடங்காத் தமிழன் பண்டாரவன்னியனின் பெயர்தான் நினைவுக்கு வரும்லு} தூங்கிக் கிடக்கும் குழந்தை கூட ஒரு கணம் தன்னுடைய உடலைச் சிலிர்த்துக் கொள்ளும்.
அன்று யாழ்ப்பாண அரசு, அந்நிய ஏகாதிபத்தியவாதிகளின் ஆக்கிரமிப்புக்குள் கொண்டு வரப்பட்ட பின்னரும்கூட, வன்னிமையை அடிபணியவிடாது இறுதிவரை போராடி அந்த மண்ணைக் காத்த மாவீரன் பண்டாரவன்னியன் திரிந்த மண்ணல்லவா அதுலு}
அதனால் தானோ என்னவோ, இன்றும்கூட அந்த மண் வளையாது நிற்கின்றது.
வந்தாரை வாழவைக்கும் மண் என்றும், வீரத்தின் விளை நிலம் என்றும் ஈழத்துத் தமிழ் இலக்கியப் பாரம்பரியத்தில் பேசப்பட்டு வந்த மண்லு} இன்று.
அவலம் நிறைந்த மக்களால் நிரம்பிப் போய் சிவந்து காணப்படுகின்றதுலு} யாழ்ப்பாண மண்ணைக் கைப்பற்றி அதன் பாரம்பரியத்தையும், தனித்துவத்தையுமே வேரோடு அழித்துவிட வேண்டுமென்பதற்காகவே மேற்கொள்ளப்பட்ட 'ரிவிரெச' படையெடுப்பு, அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஒவ வொரு சிங்களப் பெயரிலும் அமைந்த இராணுவ நடவடிக்கைகளும் அந்த மண்ணையே இன்று அல்லோலகல்லோலப் படுத்திவிட்டன.
காலம் காலமாகத் தமது சொந்த வீடுகளில் உண்டு, உறங்கி வாழ்ந்த மக்களை ஒரே இரவில் விரட்டி அடித்து, அகதிகளாக்கிவிட்ட அந்த அவலத்தைச் சுமந்து நின்ற யாழ்ப்பாணத்தை விட்டுக் கண்ணீருடன் வெளியேறிய இலட்சக்கணக்கான தமிழர்களில் செல்லம்மாவும் ஒருத்தியாக ஓடிவந்த அந்தத் துயரம் நிறைந்த இரவுகளை அவளால் எப்படி மறக்கமுடியும்.
'அம்மாலு} இன்னும் வயிற்று நோக் குறைஞ்சதாத் தெரியேல்லையம்மா வரவர அடிவயிறு எரியிறமாதிரிக்கிடக்குதணைலு} ஆலு} கடவுளேலு} வலி தாங்க முடியேல்லைலு}'
செல்லம்மாவின் மூத்த மகள் வானதி அடி வயிற்றை அழுத்திப் பிடித்தபடி, அழுது புலம்பிக் கொண்டிருந்தாள். ஒருவாரத்திற்கு மேலாகச் சாப்பிடாமல் இருந்ததால், கடந்த மூன்று நாட்களாக வயிற்றுவலியினாலும், தொடர்ச்சியான வாந்தியினாலும் துடித்துத் துவண்டு போய் இருந்தாள்.
'பிள்ளை இப்பத்தானை தேத்தண்ணி குடிச்சனீலு} இன்னும் கொஞ்சத்தாலை எல்லாம் குணமாப் போயிடும்லு}'
கடந்த மூன்று நாட்களாகப் பழகிப் போய்விட்ட, அந்த முனகல் செல்லம்மாவுக்குப் புதிதாகத் தெரியவில்லை.
செல்லம்மா ஏதோ ஒரு சாட்டுக்குச் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே, துக்கம் தொண்டையை அடைத்துக் கொண்டு வந்ததுலு} ஒருநாளைக்கு, ஒரு நேர உணவினாலாவது அரைகுறையாக நிரப்பித்திருப்திப்படுத்த வேண்டிய வயிற்றை, எத்தனை நாட்கள்தான், வெறும் பனங்கட்டித் தேநீரைக் காட்டி ஏமாற்ற முடியும்?
பலாலியில் இருந்து ஏவப்பட்ட மூர்க்கத்தனமான எறிகணைத் தாக்குதல்களினால் தெல்லிப்பளையில் இருந்தும் இடம்பெயர்ந்து, நவாலி சென்.பீற்றேர்ஸ் தேவாலயத்தில் தஞ்சமடைந்திருந்தபோது, வீசப்பட்ட 'புக்காரா' போர் விமானங்களின் குண்டுகள், அந்தப் புனித கத்தோலிக்கத் தேவாலயத்தை மட்டுமா தாக்கி அழித்தனலு}?
அந்த ஆலயத்தினுள் தஞ்சமடைந்திருந்த குழந்தைகள், பெண்கள், வயோதிபர் என்று நூற்றுக் கணக்கான அப்பாவிகளின் உடல்கள், சிதறிப் பலியானபோது, அவளுடைய கணவனையுமல்லவா பறிகொடுத்துவிட்டு நிர்க்கதியாக நின்றவள்.
அன்று, அவள் அனுபவித்த, அந்த வேதனையின் கொடூரத்தைவிட, இன்று அந்த அகதி முகாமில் அனுபவிக்கும் துயரமோ மிகவும் கொடூரமானது.
புதுக்குடியிருப்பு ஆனந்தபுரம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் அகதி முகாமில் கழிந்த அந்த ஆறுமாத அவல வாழ்க்கையில் அவள் அனுபவித்த துயரங்களோ ஏராளம்.
பாயில் படுத்திருந்தபடியே, வலி தாங்கமுடியாது முக்கிமுனகிக் கொண்டிருந்த, வானதியின் கோலத்தைப் பார்த்ததுமே, செல்லம்மாவின் பெற்ற வயிறு பற்றி எரிந்துகொண்டிருந்ததுலு} சேர்த்து வந்த பணத்தைச் செலவழிக்க வழி தெரியாது, உண்டு குடித்துக் கழித்து வாழ்பவர்களுக்கு அதனாலேயே நோய்களும் வந்துவிடுகின்றதுலு} ஆனால், வானதியைப் போன்று நிர்க்கதியாக்கப்பட்டுவிட்ட ஏழைகளின் 'பசிப்பிணிக்கு' யாரால் தான் மருந்துகொடுக்க முடியும்லு}?
'சே என்ன வடிவாய் இருந்த பிள்ளைலு} ஊரைவிட்டு வந்து தேப்பனையும் பறிகுடுத்திட்டு இப்பிடிக்கோலம் மாறிப்போய்லு} கடவுளேலு} நான் என்ன பாவம் செய்து பிறந்திட்டன்லு} கலியாணம் முடிக்கவேண்டிய வயதில், இப்படி எலும்பும் தோலுமாய்ப் பார்த்துக் கொண்டிருக்கிறதைவிட, அண்டைக்கே அவரோடை செத்துத் துலைஞ்சிருக்கலாம்'
நீண்ட பெருமூச்சு விட்டபடியே தன்னையே நொந்து, சபித்துக் கொண்டாள்லு} முதலாம் கட்டம், இரண்டாம் கட்டம் என்று அடுத்தடுத்து மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கைகளினால், யாழ்ப்பாணத்தில் இருந்து இடம்பெயர்ந்த மக்களாலும், 'சத்ஜெய' இராணுவ நடவடிக்கையினால் கிளிநொச்சியில் இருந்து இடம்பெயர்ந்த மக்களாலும் அந்த அகதி முகாம் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது.
அங்கேதான், அவர்களுக்கும் ஒரு சிறிய பகுதி ஒதுக்கிக்கொடுக்கப்பட்டிருந்ததுலு} ஒரு வகுப்பறையினுள் மூன்று தனிக்குடும்பங்கள் எப்படியோ இருந்தே ஆக வேண்டும்.
'அம்மாலு} என்னம்மாலு}? இண்டைக்கும் சாப்பாடு தரமாட்டியளோலு}? ரெண்டு நாளா வெறும் தேத்தண்ணியைக் குடிச்சுக் குடிச்சு வாயெல்லாம் கைக்குதுலு} இண்டைக்குப் பள்ளிக்கூடத்திலை வகுப்பேற்றச் சோதனை என்றும் சொல்லி விட்டவைலு}'
படுக்கையில் இருந்தும், எழும்ப மனமில்லாமல் சோம்பலை முறித்துக் கொண்டே எழுந்த பிரதீபன், தாயின் முகத்தையே பார்த்து அனுங்கிக் கொண்டிருந்தான்.
அவன் புதுக்குடியிருப்பு மகா வித்தியாலயத்தில் ஒன்பதாம் வகுப்பில் படித்துக்கொண்டிருக்கிறான். எந்தக் கஸ்டம் வந்தாலும் அவனை எப்படியும் படித்து ஆளாக்கிவிட வேண்டும் என்ற ஆதங்கம் செல்லம்மாவிடம் இருந்தாலும், அதற்குரிய வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க மட்டும் அவளால் முடியவில்லை.
'என்ரை ராசன்லு} இண்டைக்கு மட்டும் போய்ச் சோதனையைச் செய்துட்டு வா நான் எப்பிடியும் இண்டைக்கு கால் கிலோ அரிசியாவது கொண்டு வந்து கஞ்சி வைத்துத் தருவன்லு}'
'சும்மா போணைலு} நேற்றும் இப்படித்தானை சொல்லிப்போட்டுப் போய் மத்தியானம் வெறுங்கையோடை வந்தனிங்கள் ஏன் இப்படி ஒவ வொரு நாளும் ஏமாத்திறியள்?'
பிரதீபனின் ஆற்றாமையும், பசியின் கொடூரமும் அவனை அப்படிப் பேசவைத்துவிட்டது.
'தம்பி.. அம்மாவை அப்படிப் பேசாதைலு} பாவம் அவ என்ன செய்வா..? தன்ரை கழுத்திலை, காதிலை கிடந்த நகை எல்லாத்தையும் விற்று இவ வளவு காலமும் சமாளிச்சாலு} அதுக்குப் பிறகும் கூட பக்கத்துச் சனங்களிட்டைப் போய்ப் பிடி அரிசி சேர்த்துக் கஞ்சி காய்ச்சித் தந்தாலு} எத்தினை நாள் வீடுகளுக்குப் போய், அரிசி இடிச்சுக் கொடுத்து எங்களுக்குச் சாப்பாடு போட்டிருப்பாலு} இதெல்லாம் தெரிஞ்சும் ஏன் இப்படி, கதைச்சு அவவின்ரை மனதை நோக வைக்கிறாய்.. ம்லு} எங்கடை தலைவிதி, இப்படி எங்களை அலைக் கழிக்குதுலு}'
வானதியின் மூச்சு இளைத்துக் கொண்டிருந்ததுலு} படுக்கையில் இருந்தும், மெதுவாக எழும்பி இருந்த வானதி, அந்த வயிறு எரியும் நிலையில் இருந்தும்கூடத் தன்னுடைய தம்பியைச் செல்லமாகக் கடிந்துகொண்டாள்.
'அக்காலு} என்னைக் கோவிக்காதீங்கோலு} அம்மா பாவம் எங்களுக்காக கஸ்டப்படுறதை நான் உணராமல் இல்லை. அக்காலு}. இது எங்கடை விதி மட்டுமல்லலு} இந்த நாட்டிலை தமிழனாய்ப் பிறந்ததாலை ஏற்படுத்தப்பட்ட சதி அக்காலு} அந்த விதியை நாங்கள்தான் மாற்றி அமைக்கவேணும்'
தாயுடன் சேர்த்து நாட் கணக்காகச் சாப்பிடாமலேயே இருக்கும், அவர்களுடைய வயிற்றில் மூண்டெழுந்த அந்தப் பசித்தீயை மட்டும் அவர்களால் எப்படி அணைக்க முடியும்?
செல்லம்மாவுக்கும், எங்காவது வேலைக்குப்போய், கூலி வேலையாவது செய்து அன்றாடம் செலவுக்குத் தன்னும் உழைக்கவேண்டும் என்ற ஆசைதான்லு}
இன்று, வன்னிப் பெருநிலப் பரப்பில் வளம் கொழிக்கும் நூற்றுக் கணக்கான ஏக்கர் வயல் நிலங்கள், இராணுவ ஆக்கிரமிப்புக்குள்ளும், எறிகணை வீச்சு எல்லைக்குள்ளும் கொண்டுவரப்பட்ட பின்னர் அவை எல்லாமே இன்று வானம் பார்த்த புூமிகளாகிவிட்டன. இந்த நிலையில், எத்தனையோ உடல் வலிமையுள்ள ஆண்களுக்கே வேலை வழங்கமுடியாத நிலையில், வலுவிழந்து மெலிந்து, எலும்புக்கூடாகி விட்ட செல்லம்மாவுக்கு, அங்கே யார்தான் வேலை கொடுக்கப்போகிறார்கள்?
வன்னிப் பெருநிலப்பரப்பைத் தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியாத நிலையில் அங்கே வாழ்கின்ற மக்களைப் பட்டினி போட்டுப் பணிய வைப்பதற்கு உணவுத் தடையைப் போராயுதமாகப் பயன்படுத்தும் அந்த, அநாகரிகம் உலகில் வேறு எந்த நாட்டிலுமே நடந்திருக்கமுடியாது.
இராணுவ நடவடிக்கைகளினால் இடம் பெயர்ந்தவர்களுக்குச் சில மாதங்கள் வரை ஏதோ பெயரளவில் வாரத்திற்கு முன்னூறு ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொருட்களை நிவாரணமாகக் கொடுத்து வந்தார்கள். அதற்குப் பிறகு மாதத்திற்கு ஒரு தடவையாகக் குறைத்து, இப்போது 'அகதிகளுக்கான நிவாரணம்' முற்றாகவே நிறுத்தப்பட்டுவிட்டது.
அகதிகளுக்கென வெளிநாடுகளில் இருந்துவரும் உதவிகள் தொடர்ந்தும் வந்துகொண்டிருக்கின்றன. ஆனால், அந்த ஏழைகளின் வயிறுகள் மட்டும் வெறுமையாகிக்கொண்டு வந்தனலு}
'தம்பிலு} எழும்பித் தேத்தண்ணியைக் குடிச்சிட்டுப் போயிற்று வாலு} நான், என்ன சும்மாதிரிஞ்சிட்டே வாறன்லு} நேற்றுக்கூட ஒரு கொத்து அரிசிக்காக அலையாத இடமில்லைலு} ஏறி இறங்காத படலை இல்லைலு} உண்ணாண இண்டைக்கு எப்படியும், உனக்குக் கஞ்சி காய்ச்சி வைப்பன்'
அவள் உறுதியாகக் கூறிக்கொண்டே, மகனின் தலையை வாஞ்சையுடன் தடவி விட்டாள்.
'சரிலு} அம்மா, நான் இண்டைக்கு போறன்லு} அம்மாலு} நான் கதைச்சதைப் பற்றிக் கவலைப்படாதையுங்கோ ஏதோ தெரியாமல் கதைச்சிட்டன்..'
அவன் இப்படிக் கூறியதும், செல்லம்மாவின் நெஞ்சுக்குள் அடக்கி வைத்திருந்த துயரம் இன்னும் பீரிட்டுக் கொண்டு வந்ததுலு} சேலைத் தலைப்பினால் வாயையும், கண்களையும் மூடிக்கொண்டு விம்மி, விம்மி அழத் தொடங்கிவிட்டாள்.
அவர்களுக்கு எதிரில், பாயில் படுத்திருந்தபடியே, பிரதீபனையே பார்த்துக்கொண்டிருந்த வானதியின் கண்களில் கண்ணீர் முட்டிக்கொண்டு வந்ததுலு} அவளுக்கு, அந்த நேரம், 'ஓவென்று' வாய்விட்டே கதறி அழவேண்டும் போல் இருந்தது. தன்னுடைய முகத்தை அடுத்த பக்கம் திரும்பி சட்டைத் தலைப்பினால், வழிந்து கொண்டிருந்த கண்ணீரைத் துடைத்துவிட்டாள்.
ஆம்.. அங்கே பசிக்கும், பாசத்திற்கும் இடையே அவர்களுடைய உணர்வுகள் போராடிக்கொண்டிருந்தனலு}
அந்த அகதிமுகாமின், 'ஒரு லயம்' மெல்ல, மெல்ல விழித்துக் கொண்டிருந்ததுலு} அந்த முகாமில் உள்ளவர்கள், அன்றும் வழமைபோலக் கலகலப்பாக இயங்கத் தொடங்கிவிட்டனர். செல்லம்மா மட்டும், அந்த விடியப் போகும் பொழுதை நினைத்து நடுங்கிக்கொண்டிருந்தாள்.
'பிள்ளை இண்டைக்கு எங்கையாவது போய்ப் பிடி அரிசி சேர்த்தெண்டாலும் கொண்டுவாறன்..'
தெல்லிப்பளையில் இருந்தபொழுது, அவளுடைய கணவன் ஒரு முழு நேர விவசாயியாக இருந்து, வீட்டுக்கு வரும் விருந்தினர்களுக்கெல்லாம், தாராளமாக உணவைக் கொடுத்து அனுப்பும் அளவுக்கு வீட்டில் நெல்லை மூடை மூடையாக அடுக்கி வைத்திருப்பான்.
இன்று வீடு வீடாகச்சென்று, அவர்கள் சமைக்கும் அரிசியில் இருந்து, ஒருபிடி அரிசியாகச் சேர்த்துக் கஞ்சி காய்ச்சி வாழ வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டதை நினைத்துப் பார்த்ததும் செல்லம்மாவின் உடல் கூனிக்குறுகியது.
போர் நெருக்கடிகள், அரசின் உணவுத் தடை என்பவற்றால் வன்னியின் பல வீடுகள் இன்று அரிசிக்காகவும், மாவுக்காகவும் ஏங்கிக்கொண்டிருக்கின்ற நிலையில், பிடி அரிசி கொடுக்கின்ற நிலையில் எத்தனைபேர் இருப்பார்கள்?
'அம்மா ஏனணை அப்பிடி வீடு வீடாச் சென்று பிச்சை எடுக்கிற மாதிரிக் கேட்க வேணும்? இண்டைக்கும், அந்த உதவி அரசாங்க அதிபரிட்டையே எங்கட நிலைமையைச் சொல்லிக் கேட்டுப் பாருங்கோலு}'
வானதி, இதைச் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே, அடிவயிற்றில் பலமாக வலி ஏற்பட்டதால், வயிற்றை அப்படியே அழுத்திப் பிடித்தபடி படுத்திருந்தாள்.
'சரிலு} பிள்ளைலு} எதுக்கும் இண்டைக்கு ஒருக்கால் போய் அவரிட்டையே கேட்டுப் பார்த்துட்டு வாறன்லு} ஏதோ கடவுள் விட்டவழி'
செல்லம்மா கொடியிலிருந்த சேலையை எடுத்துக் கட்டிக்கொண்டு, புதுக்குடியிருப்பு உதவி அரசாங்க அதிபர் பணிமனைக்குப் போவதற்கு ஆயத்தப்படுத்தினாள்.
இதயத்தை அழுத்திப் பிடித்த துயரத்துடன், அந்த முகாமைவிட்டு வெளியேறிய செல்லம்மா ஒருவாறு நடந்து சுமார், ஒரு மைல் தூரத்தில் உள்ள உதவி அரசாங்க அதிபர் பணிமனையை அடையவும், அங்கு அலுவலகப் பணிகள் ஆரம்பமாகவும் சரியாக இருந்தது.
வசதிகளும் வாய்ப்புக்களும் நிறைந்த நகரப் புறங்களில் கிடைக்கின்ற வளங்களை, எல்லாம் அனுபவித்துக்கொண்டு, ஏனோதானோ என்று இருக்கின்ற அதிகாரிகளைப் போன்றவர்களை அங்கே, வன்னியில் காணமுடியாதுலு} அவர்களை யாருமே மேற்பார்வை செய்வதில்லை.. ஆனால் பற்றுறுதியோடும், மனிதாபிமானத்தோடும் பணியாற்றுகின்ற மனிதர்களைக் கொண்டுதான். அங்கே உள்ள அலுவலகங்கள் எல்லாமே இயங்குகின்றன.
'என்னம்மாலு} இண்டைக்கும் நேரத்தோடையே வந்துவிட்டியள்போல கிடக்கு சரி உள்ளை நடவுங்க. நான் சைக்கிளை விட்டுட்டுவாறன்..'
அந்த அலுவலகத்தினுள் தனது, மோட்டார் சைக்கிளில் வந்து சேர்ந்த உதவி அரசாங்க அதிபர் சிவானந்தா, தூரத்தில் வரும்பொழுதே செல்லம்மாவைக் கண்டுவிட்டார்.
வழமையாகவே சோகத்துடன் வந்துபோகும் செல்லம்மாவைக் கண்டதும் அன்றும் அவரையறியாமலேயே அவள் மீது ஒருவித இரக்கம் ஏற்பட்டது. அலுவலக அறையை நோக்கி நடந்துகொண்டிருந்த சிவானந்தாவைத் தொடா ந்து செல்லம்மாவும் தயங்கித் தயங்கிய படியே பின் தொடர்ந்து போய்க்கொண்டிருந்தாள்.
'சண்முகம்லு} அந்த அம்மாவை இன்னும் கொஞ்சநேரத்திலை உள்ளை அனுப்பு'
வாசலில் எழுந்து நின்ற வாச்சரிடம், கூறியபடியே, கதவைத் திறந்து தனது அலுவலக மேசையை நோக்கிச் சென்ற சிவானந்தா, அன்று மேற்கொள்ளவேண்டிய வேலைத் திட்டங்களை மேலோட்டமாக ஒரு தடவை பார்த்துக் கொண்டார்.
அன்றைய பணிக்கான தனது ஆரம்ப வேலைகளை முடித்துவிட்டு, வாசலில் நின்ற சண்முகத்தைப் பார்த்துச் சைகை காட்டினார்.
அவரது அனுமதி கிடைத்ததும், சண்முகம் செல்லம்மாவை உள்ளே செல்லுமாறு கூறிக் கதவைத் திறந்துவிட்டான்.
உதவி அரசாங்க அதிபரின் அலுவலக மேசையை நோக்கி மெதுவாகச் சென்றுகொண்டிருந்த செல்லம்மா அவருக்கு அருகே வந்ததும் கையைக் கட்டிக்கொண்டு அவரையே பார்த்துக்கொண்டு நின்றாள்.
'அம்மா.. இந்தக் கதிரையிலை இருங்க..'
அச்சம் கலந்த பார்வையுடன், அவரையே பார்த்துக் கொண்டிருந்த செல்லம்மாவையே பார்த்துக்கொண்டிருந்த அந்த இளம் உதவி அரசாங்க அதிபருக்கே, அரசு மேற்கொள்ளும் பாரபட்சமான நடவடிக்கைகளை நினைத்துப் பார்த்தது ஆத்திரம் பற்றிக்கொண்டு வந்தது.
'சேலு} என்ன போக்கிரித்தனமான வேலைலு} சந்தோசமாகத் தங்கடை, தங்கடை வீடுகளில் இருந்து உழைத்துச் சாப்பிட்டு நிம்மதியாக வாழ்ந்த சனத்தைத் சமாதானத்திற்கான யுத்தம் என்ற போர்வையிலை துரத்தி அடித்து அகதிகளாக்கிவிட்டு, பட்டினி போட்டுக் கொல்லும், இந்தக் கொடுமையை ஆரிட்டைப் போய் சொல்லி அழுகிறது?'
அவருடைய இதயம் குமுறிக்கொண்டிருந்தது. இதனை வாய்விட்டு எவரிடமும் கூறினாலோ, அல்லது அறிக்கையாக அனுப்பி வைத்தாலோ 'ராஜத் துரோகி' என்ற பெயரும் சூட்டப்பட்டு தண்டனை இடமாற்றமும் கிடைத்துவிடும் என்பதால் அவருடைய உள்ளத்து உணர்வுகளை இதயத்திற்குள்ளேயே அமுக்கிக்கொண்டார்.
'ஐயாலு} என்ரை பிள்ளைகள் இரண்டும், நாலு நாளா அன்னத்தைக் காணாமல் அப்பிடியே வாடி வதங்கிப் போய்க்கிடக்குதுகள். இந்த முறை மட்டும் ஏதோ பார்த்து நிவாரணம் தந்தியள் எண்டால் உங்களுக்குக் கோடி புண்ணியம் கிடைக்கும்லு}'
அவருடைய காலில் விழாத குறையாக, சர்வாங்கமும் ஒடுங்கிக் கண்ணீர்விட்டுக் கொண்டிருந்த செல்லம்மாவின் கைகள் தளர்ந்து நடுங்கிக் கொண்டிருந்தன.
'அம்மாலு} நீங்கள் இப்படிக் கதைக்கிறதைப் பார்க்கவே எனக்குக் கஸ்டமாக இருக்குதுலு} எனக்குத் தாறதுக்கு விருப்பமில்லை என்று நினைக்காதீங்கலு} அரசாங்கம்தான் இரண்டாம் கட்ட நிவாரணத்தை நிறுத்திட்டுதுலு} அப்படியிருந்தும் இடைக்கிடை எங்களுடைய வேறு நிதியில் இருந்துதான் உங்களுக்கு நிவாரணம் தந்தனாங்கள்..'
சிவானந்தா ஒரே மூச்சில் கூறிவிட்டு தனது கோவையில் இருந்து சில படிவங்களை எடுத்து எதையோ எழுதிக்கொண்டிருந்தார். அவருடைய செய்கை, செல்லம்மாவுக்கு ஏமாற்றத்தைத்தான் கொடுத்ததுலு} அவரையே ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.
'அம்மாலு} உங்கடை கஸ்டம் எனக்கு விளங்குதுலு} இண்டைக்கு உங்களை மாதிரி ஆயிரக்கணக்கான சனங்கள் இதேமாதிரிச் சாப்பாட்டுக்கே வழியில்லாமல் இருக்குதுகள்லு} என்ன செய்வது, இண்டைக்கு எங்கடை வேறு உதவி நிதியில் இருந்து, உங்களுக்கு நானூற்றைம்பது ரூபாவுக்குரிய உலர் உணவுப் பொருட்களை வாங்குவதற்குப் 'பெர்மிட்' தாறன்.. இதற்கு மேல் என்னாலை ஒன்றுமே செய்யமுடியாது. உங்கடை அடையாள அட்டையையும் அகதிக் காட்டையும் எடுத்துத் தாங்க'
அவர் இப்படிப் 'பெர்மிட் தருவதாகக் கூறியதும், செல்லம்மாவின் தலையில் இருந்து உள்ளங்கால் வரை மின்சாரம் பாய்ந்ததுபோல் இருந்தது. ஏதோ, 'ஜாக்பொட்' பரிசுகிடைத்துவிட்டது போல் குதூகலித்தாள்.
இப்படி ஒரு பெரிய தொகைக்கு 'நிவாரண பெர்மிட்' தருவார் என்று அவள் எதிர்பார்த்திருக்கவில்லை.
'ஐயா நீங்கள் நல்லா இருக்க வேணும்லு} தெய்வம் போல வந்து இண்டைக்குச் செய்த உதவியை என்னால மறக்கேலாது. அந்தப் பெர்மிட்டுக்கு அரிசி வாங்கினன் எண்டால், கடவுளே என்ரை பிள்ளையளுக்கு ஒரு நேரக் கஞ்சியைத் தன்னும் கொஞ்ச நாளைக்குக் காய்ச்சிக் கொடுப்பன்'
'பிடி அரிசியை' எதிர்பார்த்து வந்தவளுக்கு, கொத்துக் கணக்காக அரிசி கிடைக்கப் போவதை நினைத்ததும், கைகால் புரியாத மகிழ்ச்சிலு}
அவளுடைய அந்த மகிழ்ச்சியைக் கண்டதும் சிவானந்தாவின் கண்கள் குளமாகிக் கொண்டு வந்தன. செல்லம்மா, தன்னுடைய பையில் இருந்தும் தேசிய அடையாள அட்டையையும், அகதிகளுக்கான அடையாள அட்டையையும் எடுத்துக்கொடுத்தாள். அங்கே உள்ளவர்கள், எப்பொழுதாவது இருந்து விட்டுத்தான் இப்படி ஏதாவது ஒரு தேவைக்கு அடையாள அட்டையைக் காட்டவேண்டிவரும். ஆனால் வன்னிக்கு வெளியே வாழ்கின்றவர்களைப் பொறுத்தவரையில் அடையாள அட்டை இல்லாமல் எங்குமே செல்லமுடியாது. அந்த அளவுக்கு ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்குச் சுதந்திரமாக நடமாட முடியாத நிலைலு} நாய்களுக்கு பட்டிகட்டி இலக்கமிடப்பட்டிருப்பதுபோல், மனிதருக்கும் அந்த அடையாள அட்டையில்தான் உயிரேட இருக்கின்றது.
நாய்களின் கழுத்தில் பட்டி இல்லாவிட்டால், நகரசபைக்காரர்கள் பிடித்துக்கொண்டு போய்ச்சுட்டுப் புதைத்து விடுவார்கள். ஆனால் மனிதர்களின் கைகளில் அது இருந்தாலும் கூட சில வேளைகளில் பிடித்துக்கொண்டுபோய் விடுவார்கள்.
செல்லம்மாவிடம் இருந்து பெற்ற அடையாள அட்டையையும், அகதிகளுக்கான அடையாள அட்டையையும் வாங்கிப்பதிந்துவிட்டு, அவற்றுடன் நானூற்றைம்பது ரூபாவுக்கான நிவாரணப் பெர்மிட்டையும், சேர்த்துச் செல்லம்மாவின் கைகளில் கொடுத்தார்.
அதை, அவரிடமிருந்து வாங்கிய செல்லம்மா, கண்ணீர் கனக்க, கையெடுத்துக் கும்பிட்டுவிட்டு அங்கிருந்து வெளியேறி, கூட்டுறவுச் சங்கக் கடையை நோக்கி நடந்தாள்.
'முருகாலு} இண்டைக்குத்தான் உன்ரை கண் திறந்திருக்குதுலு}. ஐயோ, என்ரை பிள்ளைகள் எத்தினை நாளாச் சாப்பாடு இல்லாமல் துடித்துக்கொண்டிருக்குதுகள். போன உடனை கஞ்சி காய்ச்சிக்கொடுத்து அந்தப் பிள்ளையள் சிரிக்கிறதைப் பார்க்கவேணும்'
மனதிற்குள் நினைத்தபடியே இன்னும் வேகமாக நடக்கத் தொடங்கினாள்லு} அவளுக்கு எங்கிருந்துதான் அந்த உத்வேகம் வந்ததோ தெரியவில்லை இன்னும் இன்னும் வேகமாக நடக்கத் தொடங்கினாள்.
கூட்டுறவுச் சங்கக் கடையில் இருந்தும், அரிசியை வாங்கிக் கொண்டு, ஆனந்தபுரம் அகதி முகாமை நோக்கி ஓட்டமும், நடையுமாகச் சென்றடைந்தாள்.
ஒரு நாளா இரண்டு நாளாலு} பத்து நாட்கள் அல்லவாலு} வானதி பசியால் துடித்துக்கொண்டிருக்கின்றாள்லு} எப்பொழுதாவது, இடையிடையே கிடைக்கின்றவற்றை ஆண்பிள்ளை என்றபடியாலோ என்னவோ பிரதீபனுக்குக்கொடுத்துவிட்டு, வெறுங் கண்ணீருடன் கனன்று கொண்டிருக்கும் வானதியின் வயிற்றில், வெறுங் கஞ்சியையாவது வார்த்துவிட வேண்டும் என்ற ஆதங்கம், அவளை ஒரு புதிய உலகத்திற்கு இழுத்துச் செல்வது போல் இருந்தது.
'பிள்ளைலு} பிள்ளைலு} வானதி.. இஞ்சை அரிசி கொண்டு வந்திட்டன்லு} எழும்பிக் கெதியாய் வாணைலு}'
செல்லம்மாவின் கால்கள் ஒரு நிலையில் நிற்கவில்லை. கொண்டுவந்த அரிசியை காய்ச்சிக்கொடுக்க வேண்டும் என்ற ஆவலில் அவள் மனம் துடித்துக்கொண்டிருந்தது.
அந்த வகுப்பறையின் வாசலையும் தாண்டி சேலைத் துணியினால் மறைப்புக் கட்டியிருந்த அந்த 'அறையை' எட்டிப்பார்த்தாள். நீண்ட நேரம் வயிற்று வலியினால் துடித்துக்கொண்டிருந்ததாலோ என்னவோ, அந்தப் பாயில் அப்படியே நிம்மதியாகத் தூங்கிக்கொண்டிருந்தாள்.
ஒரு நாளா இரண்டு நாளாலு} பத்து நாட்கள் அல்லவாலு} வானதி பசியால் துடித்துக்கொண்டிருக்கின்றாள்லு} எப்பொழுதாவது, இடையிடையே கிடைக்கின்றவற்றை ஆண்பிள்ளை என்றபடியாலோ என்னவோ பிரதீபனுக்குக்கொடுத்துவிட்டு, வெறுங் கண்ணீருடன் கனன்று கொண்டிருக்கும் வானதியின் வயிற்றில், வெறுங் கஞ்சியையாவது வார்த்துவிட வேண்டும் என்ற ஆதங்கம், அவளை ஒரு புதிய உலகத்திற்கு இழுத்துச் செல்வது போல் இருந்தது.

