Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தாயகத்து அரசியல் கட்டுரைகள்
#26
ஓரம் கிழிந்தும்,
கனநாளாய் தோய்க்காமலும்
தன் தலையில் சுற்றியிருந்த துவாயால், முகத்தில் முத்து முத்தாக கொப்பளித்திருந்த வியர்வையைத் துடைத்துக் கொண்டு பாதையை மீண்டும் பார்த்தான் முனுசாமி. அவன் பார்க்குந் திசையில் புூவரசு செழித்து கன்னங்கரேலென்று அடர்த்தியாக வேலி நீட்டுக்கும் இருந்தது


அது அரிவு வெட்டுக் காலம். மூன்றாம் வாய்க்கால. ராமநாதன் கமத்தில் கூலிக்கு உழைத்து மிகவும் கருகலில் தான் மாரியாயி வீட்டுக்கு வருவாள். அப்படி வந்த நாளில்
ஒரு நாள் மாரியாயியை வெகு
நேரமாகக் காணவில்லை என்று
முனுசாமி அயலவரின் உதவியுடன் தேடிச் சென்ற போது. வழியில் அவளது பை
சிதறிக் கிடந்தது. அதற்குள் குழந்தைக்கு ஒரு லெக்ரோஜன் மாப்பெட்டி.
அரிசி, மரக்கறி, என்பன கொட்டிக்கிடந்தன. அவளது சேலைத் தலைப்பு வீதியோரத்தில் கிழிந்து தொங்கியது அருகிலுள்ள
பற்றைக்குள் அவள் கிடந்தாள்.
வாயில் இரத்தம் கசிந்து கொண்டிருந்தது. முன்னுசாமி கட்டியணைத்துக் கதறினான். வைத்தியசாலையில் அவள் பேசவில்லை. கைளால்தான்
நான்கு பிள்ளைகள் என
சைகைகாட்டினாள். அவளது கதை முடிந்தது. கைக்குழந்தைக்குப்
பாலூட்ட ஓடோடி வந்த
அவளை அலியன் யானை
புகையழிரத
வீதிக்கருகில்
வைத்து
தாக்கி ஏறிந்து
விட்டது.


கிக்கிகீ... கிக்கிகீ.... ஆட்காட்டியின் அபய ஒலி கேட்டு சடாரென தலையை நிமிர்த்தினான் முனுசாமி, வியப்போடு, 'ம்லு} என்னாலு}.? யாரையோ கண்டிரிச்சி போளுக்கு' அவனது மனம் கூற மெதுவாக வலதுகாலை எடுத்து தொட்டாவாடிப் பற்றையை மிதித்து மண்வெட்டியை ஒரு கையில் ஊன்றி சற்றுத் தொலைவில் கறையான் அரித்தும் அரிக்காமலும் பாட்டில் கிடந்த பென்னாம் பெரிய தென்னங்குற்றியில் ஏறி, அந்த வளவுக்கு வரும் ஒழுங்கையை நோக்கினான்.
'ங்லு} ஒருத்திரியு கானோ ஆக்காட்டி கத்திச்சி!' ஓரம் கிழிந்தும், கனநாளாய் தோய்க்காமலும் தன் தலையில் சுற்றியிருந்த துவாயால், முகத்தில் முத்து முத்தாக கொப்பளித்திருந்த வியர்வையைத் துடைத்துக் கொண்டு பாதையை மீண்டும் பார்த்தான் முனுசாமி. அவன் பார்க்குந் திசையில் புூவரசு செழித்து கன்னங்கரேலென்று அடர்த்தியாக வேலி நீட்டுக்கும் இருந்தது. மரத்தைப் பார்த்துக்கொண்டிருந்த முனுசாமி, நேரத்தை எண்ணினான். மதியம் பதினொருமணிக்குக் கிட்ட இருக்குமென அவனது மனஞ்சொல்ல, ஏறிநின்ற குற்றியில் அமர்ந்தான் அவன்.
லக்ஸ்ப்பிறேப்பையில் சுற்றிவைத்திருந்த வெற்றிலையை, கையை உள்ளேவிட்டு எடுத்து விரித்தான். நடுவிலிருந்த சுண்ணாம்புக்களியை ஒரு வெற்றிலையின் பின்பக்கத்தில் தடவி, பையுள் இருந்த தூள்ப்பாக்கையும் கோலி வெற்றிலையில் வைத்து மடித்தான்.
கீக்கீலு} கீக்கீலு} ஆட்காட்டி மீண்டும் அலறியதுலு} வானளாவப் பறந்தவாறே. சிறிது நேரத்தில் 'டொக்லு} டொக்' என்று அயல் பற்றைக்கு அப்பால் யாரோ பச்சைமரம் ஒன்றை கோடரியால் கொத்துவது அவனது காதில் விழுந்தது. முனுசாமி ஒரு நிம்மதிப் பெருமூச்சை விட்டுக் கொண்டான். அவன் நிற்பது இவனுக்கோ, இவன் நிற்பது அவனுக்கோ தெரியவில்லை. மரத்தை விட்டு நிலத்தில் காலை வைத்து மெதுவாக இறங்கி மீண்டும் மண்வெட்டியால் தொட்டாவாடிப் பற்றையை கொத்தினான். தொட்டாவாடி, நாயுண்ணி, சூரை, நாயுருவி அடர்ந்திருந்தது. ஒரு அடிக்கு அப்பால் எதுவுமே தெரியவில்லை.
முனுசாமிக்கு கிணற்றடிக்குச் செல்வதே இலக்காகவிருந்தது. ஒரு குறிப்பில் வேகமாக மண்வெட்டியைப் போட்டான். 'இன்னிக்கு எப்புடியுலு} கெனத்த கண்டுபிடிக்கிறது தான்' நேற்றும் வேலை செய்து முந்தி வீடிருந்த பகுதியெல்லாம் துப்பரவு செய்துவிட்டான். இன்றும் வேலை செய்து கொண்டே இருக்கிறான் வயிறு புகைந்தது.
அந்தப் பகுதி எங்கும் ஆளரவமின்றி நிசப்தமாக இருந்தது. ஒரு நாயின் குரைப்போ, ஒரு மனிதனின் குரலோ அவனது காதில் இன்னமும் விழவில்லை. 'ஒரு அஞ்சி வருசத்தில் இம்புட்டுக் காடப்போச்சே' அவனுக்கு ஒரே ஆச்சரியமாய் இருந்தது. அவனது மண்வெட்டி சளார் என ஒரு கல்லில் பட்டது. நெருப்புப்பொறி பறந்தது. 'ம்லு} கெனத்துக்கு கிட்ட கெடந்த கல்லுதாலு}ன் கெனோ ஒரு பத்து பாகத்தில இருக்கு.. அப்பாடா' மனதுக்கு திருப்தியாக இருந்தது.
1980 ஆம் ஆண்டு கட்டிய கிணறு அது. அவன் தன்னையறியாமலேயே நிசப்தமாகி நின்று போனான். 1977ம் ஆண்டு இனக் கலவரத்தில் வந்தவன் முனுசாமி. நான்கு பிள்ளைகளின் தகப்பன். இரண்டு பெண்பிள்ளை, இரண்டு ஆண் பிள்ளைகள். கடைசிப் பையன் கைக்குழந்தையாய் இருக்கும்போது உடுத்த உடுப்போடு வந்து சேர்ந்தவன் முனுசாமி. மனைவி மாரியாயி பாலூட்டும்தாய். ஈவிரக்கமற்ற அந்த இனக்கலவரம் அவர்களை காலியிலுள்ள நாகாவத்தையிலிருந்து இங்கு வரப்பண்ணியது.
நாகாவத்தை அவன் பிறந்த அழகான தோட்டம். தேயிலையும், றபரும் உண்டு. பனியோ மழையோ கடுமையாகத்தாக்காத அழகான மலை முகட்டைக் கொண்டபகுதி. அவன் அங்குள்ள மேட்டு லயத்திலுள்ள ஆறாவது காம்பறாவில் பிறந்தான். அது சிங்கள முதலாளிக்குச் சொந்தமானதாக இருந்தது. சின்னப் பையனாக அவனிருந்தபோது லயத்துத் திண்ணையில் மாடாச்சாமியிடம் அரிவரிபடித்தவன் முனுசாமி. அவன் சிறுவனாக இருந்தபோது தோட்டத்துப் பிள்ளைகள் படிக்கவென்று ஒருசிறு பள்ளிக்கூடங்கூட இருக்கவில்லை.
தோட்டத்தில் கொஞ்சம் எழுத வாசிக்கக்கூடியவர்களைக்கொண்டு அங்கிருந்த சிறார்கள் எழுத வாசிக்கக் கற்றுக்கொண்டார்கள்.
தான் குழந்தையாக இருந்த வேளை தனது தாய், தன்னை பிள்ளைமடுவத்தில் விட்டுச் சென்றது, சற்று வளர்ந்தபின் தன்னந்தனியே லயத்துப் பிள்ளைகளோடு விளையாடிக் காலங்கழித்ததையும் அவன் நினைத்தான்.
'ஐயோலு} சங்கூதப்போராங்க எந்திhPங்க நாலு} வேலைக்கு போறதில்லியாலு} றொட்டி சுட்டு வைச்சிருக்கேலு} எடுத்துசாப்பிடுங்கலு}?'
ஒவ வொரு தாயும் அதிகாலையில் இப்படித்தான் பதட்டப்படுவாள், லயத்தில்.
'சின்னாத்தா பாட்டியோட இருய்யா' வறக்கட்டுக்கு போய் விழுந்திராத சாமிலு}' சின்னாத்தாக்கிழவியோடு அவன் மட்டுமல்ல மற்றச் சிறார்களும் இருப்பார்கள்.
அவன்படிக்க பாடசாலை இல்லாது இளமைக்காலம் கருகி அழிந்தது. மதியம் ஒரு மணித்தியாலம் சாப்பிடவரும் பெற்றோரின் வருகையை ஆவலோடு எதிர்பார்த்திருக்கும் எல்லாக் குழந்தைகளும் குறுக்குப் பாதையை பார்த்திருப்பர் முனுசாமிக்குப் பத்துவயதாகியபோது தாயுடனும் தகப்பனுடனும் 'கொந்தரப்பு' வெட்ட சின்னச் 'சொறண்டி'யுங்கொண்டு மலைக்குப் போவான். அது அவனது தொழிலுக்கான முன்பயிற்சியாயமைந்தது.
முனுசாமிக்கு பத்தொன்பது வயதில் அத்தை மகளான மாரியாயியை கலியாணம் செய்து வைத்தார்கள். 'அகம் படியர்' எனத் தம்மை கூறிக்கொண்ட அவனது பெற்றோர் மற்றய சாதிக்காரர்களை தீண்டத் தகாதவர்களாக வைத்திருந்தனர். முனுசாமியின் தந்தை சாதிகுறைஞ்ச சுக்குரன். உயர் சாதிப்பெண்ணான ஈசுவரியை கேலி பண்ணியதுக்காக அவனை வீடு புூந்து அடித்தவர். சாதி குறைந்தவர்களை திண்ணையில் வைத்துத்தான் கதைப்பார்கள். சிரட்டையில் தேநீர் கொடுப்பாள் முனுசாமியின் தாய் என அவன் சொல்லுவதுண்டு.
என்றாலும் அந்த இனிமையான நாட்கள் நினைக்க, நினைக்க சுகமாக இருந்தது அவனுக்கு. கலியாணத்துக்கு முதல் 'தள்கஸ்வல' தோட்டத்தில் இருந்த மாமன் மகள்லு}
மாரியாயியைப் பார்க்க பின்நேர பஸ் எடுத்துப்போவான் போகும்போது புூள்தோசி கிதுள்பெனி எலப்ப போன்ற சிங்களவர்களின் பலகாரங்களை வாங்கிக்கொண்டுதான் போவான். அவனின் வரவுக்கு காத்திருப்பாள் மாரியாயி. அவளும் ஞாயிற்றுக் கிழமை என்றால் விசேடமான சாப்பாடுகள் செய்துவைப்பாள். தாவணிப் பெண்ணாக இருந்த மாரியாயி தோட்டத்தில் வேலைக்குப் போவதில்லை. ஒரேயொரு பிள்ளை என்பதால் தகப்பன் கந்தையா அவளைச் செல்லமாக வைத்திருந்தார்.
'இன்னிக்கி நாயித்திக் கெலம, எப்படியு மச்சா வருவாரு' யெம்மோ.. யெம்மாலு} வரிக்காங் ஒன்னு புடுங்குங்க கறிவெம்ம்' தாயிடம் கூறுவாள்.
தனது வருங்கால கணவனை உபசரிக்க எப்போதும் விழிப்பாகவே இருப்பாள். பெற்றோரும் அவள் கேட்டதெல்லாம் வாங்கிக் கொடுப்பர்.
முனுசாமியின் இளமைக்காலம், அவனது கண்ணில் நிழலாடியது. 'ம் யாருக்குத் தான் இளமை கசக்கும், வறும எவ வளவு தான் இருந்தாலும் பயங்கரமானதா இருந்தாலும் இளமை இனிமையானதுதான்'
கலியாணம் நடந்து மூத்தவன் ராஜேஸ் பிறந்த பிறகு முனுசாமியின் தகப்பன் மாயழகு பார்த்து வந்த கங்காணி வேலை முனுசாமிக்குக் கிடைத்தது. கொஞ்சநாளில் மாயழகு செத்துவிட்டார். அன்று அந்த மேட்டு லயம், பணியலயம், நடுலயம் எல்லாமே சோகத்தில் மூழ்கி விட்டது.
மாயழகு அந்தத் தோட்டத்தில் ஏறத்தாழ ஐம்பது வருடம் வாழ்ந்தவர். தோட்டத்து துரை 'சொவிசா' வந்து அஞ்சலி செய்துவிட்டுப் போனார். அயலில் சிங்களக்கிராமத்து மக்கள் அங்கு நிறைந்துவிட்டார்கள். சிலர் அழுதே விட்டார்கள்.
'கங்காணம, கங்காணமலு}' என்று வானை முட்டும் அழுகை ஒலி அனைவரையும் ஆச்சரியப்படவே வைத்தது. நீண்ட காலம் அந்த ஊரில் வாழ்ந்த படியால் மாயழகு அழகாக சிங்களம் பேசுவார். சிங்களவர்களின் நல்லது கெட்டதுகளில் பங்கெடுப்பார். அதனால் உறவை வளர்த்து வைத்திருந்தார்.
பற்றைக்குள் இருந்த கட்டெறும்பு ஒன்று சுhPர் என கடித்துவிட முனுசாமி தன் நிலைக்கு வருகிறான். கண்களிரண்டும் கண்ணீர் ஓடிச்சிவந்திருந்தன. அவனால் தொடர்ந்தும் வேலை செய்ய முடியவில்லை. அருகே நின்ற வேம்பின் நிழல் மனதுக்கும், உடலுக்கும் இதமாக இருந்தது. அவன் வேப்ப மரத்தடிக்குச் சென்று அமர்ந்து கொண்டு 'ரியுப்பில்' வைத்திருந்த தண்ணீரை மள, மள வென்று பருகி தனது துவாயை தரையில் விரித்துப் படுத்துக்கொண்டான்.
இதமாக காற்று வந்து அவனை வருடிச் செல்ல வேப்பமரத்தின் இலைகள் காற்றுக்கு ஆடின. கண்களை மூடிக்கொண்டான் முனுசாமி.
லொக்கு மாத்தியா கடயில் இலயாப்பம் உண்டது, கொண்டகெவுங் உண்டது. வெரலிக்காய் மரத்தடியில் பொறுக்கிச் சுவைத்தது. ஒவ வொரு ஞாயிறும் 'வந்துறம்பை' யில் சந்தைக்குப் போகும் போது மனைவியுடன் குதூகலமாகப் போய் அப்புகாமி கடையில் தேநீர் குடிக்கும்போது 'களுதொதல்' உண்டது. எல்லாவற்றிலும் எருமைத்தயிர் முட்டிகளில் வேண்டி வருவது நினைக்க வாயுூறிவிட்டது அவனுக்கு. மனைவியின் ஆசைக்காக திருமணம் முடித்த புதிதில் றம்புட்டான். எள்ளுப்பாகு இன்னும் பலவற்றை அவளுக்கு ஆகுதியாக்கியதென்றே அவன் எண்ணி மகிழ்ந்தான்.
நெல்லு விளைந்தவுடன் ஒரு 'உமலில்' பச்சை அரிசி கொண்டு சிங்களப் பெண்கள் வயத்துக்கு வருவார்கள். அதை வேண்டுவது, அவர்களுக்கு அரிசி மடுவத்தில் வழங்கப்படும் மாசி செமன்ரின், பம்பாய் வெங்காயம் என்பவற்றை கொடுப்பது. அவனது நினைவுகளைக் கவித்திருந்தது. கடைக் கண்களில் வழிந்தோடிய நீர் காய்ந்திருந்தது. 'ம் இனி அந்தக் காலம் வருமா.. அந்த அழகான தோட்டக் காட்டில், அட்டை ஒரு புறம் கடித்து ரத்தத்தை உறிஞ்சிச்சி, பெரகு தொறமாரு குடிச்சாங்க, இருந்தாலும் எனக்கு அது சுகமாத்தான் இருக்கு இப்ப நெனைக்கயிலயும்'
அவன் நிதானமாகவே சிந்தித்தான்.
'மண்ணாச பிடிச்ச சிங்களமே நம்ம தமிழ் சனத்த ஒப்பந்தம் ஒப்பந்தம் பெரசா உறுமன்னு ஏமாத்தி ஈந்தியாவுக்கு அனுப்பிட்டான் இல்லாட்டி எம்புட்டுச்சனோ இன்னிக்கி இருந்திருக்கும்லு} எலங்கேல'
'எங்கப்பா கட்டின மாரியம்மன் கோயில் அப்பா, கங்காணியாய் இருக்கயில வெள்ளில புூச நடக்கும், பொங்கச் சோறு தருவாரு பொன்னையா புூசாரி, அடிப்பட்டுச் சாப்பிடுவோ பொங்கசோறு. லயத்தில் உள்ள பத்துக் காம்புறாவுக்கும், அப்பா பொங்கசோறு அனுப்புவாரு. எங்கவீட்டு பெரிய பசுமாட்டில பால் எடுத்து மேசை மேல பெரிய பேசனில வெச்சி அளந்து குடுப்பாரு'
அவனது மூக்கு அடைத்தது. ஒருக்களித்துப்படுத்தான் முனுசாமி. முதுகு சில்லென்று குளிh ந்தது வியர்வையில். முனுசாமி, முதுகு சில்லென்று குளிர்ந்தது வியர்வையில். முனுசாமிக்கு இப்ப ஐம்பத்தி ஆறு வயதாகிவிட்டது. ஏறத்தாழ ஐம்பது வருடங்கள் முன்தொட்டு அங்கிருந்து புறப்படும் வரை, அவனது நினைவுத் திரையில் சஞ்சரித்தன. அவை சுகமாகவும் சுமையாகவும் மாறிமாறி அவனைத் திணற வைத்தது.
'இம்புட்டு வயது போயும் ஏந்தல நறைக்கல ஏங் அம்மா தந்த சாப்பாடு அவங்கவுூட்டு வளப்பு. தலயில நா அந்தக் காலத்தில சவுக்காரோ புூசுறதே இல்ல.. இப்பதாலு}ன் யாரு நமக்கு அரைச்சி குளிப்பாட்ட?' ஒரு துளிகண்ணீர் நிலத்தில் விழுந்து பட்டெனக் காய்ந்தது. தாயின் நினைவுகளால் நெஞ்சம் கனத்தது.
'ம் சரி போவட்டு எனக்கு மட்டுமா எளம ஒவ வொருத்தனு எந்த நிமிசமும் இளமையை தொலைச்சுக்கிட்டே தாங் இருக்கிறான். கடவுள் அப்படி படைச்சிபுட்டான். என்னைத்தா இனிக்காணப் போறம்? நடக்கிறத பாப்போம். யே ங் ஓடம்பிருந்த மாதிரி அப்பலு}! இப்ப மெலிஞ்சிட்டே நாலு புள்ளகி தவப்பேல்லியா. அதுகளயும் அங்கொண்ணு இங்கொண்ணாவுட்டுப் புட்டேலு} ஆனா ஒரு புள்ளயுூ வீணாப் போவல இது வரைக்கும்லு} ம்லு}ம்'
அவன் தனக்குள் ஆறுதலை வருவித்துக் கொண்டான். கிளிநொச்சிக்கு வந்து அகதியாய் அடைந்தபோது இங்கு இருந்த அரச அதிகாரிகள் அவர்களுக்கு இந்தக் காட்டைக் காட்டிவிட்டனர். 'கனகபுரம், வடக்கில் இருக்குலு} பாதையைக் கடந்து தெற்குப் பக்கமா காடு அதில உங்களுக்கு காணி தாறதா இருக்கிறம்' ஒரு அரச உத்தியோகத்தர் கூறியது மனதில் பளிச்சிட்டது. அதற்குப்பிறகு அவர் சொன்னபடி இந்தப் பகுதி தன்னைப்போன்ற பலருக்கும் காட்டப்பட்டதை அறிந்தான்.
முன்னூறு பேரளவில் உதயநகர் கிராமத்தில் காடுவெட்டிக் குடியேறியிருந்தனர் என்பது இப்போதும் ஆச்சரியமாக இருந்தது அவனுக்கு. 'இருபது வருசத்தக் கடந்துகிட்டு இருக்கு இன்னிக்கி ஆனந்தபுரம், உதயநகர், கந்தன்குளம், கிருஸ்ணபுரம் அப்பாடாலு}' என அவன் பெருமூச் சொன்றை வெளியேற்றினான். அயல்கிராமங்களை நினைத்து 'காடுவெட்டி, கட்டபுடுங்கி, காடு கொழுத்தி, பயிர்வச்சி வேலியடைச்சி, பாடு பாட்டாங்க எங்களோட வந்தவுங்க.'
'எல்லாம் தனக்கு தனக்குன்னு ஒரு கையகலம் நிலம் சொந்தமா வேணுமுன்னு தானே! இந்த உலக உருண்டையில் தத்தமக்கு சொந்தமாக ஒரு அடி நிலம் தானும் அவர்களுக்கு அன்று இருக்கவில்லை. அந்தத்தாகத்தை இந்த அகதிப் பயணம் ஈடேற்றியது.
முனுசாமிக்கு பிரவுடன் பண்ட் வந்த வேளை கிணறு வெட்டி விடவேண்டுமென்று ஏழாயிரத்தையும் அதில் முடக்கினான்.
இம்புட்டு நாலும், கோழிப் பண்ணை செல்லத்துரை வீட்டு கெனத்துத் தண்ணி தான் குடிச்சம் ஆனாலு} அவுங்க வெச்ச சட்டதிட்டங்கள் எங்களுக்கு சகிக்கமுடியல'
செல்லத்துரை சங்கக்கடை மனேச்சராக வேலை செய்கிறார். வடலியடைப்பு பண்டத்தரிப்பைச் சேர்ந்தவர். அதிகாலை வெறுங் குடத்Nதூடு போக ஏலாது வருடம் பிறந்த அன்று தண்ணி அள்ள ஏலாது, மாலையானா தண்ணி அள்ள விடமாட்டா நல்லம்மா, அவரின் மனைவி இந்த நிலையை மாற்ற முனுசாமி முடிவெடுத்தான்.
மனைவியின் நகைகள் அடைவு கடையில்தான் எனினும் மாரியாயி, கிணறு வெட்ட அவன் எடுத்த முடிவுக்கு மறுப்பு கூறவே இல்லை. நினைவுகள் நின்றுபோக, தனது மீசையை தடவிவிட்டுக் கொண்டான் முனுசாமி. ஒரு கிழமையாக சவரம் செய்யாத அவனது தாடியை கைகள் வருடியது.
காணி துப்பரவு செய்ய வந்த முனுசாமிக்கு இந்த மூன்று நான்கு நாளாய் சாப்பாடு, தேனீர் நேரத்துக்கு கிடைக்க வில்லை.
முனுசாமி உயரமான மனிதன். மெல்லிய உடல் வாகு. தளர்வில்லாத நடை, கறுப்போ சிவப்போ அற்றபொது நிறம். அழகான நீண்ட மூக்கு. கரிய கண்விழிகளும் அடர்ந்த புருவமும் படர்ந்த நெற்றியும், சொண்டு என்னேரமும் சிவந்திருக்க வெற்றிலை குதப்பிய வாயும் அவனை ஒரு அழகனாகவே காட்டியது.
வேலை செய்து செய்தே முறுக்கேறியிருந்த உடலும் கைகளும் தோள்களும் உருக்குப் போல உறுதியைக் காட்டின. தன் திருமேனியின் அழகை மாரியாயியிடம் காட்டி அவளை வெக்கப்பட வைப்பதும் முனுசாமிக்கு விருப்பமான செயல்.
'போங்க நீங்கலு} பெரிய பயிலுவாந்தாலு}ன்' அவள் வெட்கத்துடன் குணட்டுவாள். பிள்ளைகள் இல்லாத நேரம் பார்த்து அவளது கன்னங்களில் ஒரு முத்தம் கொடுப்பான் முனுசாமி. அவனோடு அரை நூற்றாண்டுகள் வாழ்ந்து கொண்டிருந்தவள் என்பதால் அவன் நன்றி தெரிவிப்பதாய் அது. அவனது மூத்த மகன் ராஜேஸ் தகப்பன் முனுசாமியைப் போலவே தோற்றமுடையவன்.
'ம் இந்த கெனத்த வெட்டுற நேரோலு} ஏம் பெஞ்சாதி எப்படியெல்லாம் கஸ்ரப்பட்டிருப்பா 'லோங்கிஸ்' போட்டுக்கிட்டு ஆம்பல மாரி கெனத்துள்ளுக்கு எறங்கி மங்கு.. மங்குன்னு வெட்டித் தருவா நானூ..ங் குட்டி ராஜேஸ் பயலும்தான் மண்ண அள்ளிக் கொட்டி தண்ணீ கண்டோ. அன்னிக்கு எங்க குடும்ப மட்டுமில்ல எல்லா அடுத்த காணி காரகுடும்பங்களு சந்தோசப்பட்டிச்சி'
மாரியாயியின் மிடுக்கும் துணிச்சலும் அக்கிராமத்துக்கு ஒரு முன் மாதிரியாயமைந்தது. பலருக்கு அறிவுரை கூறி வழிப்படுத்தி இருக்கிறார்கள். வறுமை அவர்களை வாட்டிய காலம் அவனது கண்ணில் நிழலாடியது.
பழைய நினைவுகள் அவனை விட்டுப் போவதாகவே இல்லை. 'உதயநகரில் முப்பது வீட்டுத் திட்டம்னு அரசாங்க முப்பது வீடு கட்டி சனத்துக்கு குடுத்த நேரம் அந்தக் காணிக்கு சொந்தக் காரங்களுக்கு கட்டித்தாறதச் சொல்லி அவுங்கள அப்புறப் படுத்தி வீடு கட்டுனதும் வேறதாவுட்டுக் கட்சிகாரங்களுக்கு எம் பி வீடுகள கொடுத்துட்டாரு காணியும் போச்சி, பாடுபட்டது வீணாபோச்சி. அப்ப அவுரூட்டு ஆட்சி தானே'
' எம்பதாம் ஆண்டு திரிப்பி யுூம் அதேமாதிரி நாப்பது வீட்டு திட்டமுன்னு காணி பறிக்க பொறப்புட்டாரு, ஜனம் விடல ஜனோ எம்பிக்கீ சாணி கரைச்சி அடிச்சி வெரட்டி விட்டிருச் இப்பதா எம்பத்திமூனுக்கு பெரவுதான் நிம்மதியா சொதந்திரமா இருக்கிறோம்'
'அகதீன்னு தென் எலங்கயில இருந்து வந்தவேல்லா நாடு கேட்டு போறாடுதான். இந்தப் போராட்ட யந்திரம் எங்கள உள்வாங்கீரிச்சி. அடைஞ்சி கெடந்த வீரத்த இந்தக்காலம் தட்டி விட்டிருக்கு அங்கிட்டு இருந்து வந்தாலும் இந்த மண் எங்களுக்கு வாழ்க்கய குடுத்திரிச்சி. மானோ மரியாதைக்காக வீரம் பொறந்திh}ச்சி. இதுதான் எங்களுட்டு தாய் நிலமா மாhPருச்சி'
'மாhPரிச்சி' என தன்னை அறியாமலே வாய் விட்டுக் கத்தினான் முனுசாமி. அவனது கரங்கள் முறுக்கேறின. கால்கள் பதறியது. தன் கரங்களின் வலிமையை அவன் உணர்ந்தான் அவனது மூக்கில் பிறந்த பெருமூச்சொன்று காற்றில் கரைந்தது.
குயிலின் இனிய கூவல் அந்த இடத்தைக் கவித்தது. அவனது காதுகளில் அக்குயில் ஓசை இனித்தது. சலனமற்ற நிர்மலமான ஒரு பொழுதாக அது அவனை உறைய வைத்தது. தொடர்ந்து முனுசாமி பற்றைகளை விறுவிறென துவம்சம் செய்தான்.
வானத்தில் பொமர் ஒன்று இரைந்தது. இவன் யாருடைய உயிரைக் குடிக்க போகிறானோ என்று கவலையோடு,
'மாரித்தாயே யாரும் அகப்படக்கூடாது' என்று தனக்குள் வேண்டிக் கொண்டான்.
ஊசியால் குத்தப்பட்டிருந்த செருப்பு அறுந்துவிட்டது. அதனைச் சரி செய்தான் முனுசாமி.
அந்த நேரம் கிளிநொச்சி ஒரு தனி மாவட்டமாய் இருக்கவில்லை. அப்போது திருநகர், ஜெயந்திநகர், கோழிப்பண்ணை என்பன இடைக்கிடை சனம் வசித்த குடியேற்றங்கள்.
உதயநகர்க் காட்டை இந்த அகதிகளுக்குக் கொடுக்கக் கூடாதென கொலனிக்காரர்களான பண்ணைவாசிகள் புறுபுறுத்தனர். எனினும் காடுவெட்டப்பட்டது.
'இங்கவா சிவராசா இப்ப அவங்களுக்கு காணி குடுக்கிறதால எங்களுக்கு நாட்டமே இல்ல பாதுகாப்புத்தான்'
'எங்களுக்கெல்லே ரவுனுக்க காணியில்லாமல் போப்போகுது. ஒருகாலத்தில கரைச்சி, பட்டினமாகேக்கைலு} நாங்கள் இதுகளை விட ஏலுமே தருமு?'
'இஞ்சேர் சிவராசா விட இப்ப பண்ணைக்க, கொலனிகாணீக்க எத்தினை தென்னை நிக்கிதுசொல்லு?
'பத்துப்பிள்ளை நிக்குது'
'எத்தினை வெச்சநீ சொல்லு'
ஐம்பத்திஏழு வெச்சனான் நாப்பத்தேழு பிள்ளையை யானை அடிச்சிப்போட்டுது.
'ம் அதுக்குத்தான் இப்ப இவங்களுக்கு காணி குடுத்திட்டா எங்களுக்கு யானை, பண்டித் தொல்லை இராது. அதுமட்டுமல்ல எங்கட மிளகாத் தோட்டத்தில கூலிக்கும், ஆக்கள் கிடைக்கும்லு} இலு}இலு}இ..'
'பாத்தியா ஒரு கல்லில இரண்டு மாங்கா'
அவர்கள் கோழிப்பண்ணை வாசிகள் கள்ளுத் தவறணையில் அவர்கள் மனம்விட்டுக் கதைத்ததைக் கேட்டுக் கொண்டிருந்ததாக வீரையா முனுச்சாமிக்குச் சொன்ன ஞாபகம்.
'சரி என்னாத்த கொறயப் போறம். இந்த தேகம் இருக்கு வரை எலங்க மண்ணுக்குன்ன ஆண்டவே எழுதிட்டான்'
முனுசாமி தான் அன்று அங்கலாய்த்ததை நினைத்துப் பார்த்தான். அன்று இவர்களை மாற்றானாகப் பார்த்த சேவியர், சண்முகம், கனகேந்திரம் ஆகியோரின் குடும்பங்கள் இன்று இந்த மண்ணில் இல்லை.
சிவராசாவின் குடும்பம் சிவராசாவை முதுமையில் தனியே விட்டுவிட்டு ஜேர்மனிக்குப் போனபின் சிவராசா தட்டத்தனியே வாழ்ந்து முடித்ததும், அனாதையாகச் செத்ததும், முனுசாமியும் அயலவர்களும் மரணச்சடங்கை நடாத்திவைத்ததும் அவனது எண்ணத்தில் வந்து போயிற்று.
முனுசாமிக்குத் தன்னையறியாமலேயே உற்சாகம் பிறந்தது. வெயிலின் கொடுமையையும் பொருட்படுத்தாமல் மண்வெட்டியை பற்றைமீது மூர்க்கமாக பாச்சினான். கிணற்றுப் பற்றையை துப்பரவு செய்யாமல் இன்று சாப்பிடுவதில்லை என கங்கணங்கட்டிக் கொண்டு வெட்டி எறிந்தான் பற்றைகளை.
ஆனையிறவுப் போரில் மாவீரனான தன் மகனின் முகம் அவனுள புகுந்து கண்கள் நிறைந்துவிட்டன. பற்றைகள் எங்கும் அவனது முகம் அவன கால் பதித்து விளையாடிய காணி இது வென்று மனம் அழுதது. வரிப்புலிபடையும், வாகனம் ஓட்டுப் பாணியும் முனுசாமிக்கு குதூகலத்தைத் தந்த வேளை அவனது வீர மரணம் அவனை துயர் கடலில் தள்ளி விட்டது. அப்பா எல்லோருக்கம் சொந்தம் பகுதி பகுதியாய் குத்தகைக்கு எடுத்துக் கொண்டு இனங்கள் அடிபடுகுது. தவிர்க்க முடியாத படி எங்கட இயக்கமும் போரிடுகுது. இது சிங்கள இனவாதிகளால் தமிழர்கள் மீது புூசப்பட்ட போர்லு}.. உங்களை நீங்கள் பிறந்த குளுகாகந்தை தோட்டத்தில் இருக்கவிடாமல் இங்கு வெறுங்கையோடு அனுப்பினதும். அதே சிங்கள இனவாதம்தான் அதால தான் அதுக்கு எதிரா போராட இந்த மண்ணில தலை நிமிர்ந்து எங்கட சந்ததி வாழ நான் போராடப் போனேன்.
கடைசியாக மகன் திலகன் வீட்டுக்கு வந்தபோது கூறியவை அவை. அது முன்னுசாமியின் காதில றீங்காரமிட்டது.
இங்கு முன்னுசாமியின் குடும்பம் அகதியாக வந்த போது மாரியாயி அயலவரிடம் கூலிக்குச் செல்ல, முனுசாமி, இந்தக் காணியை களனியாக்கினான்.
தென்னையும், வாழையும், பலாவும், புூமரங்களும் நாலு வருடத்தில் அவனுக்கு மகிழ்வளித்தன.
அது அரிவு வெட்டுக் காலம். மூன்றாம் வாய்க்கால. ராமநாதன் கமத்தில் கூலிக்கு உழைத்து மிகவும் கருகலில் தான் மாரியாயி வீட்டுக்கு வருவாள். அப்படி வந்த நாளில் ஒரு நாள் மாரியாயியை வெகு நேரமாகக் காணவில்லை என்று முனுசாமி அயலவரின் உதவியுடன் தேடிச் சென்ற போது. வழியில் அவளது பை சிதறிக் கிடந்தது.அதற்குள் குழந்தைக்கு ஒரு லெக்ரோஜன் மாப்பெட்டி. அரிசி, மரக்கறி, என்பன கொட்டிக்கிடந்தன. அவளது சேலைத் தலைப்பு வீதியோரத்தில் கிழிந்து தொங்கியது அருகிலுள்ள பற்றைக்குள் அவள் கிடந்தாள். வாயில் இரத்தம் கசிந்து கொண்டிருந்தது. முன்னுசாமி கட்டியணைத்துக் கதறினான். வைத்தியசாலையில் அவள் பேசவில்லை. கைளால்தான் நான்கு பிள்ளைகள் என சைகைகாட்டினாள். அவளது கதை முடிந்தது. கைக்குழந்தைக்குப் பாலூட்ட ஓடோடி வந்த அவளை அலியன் யானை புகையழிரத வீதிக்கருகில் வைத்து தாக்கி ஏறிந்து விட்டது.
அன்றிலிருந்து மிகக் கஸ்ரப்பட்டான் முனுசாமி தன் செல்வங்கள் நான்கையும் அவன் நம்பிக்கையோடு வளர்த்தான். 1996இல் இலங்கை இராணுவம் கிளிநொச்சி மீதான படையெடுப்பை மேற்கொண்டது. அன்று இடம் பெயர்ந்து அமபலப் பெருமாள் குளத்தில் குடிலமைத்தான் முனுசாமி மீள்குடியமா வுக்காக தன்காணியைத் துப்பரவு செய்ய இந்தக் கிழமை முனுசாமி, தன் பிள்ளைகளிடம் விடைபெற்று காணியில் வேலையை ஆரம்பித்திருந்தான்.
அவசரமாக இந்தக் காணியை ஏன் துப்பரவு செய்ய வந்தான் முன்னுசாமி.
'இந்த ஒரு ஏக்கர் நெலத்தயு டவுனமைக க எடுத்திட்ட போறாங்களே அன்னிக்கி சட்டத்தில் கதைச்சாங்க. ஒரு கையளவு நெலங்கூட இல்லாம நான் சாகப் போறன் எம்புள்ளைங்களுக்கு ஏம்புட்டுன்னு என்னா இருக்கு'


அவனது மனச்சாட்சி ஓலமிட்டது. கண்கள் பனித்தன அவனது மணம் களைத்துப் போனது. ஒரு கணம் நிமிர்ந்து தூரத்தில் தெரிந்த கோயிலை நோக்கினான். செடிகள் மண்டிக்கிடந்தது அந்தக் கோயில் மேடு.
'இல்ல இந்த நிலத்தை நான் விடவே ஏலாது எங்கிட் யாரூம் பறிக்கவராதீங்க இது எம்பெண்டாட்டி பாடுபட ட சொத்து. அவ வெட்டுன கெனம் அவ வெச்ச ஒரு தென்னையும் இல்லியே' மண்வெட்டியை எறிந்தான் அருகில் நின்ற பாலை மரத்தைக் கட்டிப்பிடித்து அழுதான்.
ஏதோ நினைவில் வரதலையை நிமிர்த்தினான் முனுசாமி. தன் இளைய மகன் இன்று வருவான் வீட்டுச சாப்பாட்டோடுலு} அவனை நினைத்தான்.
முகம் வீங்கி இருந்ததுலு} மூக்கு அடைத்திருந்தது. பசி வயிற்றைப் பிhண்டியது. தாகம்.
'அப்பா....அப்போ...' முனுசாமி காதுகளைக் கூர்மையாக்கினான், தன் மகன்தான் எனத் தீர்மானித்தான்.
'யாரு கண்ணா கண்ணாவா' என்ற குரலோடு ஒழுங்கையை எட்டிப்பார்க்க ஒரு அடி இரண்டு அடி எடுத்து பத்தை மீது வைத்தான்.
டுமீல்! பேரதிர்வோடு மிதிவெடியொன்று வெடித்தது...


ஐயோ ஐ மகன் கண்ணா....ஓடி...வா
முனுசாமி இரத்தவெள்ளத்தில் கிடந்தான்?
Reply


Messages In This Thread
[No subject] - by sethu - 06-21-2003, 09:01 PM
[No subject] - by sethu - 06-21-2003, 09:01 PM
[No subject] - by sethu - 06-21-2003, 09:02 PM
[No subject] - by sethu - 06-21-2003, 09:03 PM
[No subject] - by sethu - 06-21-2003, 09:03 PM
[No subject] - by sethu - 06-21-2003, 09:04 PM
[No subject] - by sethu - 06-21-2003, 09:04 PM
[No subject] - by sethu - 06-22-2003, 08:26 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:28 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:28 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:29 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:30 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:31 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:32 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:33 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:33 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:34 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:35 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:36 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:36 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:37 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:38 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:39 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:39 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:40 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:41 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:42 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:43 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:44 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:45 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:46 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:47 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:48 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:48 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:49 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:50 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:51 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:52 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:53 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:53 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:54 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:55 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:56 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:56 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:57 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:58 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:59 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:59 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:00 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:00 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:01 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:02 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:03 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:03 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:04 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:05 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:06 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:07 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:08 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:08 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:09 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:10 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:10 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:11 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:12 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:13 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:14 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:15 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:16 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:16 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:17 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:18 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:19 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:20 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:20 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:21 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:22 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:22 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:23 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:24 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:24 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:25 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:25 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:26 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:27 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:28 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:28 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:29 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:30 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:31 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:31 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:32 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:33 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:34 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:35 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:35 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:36 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:36 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:37 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:37 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:38 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:39 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:39 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:40 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:41 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:41 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:42 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:43 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:43 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:44 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:44 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:45 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:46 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)