06-22-2003, 08:39 AM
இண்டைக்கு தேர்த்திருவிழா.
விடிஞ்சதிலையிருந்து இந்தத் தேரைப் பற்றித்தான் ஊருக்குள்ளை கதைக்கினம். எங்கடை மாவடி முருகன் தேர் மாதிரி இந்தத்தேர் கோயில் வீதியிலை மட்டும் சுத்துற தேரில்லையாம்.
இந்தத் தேர் ஊருக்குள்ளை வருமாம். ஒவ வொரு குச்சொழுங்கைக்கையும் வருமாம். எல்லாவற்றை வீட்டுக்கும் வருமாம்.
ஒரு கிழமைக்கு முதலே இந்த தேர்த்திருவிழாக் கொண்டாட்டம் ஊருக்கை கட்டத்தொடங்கிவிட்டது.
எல்லா வீடுகளிலையும் தோரணங்கள் தூங்குது.
தெருவில சிவப்பு மஞ்சள் கொடியள் காத்தில பறக்குது.
சந்தியளில பந்தலுகள் போட்டு பெரிய சத்தத்தில் பாட்டுக்கேட்குது.
எல்லாச் சனமும் குளிச்சு புது உடுப்புப் போட்டுக் கொண்டு தேரைப் பார்க்க தெருவுக்கு போகினம்.
எங்கடை மாவடி முருகன் தேர் மாதிரி இந்தத் தேரும் புனிதமானது தானா. இந்தத் தேருக்கு வடம் பிடிக்கிறவனும் புனிதமானவன் தானாம்.
'கணபதியப்புலு} தேர் பார்க்கவரலையேலு}?' கடைக்கார மணியம் கைமுட்ட சேட்டுப் போட்டுக் கொண்டு பவுடர் புூசி சிரிச்ச முக்தோட என்னைக் கடந்து போறான். வெய்யில் எண்டாலும் வீட்டுக்கை போர்த்துக்கொண்டு கிடக்கிற சோம்பேறி தேர் பார்க்கப்போற அழகைப் பார்க்க எனக்கு சிரிப்பு வருது.
'எடலு} கணபதிலு} என்ன இஞ்சை நிற்கிறாய். தேர் பார்க்க ஆசையில்லையே?'
பால்க்கார சின்னாச்சிக் கிழவி என்னைப் பார்த்துக் கேட்கிறாள்.
பஞ்சுத்தலையை சின்னக் குடும்பியாய் சேத்துக் கட்டிக்கொண்டு கூன் விழுந்த முதுகோடை குனிஞ்சு குனிஞ்சு நடந்தபடி தேர் பாக்கப் போறாள்.
எனக்கும் தேர் பாக்க ஆசைதான். எங்கடை மாவடி முருகன் பச்சை நிறத் தேரிலை ஏறி பச்சை மாலைகளோட பச்சைக் கல் நகையளோடை சுத்தி வாற அழகை பார்த்துப் பாத்து ரசித்தவன் நான். முந்தி எங்கடை முருகன் கோயில் கொடியேறினால் இருபத்தொரு நாளும் மச்சத் தண்ணியை நான் நினைச்சுக் கூட பாக்கமாட்டேன். பட்டு வேட்டி கட்டி பட்டுச் சால்வை சுத்தி பட்டையாய் விபுூதியைப் புூசிக்கொண்டு கோயிலுக்குப் போனால் திருவிழா முடியத்தான் வீட்டை வருவன்.
அப்ப எனக்கு பத்தொன்பது வயதுதான் இருக்கும் கலியாணம் முடிச்ச முதல் வரியம். புதுப்பட்டு வேட்டி சால்வையோடை நான் தேர் பாக்கப் போறன். எனக்குப் பின்னாலை சிவப்புக் கூறைச் சீலையோடை வெக்கப்பட்டுக் கொண்டு பொன்னி, என்ரை மனுசி வாறாள்.
கோயில்லை சனம் நிறைஞ்சு வழியிது மேளங்கள் நாதஸ்வரங்களோடை மாவடி முருகனை தேரில இருத்தினம்.
பச்சை நிறமாய் அலங்கரிச்ச தேரில இருந்த படி பச்சை சாத்தின மாவடி முருகன் என்னைப் பார்த்து சின்னனாய் சிரிக்கிறான்.
எனக்கு மெய் சிலிர்க்குது. கண் சட்டெண்டு கலங்கிப் போகுது. ஒரு நொடி தான்.
வெறி பிடிச்சவனைப் போல நான் தேரை நோக்கி ஓடுறன். வெள்ளம் மாதிரி நீண்ட சனத்தை இடிச்சுக்கொண்டு முன்னாலை போறன்.
மாவடி முருகன் என்னைப் பார்த்து சின்னனாய் சிரிக்கிறான்.
'வாலு} வந்து வடத்தைப் பிடி'
எண்டு சொல்லுற மாதிரி சிரிக்கிறான்.
நான் வேகமாய் நடக்கிறேன். நீண்டுபோன அந்த வடத்தை இறுக்கமாய்ப் பிடிக்கிறன்.
பத்தொன்பது வரியமாய் இந்த வடத்தை பிடிக்கவேணும். எங்கடை மாவடி முருகனை இந்தத் தேரிலை இருத்தி ஊரெல்லாம் இழுக்கவேணும் எண்ட கனவு நிறைவேறிப்போன சந்தோசத்திலை நான் நிமிர்ந்து நிக்கிறேன்.
என்ரை சக்தி எல்லாத்தையும் ஒண்டாய்த் திரட்டி 'அரோ கரா' எண்டு கத்திக்கொண்டு தேரை இழுக்கிறன். தேர் மெல்ல மெல்ல அசைஞ்சு கொண்டு முன்னாலை வருது.
இரண்டு மூன்று நிமிசந்தான் இழுத்திருப்பேன். அடுத்த கணம்.. ஆரோ என்னை இழுக்கிற மாதிரி உணர்வு.
திரும்பினன். கண்கள் சிவக்க மீசை துடிக்க ஆத்திரத்தோடை என்னைப் பாக்கிறார் வேலுப்பிள்ளை.
'எளிய சாதி.. என்ன துணிவிலை வடத்திலைகைவைச்சாய்லு} வாடா இஞ்சாலை'
அவ வளவு சனத்துக்கை நாயை இழுக்கிறமாதிரி என்னை வேலுப்பிள்ளை இழுத்துக் கொண்டு போகிறார்.
பொன்னி பெரிய குரலிலை கத்திக்கொண்டு என்னை வந்து இழுத்துப் பிடிக்கிறாள்.
அண்டைக்கு வீட்டுக்கை போய் விழுந்து விழுந்து குழறியதுக்குப்பிறகு மாவடி முருகனை தேரிலை பாக்க வேணும் எண்ட ஆசை எனக்கு இல்லாமல் போச்சுது.
இண்டைக்கும் தேர்.
ஊரே திரண்டு தேர் பாக்கப்போக நான் பேசாமல் என்ரை வீட்டை போறன். வீட்டுப் படலையோடை பொன்னி நிற்கிறாள். ஒட்டிப் போன உடம்பிலை கிழிசலாய் நைந்து போன சிவப்பு நிற கூறைச் சீலையைக் கட்டிக்கொண்டு என்னைப் பார்த்து சிரிக்கிறாள்.
'தேர் பாக்கப் போகேலையே?'
அவளின்ரை கேள்விக்குப் பதில் சொல்லாமல் நான் வீட்டுக்கை நுழையுறன். 'இது எங்கடை மாவடி முருகன் தேர்போல இல்லையாம். வேறு தேராம்.. வெளிக்கிடுங்கோ போய்ப் பார்த்துக் கொண்டு வருவம்'
பழைய பட்டுவேட்டி சால்வையை கையிலை தாறாள் பொன்னி. பொத்தல் விழுந்து கசங்கிப் போனாலும் மினுக்குக் குறையாத அந்தப் பட்டுவேட்டி சால்வையை நான் வெறிச்சுப் பாக்கிறன் திரும்பவும் ஒரு தேர்த்திருவிழாவா? ஐம்பது வரிசத்துக்கு முதல் நடந்ததெல்லாம் நினைவுக்கு வர நான் பொன்னியை நிமிர்ந்து பாக்கிறன்.
'கெதியாய்க் கட்டிக் கொண்டு வாருங்கோவன் தேர்வரப் போகுது'
பொன்னியின்ரை அதட்டலோடை நான் தேர்பாக்க வெளிக்கிடுறன்.
தெரு முழுக்க சனம் நிறைஞ்சு வழ}யுது. எல்லாரும் சந்தோசமாய் சிரிச்சபடி கும்மாளம் போடுகினம். சிறிசுகள் பெரியகுரலிலை ஏதோ பாட்டுக்கள் பாடுகினம்.
கிட்டத்திலை எங்களுக்குப் பக்கத்திலை துவக்குச் சத்தங்கள் படபடவெண்டு கேக்குது.
'தேர் வந்திட்டுதுலு} தேர் வந்திட்டுதுலு}' எல்லாரும் தெருவுக்கு ஓடினம் தள்ளுப்பட்டு நெரிபட்டு கத்திக் குளறிக்கொண்டு தேருக்குக் கிட்டப் போகினம். பொன்னியின்ரை கையைப் பிடிச்சுக்கொண்டு நடக்க சனத்தோடை சனமாய் நானும் தேருக்குக் கிட்டவந்திட்டன்.
என்ரை மனதுக்கை மாவடி முருகன் பச்சைத் தேரிலை ஏறி பச்சை நிற அலங்காரத் தோடை என்னைப் பார்த்துச் சிரிக்கிறான்.
'அங்கை பாருங்கோவன் தேரின்ரை வடிவைலு}'
பொன்னி வியப்பாய் கத்த நான் தேரை வடிவாய் உத்துப் பாக்கிறன்.
இது தேர்தான் எண்டாலும் மாவடி முருகன் தேர்மாதிரி இஞ்சை மேளங்கள், நாதஸ்வரங்கள் இல்லை துவக்குச் சத்தங்கள் படபடவெண்டு கேக்க. பெரிய எறிகணையள் தொம், தொம் எண்டு வெடிக்க தேர் அலைஞ்சு மெதுவாய் வருது. இந்தத் தேரிலை மாவடி முருகன் இல்லை. ஆனால் தமிழீழத்தின்ரை தேசப்படம் தெரியுது மாவடி முருகன் கோயில் தேர் மாதிரி இதுவும் பச்சைதான்.
சிவப்பு, மஞ்சள் கொடியாலையும் துவக்கு ரவையளாலையும், பெரிய பெரிய ஆயுதங்களாலையும் அலங்கரிச்சு அந்தத் தேர் பளபளவெண்டு மினுங்கிக் கொண்டு முன்னாலை வருது.
மாவடி முருகன் தேரைவிட எவ வளவோ, பிரகாசமாய், என்ரை கண்ணாலை பாக்கேலாத அளவுக்கு வெளிச்சமாய் அந்தத் தேர் அசையுது.
தேருக்கு முன்னால நீண்டு போயிருக்கிற அந்தப் பெரிய வடத்தை பச்சைச் சீருடையும், பச்சைத்தொப்பியும், கறுத்தச் சப்பாத்து, தோளிலை துவக்கும் தூக்கின கனபேர் ஒண்டாய் நிண்டு இழுக்கினம். தெருவிலை பாத்துக்கொண்டு நிக்கிற ஆக்களும் வடத்துக்குக் கிட்டப்போய் அதைத் தொட்டுப் பாக்கினம். சிலபேர் சேர்ந்து இழுக்கினம். என்னை மாதிரி கூன் விழுந்து பல்லுப் போனதுகள் கூட அங்கை இளந்தாரியள் மாதிரி நிண்டுகொண்டு தேரை இழுக்கினம்.
அவையள் இழுக்க இழுக்க மெதுமெதுவாய் அசைஞ்சு வாற அந்ததேரின்ரை அழகிலை நான மெய்மறந்து நிக்கிறன்.
'அங்கைலு} அங்கை பாருங்கோவன் எங்கடை மூத்த பேரன் வடம் பிடிச்சு இழுக்கிறான்' பொன்னி பெரிய சத்தத்திலை சொன்னதைக் கேட்டு நான் திகைச்சுப்போறன்.
'என்ரைபேரனோலு} என்ரை பேரன் வடம்பிடிச்சு இழுக்கிறானோ?'
நான் நம்பாமல் பொன்னியைக் கேக்கிறன்.
'அவன்தான்லு} எங்கடை பேரன்தான்லு} பச்சை உடுப்போடை சிரிச்சுக்கொண்டு தேரிழுக்கிறது எங்கடை பேரன்தான் அங்கை பாருங்கோ.. வடிவாய் உத்துப் பாருங்கோலு}'
பொன்னி காட்டின திசையிலை பாத்து நான் திகைச்சுப் போறன். என்ரை பேரன் நிமிர்ந்து நிக்கிறான். பச்சை உடுப்போடை தோளிலை துவக்கும் தொங்கத் தன்ரைதைரியத்தை எல்லாம் ஒண்டாச் சேத்துக்கொண்டு தேரை இழுக்கிறான்.
ஓலு}. எனக்குக் கண்கள் கலங்குது பச்சை சாத்தின எங்கடை மாவடிமுருகனை தேரிலை இருத்தி வடமிழுத்த மாதிரி எனக்கு உடம்பு சிலிh க்குது.
இந்தச் சனங்களை இடித்துக்கொண்டு ஓடிப்போய் வடம் பிடிச்சிருக்கிற என்ரை பேரன்ரை கையளை கட்டிப்பிடிச்சு கொஞ்ச வேணும் போலை எனக்கு ஆசை வருது. தேருக்கு முன்னாலை வடத்தைப் பிடிச்சு இழுத்துக்கொண்டு போற அவன்ரை காலுகளை தொட்டுக் கும்பிட வேணும் போல கிடக்கிறது. இவ வளவு சனத்துக்கையும் அவனைத் தூக்கி தோளிலை இருத்தி 'இவன் என்ரை பேரன்லு} இவன் என்ரை பேரன்லு}' எண்டு கத்தவேணும் போல வெறி வருது.
நான் இருபது வயதுப் பெடியன் மாதிரி துள்ளி குதிக்கிறன். சந்தோசத்தில் கண்ணிலை இருந்து வழியிற கண்ணீரை துடைக்கக் கூட மறந்து.
நான் என்ரை பேரனையே பார்த்துக்கொண்டு நிற்கிறன்.
'இஞ்சாருங்கோலு}'
பொன்னி என்ர காதுக்குள் மெதுவாய் குசுகுசுக்கிறான். 'எங்கடை பேரனோடை வேலுப்பிள்ளையற்றை பேத்தியும் ஒண்டாய் நிண்டல்லே தேர் இழுக்கிறாள். அங்கை பாருங்கோ'
அவள் சொன்னதைக் கேட்டு நான் அதிர்ந்து போறன்.
என்ரை பேரனோடை வேலுப்பிள்ளையற்றை பேத்தியோ? ஒண்டாய் நிண்டு தேர் இழுக்கிறாளோ?
நான் திடுக்கிட்டுப் போறன் எட்டி நிண்டு உத்துப் பார்க்கிறேன்.
பச்சை உடுப்பும், தோளிலை துவக்குமாய் வேலுப்பிள்ளையற்றை பேத்தி என்ரை பேரனோடை சிரிச்சுச் சிரிச்சு என்னவோ கதைக்கிறாள். அவனும் சிரிச்சுக் கொண்டு அவளோடை சேர்ந்து வடத்தைப் பிடிக்கிறான். இரண்டு பேருமாய் சேந்து இழுக்க தேர் மெல்ல மெல்ல அசையுது.
நான் அமைதியாய் நிற்கிறன். எண்பத்தொன்பது வரியமாய் எனக்குள்ளை அடிச்ச புயல் இண்டைக்கு ஓஞ்ச மாதிரி நான் பேசாமல் நிற்கிறன். 'அங்க வேலுப்பிள்ளையை பாருங்கோ உங்களைத்தான் பாத்துக்கொண்டு நிற்கிறார்'
பொன்னி சொல்ல நான் நிமிர்ந்து பாக்கிறன். தூரத்தில வேலுப்பிள்ளை என்னையே பாத்துக்கொண்டு நிற்கிறார். நானும் வேலுப்பிள்ளை உத்துப் பாக்கிறன்.
தேர் எங்களைக் கடந்து வேகமாய்ப் போகுது.
விடிஞ்சதிலையிருந்து இந்தத் தேரைப் பற்றித்தான் ஊருக்குள்ளை கதைக்கினம். எங்கடை மாவடி முருகன் தேர் மாதிரி இந்தத்தேர் கோயில் வீதியிலை மட்டும் சுத்துற தேரில்லையாம்.
இந்தத் தேர் ஊருக்குள்ளை வருமாம். ஒவ வொரு குச்சொழுங்கைக்கையும் வருமாம். எல்லாவற்றை வீட்டுக்கும் வருமாம்.
ஒரு கிழமைக்கு முதலே இந்த தேர்த்திருவிழாக் கொண்டாட்டம் ஊருக்கை கட்டத்தொடங்கிவிட்டது.
எல்லா வீடுகளிலையும் தோரணங்கள் தூங்குது.
தெருவில சிவப்பு மஞ்சள் கொடியள் காத்தில பறக்குது.
சந்தியளில பந்தலுகள் போட்டு பெரிய சத்தத்தில் பாட்டுக்கேட்குது.
எல்லாச் சனமும் குளிச்சு புது உடுப்புப் போட்டுக் கொண்டு தேரைப் பார்க்க தெருவுக்கு போகினம்.
எங்கடை மாவடி முருகன் தேர் மாதிரி இந்தத் தேரும் புனிதமானது தானா. இந்தத் தேருக்கு வடம் பிடிக்கிறவனும் புனிதமானவன் தானாம்.
'கணபதியப்புலு} தேர் பார்க்கவரலையேலு}?' கடைக்கார மணியம் கைமுட்ட சேட்டுப் போட்டுக் கொண்டு பவுடர் புூசி சிரிச்ச முக்தோட என்னைக் கடந்து போறான். வெய்யில் எண்டாலும் வீட்டுக்கை போர்த்துக்கொண்டு கிடக்கிற சோம்பேறி தேர் பார்க்கப்போற அழகைப் பார்க்க எனக்கு சிரிப்பு வருது.
'எடலு} கணபதிலு} என்ன இஞ்சை நிற்கிறாய். தேர் பார்க்க ஆசையில்லையே?'
பால்க்கார சின்னாச்சிக் கிழவி என்னைப் பார்த்துக் கேட்கிறாள்.
பஞ்சுத்தலையை சின்னக் குடும்பியாய் சேத்துக் கட்டிக்கொண்டு கூன் விழுந்த முதுகோடை குனிஞ்சு குனிஞ்சு நடந்தபடி தேர் பாக்கப் போறாள்.
எனக்கும் தேர் பாக்க ஆசைதான். எங்கடை மாவடி முருகன் பச்சை நிறத் தேரிலை ஏறி பச்சை மாலைகளோட பச்சைக் கல் நகையளோடை சுத்தி வாற அழகை பார்த்துப் பாத்து ரசித்தவன் நான். முந்தி எங்கடை முருகன் கோயில் கொடியேறினால் இருபத்தொரு நாளும் மச்சத் தண்ணியை நான் நினைச்சுக் கூட பாக்கமாட்டேன். பட்டு வேட்டி கட்டி பட்டுச் சால்வை சுத்தி பட்டையாய் விபுூதியைப் புூசிக்கொண்டு கோயிலுக்குப் போனால் திருவிழா முடியத்தான் வீட்டை வருவன்.
அப்ப எனக்கு பத்தொன்பது வயதுதான் இருக்கும் கலியாணம் முடிச்ச முதல் வரியம். புதுப்பட்டு வேட்டி சால்வையோடை நான் தேர் பாக்கப் போறன். எனக்குப் பின்னாலை சிவப்புக் கூறைச் சீலையோடை வெக்கப்பட்டுக் கொண்டு பொன்னி, என்ரை மனுசி வாறாள்.
கோயில்லை சனம் நிறைஞ்சு வழியிது மேளங்கள் நாதஸ்வரங்களோடை மாவடி முருகனை தேரில இருத்தினம்.
பச்சை நிறமாய் அலங்கரிச்ச தேரில இருந்த படி பச்சை சாத்தின மாவடி முருகன் என்னைப் பார்த்து சின்னனாய் சிரிக்கிறான்.
எனக்கு மெய் சிலிர்க்குது. கண் சட்டெண்டு கலங்கிப் போகுது. ஒரு நொடி தான்.
வெறி பிடிச்சவனைப் போல நான் தேரை நோக்கி ஓடுறன். வெள்ளம் மாதிரி நீண்ட சனத்தை இடிச்சுக்கொண்டு முன்னாலை போறன்.
மாவடி முருகன் என்னைப் பார்த்து சின்னனாய் சிரிக்கிறான்.
'வாலு} வந்து வடத்தைப் பிடி'
எண்டு சொல்லுற மாதிரி சிரிக்கிறான்.
நான் வேகமாய் நடக்கிறேன். நீண்டுபோன அந்த வடத்தை இறுக்கமாய்ப் பிடிக்கிறன்.
பத்தொன்பது வரியமாய் இந்த வடத்தை பிடிக்கவேணும். எங்கடை மாவடி முருகனை இந்தத் தேரிலை இருத்தி ஊரெல்லாம் இழுக்கவேணும் எண்ட கனவு நிறைவேறிப்போன சந்தோசத்திலை நான் நிமிர்ந்து நிக்கிறேன்.
என்ரை சக்தி எல்லாத்தையும் ஒண்டாய்த் திரட்டி 'அரோ கரா' எண்டு கத்திக்கொண்டு தேரை இழுக்கிறன். தேர் மெல்ல மெல்ல அசைஞ்சு கொண்டு முன்னாலை வருது.
இரண்டு மூன்று நிமிசந்தான் இழுத்திருப்பேன். அடுத்த கணம்.. ஆரோ என்னை இழுக்கிற மாதிரி உணர்வு.
திரும்பினன். கண்கள் சிவக்க மீசை துடிக்க ஆத்திரத்தோடை என்னைப் பாக்கிறார் வேலுப்பிள்ளை.
'எளிய சாதி.. என்ன துணிவிலை வடத்திலைகைவைச்சாய்லு} வாடா இஞ்சாலை'
அவ வளவு சனத்துக்கை நாயை இழுக்கிறமாதிரி என்னை வேலுப்பிள்ளை இழுத்துக் கொண்டு போகிறார்.
பொன்னி பெரிய குரலிலை கத்திக்கொண்டு என்னை வந்து இழுத்துப் பிடிக்கிறாள்.
அண்டைக்கு வீட்டுக்கை போய் விழுந்து விழுந்து குழறியதுக்குப்பிறகு மாவடி முருகனை தேரிலை பாக்க வேணும் எண்ட ஆசை எனக்கு இல்லாமல் போச்சுது.
இண்டைக்கும் தேர்.
ஊரே திரண்டு தேர் பாக்கப்போக நான் பேசாமல் என்ரை வீட்டை போறன். வீட்டுப் படலையோடை பொன்னி நிற்கிறாள். ஒட்டிப் போன உடம்பிலை கிழிசலாய் நைந்து போன சிவப்பு நிற கூறைச் சீலையைக் கட்டிக்கொண்டு என்னைப் பார்த்து சிரிக்கிறாள்.
'தேர் பாக்கப் போகேலையே?'
அவளின்ரை கேள்விக்குப் பதில் சொல்லாமல் நான் வீட்டுக்கை நுழையுறன். 'இது எங்கடை மாவடி முருகன் தேர்போல இல்லையாம். வேறு தேராம்.. வெளிக்கிடுங்கோ போய்ப் பார்த்துக் கொண்டு வருவம்'
பழைய பட்டுவேட்டி சால்வையை கையிலை தாறாள் பொன்னி. பொத்தல் விழுந்து கசங்கிப் போனாலும் மினுக்குக் குறையாத அந்தப் பட்டுவேட்டி சால்வையை நான் வெறிச்சுப் பாக்கிறன் திரும்பவும் ஒரு தேர்த்திருவிழாவா? ஐம்பது வரிசத்துக்கு முதல் நடந்ததெல்லாம் நினைவுக்கு வர நான் பொன்னியை நிமிர்ந்து பாக்கிறன்.
'கெதியாய்க் கட்டிக் கொண்டு வாருங்கோவன் தேர்வரப் போகுது'
பொன்னியின்ரை அதட்டலோடை நான் தேர்பாக்க வெளிக்கிடுறன்.
தெரு முழுக்க சனம் நிறைஞ்சு வழ}யுது. எல்லாரும் சந்தோசமாய் சிரிச்சபடி கும்மாளம் போடுகினம். சிறிசுகள் பெரியகுரலிலை ஏதோ பாட்டுக்கள் பாடுகினம்.
கிட்டத்திலை எங்களுக்குப் பக்கத்திலை துவக்குச் சத்தங்கள் படபடவெண்டு கேக்குது.
'தேர் வந்திட்டுதுலு} தேர் வந்திட்டுதுலு}' எல்லாரும் தெருவுக்கு ஓடினம் தள்ளுப்பட்டு நெரிபட்டு கத்திக் குளறிக்கொண்டு தேருக்குக் கிட்டப் போகினம். பொன்னியின்ரை கையைப் பிடிச்சுக்கொண்டு நடக்க சனத்தோடை சனமாய் நானும் தேருக்குக் கிட்டவந்திட்டன்.
என்ரை மனதுக்கை மாவடி முருகன் பச்சைத் தேரிலை ஏறி பச்சை நிற அலங்காரத் தோடை என்னைப் பார்த்துச் சிரிக்கிறான்.
'அங்கை பாருங்கோவன் தேரின்ரை வடிவைலு}'
பொன்னி வியப்பாய் கத்த நான் தேரை வடிவாய் உத்துப் பாக்கிறன்.
இது தேர்தான் எண்டாலும் மாவடி முருகன் தேர்மாதிரி இஞ்சை மேளங்கள், நாதஸ்வரங்கள் இல்லை துவக்குச் சத்தங்கள் படபடவெண்டு கேக்க. பெரிய எறிகணையள் தொம், தொம் எண்டு வெடிக்க தேர் அலைஞ்சு மெதுவாய் வருது. இந்தத் தேரிலை மாவடி முருகன் இல்லை. ஆனால் தமிழீழத்தின்ரை தேசப்படம் தெரியுது மாவடி முருகன் கோயில் தேர் மாதிரி இதுவும் பச்சைதான்.
சிவப்பு, மஞ்சள் கொடியாலையும் துவக்கு ரவையளாலையும், பெரிய பெரிய ஆயுதங்களாலையும் அலங்கரிச்சு அந்தத் தேர் பளபளவெண்டு மினுங்கிக் கொண்டு முன்னாலை வருது.
மாவடி முருகன் தேரைவிட எவ வளவோ, பிரகாசமாய், என்ரை கண்ணாலை பாக்கேலாத அளவுக்கு வெளிச்சமாய் அந்தத் தேர் அசையுது.
தேருக்கு முன்னால நீண்டு போயிருக்கிற அந்தப் பெரிய வடத்தை பச்சைச் சீருடையும், பச்சைத்தொப்பியும், கறுத்தச் சப்பாத்து, தோளிலை துவக்கும் தூக்கின கனபேர் ஒண்டாய் நிண்டு இழுக்கினம். தெருவிலை பாத்துக்கொண்டு நிக்கிற ஆக்களும் வடத்துக்குக் கிட்டப்போய் அதைத் தொட்டுப் பாக்கினம். சிலபேர் சேர்ந்து இழுக்கினம். என்னை மாதிரி கூன் விழுந்து பல்லுப் போனதுகள் கூட அங்கை இளந்தாரியள் மாதிரி நிண்டுகொண்டு தேரை இழுக்கினம்.
அவையள் இழுக்க இழுக்க மெதுமெதுவாய் அசைஞ்சு வாற அந்ததேரின்ரை அழகிலை நான மெய்மறந்து நிக்கிறன்.
'அங்கைலு} அங்கை பாருங்கோவன் எங்கடை மூத்த பேரன் வடம் பிடிச்சு இழுக்கிறான்' பொன்னி பெரிய சத்தத்திலை சொன்னதைக் கேட்டு நான் திகைச்சுப்போறன்.
'என்ரைபேரனோலு} என்ரை பேரன் வடம்பிடிச்சு இழுக்கிறானோ?'
நான் நம்பாமல் பொன்னியைக் கேக்கிறன்.
'அவன்தான்லு} எங்கடை பேரன்தான்லு} பச்சை உடுப்போடை சிரிச்சுக்கொண்டு தேரிழுக்கிறது எங்கடை பேரன்தான் அங்கை பாருங்கோ.. வடிவாய் உத்துப் பாருங்கோலு}'
பொன்னி காட்டின திசையிலை பாத்து நான் திகைச்சுப் போறன். என்ரை பேரன் நிமிர்ந்து நிக்கிறான். பச்சை உடுப்போடை தோளிலை துவக்கும் தொங்கத் தன்ரைதைரியத்தை எல்லாம் ஒண்டாச் சேத்துக்கொண்டு தேரை இழுக்கிறான்.
ஓலு}. எனக்குக் கண்கள் கலங்குது பச்சை சாத்தின எங்கடை மாவடிமுருகனை தேரிலை இருத்தி வடமிழுத்த மாதிரி எனக்கு உடம்பு சிலிh க்குது.
இந்தச் சனங்களை இடித்துக்கொண்டு ஓடிப்போய் வடம் பிடிச்சிருக்கிற என்ரை பேரன்ரை கையளை கட்டிப்பிடிச்சு கொஞ்ச வேணும் போலை எனக்கு ஆசை வருது. தேருக்கு முன்னாலை வடத்தைப் பிடிச்சு இழுத்துக்கொண்டு போற அவன்ரை காலுகளை தொட்டுக் கும்பிட வேணும் போல கிடக்கிறது. இவ வளவு சனத்துக்கையும் அவனைத் தூக்கி தோளிலை இருத்தி 'இவன் என்ரை பேரன்லு} இவன் என்ரை பேரன்லு}' எண்டு கத்தவேணும் போல வெறி வருது.
நான் இருபது வயதுப் பெடியன் மாதிரி துள்ளி குதிக்கிறன். சந்தோசத்தில் கண்ணிலை இருந்து வழியிற கண்ணீரை துடைக்கக் கூட மறந்து.
நான் என்ரை பேரனையே பார்த்துக்கொண்டு நிற்கிறன்.
'இஞ்சாருங்கோலு}'
பொன்னி என்ர காதுக்குள் மெதுவாய் குசுகுசுக்கிறான். 'எங்கடை பேரனோடை வேலுப்பிள்ளையற்றை பேத்தியும் ஒண்டாய் நிண்டல்லே தேர் இழுக்கிறாள். அங்கை பாருங்கோ'
அவள் சொன்னதைக் கேட்டு நான் அதிர்ந்து போறன்.
என்ரை பேரனோடை வேலுப்பிள்ளையற்றை பேத்தியோ? ஒண்டாய் நிண்டு தேர் இழுக்கிறாளோ?
நான் திடுக்கிட்டுப் போறன் எட்டி நிண்டு உத்துப் பார்க்கிறேன்.
பச்சை உடுப்பும், தோளிலை துவக்குமாய் வேலுப்பிள்ளையற்றை பேத்தி என்ரை பேரனோடை சிரிச்சுச் சிரிச்சு என்னவோ கதைக்கிறாள். அவனும் சிரிச்சுக் கொண்டு அவளோடை சேர்ந்து வடத்தைப் பிடிக்கிறான். இரண்டு பேருமாய் சேந்து இழுக்க தேர் மெல்ல மெல்ல அசையுது.
நான் அமைதியாய் நிற்கிறன். எண்பத்தொன்பது வரியமாய் எனக்குள்ளை அடிச்ச புயல் இண்டைக்கு ஓஞ்ச மாதிரி நான் பேசாமல் நிற்கிறன். 'அங்க வேலுப்பிள்ளையை பாருங்கோ உங்களைத்தான் பாத்துக்கொண்டு நிற்கிறார்'
பொன்னி சொல்ல நான் நிமிர்ந்து பாக்கிறன். தூரத்தில வேலுப்பிள்ளை என்னையே பாத்துக்கொண்டு நிற்கிறார். நானும் வேலுப்பிள்ளை உத்துப் பாக்கிறன்.
தேர் எங்களைக் கடந்து வேகமாய்ப் போகுது.

