10-23-2005, 10:45 AM
<b>கழுத்தை நெரித்து மனைவியை கொன்றுவிட்டு மகனையும் கொல்ல முயன்ற இலங்கை தமிழர்</b>
ஜேர்மனியில் தனது மனைவியை கொன்றுவிட்டு மகனையும் கொலை செய்ய முயன்ற இலங்கையர் ஒருவரை ஜேர்மன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சில்லாலை மேற்கைச் சேர்ந்த மோகனாம்பிகை என்பவரே கொலை செய்யப்பட்டவராவார். இவரைக் கொலை செய்ததுடன் மகனைக் கொலை செய்ய முயன்ற குற்றச்சாட்டில் வறுத்தலைவிளானைச் சேர்ந்த இ.செல்வகுமார் என்பவரை ஜேர்மன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இது பற்றி மேலும் தெரியவருவதாவது;
1992 இல் ஜேர்மன் சென்ற செல்வகுமாருக்கு அங்கு வதிவிட உரிமை கிடைத்த போதும் தனது மனைவியையும் மூன்று பிள்ளைகளையும் அங்கு அழைக்க விரும்பவில்லை. இதனால் விசனமடைந்த மனைவி கடந்த வருடம் சுற்றுலா விசாவில் ஜேர்மன் சென்று கணவனின் செயலை வன்மையாகக் கண்டித்ததுடன் இது குறித்து ஜேர்மன் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப் போவதாகவும் மிரட்டியதையடுத்து இவ்வருடம் மார்ச் மாதம் தனது மனைவியையும் 3 பிள்ளைகளையும் ஜேர்மனுக்கு அழைத்திருந்தார்.
எனினும் அங்கு மனைவியை அடிக்கடி தாக்கவே தந்தைக்கும் பிள்ளைகளுக்குமிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. தாங்கள் கல்விகற்கச் சென்ற இடங்களில் இது பற்றி பிள்ளைகள் கூறவே அவர்கள் இது குறித்து பொலிஸாருக்கு முறைப்பாடு செய்தனர். இதையடுத்து செல்வகுமாரைக் கைது செய்த பொலிஸார் அவரை சிறையிலடைக்கவேஇ மனைவி பொலிஸாரிடம் பேசி 15 நாட்களின் பின்னர் அவரை விடுதலை செய்தார்.
சிறையிலிருந்து வந்த நான்காம் நாள் (கடந்த செவ்வாய்க்கிழமை) செல்வகுமார் தனது மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு வீட்டு ஹோலிலுள்ள செற்ரியில் கிடத்திவிட்டார். இவ்வேளையில்இ பாடசாலையிலிருந்து வந்த கடைசி மகன் (15 வயது) தாய் உயிரிழந்துவிட்டதை அறிந்த போது அங்கு வந்த தந்தை அந்தச் சிறுவனையும் மடக்கிப் பிடித்துஇ கொலை செய்யும் நோக்கில் கழுத்தை நெரித்துள்ளார்.
சிறுவன் மயக்கமடையவேஇ அவன் இறந்துவிட்டதாக நினைத்து ஏனைய இரு பிள்ளைகளின் வருகைக்காக காத்திருந்துள்ளார். இங்கு நடந்தவற்றை அவதானித்த அயல் வீட்டுக்காரர்இ இதுபற்றி அறிவிக்கவே அங்கு வந்த பொலிஸார் செல்வகுமாரை கைது செய்ததுடன் ஆபத்தான நிலையிலிருந்த சிறுவனை ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
மனைவியையும் மூன்று பிள்ளைகளையும் கொன்றுவிட்டு ஜேர்மனைவிட்டுத் தப்பிச் செல்வதே இவரது நோக்கமாயிருந்தது என பொலிஸ் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. இவருக்கு உடந்தையாயிருந்த யாழ்ப்பாணத்தவரொருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தினக்குரல்
ஜேர்மனியில் தனது மனைவியை கொன்றுவிட்டு மகனையும் கொலை செய்ய முயன்ற இலங்கையர் ஒருவரை ஜேர்மன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சில்லாலை மேற்கைச் சேர்ந்த மோகனாம்பிகை என்பவரே கொலை செய்யப்பட்டவராவார். இவரைக் கொலை செய்ததுடன் மகனைக் கொலை செய்ய முயன்ற குற்றச்சாட்டில் வறுத்தலைவிளானைச் சேர்ந்த இ.செல்வகுமார் என்பவரை ஜேர்மன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இது பற்றி மேலும் தெரியவருவதாவது;
1992 இல் ஜேர்மன் சென்ற செல்வகுமாருக்கு அங்கு வதிவிட உரிமை கிடைத்த போதும் தனது மனைவியையும் மூன்று பிள்ளைகளையும் அங்கு அழைக்க விரும்பவில்லை. இதனால் விசனமடைந்த மனைவி கடந்த வருடம் சுற்றுலா விசாவில் ஜேர்மன் சென்று கணவனின் செயலை வன்மையாகக் கண்டித்ததுடன் இது குறித்து ஜேர்மன் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப் போவதாகவும் மிரட்டியதையடுத்து இவ்வருடம் மார்ச் மாதம் தனது மனைவியையும் 3 பிள்ளைகளையும் ஜேர்மனுக்கு அழைத்திருந்தார்.
எனினும் அங்கு மனைவியை அடிக்கடி தாக்கவே தந்தைக்கும் பிள்ளைகளுக்குமிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. தாங்கள் கல்விகற்கச் சென்ற இடங்களில் இது பற்றி பிள்ளைகள் கூறவே அவர்கள் இது குறித்து பொலிஸாருக்கு முறைப்பாடு செய்தனர். இதையடுத்து செல்வகுமாரைக் கைது செய்த பொலிஸார் அவரை சிறையிலடைக்கவேஇ மனைவி பொலிஸாரிடம் பேசி 15 நாட்களின் பின்னர் அவரை விடுதலை செய்தார்.
சிறையிலிருந்து வந்த நான்காம் நாள் (கடந்த செவ்வாய்க்கிழமை) செல்வகுமார் தனது மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு வீட்டு ஹோலிலுள்ள செற்ரியில் கிடத்திவிட்டார். இவ்வேளையில்இ பாடசாலையிலிருந்து வந்த கடைசி மகன் (15 வயது) தாய் உயிரிழந்துவிட்டதை அறிந்த போது அங்கு வந்த தந்தை அந்தச் சிறுவனையும் மடக்கிப் பிடித்துஇ கொலை செய்யும் நோக்கில் கழுத்தை நெரித்துள்ளார்.
சிறுவன் மயக்கமடையவேஇ அவன் இறந்துவிட்டதாக நினைத்து ஏனைய இரு பிள்ளைகளின் வருகைக்காக காத்திருந்துள்ளார். இங்கு நடந்தவற்றை அவதானித்த அயல் வீட்டுக்காரர்இ இதுபற்றி அறிவிக்கவே அங்கு வந்த பொலிஸார் செல்வகுமாரை கைது செய்ததுடன் ஆபத்தான நிலையிலிருந்த சிறுவனை ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
மனைவியையும் மூன்று பிள்ளைகளையும் கொன்றுவிட்டு ஜேர்மனைவிட்டுத் தப்பிச் செல்வதே இவரது நோக்கமாயிருந்தது என பொலிஸ் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. இவருக்கு உடந்தையாயிருந்த யாழ்ப்பாணத்தவரொருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தினக்குரல்
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>

