Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இளம்பெண்கள் அமைதி குணம் போச்சு
#1
வளர் இளம்பெண்கள், அதாவது 12 முதல் 21 வயது வரை உள்ள டீன்ஏஜ் பெண்களிடம் அமைதி குணம் குடிகொண்டிருக்கும் என்பது காலம் காலமாக சொல்லப்படும் கருத்து. இப்போது, வளர் இளம்பெண்களிடம் அந்த குணமெல்லாம் போயே போச்சு. பள்ளி, கல்லுõரி மாணவ, மாணவிகளில் பார்த்தால், மாணவிகளுக்கு தான் அதிக கோபம் வருகிறது.

உங்கள் வீட்டில் உள்ள வளர் இளம்பெண், அமைதியாக இருப்பாரானால், அது உங்கள் அதிர்ஷ்டமே. பெரும்பாலான டீன்ஏஜ் பெண்களுக்கு இப்போதெல்லாம் "சுள்" என கோபம் பொத்துக்கொண்டு வருகிறது. இதை நீங்களே கண்டுபிடித்திருப்பீர்கள். இவை மருத்துவ ரீதியாகவும் சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்தியாவில் மட்டுமின்றி, உலகம் தழுவிய நிலையில், டீன்ஏஜ் பெண்களிடம் அமைதி குணம் குறைந்து வருகிறது என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

அமெரிக்காவில் புளோரிடா மாநிலத்தில் உள்ள மருத்துவ ஆய்வு மையத்தின் மனோதத்துவ ஆராய்ச்சியாளர் ஜுலியா கிராபர் தலைமையில் இதுபற்றி ஒரு சர்வே சமீபத்தில் எடுக்கப்பட்டது. அமெரிக்காவில் உள்ள சில வளர் இளம்பெண்கள் மூலம் இந்த மனோதத்துவ சர்வே எடுக்கப்பட்டது.

சர்வேக்கு பின்னர் மேற்கொண்ட ஆய்வில் தெரிந்த விவரம் பற்றி நிபுணர் கிராபர் கூறும்போது, "இப்போது பள்ளி, கல்லுõரி மாணவ, மாணவிகளில், மாணவர்கள் அதிக பொறுமையும், அமைதி குணமும் கொண்டவர்களாக உள்ளனர். வளர் இளம் பருவத்தில் இருக்க வேண்டிய பொறுமை, அமைதி குணம், இப்போது பல பெண்களிடம் இருப்பதில்லை. இதற்கு காரணம், குடும்பத்தினர் அணுகுமுறை, பள்ளியில் பாடச்சுமை, சமூகத்தில் உள்ள அந்தஸ்து நிலை ஆகியவை எல்லாம் சேர்ந்து பள்ளிப் பருவத்திலேயே, ஒரு மாணவியின் மனநிலையை மாற்றி விடுகிறது. சிலர் மட்டுமே அமைதி குணத்துடன் உள்ளனர். அவர்களும் பின்னாளில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப, அமைதி குணத்தை இழக்கின்றனர்' என்றார். மேலும் கூறுகையில், "பள்ளிப் பருவத்திலேயே மாணவிகள், மனதளவில் பெரிதும் அழுத்தம் காண்கின்றனர். பல விஷயங்களில் அவர்களாக முடிவெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. நியூயார்க்கில் ஆயிரத்து 440 மாணவிகளிடம் எடுக்கப்பட்ட ஆய்வில், பெரும்பாலோருக்கு, கோபம், பல அளவுகளில் வருவது கண்டுபிடிக்கப்பட்டது. மாணவிகளில் கோபம் வரும் தன்மை, ஓரளவு குறையலாம், கூடலாம். ஆனால், முழு அமைதி என்பது இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. நாட்டுக்குநாடு, வளர் இளம்பெண்களிடம் இந்த மாற்றங்கள் காண முடிகிறது' என்றும் கூறினார்.

"இத்தகைய பெண்கள், சமுதாயத்திலும் உழல வேண்டியிருப்பதால், பல விஷயங்களில் பல உண்மைகளை காண வேண்டியிருக்கிறது. அதனால், அமைதி குணம், மனதில் சிறிது சிறிதாக குறையத் துவங்குகிறது. போர்க்குணம் நிரம்பி விடுகிறது. குடும்பத்தினர் தான், அவர்களின் சூழ்நிலை அறிந்து நடந்து கொண்டு, போர்க்குணத்தை குறைக்க வேண்டும்' என்றும் கிராபர் தெளிவுபடுத்தினார்.

என்ன, உங்கள் வீட்டில் இப்படி ஒரு நிலைமை இருக்கிறதா? விட்டுக் கொடுத்துப் போங்கள், உங்கள் பெண், சாதிக்கும் குணத்தையும் பெற்றிருக்க சாத்தியம் உண்டே. சாதிக்கும் எவருக்கும் அமைதி குணம் முழுமையாக இருக்க வாய்ப்பே இல்லை என்பதும் மருத்துவ நிபுணர்கள் கருத்து.
thanks:dinamalar
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply


Messages In This Thread
இளம்பெண்கள் அமைதி குணம் போச்சு - by SUNDHAL - 10-22-2005, 07:55 AM
[No subject] - by tamilini - 10-22-2005, 09:55 AM
[No subject] - by Eswar - 10-22-2005, 10:09 AM
[No subject] - by tamilini - 10-22-2005, 10:13 AM
[No subject] - by Eswar - 10-24-2005, 06:23 PM
[No subject] - by Vasampu - 10-25-2005, 11:19 AM
[No subject] - by tamilini - 10-25-2005, 11:25 AM
[No subject] - by Vasampu - 10-25-2005, 11:36 AM
[No subject] - by MUGATHTHAR - 10-25-2005, 12:31 PM
[No subject] - by தூயா - 10-25-2005, 01:48 PM
[No subject] - by Rasikai - 10-25-2005, 03:48 PM
[No subject] - by Rasikai - 10-25-2005, 03:49 PM
[No subject] - by Eswar - 10-25-2005, 08:19 PM
[No subject] - by விது - 10-25-2005, 09:38 PM
[No subject] - by Rasikai - 10-26-2005, 07:41 PM
[No subject] - by Vasampu - 10-26-2005, 08:09 PM
[No subject] - by Rasikai - 10-26-2005, 08:35 PM
[No subject] - by Vasampu - 10-26-2005, 08:50 PM
[No subject] - by Rasikai - 10-26-2005, 09:00 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)