10-21-2005, 02:01 PM
<b>தமிழ்மணம் குறித்து</b>
<i>சன்னாசி @ 6:53 pm </i>
காசியை சர்வாதிகாரி என்று தாக்கியும், ஓசியில் நண்டு விசிடி கொடுப்போம் என்றும் ரகரகமாய்ப் பதிவுகள்/கருத்துக்கள். இப்போது வரும் பெரும்பாலான தாக்குதல்கள்/விமர்சனங்கள் அனைத்தும் ஒரு திசையை நோக்கி இருப்பது போலத்தான், தமிழ்மணத்தின் ஒரு சாதாரணப் பயனாளன் என்ற ரீதியில் தோன்றுகிறது. தனிப்பட்ட முறையில், இதற்கு முன்னான குழுமங்கள் அனைத்தும் - ராயர் காப்பி கிளப், மரத்தடி, திண்ணை இத்யாதி அனைத்தும் எழுத்தார்வம் உள்ளவர்களால் தொடங்கப்பட்டன என்று நினைக்கிறேன் - அதே அளவுகோல்களை வைத்து இப்போது விமர்சிக்கும் அனைவரும், வெறுமனே பதிவுகளைத் திரட்டும் தமிழ்மணத்தை உருவாக்கிய காசியையும் போட்டுத் தாக்குகிறார்களோ என்று தோன்றுகிறது. ஒன்று மட்டும் எனது அனுபவத்தில் சொல்கிறேன் - பிற ‘தளங்கள்’ போலவோ, சிறுபத்திரிகைகளின் Mini-Meக்கள் போலவோ, பெரும்பத்திரிகைகளின் Baron Munchhausenகள் போலவோ ஏதேனும் இடியாப்பங்கள் தமிழ்மணத்தை நடத்தியிருந்தால் இந்த விவாதங்களெல்லாம் எவ்வளவு நாளுக்கு முன்பே வந்து, செத்தும் போயிருக்குமென்று யோசிப்பதை அவரவர் கற்பனைக்கு விட்டுவிடுகிறேன். என்னைப் பொறுத்தவரையில் காசியும் பிறரும் உருவாக்கி நிர்வகித்த/நிர்வகிக்கும் தமிழ்மணம், அடிப்படையில் மொழி மேல் உள்ள ஆர்வத்தால், தொழில்நுட்பம் தெரிந்த சிலரால் உருவாக்கப்பட்டதென்பது என் அபிப்ராயம். இதே தமிழ்மணத்தை காசுகொடுத்து எவரிடமாவது நிரல்கள் எழுதி வாங்கி, இப்போது போட்டுத் தாக்கும் இடியாப்பங்கள் “நடத்தி” வந்தால் இப்போது சர்வாதிகாரம் சர்வாதிகாரம் என்று கூச்சலிடுபவர்களில் குரல் ஒரு துக்கடா தயவுதாட்சண்யமுமின்றி என்றோ நசுக்கப்பட்டிருக்கும் - நாய் கூடச் சீந்தாது என்று ஒரு சொலவடை இருக்கிறதே, அது போல. அனைத்துப் பிரச்னைகளுக்கும்/சாத்தியப்பாடுகளுக்கும் ஒரு holy Grailஐத் தேடுகிறேன் என்று சொல்லிவிடுவது சுலபம். தன் பதிவில் மயூரன் சொன்னதுபோல, தமிழ்மணம் ஆரம்பித்த சில காலங்களுக்குப் பின் வேறுவிதமான திரட்டிகளை எதிர்பார்த்தேன். இவ்வளவு ஏன், உலகத் திரைப்படங்கள் பற்றிய பார்வை அனுபவங்களைத் தொகுக்கும் வலைப்பதிவைத் தொகுக்க ஆரம்பித்தபோதுகூட, ஏன் வெட்டி வெட்டி ஒட்டி சிரமப்படவேண்டும், தமிழ்மணம் போல, எழுதுபவர்களெல்லாம் தங்கள் சுட்டியை இணைத்துவிடும் ஒரு நிரலை எழுதினால் வேலை எளிதாகப் போயிற்று என்று காசி அபிப்ராயம் தெரிவித்தார். பிள்ளையார் கோவில் பிரசாதமென்பதால் அண்டாவோடு வாயில் கவுத்திக்கொள்ளக்கூடாதென்றும், அவருக்கென்று ஒரு தொழில், குடும்பம், வாழ்க்கை குறித்த சிந்தனைகள் இருக்குமென்பதால், நமது நேரத்தையும் சிறிது செலவழிப்போமே என்று வெட்டி வெட்டி ஒட்டிக்கொண்டும் தொகுத்துக்கொண்டும் இருந்தேன். சொல்லவந்தது இதுதான்: எனக்குக் கணிப்பொறித் தொழில்நுட்பம் குறித்து ஒரு இழவும் தெரியாது, அதனால் ஒரு இழவும் செய்யமுடிவதில்லை. இப்போது கூக்குரலிடும் ஆசாமிகளில் இதுவரை வேறு திரட்டிகளை/அல்லது அதுபோன்ற தொழில்நுட்ப வேலைகளை யாரும் செய்ய முயலாதது ஏன்? காசி சொன்ன படியளப்பு விஷயத்திலும் ஒரு உண்மை இருப்பதாகத்தான் நினைக்கிறேன். ஒருவேளை தானியமும் தொழில்நுட்பமும் வாங்கியிருந்தாலும் எவ்வளவு பிரச்னைகள் இருந்திருக்குமோ என்னவோ? நீ அரிசி கொண்டு வா, நான் உமி கொண்டாரேன், சோறு சமைச்சு ஆளுக்குப் பாதி சாப்பிட்டுக்கலாம் என்ற ரீதியில் இருந்திருந்து, இந்தப் பிரச்னையும் வந்திருந்தால் தமிழ்மண நிர்வாகிகள் தலையிலோ (அல்லது காசி தலையிலோ) ஒரு முடி கூட மிஞ்சியிருக்காதென்று நினைக்கிறேன். அந்தவிதத்திலாவது அவரது தீர்க்கதரிசனத்தைப் பாராட்டித்தான் ஆகவேண்டும்.
தமிழ் வலைப்பதிவுகளின் மொத்தப் பிரதிநிதி என்று தன்னைக் காசி project செய்துகொள்வதுபோல சில கருத்துக்கள்/பதிவுகள், குடியரசுத் தலைவருக்கு ஏனய்யா கடிதம் எழுதினீர் என்று கேள்விகள்? இனித்தான் சுரங்கம் தோண்டுவது ஆரம்பிக்குமென்று நினைக்கிறேன். மூன்று வருடங்களுக்குமுன் அவர் தன் வலைப்பதிவில் எழுதிவைத்ததைத் தோண்டியெடுத்துப் போட்டு மிக்ஸியில் அரைத்து “சர்வாதிகார” எலிமெண்ட்டுகள் இங்கேயிருக்கிறது பார் என்று சுட்டிக்காட்டுவது - இந்த நோய் எங்கிருந்து வருகிறதென்று நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை. தமிழ் வலைப்பதிவுகளின் வாசல் என்று சொல்லிக்கொண்டு இப்போது ஏன் தூக்குகிறீர்கள் என்றால்? அதே குதர்க்கத்துடன் கேட்கிறேன் - தூக்கமாட்டோம் என்று யாரும் உங்களுக்குப் பத்திரம் எழுதிக் கொடுத்தார்களா? உன் பதிவைத் தூக்கியிருந்தால் தெரியும் என்று பின்னூட்டம் எழுதமுயல்பவர்களை நினைத்துச் சிரித்துக்கொள்கிறேன்: தயவுசெய்து வளரப் பாருங்கள்!
ஆக, என் சிற்றறிவுக்கு எட்டியபடி நடந்த கதை இது. காசி என்ற ஒரு மனிதர் வலைப்பதிவுத் திரட்டியொன்றை ஆரம்பிக்கிறார் - தங்கள் பதிவுகளை அனைவரும் சேர்க்கிறார்கள் - எழுதுகிறார்கள் - ‘எழுதுகிறார்கள்’ என்பதில் அவரவர் விருப்புவெறுப்புக்கேற்ப ‘குப்பைகளும்’ உண்டு, நல்லவையும் உண்டு - வெளியில் சொல்லும்போது காசி “தமிழ் வலைப்பதிவுகளின் வாசல்” என்கிறார் - ஏனெனில் எழுதுபவர்கள் அனைவரும் வாசல் வழியாகப் போய்வரத்தான் விரும்புகிறார்களே தவிர, தன் தேவைக்கென்று ஒரு வாசலை உருவாக்கிக்கொள்ளத் தயாராயில்லை, எனவே, இருக்கும் ஒரு வாசல் மட்டும் இருந்துகொண்டே இருக்கிறது - பிற சௌகரியங்களைச் சேர்க்கிறார் காசி - பின்னூட்டமிடப்பட்ட பதிவுகள் - நட்சத்திரக் குத்து (இதுக்கு ஒரு பாட்டம் அழுது தீர்த்தாயிற்று முன்னமே) - சிறந்த பதிவுகள், கடந்த ஒரு மாதத்தில் தேவையான பதிவுகள் - என்று ஒரு உபயோகிப்புக்கு எளிதான வழிமுறையை - வலைப்பதிவு எழுதும் அனைவருக்கும் இது சௌகரியமாக இருக்கிறது - எழுதுகிறார்கள் எழுதுகிறார்கள் எழுதிக்கொண்டேயிருக்கிறார்கள் - மதத் தூஷணப் பதிவுகள் - பின்னூட்டங்களில் டோண்டு, ரோசாவசந்த், உஷா, பெயரிலி, பத்மா ஏன், எனக்குத் தெரிந்து தனிப்பட்ட முறையில் ஒருவரையும் கடுமையாக விமர்சித்திராத தங்கமணி என்று பலரக வலைப்பதிவர்கல் மீது சகட்டுமேனிக்கு இழிவசைகளைப் பொழியும் கணினி தட்டத்தெரிந்த படித்த கனவான்களின் கூட்டம் - இதற்கு நடுவில் ப்ளாகர் செய்யும் குழப்படிகளைத் தமிழ்மணத்தில் நடக்கும் குழப்பங்கள் என்று எழும் கேள்விகள் - தங்களால் முடிந்தளவு உதவிசெய்ய முயலும் நிர்வாகிகள் குழு - இவ்வளவு நிகழும்வரையும் வலைப்பதிவர்கள், நான் உட்பட - எழுதுகிறார்கள் எழுதுகிறார்கள், எழுதிக்கொண்டேயிருக்கிறார்கள் - இப்போதுதான் வருகிறது தற்போதைய பிரச்னை: எழுதாமல் விடப்பட்ட பதிவுகளை, மதத் தூஷணப் பதிவுகளை என்று சில விஷயங்களைச் சுட்டி, இப்பதிவுகளை தமிழ்மணத்தில் “திரட்டாமல் விடுகிறேன்” என்று சொல்கிறார்: சர்வாதிகாரம் என்று ஆரம்பித்துவிடுகிறது கூக்குரல். காசி மட்டும் இலக்கியத்தில் ஆர்வமுள்ளவராக இருந்து, தானும் இரண்டு கதை கவிதை எழுதுபவராக இருந்தால் இந்த மட்டையடி எவ்வளவு உச்சத்துக்குப் போயிருக்குமென்பதை யோசித்துப் பார்க்க இன்னும் தமாஷாக இருக்கிறது. தொழில்நுட்பம், மொழியார்வம் என்பதை மட்டும் முன்வைக்கும் ஆள் என்று காசிக்கொரு பிம்பம் இருப்பதால், தாக்குனர்கள்கூட குழப்பத்துடனேயே தாக்குகிறார்களென்றுதான் எனக்குத் தோன்றுகிறது; போகப்போக பிக்கப் ஆகிவிடும், கவலை வேண்டாம் . ரோசாவசந்த், கார்த்திக், டிஜேதமிழன் என்று தொடர்ந்து நான் படித்துவரும் வலைப்பதிவர்களும்கூட பின்னூட்டத்தில் இது “ஒரு unilateral முடிவு” என்ற ரீதியில் எழுதியிருப்பது இந்தவிதமான ஒரு அபிப்ராய மயக்கத்தினாலோ என்றுதான் தோன்றுகிறது. பஸ்ஸில் அனைவரும் சௌகரியமாகப் பயணிக்க இலவசப் பயணம் உதவுமென்று நினைத்தோம், முடியவில்லை, அப்படியிருக்கப் பயணிகள் விரும்புவதாகத் தெரியவில்லை, இலவசப் பயணம் முடிந்தது, இனி போகவேண்டுமானால் டிக்கெட் எடுங்கள் என்பதைச் சர்வாதிகாரம் என்று எப்படிப் பார்ப்பதென்றுதான் எனக்கு விளங்கவில்லை.
இதை நான் இப்படிப் பார்க்கிறேன்:
ஒரு தனிப்பட்ட வலைப்பதிவரின் blogroll: முன்பே எங்கோ ஒருமுறை நான் சொன்னதுபோல, தமிழ் வலைப்பதிவுகளை மேய ஆரம்பகாலத்தில் எனக்கிருந்த ஒரு வாசல், பத்ரியின் வலைப்பதிவில் அவரது blogroll - அங்கிருந்து கிடைத்த வலைப்பதிவுகளின் மூலம் பிற வலைப்பதிவுகள், அங்கிருந்து, அங்கிருந்து என்பதுதான் பொதுவான வலைப்பதிவுத் தத்துவம் என்று நினைக்கிறேன் - இப்போது நிகழ்ந்தவற்றைப் பார்த்தபின், தமிழ்மணத்தை காசியின், தமிழ்மண நிர்வாகிகளின் தனிப்பட்ட blogroll ஆகப் பார்ப்பதில் எனக்கு எந்த அசௌகரியமும் இல்லை - ஏதாவது காரணங்களுக்காக என் பதிவு தூக்கப்பட்டாலும் கூட. “அப்போ அப்பிடிச் சொன்னீங்க இப்போ இப்பிடிச் சொல்றீங்க” என்பதில் எவ்வளவு நியாயம் இருக்கிறதென்பது அவரவர் மனோபாவத்தைப் பொறுத்தது .
குசும்பனின் பதிவு தூக்கப்பட்டது ஒருவகையில் வருத்தமே. சகட்டுமேனிக்குக் குசும்பன் அடிக்கும் கிண்டல் சில சமயங்களில் எரிச்சலளிக்கும்போதுகூட, நான் யாரையும் கிண்டல் செய்ததில்லையா, நான் “நாகரீக விமர்சனம்” என்று நினைத்துச் செய்வது சம்பந்தப்பட்ட நபருக்கு வெறும் “அசட்டுக் கிண்டல்” என்று மட்டும் பட்டால் அவர் அடையும் எரிச்சல் எவ்வளவு இருக்கும் என்று சுயவிமர்சனம் செய்வதற்கான, முதலில் என் முதுகை நான் சொறிந்துகொள்வதற்கான ஒரு வாய்ப்பாகவே அது இருந்துவந்திருக்கிறது. இருப்பினும், சாவு குறித்த செய்தியைக் கூடக் கிண்டலடிக்குமளவு குசும்பின் தரம் இறங்கும் என்பது நானும் எதிர்பார்த்திராதது.
நானும் எதைக்குறித்தாவது காசியைத் திட்டவேண்டுமென்றால், முதலில் நான் குரைத்துக் கடிப்பது அவரது தயவுதாட்சண்யத்தைத்தானாக இருக்கும். தத்தமது வலைப்பதிவில் விடப்படும் அறிக்கைகளுக்கும் சவால்களுக்கும் அவர் பதில் சொல்வது அவசியமற்ற ஒன்று. கூக்குரல்/விமர்சனம் எழுப்புபவர்களில் பெரும்பாலானோர் இதுவரை நிகழ்ந்ததை மீளுருவாக்கம் செய்து பார்க்கத் திராணி உள்ளவர்களே.
தான் நினைப்பதைப் பிறர் வாயிலிருந்து பிடுங்கவேண்டுமென்று எதிர்பார்ப்பவர்களுடனான விவாதங்கள் அலுப்பூட்டுபவை; ஜல்லியடி ஜல்லியடி என்று தமிழ் வலைப்பதிவுகளில் படித்து வந்திருக்கிறேன் - இப்போது காசி மீது எழுப்பப்படும் விமர்சனங்கள்தான் எனக்கு இதுவரை கண்டதிலேயே மிகச்சிறந்த ஜல்லியடியாகத் தெரிகிறது.
எந்த நெரஸூஷ் காப்பி குடித்த தெம்பில் இதை எழுதமுடிந்ததென்றால், இத்தனை மாதங்கள் தமிழ்மணத்தில் செய்த freeloading தந்த தெம்பில்தான். நாளைக்குத் தமிழ்மணம் இப்படியே இருந்தாலும், வேறுமாதிரியாக இருந்தாலும் தங்கிப்போக உதவிய, சில வசதிகள் ஏற்படுத்திக் கொடுத்த ஒரு அமைப்புக்குக் கூறும் குறைந்தபட்ச நன்றிதான் - இணையத்துக்கு, கூகிளுக்கு, ப்ளாகருக்கு, wordpressக்கு, சிஎன்என்னு, இஎஸ்பிஎன்னுக்குக் கூறுவது போல: காசியையோ நிர்வாகிகளையோ வேறு எவரையோ patronize செய்வதற்கு அல்ல - அந்த அவசியம் எவருக்கும் இல்லை, அந்த அவசியத்தைக் கொண்டிருப்பவர்களால் காசிக்கோ அவரைப்போன்ற வேறெவருக்கோ கூட பைசா பிரயோஜனம் இருக்கமுடியாது.
http://dystocia.weblogs.us/archives/172
நன்றி
கரிசல்
<i>சன்னாசி @ 6:53 pm </i>
காசியை சர்வாதிகாரி என்று தாக்கியும், ஓசியில் நண்டு விசிடி கொடுப்போம் என்றும் ரகரகமாய்ப் பதிவுகள்/கருத்துக்கள். இப்போது வரும் பெரும்பாலான தாக்குதல்கள்/விமர்சனங்கள் அனைத்தும் ஒரு திசையை நோக்கி இருப்பது போலத்தான், தமிழ்மணத்தின் ஒரு சாதாரணப் பயனாளன் என்ற ரீதியில் தோன்றுகிறது. தனிப்பட்ட முறையில், இதற்கு முன்னான குழுமங்கள் அனைத்தும் - ராயர் காப்பி கிளப், மரத்தடி, திண்ணை இத்யாதி அனைத்தும் எழுத்தார்வம் உள்ளவர்களால் தொடங்கப்பட்டன என்று நினைக்கிறேன் - அதே அளவுகோல்களை வைத்து இப்போது விமர்சிக்கும் அனைவரும், வெறுமனே பதிவுகளைத் திரட்டும் தமிழ்மணத்தை உருவாக்கிய காசியையும் போட்டுத் தாக்குகிறார்களோ என்று தோன்றுகிறது. ஒன்று மட்டும் எனது அனுபவத்தில் சொல்கிறேன் - பிற ‘தளங்கள்’ போலவோ, சிறுபத்திரிகைகளின் Mini-Meக்கள் போலவோ, பெரும்பத்திரிகைகளின் Baron Munchhausenகள் போலவோ ஏதேனும் இடியாப்பங்கள் தமிழ்மணத்தை நடத்தியிருந்தால் இந்த விவாதங்களெல்லாம் எவ்வளவு நாளுக்கு முன்பே வந்து, செத்தும் போயிருக்குமென்று யோசிப்பதை அவரவர் கற்பனைக்கு விட்டுவிடுகிறேன். என்னைப் பொறுத்தவரையில் காசியும் பிறரும் உருவாக்கி நிர்வகித்த/நிர்வகிக்கும் தமிழ்மணம், அடிப்படையில் மொழி மேல் உள்ள ஆர்வத்தால், தொழில்நுட்பம் தெரிந்த சிலரால் உருவாக்கப்பட்டதென்பது என் அபிப்ராயம். இதே தமிழ்மணத்தை காசுகொடுத்து எவரிடமாவது நிரல்கள் எழுதி வாங்கி, இப்போது போட்டுத் தாக்கும் இடியாப்பங்கள் “நடத்தி” வந்தால் இப்போது சர்வாதிகாரம் சர்வாதிகாரம் என்று கூச்சலிடுபவர்களில் குரல் ஒரு துக்கடா தயவுதாட்சண்யமுமின்றி என்றோ நசுக்கப்பட்டிருக்கும் - நாய் கூடச் சீந்தாது என்று ஒரு சொலவடை இருக்கிறதே, அது போல. அனைத்துப் பிரச்னைகளுக்கும்/சாத்தியப்பாடுகளுக்கும் ஒரு holy Grailஐத் தேடுகிறேன் என்று சொல்லிவிடுவது சுலபம். தன் பதிவில் மயூரன் சொன்னதுபோல, தமிழ்மணம் ஆரம்பித்த சில காலங்களுக்குப் பின் வேறுவிதமான திரட்டிகளை எதிர்பார்த்தேன். இவ்வளவு ஏன், உலகத் திரைப்படங்கள் பற்றிய பார்வை அனுபவங்களைத் தொகுக்கும் வலைப்பதிவைத் தொகுக்க ஆரம்பித்தபோதுகூட, ஏன் வெட்டி வெட்டி ஒட்டி சிரமப்படவேண்டும், தமிழ்மணம் போல, எழுதுபவர்களெல்லாம் தங்கள் சுட்டியை இணைத்துவிடும் ஒரு நிரலை எழுதினால் வேலை எளிதாகப் போயிற்று என்று காசி அபிப்ராயம் தெரிவித்தார். பிள்ளையார் கோவில் பிரசாதமென்பதால் அண்டாவோடு வாயில் கவுத்திக்கொள்ளக்கூடாதென்றும், அவருக்கென்று ஒரு தொழில், குடும்பம், வாழ்க்கை குறித்த சிந்தனைகள் இருக்குமென்பதால், நமது நேரத்தையும் சிறிது செலவழிப்போமே என்று வெட்டி வெட்டி ஒட்டிக்கொண்டும் தொகுத்துக்கொண்டும் இருந்தேன். சொல்லவந்தது இதுதான்: எனக்குக் கணிப்பொறித் தொழில்நுட்பம் குறித்து ஒரு இழவும் தெரியாது, அதனால் ஒரு இழவும் செய்யமுடிவதில்லை. இப்போது கூக்குரலிடும் ஆசாமிகளில் இதுவரை வேறு திரட்டிகளை/அல்லது அதுபோன்ற தொழில்நுட்ப வேலைகளை யாரும் செய்ய முயலாதது ஏன்? காசி சொன்ன படியளப்பு விஷயத்திலும் ஒரு உண்மை இருப்பதாகத்தான் நினைக்கிறேன். ஒருவேளை தானியமும் தொழில்நுட்பமும் வாங்கியிருந்தாலும் எவ்வளவு பிரச்னைகள் இருந்திருக்குமோ என்னவோ? நீ அரிசி கொண்டு வா, நான் உமி கொண்டாரேன், சோறு சமைச்சு ஆளுக்குப் பாதி சாப்பிட்டுக்கலாம் என்ற ரீதியில் இருந்திருந்து, இந்தப் பிரச்னையும் வந்திருந்தால் தமிழ்மண நிர்வாகிகள் தலையிலோ (அல்லது காசி தலையிலோ) ஒரு முடி கூட மிஞ்சியிருக்காதென்று நினைக்கிறேன். அந்தவிதத்திலாவது அவரது தீர்க்கதரிசனத்தைப் பாராட்டித்தான் ஆகவேண்டும்.
தமிழ் வலைப்பதிவுகளின் மொத்தப் பிரதிநிதி என்று தன்னைக் காசி project செய்துகொள்வதுபோல சில கருத்துக்கள்/பதிவுகள், குடியரசுத் தலைவருக்கு ஏனய்யா கடிதம் எழுதினீர் என்று கேள்விகள்? இனித்தான் சுரங்கம் தோண்டுவது ஆரம்பிக்குமென்று நினைக்கிறேன். மூன்று வருடங்களுக்குமுன் அவர் தன் வலைப்பதிவில் எழுதிவைத்ததைத் தோண்டியெடுத்துப் போட்டு மிக்ஸியில் அரைத்து “சர்வாதிகார” எலிமெண்ட்டுகள் இங்கேயிருக்கிறது பார் என்று சுட்டிக்காட்டுவது - இந்த நோய் எங்கிருந்து வருகிறதென்று நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை. தமிழ் வலைப்பதிவுகளின் வாசல் என்று சொல்லிக்கொண்டு இப்போது ஏன் தூக்குகிறீர்கள் என்றால்? அதே குதர்க்கத்துடன் கேட்கிறேன் - தூக்கமாட்டோம் என்று யாரும் உங்களுக்குப் பத்திரம் எழுதிக் கொடுத்தார்களா? உன் பதிவைத் தூக்கியிருந்தால் தெரியும் என்று பின்னூட்டம் எழுதமுயல்பவர்களை நினைத்துச் சிரித்துக்கொள்கிறேன்: தயவுசெய்து வளரப் பாருங்கள்!
ஆக, என் சிற்றறிவுக்கு எட்டியபடி நடந்த கதை இது. காசி என்ற ஒரு மனிதர் வலைப்பதிவுத் திரட்டியொன்றை ஆரம்பிக்கிறார் - தங்கள் பதிவுகளை அனைவரும் சேர்க்கிறார்கள் - எழுதுகிறார்கள் - ‘எழுதுகிறார்கள்’ என்பதில் அவரவர் விருப்புவெறுப்புக்கேற்ப ‘குப்பைகளும்’ உண்டு, நல்லவையும் உண்டு - வெளியில் சொல்லும்போது காசி “தமிழ் வலைப்பதிவுகளின் வாசல்” என்கிறார் - ஏனெனில் எழுதுபவர்கள் அனைவரும் வாசல் வழியாகப் போய்வரத்தான் விரும்புகிறார்களே தவிர, தன் தேவைக்கென்று ஒரு வாசலை உருவாக்கிக்கொள்ளத் தயாராயில்லை, எனவே, இருக்கும் ஒரு வாசல் மட்டும் இருந்துகொண்டே இருக்கிறது - பிற சௌகரியங்களைச் சேர்க்கிறார் காசி - பின்னூட்டமிடப்பட்ட பதிவுகள் - நட்சத்திரக் குத்து (இதுக்கு ஒரு பாட்டம் அழுது தீர்த்தாயிற்று முன்னமே) - சிறந்த பதிவுகள், கடந்த ஒரு மாதத்தில் தேவையான பதிவுகள் - என்று ஒரு உபயோகிப்புக்கு எளிதான வழிமுறையை - வலைப்பதிவு எழுதும் அனைவருக்கும் இது சௌகரியமாக இருக்கிறது - எழுதுகிறார்கள் எழுதுகிறார்கள் எழுதிக்கொண்டேயிருக்கிறார்கள் - மதத் தூஷணப் பதிவுகள் - பின்னூட்டங்களில் டோண்டு, ரோசாவசந்த், உஷா, பெயரிலி, பத்மா ஏன், எனக்குத் தெரிந்து தனிப்பட்ட முறையில் ஒருவரையும் கடுமையாக விமர்சித்திராத தங்கமணி என்று பலரக வலைப்பதிவர்கல் மீது சகட்டுமேனிக்கு இழிவசைகளைப் பொழியும் கணினி தட்டத்தெரிந்த படித்த கனவான்களின் கூட்டம் - இதற்கு நடுவில் ப்ளாகர் செய்யும் குழப்படிகளைத் தமிழ்மணத்தில் நடக்கும் குழப்பங்கள் என்று எழும் கேள்விகள் - தங்களால் முடிந்தளவு உதவிசெய்ய முயலும் நிர்வாகிகள் குழு - இவ்வளவு நிகழும்வரையும் வலைப்பதிவர்கள், நான் உட்பட - எழுதுகிறார்கள் எழுதுகிறார்கள், எழுதிக்கொண்டேயிருக்கிறார்கள் - இப்போதுதான் வருகிறது தற்போதைய பிரச்னை: எழுதாமல் விடப்பட்ட பதிவுகளை, மதத் தூஷணப் பதிவுகளை என்று சில விஷயங்களைச் சுட்டி, இப்பதிவுகளை தமிழ்மணத்தில் “திரட்டாமல் விடுகிறேன்” என்று சொல்கிறார்: சர்வாதிகாரம் என்று ஆரம்பித்துவிடுகிறது கூக்குரல். காசி மட்டும் இலக்கியத்தில் ஆர்வமுள்ளவராக இருந்து, தானும் இரண்டு கதை கவிதை எழுதுபவராக இருந்தால் இந்த மட்டையடி எவ்வளவு உச்சத்துக்குப் போயிருக்குமென்பதை யோசித்துப் பார்க்க இன்னும் தமாஷாக இருக்கிறது. தொழில்நுட்பம், மொழியார்வம் என்பதை மட்டும் முன்வைக்கும் ஆள் என்று காசிக்கொரு பிம்பம் இருப்பதால், தாக்குனர்கள்கூட குழப்பத்துடனேயே தாக்குகிறார்களென்றுதான் எனக்குத் தோன்றுகிறது; போகப்போக பிக்கப் ஆகிவிடும், கவலை வேண்டாம் . ரோசாவசந்த், கார்த்திக், டிஜேதமிழன் என்று தொடர்ந்து நான் படித்துவரும் வலைப்பதிவர்களும்கூட பின்னூட்டத்தில் இது “ஒரு unilateral முடிவு” என்ற ரீதியில் எழுதியிருப்பது இந்தவிதமான ஒரு அபிப்ராய மயக்கத்தினாலோ என்றுதான் தோன்றுகிறது. பஸ்ஸில் அனைவரும் சௌகரியமாகப் பயணிக்க இலவசப் பயணம் உதவுமென்று நினைத்தோம், முடியவில்லை, அப்படியிருக்கப் பயணிகள் விரும்புவதாகத் தெரியவில்லை, இலவசப் பயணம் முடிந்தது, இனி போகவேண்டுமானால் டிக்கெட் எடுங்கள் என்பதைச் சர்வாதிகாரம் என்று எப்படிப் பார்ப்பதென்றுதான் எனக்கு விளங்கவில்லை.
இதை நான் இப்படிப் பார்க்கிறேன்:
ஒரு தனிப்பட்ட வலைப்பதிவரின் blogroll: முன்பே எங்கோ ஒருமுறை நான் சொன்னதுபோல, தமிழ் வலைப்பதிவுகளை மேய ஆரம்பகாலத்தில் எனக்கிருந்த ஒரு வாசல், பத்ரியின் வலைப்பதிவில் அவரது blogroll - அங்கிருந்து கிடைத்த வலைப்பதிவுகளின் மூலம் பிற வலைப்பதிவுகள், அங்கிருந்து, அங்கிருந்து என்பதுதான் பொதுவான வலைப்பதிவுத் தத்துவம் என்று நினைக்கிறேன் - இப்போது நிகழ்ந்தவற்றைப் பார்த்தபின், தமிழ்மணத்தை காசியின், தமிழ்மண நிர்வாகிகளின் தனிப்பட்ட blogroll ஆகப் பார்ப்பதில் எனக்கு எந்த அசௌகரியமும் இல்லை - ஏதாவது காரணங்களுக்காக என் பதிவு தூக்கப்பட்டாலும் கூட. “அப்போ அப்பிடிச் சொன்னீங்க இப்போ இப்பிடிச் சொல்றீங்க” என்பதில் எவ்வளவு நியாயம் இருக்கிறதென்பது அவரவர் மனோபாவத்தைப் பொறுத்தது .
குசும்பனின் பதிவு தூக்கப்பட்டது ஒருவகையில் வருத்தமே. சகட்டுமேனிக்குக் குசும்பன் அடிக்கும் கிண்டல் சில சமயங்களில் எரிச்சலளிக்கும்போதுகூட, நான் யாரையும் கிண்டல் செய்ததில்லையா, நான் “நாகரீக விமர்சனம்” என்று நினைத்துச் செய்வது சம்பந்தப்பட்ட நபருக்கு வெறும் “அசட்டுக் கிண்டல்” என்று மட்டும் பட்டால் அவர் அடையும் எரிச்சல் எவ்வளவு இருக்கும் என்று சுயவிமர்சனம் செய்வதற்கான, முதலில் என் முதுகை நான் சொறிந்துகொள்வதற்கான ஒரு வாய்ப்பாகவே அது இருந்துவந்திருக்கிறது. இருப்பினும், சாவு குறித்த செய்தியைக் கூடக் கிண்டலடிக்குமளவு குசும்பின் தரம் இறங்கும் என்பது நானும் எதிர்பார்த்திராதது.
நானும் எதைக்குறித்தாவது காசியைத் திட்டவேண்டுமென்றால், முதலில் நான் குரைத்துக் கடிப்பது அவரது தயவுதாட்சண்யத்தைத்தானாக இருக்கும். தத்தமது வலைப்பதிவில் விடப்படும் அறிக்கைகளுக்கும் சவால்களுக்கும் அவர் பதில் சொல்வது அவசியமற்ற ஒன்று. கூக்குரல்/விமர்சனம் எழுப்புபவர்களில் பெரும்பாலானோர் இதுவரை நிகழ்ந்ததை மீளுருவாக்கம் செய்து பார்க்கத் திராணி உள்ளவர்களே.
தான் நினைப்பதைப் பிறர் வாயிலிருந்து பிடுங்கவேண்டுமென்று எதிர்பார்ப்பவர்களுடனான விவாதங்கள் அலுப்பூட்டுபவை; ஜல்லியடி ஜல்லியடி என்று தமிழ் வலைப்பதிவுகளில் படித்து வந்திருக்கிறேன் - இப்போது காசி மீது எழுப்பப்படும் விமர்சனங்கள்தான் எனக்கு இதுவரை கண்டதிலேயே மிகச்சிறந்த ஜல்லியடியாகத் தெரிகிறது.
எந்த நெரஸூஷ் காப்பி குடித்த தெம்பில் இதை எழுதமுடிந்ததென்றால், இத்தனை மாதங்கள் தமிழ்மணத்தில் செய்த freeloading தந்த தெம்பில்தான். நாளைக்குத் தமிழ்மணம் இப்படியே இருந்தாலும், வேறுமாதிரியாக இருந்தாலும் தங்கிப்போக உதவிய, சில வசதிகள் ஏற்படுத்திக் கொடுத்த ஒரு அமைப்புக்குக் கூறும் குறைந்தபட்ச நன்றிதான் - இணையத்துக்கு, கூகிளுக்கு, ப்ளாகருக்கு, wordpressக்கு, சிஎன்என்னு, இஎஸ்பிஎன்னுக்குக் கூறுவது போல: காசியையோ நிர்வாகிகளையோ வேறு எவரையோ patronize செய்வதற்கு அல்ல - அந்த அவசியம் எவருக்கும் இல்லை, அந்த அவசியத்தைக் கொண்டிருப்பவர்களால் காசிக்கோ அவரைப்போன்ற வேறெவருக்கோ கூட பைசா பிரயோஜனம் இருக்கமுடியாது.
http://dystocia.weblogs.us/archives/172
நன்றி
கரிசல்

