10-16-2005, 08:27 PM
<b>கொழும்பு விமான நிலையத்தில் விபத்து ஒருவர் பலி</b>
2005 ஞாயிறு, 16
சிறிலங்காவின் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச விமான நிலையத்தில் ஏற்பட்ட விபத்தில் இந்தோனேசிய பெண் ஒருவர் உயிரிழந்தார். 7 பேர் படுகாயமடைந்தனர்
சிங்கப்பூரிலிருந்து சிறிலங்காவுக்கு வந்த சிறீலங்கன் விமானத்திலிருந்து பயணிகள் வெளியேறிக் கொண்டிருந்தபோது விமான நிலைய ட்றக் விமானத்தின் பயனிகளை இறக்க வைத்திருந்த ஏணிப் படியில் மோதியதில் இந்த விபத்து நடந்ததாக சிறிலங்கா ஏர்லைன்ஸ் பேச்சாளர் சந்தனா டி சில்வா தெரிவித்தார்.
இச்சம்பவத்தில் இந்தோனேசிய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
2 அவுஸ்திரேலியர்கள், 2 இந்தியர்கள், 3 இலங்கையர்கள் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிறீலங்கன் பணிப்பெண் ஒருவரும் அடங்குகிறார்.
விமான நிலைய ட்றக் ஓட்டுநரை கைது செய்திருப்பதாகவும் சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்தனர்.
- பீபீசி
2005 ஞாயிறு, 16
சிறிலங்காவின் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச விமான நிலையத்தில் ஏற்பட்ட விபத்தில் இந்தோனேசிய பெண் ஒருவர் உயிரிழந்தார். 7 பேர் படுகாயமடைந்தனர்
சிங்கப்பூரிலிருந்து சிறிலங்காவுக்கு வந்த சிறீலங்கன் விமானத்திலிருந்து பயணிகள் வெளியேறிக் கொண்டிருந்தபோது விமான நிலைய ட்றக் விமானத்தின் பயனிகளை இறக்க வைத்திருந்த ஏணிப் படியில் மோதியதில் இந்த விபத்து நடந்ததாக சிறிலங்கா ஏர்லைன்ஸ் பேச்சாளர் சந்தனா டி சில்வா தெரிவித்தார்.
இச்சம்பவத்தில் இந்தோனேசிய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
2 அவுஸ்திரேலியர்கள், 2 இந்தியர்கள், 3 இலங்கையர்கள் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிறீலங்கன் பணிப்பெண் ஒருவரும் அடங்குகிறார்.
விமான நிலைய ட்றக் ஓட்டுநரை கைது செய்திருப்பதாகவும் சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்தனர்.
- பீபீசி

