10-16-2005, 03:08 AM
சூப்பர் ஸ்டார் உட்பட பட்டங்கள் மக்கள் கொடுக்கவில்லையாம். என்ன முட்டாள்த்தனமான கதையிது. பின்ன ஆர் குடுத்ததாம். வெறும் பத்திரிகைகள் தான் அந்தப் பட்டத்தைக் கொடுத்ததா? சரி. அந்தப்பட்டங்களை மக்கள் மனதார ஏற்றுக் கொள்ளவில்லையா?
நடிகர்களுக்கு மக்களிடத்தில் இருக்கும் செல்வாக்கைத் தெரிந்து கொண்டுமா இப்படி ஒரு கருத்தைச் சொல்கிறீர்கள்?
மோகன்லாலின் நடிப்புக்கும் முகபாவத்துக்கும் என்ன குறை?
இருவர் படத்தில் அந்த பாத்திரத்தை வேறு யார் செய்திருக்க முடியும்? நல்லாயிருக்கே நடிப்புப் பற்றிய மதனின் கணிப்பு. சும்மா வாய்சவடால் விடுறதும் சிகரெட் பிடிக்கிறதும் தான் நடிப்பும் முகபாவமும் எண்டா நீங்கள் சொல்லுறது சரிதான்.
மேலும் மூலக்கட்டுரையிலுள்ள துவேசக் கருத்துக்கள் கவனிக்கப்பட வேணும். ஏதோ தமிழ்ப்படங்கள் சுத்தமானவை எண்ட மாதிரிக் கதைவிடுகினம். மலையாளப் பெண்களைப் பற்றியும் அவர்களின் மார்பகங்களைப் பற்றியும் கொச்சையாக நக்கலடிக்கும் படங்கள் தமிழில் ஏராளமுண்டு. பத்தாததுக்கு யாழ்ப்பாணப் பெண்களும்.
இதைவிட ஏராளமான நனைச்சுவைக் காட்சிகளில் மற்ற மாநிலக் காரரை துவட்டி எடுத்தாயிற்று. ஏன் தமிழகத்தையோ சென்னையைப் பற்றியோ தமிழ்ப்படங்களைவிட வேறுயார் தரக்குறைவாகச் சொல்லிவிட முடியும்? இன்னொரு மாநிலக்காரன் தானா அதைவிட தரக்குறைவாகச் சொல்ல முடியும்?
எவ்வளவு தூரம் கேவலமாகச் சித்தரிக்க முடியுமா அவ்வளவுக்கு தமிழ்நாட்டை, அரசை, மக்களை, மொழியை எமது தமிழ்ப்படங்களிலேயே கேவலப்படுத்தியாயிற்று. மற்ற மாநிலக்காரரையும் நக்கலடித்துப் படங்கள் வந்துகொண்டிருக்கின்றன
சினிமாப் படம் முடிக்க தமிழ்நாட்டுக்குத்தான் வரவேண்டியிருக்காம். என்ன வடிகட்டின முட்டாள்தனமான கருத்து?
எந்த நூற்றாண்டில் வாழ்கிறீர்கள். இன்னொருவரை நம்பித்தானே எல்லாம். ஏன் தமிழ்ப்படங்கள் கேரளாவில் போய் எடுப்பதில்லையா. நல்ல காட்சிகளும் செழுமையான காட்சிகளும் தேவையென்றால் கேரளாவோ பிற மாநிலமோ தேவை. ஏன் நடிகைகள் தேவையென்றவுடன் நீங்கள் எங்கே போகிறீர்கள்? யார் தமிழ்நடிகை? கேரளாவிலிருந்துதானே அதிகம் நடிகைகளை இற்குமதி செய்கிறீர்கள்? உங்களை எவ்வளவு கீழ்த்தரமாக மற்றவர்கள் சொல்லக்கூடும். காட்சிகளுக்கும் நடனங்களுக்கும் உலகம் முழுக் கமராவைத் தூக்கிக் கொண்டு அலையும் தமிழ்ச்சினிமா, நடிகை, நடிகர்களுக்கும் மற்ற மாநிலத்தையும் மொழியையும் நம்பியிருக்கும் தமிழ்ச்சினிமா, பண முதலீட்டுக்கும் மற்ற மாநிலக்காரரை நம்பியிருக்கும் தமிழச்சினிமா, இப்படி இன்னும் நிறைய விசயங்களுக்கு மற்றவர்களில் தங்கியிருக்கும் தமிழ்ச்சினிமா ஏதோ தன்னிறைவானது என்று புளுகிக்கொண்டு மற்றவர்கள் எங்களிடம்தான் வரவேண்டும் என்று ஆணவத்தோடு பேசுவது எவ்வாறு.
எல்லாரும் எல்லாரிலும்தான் தங்கியுள்ளோம். இதற்குள் நீ பெரிது நான் பெரிது என்று சண்டை எதற்கு? மோகன்லாலின் பேச்சை மறுப்பதற்குக் கட்டுரையில் கூறப்பட்ட எந்த வாதமுமே உப்புச் சப்பில்லாதது. மோகன்லாலின் கூற்றைவிட வெறி பிடித்தது மட்டுமல்ல விசர் பிடித்தவரின் கூற்றும் கூட. பைத்தியக்காரத்தனமான உளறல்.
நடிகர்களுக்கு மக்களிடத்தில் இருக்கும் செல்வாக்கைத் தெரிந்து கொண்டுமா இப்படி ஒரு கருத்தைச் சொல்கிறீர்கள்?
மோகன்லாலின் நடிப்புக்கும் முகபாவத்துக்கும் என்ன குறை?
இருவர் படத்தில் அந்த பாத்திரத்தை வேறு யார் செய்திருக்க முடியும்? நல்லாயிருக்கே நடிப்புப் பற்றிய மதனின் கணிப்பு. சும்மா வாய்சவடால் விடுறதும் சிகரெட் பிடிக்கிறதும் தான் நடிப்பும் முகபாவமும் எண்டா நீங்கள் சொல்லுறது சரிதான்.
மேலும் மூலக்கட்டுரையிலுள்ள துவேசக் கருத்துக்கள் கவனிக்கப்பட வேணும். ஏதோ தமிழ்ப்படங்கள் சுத்தமானவை எண்ட மாதிரிக் கதைவிடுகினம். மலையாளப் பெண்களைப் பற்றியும் அவர்களின் மார்பகங்களைப் பற்றியும் கொச்சையாக நக்கலடிக்கும் படங்கள் தமிழில் ஏராளமுண்டு. பத்தாததுக்கு யாழ்ப்பாணப் பெண்களும்.
இதைவிட ஏராளமான நனைச்சுவைக் காட்சிகளில் மற்ற மாநிலக் காரரை துவட்டி எடுத்தாயிற்று. ஏன் தமிழகத்தையோ சென்னையைப் பற்றியோ தமிழ்ப்படங்களைவிட வேறுயார் தரக்குறைவாகச் சொல்லிவிட முடியும்? இன்னொரு மாநிலக்காரன் தானா அதைவிட தரக்குறைவாகச் சொல்ல முடியும்?
எவ்வளவு தூரம் கேவலமாகச் சித்தரிக்க முடியுமா அவ்வளவுக்கு தமிழ்நாட்டை, அரசை, மக்களை, மொழியை எமது தமிழ்ப்படங்களிலேயே கேவலப்படுத்தியாயிற்று. மற்ற மாநிலக்காரரையும் நக்கலடித்துப் படங்கள் வந்துகொண்டிருக்கின்றன
சினிமாப் படம் முடிக்க தமிழ்நாட்டுக்குத்தான் வரவேண்டியிருக்காம். என்ன வடிகட்டின முட்டாள்தனமான கருத்து?
எந்த நூற்றாண்டில் வாழ்கிறீர்கள். இன்னொருவரை நம்பித்தானே எல்லாம். ஏன் தமிழ்ப்படங்கள் கேரளாவில் போய் எடுப்பதில்லையா. நல்ல காட்சிகளும் செழுமையான காட்சிகளும் தேவையென்றால் கேரளாவோ பிற மாநிலமோ தேவை. ஏன் நடிகைகள் தேவையென்றவுடன் நீங்கள் எங்கே போகிறீர்கள்? யார் தமிழ்நடிகை? கேரளாவிலிருந்துதானே அதிகம் நடிகைகளை இற்குமதி செய்கிறீர்கள்? உங்களை எவ்வளவு கீழ்த்தரமாக மற்றவர்கள் சொல்லக்கூடும். காட்சிகளுக்கும் நடனங்களுக்கும் உலகம் முழுக் கமராவைத் தூக்கிக் கொண்டு அலையும் தமிழ்ச்சினிமா, நடிகை, நடிகர்களுக்கும் மற்ற மாநிலத்தையும் மொழியையும் நம்பியிருக்கும் தமிழ்ச்சினிமா, பண முதலீட்டுக்கும் மற்ற மாநிலக்காரரை நம்பியிருக்கும் தமிழச்சினிமா, இப்படி இன்னும் நிறைய விசயங்களுக்கு மற்றவர்களில் தங்கியிருக்கும் தமிழ்ச்சினிமா ஏதோ தன்னிறைவானது என்று புளுகிக்கொண்டு மற்றவர்கள் எங்களிடம்தான் வரவேண்டும் என்று ஆணவத்தோடு பேசுவது எவ்வாறு.
எல்லாரும் எல்லாரிலும்தான் தங்கியுள்ளோம். இதற்குள் நீ பெரிது நான் பெரிது என்று சண்டை எதற்கு? மோகன்லாலின் பேச்சை மறுப்பதற்குக் கட்டுரையில் கூறப்பட்ட எந்த வாதமுமே உப்புச் சப்பில்லாதது. மோகன்லாலின் கூற்றைவிட வெறி பிடித்தது மட்டுமல்ல விசர் பிடித்தவரின் கூற்றும் கூட. பைத்தியக்காரத்தனமான உளறல்.

