10-16-2005, 01:38 AM
அப்புசாமி சீதாப்பாட்டி இவரில்லையென்றே நினைக்கிறேன்.
இவர் இரண்டே புதினங்கள்தான் எழுதியுள்ளாரென்று இன்று பி.பி.சியில் சொல்லப்பட்டது.
நிற்க பசுவய்யா என்ற பேரில் கவிதைகள் எழுதியதும் இவர்தானென்பது இன்று நானறிந்த முக்கிய செய்தி. தமிழில் புதுக்கவிதைப் பிதாமகன்களில் ஒருவர் பசுவய்யா. சி.சு. செல்லப்பாவுக்கு அடுத்து கவிதைகளை முன்னெடுத்தவர்களுள் இவர் ஒருவர். இதுபற்றி வல்லிக்கண்ணன் எழுதிய நூலில் சிறப்பாக எழுதியுள்ளார். ஆனால் பசுவய்யாதான் சுந்தரராமசாமி என்ற தகவல் ஆச்சரியம். அன்னார் மீது இன்னும் மதிப்புக் கூடுகிறது.
காலச்சுவடு தொடக்கியதும் இவரே தான். தமிழிலக்கியத்துக்கு ஈடு செய்ய முடியாத இழப்பென்பது திண்ணம்.
இவர் இரண்டே புதினங்கள்தான் எழுதியுள்ளாரென்று இன்று பி.பி.சியில் சொல்லப்பட்டது.
நிற்க பசுவய்யா என்ற பேரில் கவிதைகள் எழுதியதும் இவர்தானென்பது இன்று நானறிந்த முக்கிய செய்தி. தமிழில் புதுக்கவிதைப் பிதாமகன்களில் ஒருவர் பசுவய்யா. சி.சு. செல்லப்பாவுக்கு அடுத்து கவிதைகளை முன்னெடுத்தவர்களுள் இவர் ஒருவர். இதுபற்றி வல்லிக்கண்ணன் எழுதிய நூலில் சிறப்பாக எழுதியுள்ளார். ஆனால் பசுவய்யாதான் சுந்தரராமசாமி என்ற தகவல் ஆச்சரியம். அன்னார் மீது இன்னும் மதிப்புக் கூடுகிறது.
காலச்சுவடு தொடக்கியதும் இவரே தான். தமிழிலக்கியத்துக்கு ஈடு செய்ய முடியாத இழப்பென்பது திண்ணம்.

