10-15-2005, 12:03 PM
தமிழகத்தைச் சேர்ந்த மூத்த எழுத்தாளர் சுந்தரராமசாமி அவர்கள் அமெரிக்காவில் நேற்றுக் காலமானார். அண்மைக்காலமாக இவர் நோயினால் அவதிப்பட்டு வந்தாரென்பது குறிப்பிடத்தக்கது.
தமிழின் மிகமுக்கிய எழுத்தாளரான இவர் நிறைய நாவல்கள் சிறுகதைகள் எழுதியுள்ளார்.
புளியமரத்து நிழல், ஜே.ஜே. சில குறிப்புக்கள் போன்ற நாவல்கள் தமிழில் மிகமிக முக்கிய படைப்புக்கள்.
அண்மையில் 'பிள்ளை கொடுத்தாள் விளை' என்ற கதையை எழுதி தமிழ் இலக்கியச்சூழலில் பெரும் பரபரப்பையும் விவாதத்தையும் உண்டாக்கினார். ஏராளமான கண்டனங்கள் அவருக்கு எதிராக எழுந்தன. தமிழ் இலக்கியத்தின் மிகமிக முக்கிய படைப்பாளியொருவர் காலமாகிவிட்டார். அவருக்கு எனது சார்பிலும் யாழ்க்களத்தின் சார்பிலும் அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழின் மிகமுக்கிய எழுத்தாளரான இவர் நிறைய நாவல்கள் சிறுகதைகள் எழுதியுள்ளார்.
புளியமரத்து நிழல், ஜே.ஜே. சில குறிப்புக்கள் போன்ற நாவல்கள் தமிழில் மிகமிக முக்கிய படைப்புக்கள்.
அண்மையில் 'பிள்ளை கொடுத்தாள் விளை' என்ற கதையை எழுதி தமிழ் இலக்கியச்சூழலில் பெரும் பரபரப்பையும் விவாதத்தையும் உண்டாக்கினார். ஏராளமான கண்டனங்கள் அவருக்கு எதிராக எழுந்தன. தமிழ் இலக்கியத்தின் மிகமிக முக்கிய படைப்பாளியொருவர் காலமாகிவிட்டார். அவருக்கு எனது சார்பிலும் யாழ்க்களத்தின் சார்பிலும் அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

