10-14-2005, 10:45 AM
மட்டக்களப்பு தாக்குதலில் காயமடைந்து கொழும்புக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்ட போராளி உயிரிழக்கவில்லை என்று விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.
கொழும்பில் சிகிச்சை பெற்ற நிலையில் போராளி வீரச்சாவடைந்ததாக சில ஊடகங்களில் வெளிவந்த செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடக இணைப்பாளர் தயா மாஸ்டர் கூறியுள்ளார்.
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையிலிருந்து கடந்த 10 ஆம் திகதி இரவு கரடியனாறு நோக்கி நகர்ந்து கொண்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் வாகனத் தொடரணி மீது சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவும் அவர்களுடன் சேர்ந்தியங்கும் ஆயுதக் குழுவினரும் தாக்குதல் நடத்த முயற்சித்தனர்.
தமிழீழ விடுதலைப் புலிகள் எதிர்த்தாக்குதலை நடத்தி அவர்களை விரட்டியடித்தனர்.
இதில் ஒரு போராளி படுகாயமடைந்தார். காயமடைந்த போராளி போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் ஊடாக உலங்குவானூர்தி மூலம் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் நேற்று வியாழக்கிழமை அவர் வீரச்சாவடைந்ததாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
ஆனால் அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் ஊடகச் செய்திகளில் எதுவித உண்மையும் இல்லை என்றும் விடுதலைப் புலிகளின் ஊடக இணைப்பாளர் தயா மாஸ்டர் தெரிவித்தார்.
புதினம்...
எதுக்கு அப்படி ஒரு செய்திகளை நிதர்சனமும், லங்காசிறியும் வெளியிட்டார்கள்? :roll: :?
கொழும்பில் சிகிச்சை பெற்ற நிலையில் போராளி வீரச்சாவடைந்ததாக சில ஊடகங்களில் வெளிவந்த செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடக இணைப்பாளர் தயா மாஸ்டர் கூறியுள்ளார்.
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையிலிருந்து கடந்த 10 ஆம் திகதி இரவு கரடியனாறு நோக்கி நகர்ந்து கொண்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் வாகனத் தொடரணி மீது சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவும் அவர்களுடன் சேர்ந்தியங்கும் ஆயுதக் குழுவினரும் தாக்குதல் நடத்த முயற்சித்தனர்.
தமிழீழ விடுதலைப் புலிகள் எதிர்த்தாக்குதலை நடத்தி அவர்களை விரட்டியடித்தனர்.
இதில் ஒரு போராளி படுகாயமடைந்தார். காயமடைந்த போராளி போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் ஊடாக உலங்குவானூர்தி மூலம் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் நேற்று வியாழக்கிழமை அவர் வீரச்சாவடைந்ததாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
ஆனால் அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் ஊடகச் செய்திகளில் எதுவித உண்மையும் இல்லை என்றும் விடுதலைப் புலிகளின் ஊடக இணைப்பாளர் தயா மாஸ்டர் தெரிவித்தார்.

புதினம்...
எதுக்கு அப்படி ஒரு செய்திகளை நிதர்சனமும், லங்காசிறியும் வெளியிட்டார்கள்? :roll: :?
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>

