10-14-2005, 07:07 AM
<b>சந்திவெளி காவலரண் மீது துப்பாக்கிச் சூடு: இராணுவ சிப்பாய் பலி </b>
[வெள்ளிக்கிழமை, 14 ஒக்ரொபர் 2005, 06:25 ஈழம்] [மட்டக்களப்பு நிருபர்]
மட்டக்களப்பு - வாழைச்சேனை வீதி சந்திவெளி இராணுவ காவலரண் மீது நேற்று வியாழக்கிழமை இரவு இனந் தெரியாத நபர்களினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் இராணுவ சிப்பாயொருவர் கொல்லப்பட்டுள்ளார்.
நேற்றிரவு 9.30 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் பலத்த காயங்களுக்கு உள்ளான இவர் பொலன்னறுவை வைத்தியசாலையக்கு எடுத்துச் செல்லப்பட்ட போது இடைவழியில் உயிரிழந்தார்.
இதனையடுத்து சந்திவெளி பகுதியில் இராணுவத்தினரால் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ள போதிலும் எவரும் கைதாகவில்லை.
மேற்படி சம்பவத்தையடுத்து இராணுவத்தினரால் மேற்கொள்ளப்டப்ட கண்மூடித்தனமான பதில் துப்பாக்கிப் பிரயோகத்தையடுத்து மக்கள் மத்தியில் அச்சமும் பீதியும் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
நன்றி - புதினம்
[வெள்ளிக்கிழமை, 14 ஒக்ரொபர் 2005, 06:25 ஈழம்] [மட்டக்களப்பு நிருபர்]
மட்டக்களப்பு - வாழைச்சேனை வீதி சந்திவெளி இராணுவ காவலரண் மீது நேற்று வியாழக்கிழமை இரவு இனந் தெரியாத நபர்களினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் இராணுவ சிப்பாயொருவர் கொல்லப்பட்டுள்ளார்.
நேற்றிரவு 9.30 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் பலத்த காயங்களுக்கு உள்ளான இவர் பொலன்னறுவை வைத்தியசாலையக்கு எடுத்துச் செல்லப்பட்ட போது இடைவழியில் உயிரிழந்தார்.
இதனையடுத்து சந்திவெளி பகுதியில் இராணுவத்தினரால் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ள போதிலும் எவரும் கைதாகவில்லை.
மேற்படி சம்பவத்தையடுத்து இராணுவத்தினரால் மேற்கொள்ளப்டப்ட கண்மூடித்தனமான பதில் துப்பாக்கிப் பிரயோகத்தையடுத்து மக்கள் மத்தியில் அச்சமும் பீதியும் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
நன்றி - புதினம்
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

