10-11-2005, 07:02 PM
வவுணதீவு தாக்குதலில் காயமடைந்த புலனாய்வு துறை முக்கியத்தர் கீர்த்த ஹெலி மூலம் கொழும்பு கொண்டு வரப்பட்டார்
மட்டக்களப்பு மாவட்டத்தில் புலிகள் இயக்கத்தின் கட்டுப்பாட்டு பகுதியான கரனடியனாறு என்னுமிடத்தில் நேற்று நடத்தப்பட்ட தாக்குதலில் காயமடைந்த புலிகள் இயக்கத்தின் முக்கிய உறுப்பினர் ஒருவர் வைத்திய சிகிச்சைக்காக ஹெலி மூலம் நேற்று கொழும்பு கொண்டு வரப்பட்டதாக சமாதான செயலகம் தெரிவித்தது.
காயமடைந்தமுக்கிய உறுப்பினரை கொழும்புக்கு அழைத்து வருவதற்காக புலிகள் இயக்கம் ஹெலி வசதியை செய்து தருமாறு வேண்டுகோள் விடுத்ததாகவும் மனிதாபிமான அடிப்படையில் ஜனாதிபதி அந்த வேண்டுகோளுக்கு இணக்கம் தெரிவித்தார் என்றும் கொழும்பில் இருந்த சென்ற ஹெலி புலிகள் இயக்கத்தின் கட்டுப்பாட்டுப் பகுதியிலுள்ள கரனடியாறு பகுதியில் உள்ள பாடசாலை மைதானத்தில் தரை இறங்கி காயப்பட்டவரை கொழும்பிற்கு அழைத்து வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தாக்குதலில் படு காயமடைந்தவர் புலிகள் இயக்கத்தின் புலனாய்வு துறை முக்கியத்தர் கீர்த்தி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கொக்கட்டிச் சோலையில் இருந்து இவர் வவுண தீவு நோக்கி வந்து கொண்டிருந்த வேளை ஆயுதம் தாங்கிய குழு தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதல் நேற்று முன்தினம் இரவு 9.50 அளவில் நடைபெற்றுள்ளது.
யுத்த நிறுத்த கண்காணிப்பு குழு பிரதிநிதிகள் தாக்குதல் நடந்த இடத்திற்கு சென்றுள்ளனர்.
http://www.lankasrinews.com/index.php?suba...t_from=&ucat=1&
மட்டக்களப்பு மாவட்டத்தில் புலிகள் இயக்கத்தின் கட்டுப்பாட்டு பகுதியான கரனடியனாறு என்னுமிடத்தில் நேற்று நடத்தப்பட்ட தாக்குதலில் காயமடைந்த புலிகள் இயக்கத்தின் முக்கிய உறுப்பினர் ஒருவர் வைத்திய சிகிச்சைக்காக ஹெலி மூலம் நேற்று கொழும்பு கொண்டு வரப்பட்டதாக சமாதான செயலகம் தெரிவித்தது.
காயமடைந்தமுக்கிய உறுப்பினரை கொழும்புக்கு அழைத்து வருவதற்காக புலிகள் இயக்கம் ஹெலி வசதியை செய்து தருமாறு வேண்டுகோள் விடுத்ததாகவும் மனிதாபிமான அடிப்படையில் ஜனாதிபதி அந்த வேண்டுகோளுக்கு இணக்கம் தெரிவித்தார் என்றும் கொழும்பில் இருந்த சென்ற ஹெலி புலிகள் இயக்கத்தின் கட்டுப்பாட்டுப் பகுதியிலுள்ள கரனடியாறு பகுதியில் உள்ள பாடசாலை மைதானத்தில் தரை இறங்கி காயப்பட்டவரை கொழும்பிற்கு அழைத்து வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தாக்குதலில் படு காயமடைந்தவர் புலிகள் இயக்கத்தின் புலனாய்வு துறை முக்கியத்தர் கீர்த்தி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கொக்கட்டிச் சோலையில் இருந்து இவர் வவுண தீவு நோக்கி வந்து கொண்டிருந்த வேளை ஆயுதம் தாங்கிய குழு தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதல் நேற்று முன்தினம் இரவு 9.50 அளவில் நடைபெற்றுள்ளது.
யுத்த நிறுத்த கண்காணிப்பு குழு பிரதிநிதிகள் தாக்குதல் நடந்த இடத்திற்கு சென்றுள்ளனர்.
http://www.lankasrinews.com/index.php?suba...t_from=&ucat=1&
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
</span>

