11-17-2003, 12:08 PM
செப்டம்பர் 11 என்றாலே யாரும் மறக்க முடியாத நாளாக மாறிவிட்டது.ஒஸாமா பின் லேடனின் அல் கஈதா இயக்கம் அமெரிக்க மக்களுக்கு மரண பயத்தினை உருவாக்கிய அந்த நாள் முதல்..சர்வதேச பயங்கரவாத ஒழிப்பு எனும் அமெரிக்காவின் கூச்சல் அதிகரிக்க இது வழி கோணியது.
தம்மை எதிர்ப்பவர்களின் பலம் அதிகரிக்கக்கூடாது என்பதில் அமெரிக்காவின் அடிப்படைப் பயம் தான் இதற்கு ஊன்று கோலாக இருந்திருக்க வேண்டும்.
ஏனெனில் மேலைத்தேய நாடுகளைப் பொறுத்தவரை அமெரிக்காவுடனான பொருளாதாரப் போட்டிகளில் அவர்கள் நாட்டம் அதிகமாக இருப்பதனால் தூர கிழக்கை நோக்கிய பயம் தான் அமெரிக்காவுக்கு அதிகம் இருக்கிறது.
அதன் ஆரம்பம் கியூபாவாகவும் மறுபுறம் ரஸ்யாவாக இருந்தாலும் இடையிலிருக்கும் மத்திய கிழக்குப் பிரதேசம் தான் அமெரிக்காவின் அதி தீவிர கண்காணிப்புக்குட்படும் பிரதேசம்.
மத்திய கிழக்கு மீது அமெரிக்காவின் நலன்விரும்பி ப் போர்வை ஏன் போர்த்தப்படுகிறது என்பதனை அறியாதவர்கள் யாரும் இருக்கப்போவதில்லை.இருந்தாலும் அமெரிக்காவின் அனைத்துத் திட்டங்களுக்கும் இருக்கும் எதிரிகளைப் பற்றி நியுயோர்க் தாக்குதல் வரை உலகம் சரியான முறையில் உணர வில்லை எனலாம்.
பின் லேடன்...... என்பது அமெரிக்காவின் அக்கறையாக இருந்தாலும்,அதற்கு முன்னர் அத்திவாரங்களை அசைப்பது தான் அமெரிக்காவின் கட்டாயத் தேவை.
இந்தத் தேவைகளிற்காக அரேபிய மண்ணில் அமெரிக்கா தனது அகலக் காலையூன்றுவதற்கு எடுக்கும் மாபெரும் திட்டங்களில் ஒன்றுதான் ஈராக்கிய ஆக்கிரமிப்பு !
ஆரம்பத்தில் இதுவொரு சமாதான நடவடிக்கையாக உலகிற்கு சித்தரிக்கப்பட்டது.இருந்தாலும் பிரிட்டன்,இத்தாலி,ஸ்பெயின்,அவுஸ்திரேலிய நாட்டுப் பிரதமர்களைத் தவிர அந்நாட்டு மக்களோ உலகமோ நம்பியதாகத் தெரியவில்லை.
சரி தலைப்பிற்குள் வருவோம்...
ஈராக்கிய யுத்தத்தில் அமெரிக்க,பிரித்தானிய கூட்டுப்படைகள் <b>சதாமின் அரச படைகளை வென்றனவா..? அல்லது விரிக்கப்பட்ட தந்திர வலைக்குள் அமெரிக்கா வீழ்ந்துள்ளதா?</b>
இன்று இப்படியாக ஒரு கேள்வி எழுந்துள்ளது...
இதைப்பற்றி அரசியல் நாட்டமுள்ள நமது கருத்தாளர்கள் என்ன நினைக்கின்றீர்கள்?
தம்மை எதிர்ப்பவர்களின் பலம் அதிகரிக்கக்கூடாது என்பதில் அமெரிக்காவின் அடிப்படைப் பயம் தான் இதற்கு ஊன்று கோலாக இருந்திருக்க வேண்டும்.
ஏனெனில் மேலைத்தேய நாடுகளைப் பொறுத்தவரை அமெரிக்காவுடனான பொருளாதாரப் போட்டிகளில் அவர்கள் நாட்டம் அதிகமாக இருப்பதனால் தூர கிழக்கை நோக்கிய பயம் தான் அமெரிக்காவுக்கு அதிகம் இருக்கிறது.
அதன் ஆரம்பம் கியூபாவாகவும் மறுபுறம் ரஸ்யாவாக இருந்தாலும் இடையிலிருக்கும் மத்திய கிழக்குப் பிரதேசம் தான் அமெரிக்காவின் அதி தீவிர கண்காணிப்புக்குட்படும் பிரதேசம்.
மத்திய கிழக்கு மீது அமெரிக்காவின் நலன்விரும்பி ப் போர்வை ஏன் போர்த்தப்படுகிறது என்பதனை அறியாதவர்கள் யாரும் இருக்கப்போவதில்லை.இருந்தாலும் அமெரிக்காவின் அனைத்துத் திட்டங்களுக்கும் இருக்கும் எதிரிகளைப் பற்றி நியுயோர்க் தாக்குதல் வரை உலகம் சரியான முறையில் உணர வில்லை எனலாம்.
பின் லேடன்...... என்பது அமெரிக்காவின் அக்கறையாக இருந்தாலும்,அதற்கு முன்னர் அத்திவாரங்களை அசைப்பது தான் அமெரிக்காவின் கட்டாயத் தேவை.
இந்தத் தேவைகளிற்காக அரேபிய மண்ணில் அமெரிக்கா தனது அகலக் காலையூன்றுவதற்கு எடுக்கும் மாபெரும் திட்டங்களில் ஒன்றுதான் ஈராக்கிய ஆக்கிரமிப்பு !
ஆரம்பத்தில் இதுவொரு சமாதான நடவடிக்கையாக உலகிற்கு சித்தரிக்கப்பட்டது.இருந்தாலும் பிரிட்டன்,இத்தாலி,ஸ்பெயின்,அவுஸ்திரேலிய நாட்டுப் பிரதமர்களைத் தவிர அந்நாட்டு மக்களோ உலகமோ நம்பியதாகத் தெரியவில்லை.
சரி தலைப்பிற்குள் வருவோம்...
ஈராக்கிய யுத்தத்தில் அமெரிக்க,பிரித்தானிய கூட்டுப்படைகள் <b>சதாமின் அரச படைகளை வென்றனவா..? அல்லது விரிக்கப்பட்ட தந்திர வலைக்குள் அமெரிக்கா வீழ்ந்துள்ளதா?</b>
இன்று இப்படியாக ஒரு கேள்வி எழுந்துள்ளது...
இதைப்பற்றி அரசியல் நாட்டமுள்ள நமது கருத்தாளர்கள் என்ன நினைக்கின்றீர்கள்?
:: <b>give respect and take respect </b>::
[i]with love.................It's
<b>.</b>:: <b>VEERA</b>
[i]with love.................It's
<b>.</b>:: <b>VEERA</b>

