10-09-2005, 06:01 PM
பிரிவுகள்
பிரிவுகள் வேண்டும்
ஜனனத்தில் மனது
சந்தோசப் படுவதற்கும்
மரணத்தில் கொஞ்சம்
அழுவதிற்கும்
பிரிவுகள் வேண்டும்
பூமி கூடச்
சூரியனிலிருந்து
சிதறி விழுந்த சின்னத்துண்டுதான்
குரங்கிலிருந்து மெல்ல
வால் பிரிந்தபோது
வந்த வடிவமல்லவா மனித இனம்
கூடுவிட்டுக் குஞ்சு
பிரியும் போதுதானே
சிறகிருப்பதன் சிறப்பு புரிகிறது
பிரிவுகள் இருப்பதால்தானே
கற்புள்ள
கட்சிக் கொடியின்கீழ்
கூடி நிற்க முடிகிறது
பிரிவுகள் இல்லையானால்...
இமைமூடித் தூங்குவதற்கு
எவனுக்கு துணிவிருக்கும் ?
உதடுகள் இரண்டும்
ஒட்டிக் கொண்டால்
மனித குலத்தின்
ஒரே தாய்மொழி முனங்கலாகும்
பாம்புச் சட்டை பார்த்துச்
சிறுவர்கள் பரவசப் படுவதெப்படி ?
கூட்டுப்புழு
வண்ணாத்துப் பூச்சியாய்
வானில் பறக்குமா ?
சூரியனின் சுய நிறத்தை
வானவில் எப்படி
வரைந்து காட்டும்?
தாயின் மணிக்கொடிக்கு
தனி வணக்கம்
செலுத்துவதெப்படி ?
பிரிவுகள் இல்லையானால்
கருமேகம் பார்த்துக்
கானமயிலின் தோகை விரியாது
இதயத்தைச் சுண்டியிலுக்கும்
காதலியின்
இரட்டைச் சடையிருக்காது
தபால் துறையும்
தந்தி துறையும்
தலை முழுகப்படும்
ஒவ்வொருவருக்கும்
தொப்புளில் ஒரு வால்
எப்போதும்
தொங்கிக் கொண்டேயிருக்கும்
பிரிவுகள் சுவையானவை
சுகமானவை
மனித இனத்திலும்
மனத்திலும் தவிர
எல்லாப் பிரிவுகளையும்
ஏற்கச் சம்மதமே...
- சூரியதாஷ்
பிரிவுகள் வேண்டும்
ஜனனத்தில் மனது
சந்தோசப் படுவதற்கும்
மரணத்தில் கொஞ்சம்
அழுவதிற்கும்
பிரிவுகள் வேண்டும்
பூமி கூடச்
சூரியனிலிருந்து
சிதறி விழுந்த சின்னத்துண்டுதான்
குரங்கிலிருந்து மெல்ல
வால் பிரிந்தபோது
வந்த வடிவமல்லவா மனித இனம்
கூடுவிட்டுக் குஞ்சு
பிரியும் போதுதானே
சிறகிருப்பதன் சிறப்பு புரிகிறது
பிரிவுகள் இருப்பதால்தானே
கற்புள்ள
கட்சிக் கொடியின்கீழ்
கூடி நிற்க முடிகிறது
பிரிவுகள் இல்லையானால்...
இமைமூடித் தூங்குவதற்கு
எவனுக்கு துணிவிருக்கும் ?
உதடுகள் இரண்டும்
ஒட்டிக் கொண்டால்
மனித குலத்தின்
ஒரே தாய்மொழி முனங்கலாகும்
பாம்புச் சட்டை பார்த்துச்
சிறுவர்கள் பரவசப் படுவதெப்படி ?
கூட்டுப்புழு
வண்ணாத்துப் பூச்சியாய்
வானில் பறக்குமா ?
சூரியனின் சுய நிறத்தை
வானவில் எப்படி
வரைந்து காட்டும்?
தாயின் மணிக்கொடிக்கு
தனி வணக்கம்
செலுத்துவதெப்படி ?
பிரிவுகள் இல்லையானால்
கருமேகம் பார்த்துக்
கானமயிலின் தோகை விரியாது
இதயத்தைச் சுண்டியிலுக்கும்
காதலியின்
இரட்டைச் சடையிருக்காது
தபால் துறையும்
தந்தி துறையும்
தலை முழுகப்படும்
ஒவ்வொருவருக்கும்
தொப்புளில் ஒரு வால்
எப்போதும்
தொங்கிக் கொண்டேயிருக்கும்
பிரிவுகள் சுவையானவை
சுகமானவை
மனித இனத்திலும்
மனத்திலும் தவிர
எல்லாப் பிரிவுகளையும்
ஏற்கச் சம்மதமே...
- சூரியதாஷ்
....

