10-08-2005, 10:00 AM
முதலில் அன்பே சிவத்தைப் பற்றிச் சொல்லலாம் என்று நினைக்கிறேன். எனக்கு மிகமிகப் பிடித்த படம். எல்லாப் படங்களும் ஒரே கதையைக் கொண்டு வெளிவந்து கொண்டிருந்தபோது வந்த அருமையான படம். இதை ஆங்கிலப் படத்தின் தழுவல் என்றும் சொல்கிறார்கள். இருந்துவிட்டுப் போகட்டுமே.
நல்லதொரு படத்தைத் தமிழுக்குத் தந்த கமலுக்கு நன்றி.
நான் இப்படத்தைப் பற்றி என்னென்ன சொல்ல நினைத்தேனோ அவை யாவற்றையும் ஒருவர் ஏற்கெனவே எழுதியிருக்கிறார். ஒரு வலைப்பதிவில் இப்பதிவைப் பார்த்த பின் அதையே இங்கு படியெடுத்துப் போடலாமென்று முடிவெடுத்துவிட்டேன்.
அந்த விமர்சனத்துடன் பெரும்பாலும் ஒத்துப்போகிறேன். படங்களை எப்படி இணைப்பது என்று தெரியவில்லை. ஆகவே படங்களை இணைக்கவில்லை.
இந்த விமர்சனத்தை எழுதிய வசந்தனுக்கு நன்றி.
மூலச்சுட்டி: http://vasanthanin.blogspot.com/2004/12/bl...6928359307.html
<b>இதோ வசந்தனின் விமர்சனம்.</b>
ஏறத்தாள ஒரு வருடத்தின் முன்பு பார்த்த படம். மீண்டும் பார்க்க நினைத்தாலும் முடியாத இடம். எனவே நினைவிலிருப்பவற்றை வைத்து இப்படத்தின் மீதான என் பார்வையைச் சொல்கிறேன். இதுவொரு திரைப்பட விமர்சனமன்று. அதற்கான முழுவடிவத்தை இது பெறவில்லை. குறிப்பாக முழுத்தகவல்களும் தெரியவில்லை. மேலும் எனக்கந்த அருகதை இருப்பதாகவும் எண்ணவில்லை. ஒரு இரசிகனாக என்னை வசீகரித்த இப்படத்தைப் பற்றி ஏதாவது எழுத வேண்டும் போல் தோன்றியதன் விளைவிது.
படக் கதைக்கு வருவோம். (படம் வெளிவந்து நீண்ட காலமென்பதால் கதையைச் சொல்வதில் தப்பில்லை.)
<img src='http://www.webulagam.com/cinema/review/0301/27/images/img1030127034_1_2.gif' border='0' alt='user posted image'>
சிவப்புச் சிந்தனை கொண்ட தொழிலாளியான நாயகன் கமல் (நல்லான் அல்லது சிவம்) வீதிநாடகக் கலைஞனாகவும் ஓவியனாகவும் இருக்கிறார். முதலாளியின் (நாசர்) மகளான பாலாவுடன் (கிரண்) எதிர்பாராவிதமாய் நட்புக் கொண்டு, பின் காதல் கொண்டு... இப்படியே போகிற போது (என்ன பாட்டி கதை சொன்ன மாதிரியிருக்கா?) அவளின் தந்தைக்குக் காதல் தெரியவந்து அவளை வீட்டில் அடைத்து வைக்க, இருவரும் தப்பிக் கேரளாவுக்குப் போக முடிவெடுக்கிறார்கள். கமல் தன் நண்பர்களுடன் பேருந்திற் பயணம் செய்யும்போது (நாயகி இல்லை) நடக்கும் விபத்தில் ஏனையோர் சாக அவர் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்படுகிறார்
வைத்தியசாலைக்கு வரும் முதலாளி நாசர் கமல் பிழைத்திருப்பதைப் பார்த்துவிட்டு தானாகவே சாகப்போகிறவனைக் கொல்வானேன் என்று (அல்லது தான் வணங்கும சிவனே கொன்று விடுவானென்று) எதுவும் செய்யாமல் விட்டுவிட்டுப் போகிறார். ஆனால் எவருமே எதிர்பாரா வண்ணம் கமல் குணமாகிறார். காதலியைத் தேடிவரும் அவரிடம், அவளிடம் நீ இறந்து விட்டதாகச் சொல்லி வேறு திருமணம் செய்து வைத்து விட்டேன். தயவுசெய்து அவள் வாழ்கையில் குறுக்கிடாதே எனக்கேட்கும் நாசரிடமிருந்து விடை பெறுகிறார் கமல். இது ஒரு பாகம்.
எதிர்பாராத சந்தர்ப்பத்தில் புவனேஸ்வர் விமானநிலையத்திற் சந்தித்துவிட்ட கமலும் மாதவனும் தமிழ்நாடு வருகின்றனர். வெள்ளம், புயலால் பயணப் பாதைகள் பாதிக்கப்பட எப்படியோ பல்வேறு வழிகளில் முயற்சித்து வந்து சேர்கின்றனர். இடையே சமூகப் பிரக்ஞையற்ற சராசரி மேல்தட்டு வர்க்க மனப்பான்மையுடனிருக்கும் மாதவனைப் படிப்படியாக மாற்றுகிறார் கமல். மாதவனின் திருமன வீட்டில் தான் காதலித்த பாலா தான் மாதவனின் மனைவியாகப் போகிறவள் என்பதும் நாசர் தன்னிடம் சொன்னதெல்லாம் பொய்யென்பதும் தெரிய வருகிறது. கல்யாணத்தைக் குழப்பாமலிருக்க என்ன வேண்டுமானாலும் கேள் எனக் கேட்கும நாசரிடம், தொழிலாளிகளின் மாதாந்தச் சம்பளத்தைக் கூட்டிக் கொடுக்கும்படிக் கேட்டுப் பெற்றுக் கொடுத்துவிட்டுத் தன்பாட்டிற் போகிறார். இது இன்னொரு பாகம்.
விமான நிலையத்தில் கமலைத் தீவிரவாதியென்று (தப்பாக நினைத்து) காவல்துறையினரிடம் போட்டுக் கொடுத்துவிட்டுப் பதுங்கும் மாதவனைக் கமல் சந்திப்பதோடு தொடங்குகிறது படம். விபத்துக்கு முன் பின் என இரு பாகங்களும் சரியான இடத்தில் நினைவு மீட்டல்களாக (flash back) கலந்து வருகிறது காட்சிகள். கமலுடன் இணைந்து நடிப்பதில் சக நடிகனுக்குள்ள ஆபத்து அனைவரும் அறிந்ததே. (வசூல் ராஜாவில் பிரபுக்கு நேர்ந்தது தெரிந்ததே.) ஆனால் இப்படத்தில் மாதவன் தன்னை நிலைநிறுத்தியிருக்கிறார்: அதுவும் கமலுக்கு ஈடாகவே.
<img src='http://www.webulagam.com/cinema/review/0301/27/images/img1030127034_1_1.gif' border='0' alt='user posted image'>
கமலின் நடிப்பைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை. முகம் முழுவதும் வடுக்களோடு அடிக்கடி தாடை இழுத்தபடி வரும் கமல் நெஞசில் நிறைகிறார். ஒப்பனைக் கலைஞனுக்கு ஒரு சபாஷ். (வெளிநாட்டிலிருந்து யாரோ வந்திருந்ததாக அறிந்தேன். விபரம் தெரிந்தாற் சொல்லவும்). காவல் நிலையத்தில், நான்கூட நீ ஏதோ உண்மையான கம்யூனிஸ்டோன்னு நெனச்சிட்டேன். புடிச்சாலும் புளியங்கொம்பாத் தான்யா புடிச்சிருக்கே என்று காவலாளியொருவன் கேட்கும்போது, குற்ற உணர்வில் தவிக்கும் கமல்; கிரணிடம் பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிட்டு தன்னை மறந்து விடும்படி கூறும் காட்சியில் போராடலாம், ஆனா வாழ்நாள் பூரா போராடிக்கிட்டிருக்க முடியுமா? என்று ஆற்றாமையை வெளிப்படுத்தும் கமல்; பலவீனமான நேரத்தில் கிரணைக் கட்டிக்கொண்டு திருமணதத்திற்குச் சம்மதிக்கும் கமல்; விபத்துக்குக் காரணமான நாயைத் தன்னுடன் அழைத்துச் சென்று வளர்க்கும் கமல்; என கமல் நிறைந்திருக்கிறார்.
கிரண் தான் கதாநாயகி. உடம்பைக் காட்டவோ ஆபாச நடனத்திற்கோ சந்தர்ப்பம் கொடுக்கப்படவில்லை. கொடுத்த பங்கை நிறைவாகச் செய்திருக்கிறார். நாசர் ஆர்ப்பாட்டமில்லாத பாத்திரம். (வில்லன் என்று சொல்ல முடியாது, ஏனெனில் வில்லன் பற்றிய ஒரு விம்பம் எனக்குத் தமிழ் சினிமாவால் ஏற்படுத்தப்பட்டுள்ளது). தென்னாடுடைய சிவனே போற்றி என்று அடிக்கடி சொல்லிக்கொண்டு திரிவது; இன்னைக்கு விரதம். பச்சத்தண்ணி தொட மாட்டம்ல என்றுவிட்டு பின்புறம் போய்த் தண்ணியடிப்பது; சந்தர்ப்பம் கிடைத்தும் கமலைக் கொல்லாமல் விடுவது, பின் இறுதி நேரதிதில் கொல்ல ஆள் ஏவி விடுவது; என்று மனிதர் இயல்பாக அசத்தியிருக்கிறார்.
மதன் வசனமெழுதி நடித்துமிருக்கிறார். அவ்வப்போது கதைக்கருவைச் சார்ந்து வசனங்கள் வரும்போது மின்னுகிறார். எ.டு:- ரஸ்யா தான் ஒடஞ்சிடுச்சே அப்புறமேன் கம்யூனிசத்தத் தூக்கிப் பிடிக்கிறீங்க? என்று மாதவன் கேட்க, தாஜ்மகால் இடிஞ்சிட்டா காதலிக்கிறதயே விட்டிடுவீங்களா? என்று கமல் திருப்பிக் கேட்பார். காதல் ஒரு feeling என்றால் கம்யூனிசமும் ஒரு feeling தான்; என்பார் கமல். நீச்சற்குளத்தில் I can't swim என மாதவன் அலறுகையில். சாகப் போறப்பவாவது தமிழ் பேசுங்க என்று கமல் சொல்வது. இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். நானும் கடவும், நீயும் கடவுள் என்பதாகட்டும், கிரடிட் கார்ட் சம்பந்தமான காட்சிகளாகட்டும் மிக நன்று.
வித்தியாசாகரின் இசையில் பாடல்கள் அருமை. வைரமுத்துவின் யார் யார் சிவன் எனும் பாட்டு வசீகரிக்கிறது. காட்சிகள் சிறப்பாக உள்ளன. வெள்ளப் பெருக்குக் காட்சியும், தொடருந்து (ரயில்) விபத்துக்காட்சியும் பிரமிப்பூட்டுகிறது. மிகுந்த சிரத்தையெடுத்துச் செதுக்கியிருக்கிறார்கள். கலை இயக்குநர் பிரபாகருக்கு ஒரு சலாம். தெருக்கூத்துக் (வீதி நாடம்) காட்சிகள் மெய்சிலிர்க்க வைக்கிறது. பிரளயனின் கலையைப் படத்தில் அருமையாகவே பயன்படுத்தியிருக்கிறார்கள்.
இப்படத்திற் பிடிக்காத விசயங்களேயில்லையா? எனக் கேட்கலாம். ஆம், எனக்குக் கமல் மேல் (அது விரிவடைந்து இறுதியில் தமிழ்ச் சினிமாச் சூழல் மீதே திரும்புகிறது) கோபம் வந்த இடமொன்றுண்டு. (சுந்தர். சி. தானே இயக்குநர் என்றுவிட்டு கமல் தப்ப முடியாது). கமலை அடிக்க நாசரால் ஏவிவிடப்பட்டவர்களை, தன்னுடனிருப்பவர்களை ஒதுங்கியிருக்கச் சொல்லிவிட்டு கமல் ஒத்தை ஆளாக ஒரு குடையை வைத்து அடித்துத் துவம்சம் செய்கிறார். அதுவும் அவருடைய வீதிநாடகக் கலைஞர்களும் தொழிலாளர்களும் வாழும் இடத்தில். என்னவொரு கோமாளித்தனம்? (நான் மற்றைய படங்களைப்பற்றிக் கதைக்கவில்லை.) அழகிய ஒரு கோலத்தில் மலம் கழித்த மாதிரி. இப்படியொரு படத்தில் (சாத்தியமேயற்ற) தனிமனித பராக்கிரமம் தேவையா? (அதற்குள் ஜேம்ஸ் பாண்ட் பாணிச் சண்டை வேறு) கம்யூனிசத்தின் அடிப்படையே தோழமை, ஒற்றுமை, சேர்ந்து முகங்கொடுக்கும் தன்மை. அக்கோட்பாடு சார்ந்த படத்தில் அக் கோட்பாட்டைப் பிரதிநிதித்துவப் படுத்தும் கலைஞன் இப்படிச் செய்யலாமா? மாறாக எல்லாத் தொழிலாளர்கயையும் (பார்வையாளராய் மேளமடித்து நாயகனுக்கு உசுப்பேற்றிக் கொண்டிருந்த) இணைத்து அவர்களை அடித்து விரட்டியிருந்தால் கதைக்கருவிற்கு இன்னும் வலுச்சேர்த்திருக்கும். (இதைப்பற்றி என் நண்பனொருவனுடன் கதைத்துக் கொண்டிருந்தபோது அவன் சொன்னான் படம் பார்க்கும் எங்களுக்கு அட! நாம் பார்த்துக் கொண்டிருப்பது தமிழ்ப்படம் தான் என்பதை நினைவூட்டத்தான் அப்படியொரு காட்சியை கமல் வைத்தாராம். அவனுக்குக் குசும்பு அதிகம்தான்.)
நகைச்சுவைக்கென தனியான சுவடோ (track) தனிநடிகரோ (விவேக், வடிவேலு) இப்படத்தில் இல்லை. (அந்தளவில் நிம்மதி). கதையுடன் இயல்பாகவே வருகிறது நகைச்சுவைக் காட்சிகள். இவ்வளவு இறுக்கமான (serious) கதைக்களத்தை இயல்பாக யதார்த்தமாகச் சொல்லியிருக்கிறார்கள். கடவுள் இல்லையென்று எடுத்த எடுப்பில் அடித்துக்கூறும் பிரச்சாரப் பாணியில் இல்லாமல் அழகாகவே கதை சொல்லப்பட்டுள்ளது. கமல் தனது அரசியலைத் தெளிவாகச் சொல்லியுள்ளார்.
நான் இப்படத்தைப்பற்றி அதிகம் கதைத்து (எழுதி?) விட்டேன் போலுள்ளது. ஏனெனில் அவ்வளவுக்கு என்னைக் கவர்ந்த படமிது. படவெளியீட்டின் போதே இப்படத்தின் வர்த்தக வெற்றிபற்றி கமல் சரியாகவே கணித்திருந்தாரென நினைக்கிறேன். படவெளியீடன்று பி.பி.சி. திமிழோசையில் வெளிவந்த அவரது செவ்வியில் அது விளங்குகிறது. இப்படத்தை வெற்றியடைய விடாமற் செய்ததற்குப் பிராயச்சித்தமாக இன்னும் எவ்வளவு காலம் ஒரு நல்ல படத்திற்காகக் காத்திருக்க வேண்டும்?
நல்லதொரு படத்தைத் தமிழுக்குத் தந்த கமலுக்கு நன்றி.
நான் இப்படத்தைப் பற்றி என்னென்ன சொல்ல நினைத்தேனோ அவை யாவற்றையும் ஒருவர் ஏற்கெனவே எழுதியிருக்கிறார். ஒரு வலைப்பதிவில் இப்பதிவைப் பார்த்த பின் அதையே இங்கு படியெடுத்துப் போடலாமென்று முடிவெடுத்துவிட்டேன்.
அந்த விமர்சனத்துடன் பெரும்பாலும் ஒத்துப்போகிறேன். படங்களை எப்படி இணைப்பது என்று தெரியவில்லை. ஆகவே படங்களை இணைக்கவில்லை.
இந்த விமர்சனத்தை எழுதிய வசந்தனுக்கு நன்றி.
மூலச்சுட்டி: http://vasanthanin.blogspot.com/2004/12/bl...6928359307.html
<b>இதோ வசந்தனின் விமர்சனம்.</b>
ஏறத்தாள ஒரு வருடத்தின் முன்பு பார்த்த படம். மீண்டும் பார்க்க நினைத்தாலும் முடியாத இடம். எனவே நினைவிலிருப்பவற்றை வைத்து இப்படத்தின் மீதான என் பார்வையைச் சொல்கிறேன். இதுவொரு திரைப்பட விமர்சனமன்று. அதற்கான முழுவடிவத்தை இது பெறவில்லை. குறிப்பாக முழுத்தகவல்களும் தெரியவில்லை. மேலும் எனக்கந்த அருகதை இருப்பதாகவும் எண்ணவில்லை. ஒரு இரசிகனாக என்னை வசீகரித்த இப்படத்தைப் பற்றி ஏதாவது எழுத வேண்டும் போல் தோன்றியதன் விளைவிது.
படக் கதைக்கு வருவோம். (படம் வெளிவந்து நீண்ட காலமென்பதால் கதையைச் சொல்வதில் தப்பில்லை.)
<img src='http://www.webulagam.com/cinema/review/0301/27/images/img1030127034_1_2.gif' border='0' alt='user posted image'>
சிவப்புச் சிந்தனை கொண்ட தொழிலாளியான நாயகன் கமல் (நல்லான் அல்லது சிவம்) வீதிநாடகக் கலைஞனாகவும் ஓவியனாகவும் இருக்கிறார். முதலாளியின் (நாசர்) மகளான பாலாவுடன் (கிரண்) எதிர்பாராவிதமாய் நட்புக் கொண்டு, பின் காதல் கொண்டு... இப்படியே போகிற போது (என்ன பாட்டி கதை சொன்ன மாதிரியிருக்கா?) அவளின் தந்தைக்குக் காதல் தெரியவந்து அவளை வீட்டில் அடைத்து வைக்க, இருவரும் தப்பிக் கேரளாவுக்குப் போக முடிவெடுக்கிறார்கள். கமல் தன் நண்பர்களுடன் பேருந்திற் பயணம் செய்யும்போது (நாயகி இல்லை) நடக்கும் விபத்தில் ஏனையோர் சாக அவர் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்படுகிறார்
வைத்தியசாலைக்கு வரும் முதலாளி நாசர் கமல் பிழைத்திருப்பதைப் பார்த்துவிட்டு தானாகவே சாகப்போகிறவனைக் கொல்வானேன் என்று (அல்லது தான் வணங்கும சிவனே கொன்று விடுவானென்று) எதுவும் செய்யாமல் விட்டுவிட்டுப் போகிறார். ஆனால் எவருமே எதிர்பாரா வண்ணம் கமல் குணமாகிறார். காதலியைத் தேடிவரும் அவரிடம், அவளிடம் நீ இறந்து விட்டதாகச் சொல்லி வேறு திருமணம் செய்து வைத்து விட்டேன். தயவுசெய்து அவள் வாழ்கையில் குறுக்கிடாதே எனக்கேட்கும் நாசரிடமிருந்து விடை பெறுகிறார் கமல். இது ஒரு பாகம்.
எதிர்பாராத சந்தர்ப்பத்தில் புவனேஸ்வர் விமானநிலையத்திற் சந்தித்துவிட்ட கமலும் மாதவனும் தமிழ்நாடு வருகின்றனர். வெள்ளம், புயலால் பயணப் பாதைகள் பாதிக்கப்பட எப்படியோ பல்வேறு வழிகளில் முயற்சித்து வந்து சேர்கின்றனர். இடையே சமூகப் பிரக்ஞையற்ற சராசரி மேல்தட்டு வர்க்க மனப்பான்மையுடனிருக்கும் மாதவனைப் படிப்படியாக மாற்றுகிறார் கமல். மாதவனின் திருமன வீட்டில் தான் காதலித்த பாலா தான் மாதவனின் மனைவியாகப் போகிறவள் என்பதும் நாசர் தன்னிடம் சொன்னதெல்லாம் பொய்யென்பதும் தெரிய வருகிறது. கல்யாணத்தைக் குழப்பாமலிருக்க என்ன வேண்டுமானாலும் கேள் எனக் கேட்கும நாசரிடம், தொழிலாளிகளின் மாதாந்தச் சம்பளத்தைக் கூட்டிக் கொடுக்கும்படிக் கேட்டுப் பெற்றுக் கொடுத்துவிட்டுத் தன்பாட்டிற் போகிறார். இது இன்னொரு பாகம்.
விமான நிலையத்தில் கமலைத் தீவிரவாதியென்று (தப்பாக நினைத்து) காவல்துறையினரிடம் போட்டுக் கொடுத்துவிட்டுப் பதுங்கும் மாதவனைக் கமல் சந்திப்பதோடு தொடங்குகிறது படம். விபத்துக்கு முன் பின் என இரு பாகங்களும் சரியான இடத்தில் நினைவு மீட்டல்களாக (flash back) கலந்து வருகிறது காட்சிகள். கமலுடன் இணைந்து நடிப்பதில் சக நடிகனுக்குள்ள ஆபத்து அனைவரும் அறிந்ததே. (வசூல் ராஜாவில் பிரபுக்கு நேர்ந்தது தெரிந்ததே.) ஆனால் இப்படத்தில் மாதவன் தன்னை நிலைநிறுத்தியிருக்கிறார்: அதுவும் கமலுக்கு ஈடாகவே.
<img src='http://www.webulagam.com/cinema/review/0301/27/images/img1030127034_1_1.gif' border='0' alt='user posted image'>
கமலின் நடிப்பைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை. முகம் முழுவதும் வடுக்களோடு அடிக்கடி தாடை இழுத்தபடி வரும் கமல் நெஞசில் நிறைகிறார். ஒப்பனைக் கலைஞனுக்கு ஒரு சபாஷ். (வெளிநாட்டிலிருந்து யாரோ வந்திருந்ததாக அறிந்தேன். விபரம் தெரிந்தாற் சொல்லவும்). காவல் நிலையத்தில், நான்கூட நீ ஏதோ உண்மையான கம்யூனிஸ்டோன்னு நெனச்சிட்டேன். புடிச்சாலும் புளியங்கொம்பாத் தான்யா புடிச்சிருக்கே என்று காவலாளியொருவன் கேட்கும்போது, குற்ற உணர்வில் தவிக்கும் கமல்; கிரணிடம் பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிட்டு தன்னை மறந்து விடும்படி கூறும் காட்சியில் போராடலாம், ஆனா வாழ்நாள் பூரா போராடிக்கிட்டிருக்க முடியுமா? என்று ஆற்றாமையை வெளிப்படுத்தும் கமல்; பலவீனமான நேரத்தில் கிரணைக் கட்டிக்கொண்டு திருமணதத்திற்குச் சம்மதிக்கும் கமல்; விபத்துக்குக் காரணமான நாயைத் தன்னுடன் அழைத்துச் சென்று வளர்க்கும் கமல்; என கமல் நிறைந்திருக்கிறார்.
கிரண் தான் கதாநாயகி. உடம்பைக் காட்டவோ ஆபாச நடனத்திற்கோ சந்தர்ப்பம் கொடுக்கப்படவில்லை. கொடுத்த பங்கை நிறைவாகச் செய்திருக்கிறார். நாசர் ஆர்ப்பாட்டமில்லாத பாத்திரம். (வில்லன் என்று சொல்ல முடியாது, ஏனெனில் வில்லன் பற்றிய ஒரு விம்பம் எனக்குத் தமிழ் சினிமாவால் ஏற்படுத்தப்பட்டுள்ளது). தென்னாடுடைய சிவனே போற்றி என்று அடிக்கடி சொல்லிக்கொண்டு திரிவது; இன்னைக்கு விரதம். பச்சத்தண்ணி தொட மாட்டம்ல என்றுவிட்டு பின்புறம் போய்த் தண்ணியடிப்பது; சந்தர்ப்பம் கிடைத்தும் கமலைக் கொல்லாமல் விடுவது, பின் இறுதி நேரதிதில் கொல்ல ஆள் ஏவி விடுவது; என்று மனிதர் இயல்பாக அசத்தியிருக்கிறார்.
மதன் வசனமெழுதி நடித்துமிருக்கிறார். அவ்வப்போது கதைக்கருவைச் சார்ந்து வசனங்கள் வரும்போது மின்னுகிறார். எ.டு:- ரஸ்யா தான் ஒடஞ்சிடுச்சே அப்புறமேன் கம்யூனிசத்தத் தூக்கிப் பிடிக்கிறீங்க? என்று மாதவன் கேட்க, தாஜ்மகால் இடிஞ்சிட்டா காதலிக்கிறதயே விட்டிடுவீங்களா? என்று கமல் திருப்பிக் கேட்பார். காதல் ஒரு feeling என்றால் கம்யூனிசமும் ஒரு feeling தான்; என்பார் கமல். நீச்சற்குளத்தில் I can't swim என மாதவன் அலறுகையில். சாகப் போறப்பவாவது தமிழ் பேசுங்க என்று கமல் சொல்வது. இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். நானும் கடவும், நீயும் கடவுள் என்பதாகட்டும், கிரடிட் கார்ட் சம்பந்தமான காட்சிகளாகட்டும் மிக நன்று.
வித்தியாசாகரின் இசையில் பாடல்கள் அருமை. வைரமுத்துவின் யார் யார் சிவன் எனும் பாட்டு வசீகரிக்கிறது. காட்சிகள் சிறப்பாக உள்ளன. வெள்ளப் பெருக்குக் காட்சியும், தொடருந்து (ரயில்) விபத்துக்காட்சியும் பிரமிப்பூட்டுகிறது. மிகுந்த சிரத்தையெடுத்துச் செதுக்கியிருக்கிறார்கள். கலை இயக்குநர் பிரபாகருக்கு ஒரு சலாம். தெருக்கூத்துக் (வீதி நாடம்) காட்சிகள் மெய்சிலிர்க்க வைக்கிறது. பிரளயனின் கலையைப் படத்தில் அருமையாகவே பயன்படுத்தியிருக்கிறார்கள்.
இப்படத்திற் பிடிக்காத விசயங்களேயில்லையா? எனக் கேட்கலாம். ஆம், எனக்குக் கமல் மேல் (அது விரிவடைந்து இறுதியில் தமிழ்ச் சினிமாச் சூழல் மீதே திரும்புகிறது) கோபம் வந்த இடமொன்றுண்டு. (சுந்தர். சி. தானே இயக்குநர் என்றுவிட்டு கமல் தப்ப முடியாது). கமலை அடிக்க நாசரால் ஏவிவிடப்பட்டவர்களை, தன்னுடனிருப்பவர்களை ஒதுங்கியிருக்கச் சொல்லிவிட்டு கமல் ஒத்தை ஆளாக ஒரு குடையை வைத்து அடித்துத் துவம்சம் செய்கிறார். அதுவும் அவருடைய வீதிநாடகக் கலைஞர்களும் தொழிலாளர்களும் வாழும் இடத்தில். என்னவொரு கோமாளித்தனம்? (நான் மற்றைய படங்களைப்பற்றிக் கதைக்கவில்லை.) அழகிய ஒரு கோலத்தில் மலம் கழித்த மாதிரி. இப்படியொரு படத்தில் (சாத்தியமேயற்ற) தனிமனித பராக்கிரமம் தேவையா? (அதற்குள் ஜேம்ஸ் பாண்ட் பாணிச் சண்டை வேறு) கம்யூனிசத்தின் அடிப்படையே தோழமை, ஒற்றுமை, சேர்ந்து முகங்கொடுக்கும் தன்மை. அக்கோட்பாடு சார்ந்த படத்தில் அக் கோட்பாட்டைப் பிரதிநிதித்துவப் படுத்தும் கலைஞன் இப்படிச் செய்யலாமா? மாறாக எல்லாத் தொழிலாளர்கயையும் (பார்வையாளராய் மேளமடித்து நாயகனுக்கு உசுப்பேற்றிக் கொண்டிருந்த) இணைத்து அவர்களை அடித்து விரட்டியிருந்தால் கதைக்கருவிற்கு இன்னும் வலுச்சேர்த்திருக்கும். (இதைப்பற்றி என் நண்பனொருவனுடன் கதைத்துக் கொண்டிருந்தபோது அவன் சொன்னான் படம் பார்க்கும் எங்களுக்கு அட! நாம் பார்த்துக் கொண்டிருப்பது தமிழ்ப்படம் தான் என்பதை நினைவூட்டத்தான் அப்படியொரு காட்சியை கமல் வைத்தாராம். அவனுக்குக் குசும்பு அதிகம்தான்.)
நகைச்சுவைக்கென தனியான சுவடோ (track) தனிநடிகரோ (விவேக், வடிவேலு) இப்படத்தில் இல்லை. (அந்தளவில் நிம்மதி). கதையுடன் இயல்பாகவே வருகிறது நகைச்சுவைக் காட்சிகள். இவ்வளவு இறுக்கமான (serious) கதைக்களத்தை இயல்பாக யதார்த்தமாகச் சொல்லியிருக்கிறார்கள். கடவுள் இல்லையென்று எடுத்த எடுப்பில் அடித்துக்கூறும் பிரச்சாரப் பாணியில் இல்லாமல் அழகாகவே கதை சொல்லப்பட்டுள்ளது. கமல் தனது அரசியலைத் தெளிவாகச் சொல்லியுள்ளார்.
நான் இப்படத்தைப்பற்றி அதிகம் கதைத்து (எழுதி?) விட்டேன் போலுள்ளது. ஏனெனில் அவ்வளவுக்கு என்னைக் கவர்ந்த படமிது. படவெளியீட்டின் போதே இப்படத்தின் வர்த்தக வெற்றிபற்றி கமல் சரியாகவே கணித்திருந்தாரென நினைக்கிறேன். படவெளியீடன்று பி.பி.சி. திமிழோசையில் வெளிவந்த அவரது செவ்வியில் அது விளங்குகிறது. இப்படத்தை வெற்றியடைய விடாமற் செய்ததற்குப் பிராயச்சித்தமாக இன்னும் எவ்வளவு காலம் ஒரு நல்ல படத்திற்காகக் காத்திருக்க வேண்டும்?

