10-07-2005, 10:55 PM
ஒழுங்கையைப் பற்றி கதைக்கும் போது எனது பழைய நினைவுகள் எல்லாம் வருகின்றது.... நாங்கள் 5ம் வகுப்பு படித்து வேறு பாடசாலைக்கு போன பின்பு தான் குழப்படி செய்தோம். ஒழுங்கைக்குள் வரும்போது பெல் இல்ல பிரேக் இல்ல அடிச்ச முன் வாய் பல்லு இல்லை என்று சொல்கிறானாங்கள். இதெல்லாம் எங்கடை வகுப்பு பையன்களிடம் இருந்து பழகிக் கொண்டோம். எனக்கு இன்னும் ஞாபகம். எங்கள் வீட்டு ஒர் ஒழுங்கையின் கடைசி வீடு. அந்த ஒழுங்கையில் இருப்பவர்களின் குடும்பங்களில் நான் தான் சின்னப் பிள்ளை. ஆகவே ஒருதரும் என்னை கணக்கில் எடுக்க மாட்டினம். எமது ஒழுங்கை வந்தவுடன் நல்ல விரைவாக சைக்கிளை மிதித்து விட்டு பின்னார் காலை தூக்கி பின் கரியரில் போட்டுக் கொண்டு ஒடுவது எல்லாம் நினைக்க இப்ப சிரிப்பாய் இருக்கு.....

