10-07-2005, 12:30 AM
narathar Wrote:ம்ம் பிருந்தன் எதை தனி நபர் தாக்குதல் என்கிறீர்கள்.எனக்கு விளங்கவில்லை.ஒருவர் இன்னொருவரின் ஒழுக்கம் பற்றித் தான் ஒரு கனவானைப் போல் கதைப் பதற்கு முன்,தனது ஒழுக்கத்தைப் பற்றியும் சிந்திப்பது நலம்.மேலுள்ள கவிதை அதைத் தான் சுட்டி நிக்கிறது. நீ கல்லை எறிய முதல் உன்னக்கு அந்த கல்லை எறிவதற்கான தகுதி இருக்கா என்று பார்க்க வேண்டும்.இதை யேசு நாதரும்(?) ஒரு பெண்ணை விபச்சாரி என்று கல்லெறிந்தவர்களிடம் சொன்னர் என்று எங்கோ படித்த நாபகம்.மேலும் நான் இங்கு இந்தக் கவிதயை இட்ட பின்னே டிசேயின் தளத்தில் மேற்குறிப்பிட்ட சிறப்பு விமர்சனம் இடப்பட்டுள்ளது.மிகுதியை நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள்.
இங்கே களத்தில் குஸ்பு பற்றியும் இன்னும் பல்வேறு தனி நபர் பற்றியும் பல்வேறு வகை யான விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டுள்ளன.அவர்களுக்கு இங்கே அதற்கு பதில் சொல்ல முடியாது.இவை தனி நபர் தாக்குதல்கள் போல் தெரியவில்லயா.அவர் முன் வைத்த கருத்துக்களை விமர்சிக்காமல் அவர் விபச்சாரி என்றும் மானக்கெட்டவர் என்று விமர்சிப்பது எவ்வகையில் நியாயம்.அது போலவே சீர்திருத்தம் கதைத்தால் இவர்கள் ஒழுக்கம் அற்றவர்கள் என்றும்,பெண்ணிய விடுதலை கதைத்தால் இவர்கள் விபச்சாரிகள் ,என்றும் கருத்தாடுவது தனி நபர் தாக்குதல் ஆகாதோ?உங்களின் ஒழுக்கத்தை கேள்வி ஆக்கினால் மட்டுமா தனி நபர் தாக்குதல்?அதுவும் நீங்கள் இங்கே களத்தில் இட்ட கருத்துக்களை மேற்கோள் காட்டிச் சுட்டிக்காட்டினால்.ஆரோக்கியமான கருத்தாடலுக்கு அடிப்படை உண்மை பேசுதல்,அதற்கான முதிர்ச்சி உங்களுக்கு இல்லாவிட்டால் அதற்கு நான் என்ன செய்வது?
இதன் பொருள் என்ன?
இங்கு ஒவ்வொருவரும் இயந்திரத்தனமான ஒரு வாழ்க்கை வாழ்கின்றார்கள். கிடைக்கும் சிறிய நேரத்தில் ஏதாவது நல்ல விடயங்களை பார்க்கலாமா எனக் களம் வருபவர்களுக்கு வெறுமனே எண்ணிக்கைக்காக கருத்தாளம் இல்லாத கருத்துக்கள் காலப்போக்கில் இக்கருத்துக்களம் மீது ஓர் சலிப்பையும், வெறுமனே குற்றங்கள், குறைகள் கண்டுபிடிப்பதையும் அதை நாகரீகமற்ற முறையில் வெளிக்கொண்டுவருவதும் இக்களம் மீது வெறுப்பையும் தரலாம். ஆதலால் களநிபந்தனைகளைக் கருத்தில்கொண்டு உங்கள் கருத்துக்களை வையுங்கள்.
.
.
.

