11-15-2003, 09:05 AM
<img src='http://www.mdsupport.org/images/excuselogo.jpg' border='0' alt='user posted image'>
சட்டநாதனிடம் யாரும் கொடுக்கல் வாங்கல் வைத்துக்கொள்வது கிடையாது. அண்டை அயலார் அவனைக்கண்டு ஓடி ஒழிவதற்கு இன்னொரு காரணமும் உண்டு. அது அவன் கடன் கேட்பான் என்பது. பார்க்காமல் போனால் கூட வணக்கம் கூறி குசலம் விசாரிப்பான். அவனை நன்கு தெரிந்தவர்கள் அவன் வணக்கம் சொன்னாலே அஞ்சி ஓடிவிடுவார்கள். எதுவும் தெரியாது மாட்டிக்கொள்பவர்கள்பாடு திண்டாட்டம் தான்.
ஒரு தடவை வெளியுூரில் இருந்து ஒருவர் வேலை தேடி சென்னை வந்து அந்த தெருவில் உள்ள ஒரு வீட்டில் தங்கி இருந்தார். இரண்டு தடவை சட்டநாதன் கண்ணில் வேறு பட்டுதொலைந்துவிட்டார். அப்பாவிபோல முதலில் பேச்சுக்ககொடுத்திருக்கிறான் சட்டநாதன்.
மூன்றாவது நாள் அவரை டி கடையில் பார்த்து வணக்கம் சொல்லி வந்தவேலை ஆகிவிட்டதா? என்று விசாரித்தான். அவரும் சட்டநாதனுடன் நட்புடன் பேசினார். சட்டநாதன் தயாராக வைத்திருந்த சோகக்கதையை எடுத்துவிட்டான். தங்கைளுக்கு வரன் தேடுவதாகவும். இன்று மாப்பிள்ளை பகுதி வீட்டிற்கு வருவதாகவும். அந்த நேரம் பார்த்து அம்மாவிற்கு உடம்பு சரியில்லாமல்ப்போக பணம் மருந்துக்குச் செலவாகிவிட்டது. மாப்பிள்ளை வீட்டாருக்கு சிற்றூண்டி வாங்கி உபசரிக்க கூட பணம் இல்லை. வெறும் பாலில்லாத டியை கொடுத்தால் அவர்கள் எங்களுடன் சம்பந்தம செய்வார்களா? என்ன செய்வது என்று கவலைப்படுவதாக நடித்திருக்கிறான்.
அந்த நபரும் இரக்கப்பட்டு தான் வேலைக்கு முற்பணமாகஎடுத்துவந்திருந்த ஒரு தொகையைக்கொடுத்து மாப்பிள்ளை வீட்டாரை நன்கு உபசரித்து அனுப்புங்கள் அம்மாவிற்கு தேவையான மருந்தையும் வாங்கிக்கொள்ளுங்;கள் என்று கூறியிருக்கிறார். பணம் வாங்கியது தான் சட்டநாதன் மாயமாய் மறைந்துவிட்டான். வேலை தேடி வந்தவர் ஏதோ தான் ஒரு ஏழைக்குடும்பத்திற்கு உதவிசெய்ததாய் மனநிறைவடைந்திருக்கிறார். இரண்டு நாள் கழித்து மீண்டும் ஏதோ சோகக்கதை சொல்லி இன்னும்; ஒரு தொகை அறவிட்டிருக்கிறான். பாவம் அந்த நபர் இறுதியில் யாரோ எச்சரிக்க சுதாகரித்துக்கொண்டார். அவனிடம் சென்று குடுத்த பணத்தைக் கேட்டபோது இன்னம் பெரிதாக ஒரு சோகக்கதையை சொல்ல ஆரம்பித்துவிட்டடான் சட்டநாதன். பணமும் வேண்டாம் எதுவும் வேண்டாம் தொல்லை விட்டால் போதும் ஊர்போய்ச்சேர்ந்தார் அந்த வேலைதேடிவந்த நபர்.
இப்போது உங்கள் அருகில் இருப்பவர்கூட சட்டநாதனைப்போல கதைசொல்லி உங்களிடம் பணம்பறிக்கலாம் ஜாக்கிரதை.[/img]
சட்டநாதனிடம் யாரும் கொடுக்கல் வாங்கல் வைத்துக்கொள்வது கிடையாது. அண்டை அயலார் அவனைக்கண்டு ஓடி ஒழிவதற்கு இன்னொரு காரணமும் உண்டு. அது அவன் கடன் கேட்பான் என்பது. பார்க்காமல் போனால் கூட வணக்கம் கூறி குசலம் விசாரிப்பான். அவனை நன்கு தெரிந்தவர்கள் அவன் வணக்கம் சொன்னாலே அஞ்சி ஓடிவிடுவார்கள். எதுவும் தெரியாது மாட்டிக்கொள்பவர்கள்பாடு திண்டாட்டம் தான்.
ஒரு தடவை வெளியுூரில் இருந்து ஒருவர் வேலை தேடி சென்னை வந்து அந்த தெருவில் உள்ள ஒரு வீட்டில் தங்கி இருந்தார். இரண்டு தடவை சட்டநாதன் கண்ணில் வேறு பட்டுதொலைந்துவிட்டார். அப்பாவிபோல முதலில் பேச்சுக்ககொடுத்திருக்கிறான் சட்டநாதன்.
மூன்றாவது நாள் அவரை டி கடையில் பார்த்து வணக்கம் சொல்லி வந்தவேலை ஆகிவிட்டதா? என்று விசாரித்தான். அவரும் சட்டநாதனுடன் நட்புடன் பேசினார். சட்டநாதன் தயாராக வைத்திருந்த சோகக்கதையை எடுத்துவிட்டான். தங்கைளுக்கு வரன் தேடுவதாகவும். இன்று மாப்பிள்ளை பகுதி வீட்டிற்கு வருவதாகவும். அந்த நேரம் பார்த்து அம்மாவிற்கு உடம்பு சரியில்லாமல்ப்போக பணம் மருந்துக்குச் செலவாகிவிட்டது. மாப்பிள்ளை வீட்டாருக்கு சிற்றூண்டி வாங்கி உபசரிக்க கூட பணம் இல்லை. வெறும் பாலில்லாத டியை கொடுத்தால் அவர்கள் எங்களுடன் சம்பந்தம செய்வார்களா? என்ன செய்வது என்று கவலைப்படுவதாக நடித்திருக்கிறான்.
அந்த நபரும் இரக்கப்பட்டு தான் வேலைக்கு முற்பணமாகஎடுத்துவந்திருந்த ஒரு தொகையைக்கொடுத்து மாப்பிள்ளை வீட்டாரை நன்கு உபசரித்து அனுப்புங்கள் அம்மாவிற்கு தேவையான மருந்தையும் வாங்கிக்கொள்ளுங்;கள் என்று கூறியிருக்கிறார். பணம் வாங்கியது தான் சட்டநாதன் மாயமாய் மறைந்துவிட்டான். வேலை தேடி வந்தவர் ஏதோ தான் ஒரு ஏழைக்குடும்பத்திற்கு உதவிசெய்ததாய் மனநிறைவடைந்திருக்கிறார். இரண்டு நாள் கழித்து மீண்டும் ஏதோ சோகக்கதை சொல்லி இன்னும்; ஒரு தொகை அறவிட்டிருக்கிறான். பாவம் அந்த நபர் இறுதியில் யாரோ எச்சரிக்க சுதாகரித்துக்கொண்டார். அவனிடம் சென்று குடுத்த பணத்தைக் கேட்டபோது இன்னம் பெரிதாக ஒரு சோகக்கதையை சொல்ல ஆரம்பித்துவிட்டடான் சட்டநாதன். பணமும் வேண்டாம் எதுவும் வேண்டாம் தொல்லை விட்டால் போதும் ஊர்போய்ச்சேர்ந்தார் அந்த வேலைதேடிவந்த நபர்.
இப்போது உங்கள் அருகில் இருப்பவர்கூட சட்டநாதனைப்போல கதைசொல்லி உங்களிடம் பணம்பறிக்கலாம் ஜாக்கிரதை.[/img]


