Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
The Hindu
#2
எஸ்.பழனிவேலு, ஆழ்வார்பேட்டை, சென்னையிலிருந்து எழுதுகிறார்: ஹிந்து நாளிதழின் செய்தியாளர்கள் ஐந்து பேரை உரிமை மீறல் பிரச்னையில் 15 நாட்கள் சிறையில் அடைக்க உத்தரவிட்டது தமிழக அரசு. இது, ஜனநாயக விரோத எதேச்சதிகார போக்கு என்பதை யாராலும் மறுக்க முடியாது. ஆனால், இவற்றை முன்னின்று எதிர்த்து குரல் கொடுக்கும் தி.மு.க., மற்றும் பல அரசியல் கட்சிகளின் லட்சணத்தையும், பத்திரிகையாளர்களின் அணுகுமுறையும் நாம் கவனிக்க வேண்டும்!

எம்.ஜி.ஆர்., மறைவிற்கு பிறகு ஆட்சிக்கு வந்த தி.மு.க., தனது ஆட்சிக் காலத்தில் ஜெயலலிதா ஒருமுறை பாண்டிச்சேரியில் இருந்து சென்னை திரும்பிய பொழுது ஒரு வாகன விபத்தில் சிக்கியதையும், அந்த வாகன விபத்து தமிழக சரித்திரத்தில் இல்லாத அளவில் விரைவாக தீர்த்து வைத்ததையும் எவராலும் மறந்திருக்க முடியாது.

அப்பொழுது, ஜெயலலிதா வந்த காரை மோதிய லாரியில் தி.மு.க., கொடி வரையப்பட்டு இருந்ததை படம் பிடித்து வெளியிட்ட ஒரே காரணத்திற்காக, தினமலர் ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் வெளியீட்டாளர் லட்சுமிபதி மீதும் ஒரு வெள்ளிக்கிழமை மாலை வழக்குப் பதிவு செய்து அப்பொழுது தான் சனி, ஞாயிறு ஜாமீன் பெற முடியாமல் சிறையில் தள்ள முடியும் என்பதால், அன்றே கைது செய்ய, பகீரத பிரயத்தனம் செய்த தி.மு.க., தலைவர் தான் இன்று பத்திரிகை சுதந்திரத்திற்காக பாகாய் உருகுகிறார்.

இதே ஹிந்து பத்திரிகை மற்றும் தினமலர் இதழ் மீது ஜாதி வாரி துவேஷத்தையும், "பெட்டி வாங்கி விட்டனர்' என்றும், அவதுõறுகளை கூசாமல் அள்ளி விட்டவருமான தி.மு.க., தலைவர் இன்று எதிர்ப்பு அணியில் முதலாவதாக இருக்கிறார்.

இவருடைய மகனின் துõண்டுதலினால் மதுரை தினமலர் எத்தனை முறை தாக்கப்பட்டது. அப்பொழுதெல்லாம் இவருடைய பத்திரிகை சுதந்திரம் என்பது எங்கு சென்றிருந்தது?

தனது ஆட்சிக் காலத்தின் சாதனை ஊழலான போபர்ஸ் பற்றி புலனாய்வு செய்து தொடர்ந்து செய்தி வெளி வருவதை தடுக்க ஒரு தணிக்கையை கொண்டு வருவது பற்றி சட்டமியற்ற முயன்ற ராஜிவ்காந்தியின் காங்கிரசார் இன்று பதறிப் போய் ஓடோடி வருகின்றனர்.

தனது கட்சியை இனிமேலும் தொடர்ந்து விமர்சித்தால், தமிழ்நாட்டில் அப்பத்திரிகை வெளிவர முடியாமல் செய்து, அதனை நடுரோட்டில் கொளுத்துவோம் என பகிரங்க மிரட்டல் விடுத்த பா.ம.க., இன்று பத்திரிகைக்காக குரல் கொடுக்கிறது.

இந்த கைது நடவடிக்கையை எதிர்த்து ஜெயலலிதாவின் உருவ பொம்மையை ஒரு முக்கிய சாலையின் மையத்தில் வைத்து டில்லி பத்திரிகையாளர்கள் எரித்து ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். அந்த நிகழ்ச்சியை "டிவி'யில் பார்த்த போது, கண்ணுக்கு எட்டிய துõரம் வரையில் வாகனப் போக்குவரத்து ஸ்தம்பித்திருந்தது.

ஐயா பத்திரிகையாளர்களே... உங்கள் பத்திரிகையில் ஒரு வரி செய்தியில் தெரிவிக்க முடியாததையா இந்த ஆர்ப்பாட்டம் உங்கள் கோபத்தை மக்களிடம் தெரிவிக்கும்?

இன்று முதலை கண்ணீர் வடிக்கும் அரசியல் வியாதிகளை மன்னிக்கவும் அரசியல்வாதிகளை புறந்தள்ளுங்கள்; அவர்களுடைய ஆதரவை வெளிப்படையாக நிராகரியுங்கள். இன்று உங்களின் பிரச்னையில் தங்களை விளம்பரப்படுத்திக் கொள்ள உங்களிடம் இருப்பவர்கள், நாளை எதிரணியில் நின்று உங்களை துõற்றவும் தயங்க மாட்டார்கள். உங்கள் கருத்தை உங்கள் பணியின் மூலம் வெளிப்படுத்துங்கள். உங்கள் எழுத்து லட்சோப லட்சம் மக்களின் குரலாக தானாக மாறுவதைக் காண்பீர்கள்.

நன்றி: தினமலர்
[i][b]
!
Reply


Messages In This Thread
The Hindu - by yarl - 11-08-2003, 07:10 AM
[No subject] - by சாமி - 11-15-2003, 07:52 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)