Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
யாழ் கள உறவுகளுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்
#1
<b>மகிழன்
அருச்சுனா இணையத்தளம்
தமிழீழம்

03 10 2005</b>

யாழ் களம்,

என் உயிரிலும் மேலான புலத்து உறவுகளுக்கும் யாழ்கள அமைப்பாளர்களுக்கும் வணக்கம்.

யாழ்களம் ஊடாக உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் இதேவேளை சில தினங்களில் கண்டவற்றை எனது மனதில் பதிந்தவற்றை எழுதலாம் என நினைக்கிறேன் யாரையும் புண்படுத்ததுவது எனது நோக்கமில்லை. எனது அன்பு உறவுகளே யாழ் இணையத்தை செய்பவர்கள் தாயகத்தின் விடுதலையின் பொருட்டும் பிற நல்ல நோக்கத்திற்காகவும் இதனைச் செய்கிறார்கள் என நினைக்கிறேன. ஆனால் சிலர் தாயகத்தையும் ஒருசில தனி நபர்களின் பெயர்களையும் போராட்டத்தையும் தொடர்புபடுத்தி பொறுப்பற்ற முறையில் எழுதுவதை காணக்கூடியதாகவுள்ளது. இதனால் நான் மிக வேதனை அடைகிறேன். தாயக விடுதலைப் போராட்டம் எந்தத் தனிமனிதனுடையதுமில்லை எங்களுடையது. எனவே தனி நபரை சம்மந்தப்படுத்த வேண்டாம் என்று கேட்டு கொள்கிறேன். 18000 மாவீரர்கள் மற்றும் 80000 தாயக உறவுகளின் உயிரும் அதுதவிர புலத்திலுள்ள உங்களின் குருதியும் வியர்வையும் இழந்துதான் இன்றைக்கு உலகம் திரும்பிப் பார்க்கும் அளவுக்கு வளர்ந்துள்ளோம். எனவே தனிநபரின் விமர்சனத்தை விட்டு தமிழீழத் தேசிய தலைவரின் கரத்தைப் பலப்படுத்தி தாயகவிடுதலையை வெல்வோம். இதேவேளை யாழ் இணையம் ஊடாக பயன்னுள்ள நல்ல கருத்துக்களைத் தந்து தாயக விடுதலைக்கு வலுச் சேர்ப்பதுடன் இளைய தலைமுறைக்கு நல்வழி காட்டுங்கள். பெரும்பாலும் நல்ல கருத்துகளை நிறையப் பார்க்கக் கூடியதாய் இருக்கிறது. கருத்துக்களை எழுதிய அனைத்து உறவுகளுக்கும் நன்றி. இத்துடன் யாழின் தொழில்நுட்வியலாளர்கள் புலத்தில் பல்வேறு இடங்களில் இருப்பதாய் அறிந்தேன். அவர்களிற்கும் எனது நன்றிகள்


<b>என்றும்
அன்புடன்
மகிழன்
அருச்சுனா இணையத்தளம் (விடுதலைப் புலிகளின் ஒளிக்கலைப் பிரிவு)
தாயகம்
http://www.aruchuna.com/
</b>
Reply


Messages In This Thread
யாழ் கள உறவுகளுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் - by mahilan - 10-03-2005, 04:45 PM
[No subject] - by selvanNL - 10-03-2005, 05:41 PM
[No subject] - by kurukaalapoovan - 10-03-2005, 06:01 PM
[No subject] - by வியாசன் - 10-03-2005, 07:29 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)