Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பாரதியார் கவிதைகள்
#8
[size=18]பாரதியின் பாடல்தொகுதியில் வராதபாடல்கள்

மலர்:
வண்டு தேன் உண்ண வரில் இதழ் திறவேன்!

காந்தம்:
இரும்பெனை அணுகினால் யான் அதைத் தீண்டேன்

இயற்கைத் தெய்வம்:
மலரிலே வைத்ததேன் மலர்க்குரித் தன்று;
மலரிலே வைத்ததேன் வண்டினுக் குரியது!

இரும்பினை அணுகா திருப்பது காணின்
காந்தம் அன்று கருங்கல் அஃதே!

தீயிலே எரியா மரம் ஒன் றில்லை;
காதலில் இளகாக் கன்னிநெஞ் சில்லை;

துறத்தலே பெரிது; துறத்தலே பெரிது;
மறத்தலும் இறத்தலும் கடந்தநற் காதல்
தோன்றுநாள் வரையில் துறத்தலே பெரிது.

நன்றி ராணி 30/01/1994 இதழ்.
"காதலும் கன்னியர் விரதமும்" என்னும் நூலுக்கு முகவுரையாக பாரதியாரால் எழுதப்பட்ட பாடல். நூல் வெளிவராததால் இப்பாடல் பாரதியார் பாடல் தொகுப்பில் விடுபட்டுவிட்டது.

பாரதியின் விடுபட்ட மேலும் ஒரு கவிதை

சத்தியப் போர்

பந்தமுற்று எத்தனை நாள் - இந்தப்
பாரினில் ஈடழிதல்
தொந்தமில் லாத சுக - வாழ்வைத்
தோற்றுவிப்போம் வாராய்!
இந்த உடல் சதமோ - இது
என்றும் இறப்பதுவே
தந்தை மரிப்பவனே - பெற்ற
தாயும் இறப்பவளே

மக்கள் மனைவி பொருள் - யாவும்
மாயன் வினைப் பொருளே
துக்கந் தரும் இவற்றை - உடன்
தூவென்று தள்ளிவிடு
மிக்க வெம்புல் அடிமை - நீங்கி
மேதகு வாழ்வு பெற
சத்தியப் போர் செய்குவாய் - அட
இந்தியனே யெழுவாய்!

கத்தி வில் வாள் கதைகள் - எறி
கற்கள் சூலாயுதங்கள்
பித்தர்கள் தங்களுக்கு - வெகு
பெட்புடை ஆயுதங்கள்
சத்தியம், ஈகை, அருள் - பக்தி
சான்ற மனப் பெரியோர்
நித்தியமான வுயர் ஆத்ம
நேர்படையே கொள்ளுவார்

வெற்றி அடைந்து விட்டால் - இங்கு
வேண சுகங்களை நீ
பெற்று அரசாண்டிடுவாய் - புவி
பேணி யுயர்ந்திடுவாய்!

நன்றி ராணி 30.01.1994 இதழ். இப்பாடல் 1920_இல் பாரதியாரால் எழுதப்பட்டது. 1932_இல் "சுதந்திர சங்கு" இதழில் வெளியிட்டார்கள்.
1920_ஆம் ஆண்டு அண்ணல் காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கம் நடத்தினார். அப்போது இப்பாடலை பாரதியார் பாடியிருக்கிறார்.
.

.
Reply


Messages In This Thread
[No subject] - by கீதா - 09-13-2005, 06:45 PM
[No subject] - by Mathan - 09-13-2005, 06:48 PM
[No subject] - by sakthy - 09-13-2005, 06:56 PM
[No subject] - by sakthy - 09-13-2005, 07:40 PM
[No subject] - by கீதா - 09-16-2005, 06:15 PM
[No subject] - by vasisutha - 09-26-2005, 07:05 PM
[No subject] - by Birundan - 10-03-2005, 01:46 AM
[No subject] - by RaMa - 10-03-2005, 02:09 AM
[No subject] - by sakthy - 10-03-2005, 07:07 PM
[No subject] - by Mathan - 10-03-2005, 07:11 PM
[No subject] - by அனிதா - 10-03-2005, 07:31 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)