![]() |
|
பாரதியார் கவிதைகள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: பாரதியார் கவிதைகள் (/showthread.php?tid=3327) |
பாரதியார் கவிதைகள் - sakthy - 09-13-2005 எண்ணிய முடிதல் வேண்டும் நல்லவே எண்ணல் வேண்டும் திண்ணிய நெஞ்சம் வேண்டும் தூய நல்லறிவு வேண்டும் பண்ணிய பாவமெல்லாம் பரிதிமுன் பனியைப் போல நண்ணிய நின்முனிங்கு நசிந்திடல் வேண்டு மன்னய்[/b] - கீதா - 09-13-2005 நல்ல கவிதை நன்றி தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள் - Mathan - 09-13-2005 hock: ஜோதிகா இது பாரதியார் எழுதிய கவிதை
- sakthy - 09-13-2005 நீங்க பாரதியாருக்கு தான் நன்றி சொல்லனும் ஜோதிகா.அந்த முட்டாசு கவிஞனின் கவிதைகளை நேசிப்பவள் நான்.நீங்களும் படித்து பாருங்களேன் - sakthy - 09-13-2005 நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்; கனவு மெய்ப்பட வேண்டும் , கைவசமாவது விரைவில் வேண்டும்; தனமும் இன்பமும் வேண்டும், தரணியிலே பெருமை வேண்டும். கண் திறந்திட வேண்டும், காரியத்திலுறுதி வேண்டும்; பெண் விடுதலை வேண்டும், பெரிய கடவுள் காக்க வேண்டும், மண் பயனுற வேண்டும், வானகமிங்கு தென்பட வேண்டும்; உண்மை நின்றிட வேண்டும். ஓம் ஓம் ஓம் ஓம் - பாரதி - கீதா - 09-16-2005 quote="Mathan"] hock: ஜோதிகா இது பாரதியார் எழுதிய கவிதை[/quote]எனக்கு பாரதியார் கவிதை என்று தெரியும்? ஆனால் சக்தி தானே கொண்டு வந்து பாரதியார் கவிதை என்று போட்டார் சக்திக்குத் தான் வாழ்த்து சொன்னன் :roll: ? - vasisutha - 09-26-2005 <img src='http://img76.imageshack.us/img76/1903/barathy19ce.gif' border='0' alt='user posted image'> - Birundan - 10-03-2005 [size=18]பாரதியின் பாடல்தொகுதியில் வராதபாடல்கள் மலர்: வண்டு தேன் உண்ண வரில் இதழ் திறவேன்! காந்தம்: இரும்பெனை அணுகினால் யான் அதைத் தீண்டேன் இயற்கைத் தெய்வம்: மலரிலே வைத்ததேன் மலர்க்குரித் தன்று; மலரிலே வைத்ததேன் வண்டினுக் குரியது! இரும்பினை அணுகா திருப்பது காணின் காந்தம் அன்று கருங்கல் அஃதே! தீயிலே எரியா மரம் ஒன் றில்லை; காதலில் இளகாக் கன்னிநெஞ் சில்லை; துறத்தலே பெரிது; துறத்தலே பெரிது; மறத்தலும் இறத்தலும் கடந்தநற் காதல் தோன்றுநாள் வரையில் துறத்தலே பெரிது. நன்றி ராணி 30/01/1994 இதழ். "காதலும் கன்னியர் விரதமும்" என்னும் நூலுக்கு முகவுரையாக பாரதியாரால் எழுதப்பட்ட பாடல். நூல் வெளிவராததால் இப்பாடல் பாரதியார் பாடல் தொகுப்பில் விடுபட்டுவிட்டது. பாரதியின் விடுபட்ட மேலும் ஒரு கவிதை சத்தியப் போர் பந்தமுற்று எத்தனை நாள் - இந்தப் பாரினில் ஈடழிதல் தொந்தமில் லாத சுக - வாழ்வைத் தோற்றுவிப்போம் வாராய்! இந்த உடல் சதமோ - இது என்றும் இறப்பதுவே தந்தை மரிப்பவனே - பெற்ற தாயும் இறப்பவளே மக்கள் மனைவி பொருள் - யாவும் மாயன் வினைப் பொருளே துக்கந் தரும் இவற்றை - உடன் தூவென்று தள்ளிவிடு மிக்க வெம்புல் அடிமை - நீங்கி மேதகு வாழ்வு பெற சத்தியப் போர் செய்குவாய் - அட இந்தியனே யெழுவாய்! கத்தி வில் வாள் கதைகள் - எறி கற்கள் சூலாயுதங்கள் பித்தர்கள் தங்களுக்கு - வெகு பெட்புடை ஆயுதங்கள் சத்தியம், ஈகை, அருள் - பக்தி சான்ற மனப் பெரியோர் நித்தியமான வுயர் ஆத்ம நேர்படையே கொள்ளுவார் வெற்றி அடைந்து விட்டால் - இங்கு வேண சுகங்களை நீ பெற்று அரசாண்டிடுவாய் - புவி பேணி யுயர்ந்திடுவாய்! நன்றி ராணி 30.01.1994 இதழ். இப்பாடல் 1920_இல் பாரதியாரால் எழுதப்பட்டது. 1932_இல் "சுதந்திர சங்கு" இதழில் வெளியிட்டார்கள். 1920_ஆம் ஆண்டு அண்ணல் காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கம் நடத்தினார். அப்போது இப்பாடலை பாரதியார் பாடியிருக்கிறார். - RaMa - 10-03-2005 நன்றிகள் - sakthy - 10-03-2005 நன்றிகள் பிருந்தன். கொஞ்சம் நேரமின்மை காரணமாக தொடர முடியவில்லை . - Mathan - 10-03-2005 Birundan Wrote:[size=18]பாரதியின் பாடல்தொகுதியில் வராதபாடல்கள் ஆகா பாரதியார் காதல் கவிதைகளில் புகுந்து விளையாடியிருக்கின்றால் போல இருக்கு. இன்னும் வேறு கவிதைகள் இருக்கின்றனவா? அறிய தந்தமைக்கு நன்றி பிருந்தன். - அனிதா - 10-03-2005 நன்றிகள்... |