10-01-2005, 05:48 PM
ஈரம் படிந்த வீடு
எப்படி விடு பட்டேன்... நான் மட்டும்!
ஒரு சொல், ஒரு ஜாடை ,
ஒரு முகக்குறி காட்டியிருந்தால்
அந்த இரவில்
நிழலாய் தங்கியிருப்பேனே உன்னோடு.
தொப்பூள் கொடி சுவாசம்
தந்த தாயே நீ
மாரடைந்து இறந்த அந்த சுவாச
கணத்தில் என் முகம் ஓடிற்றா அம்மா
தகர மயானம் முன் குவிந்த
விராட்டிப் படுக்கையில் நீ.
இரட்டை வடம் மார்புச் சங்கிலி மேல்
மூத்தவனுக்கு குறி.
அன்னம் பொங்கி அடுப்படியில் வேந்த
உன் வலதுகரத்தில்
குறடு நுழைத்து வெட்டிய வளையலோ
அடுத்தவனுக்கு.
மகளே உனக்கு என்னம்மா
வேண்டுமென்ற அப்பாவிடம்
கொடிகம்பில் காயும் உன்
நைந்த உள் பாவாடை காட்டி
அழுகிறேன் பெருங்குரலில் .
நானும் நீயும்.......
நாமிருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படங்களில்
நாற்காலியில் அமர்ந்திருப்பேன் நான்
அடக்கமாக எனக்குப் பின்னால்
நின்று கொண்டிருப்பாய் நீ
உன் இனத்து கற்புக்கரசிகளைச் சொல்லி
உன்னை மிரட்டுவேன் நான்
என் இனத்து அயோக்கியர்களின் பட்டியல்
தெரிந்தும்
அமைதியாக இருப்பாய் நீ
நீ எனக்கிருப்பதை பிறர் கேட்டாலொழிய
சொல்லிக் கொள்வதில்லை நான்
நான் உனக்கிருப்பதை ஆதாரங்கள் அணிந்து
பறைசாற்றியாக வேண்டும் நீ
எனக்குப் பிறகு என் நினைவுகளோடு
வாழவைக்கிறார்கள் உன்னை
உனக்குப்பிறகு உன் தங்கையோடு
வாழவைக்கிறார்கள் என்னை.
-ஜெயபாஸ்கரன்
எப்படி விடு பட்டேன்... நான் மட்டும்!
ஒரு சொல், ஒரு ஜாடை ,
ஒரு முகக்குறி காட்டியிருந்தால்
அந்த இரவில்
நிழலாய் தங்கியிருப்பேனே உன்னோடு.
தொப்பூள் கொடி சுவாசம்
தந்த தாயே நீ
மாரடைந்து இறந்த அந்த சுவாச
கணத்தில் என் முகம் ஓடிற்றா அம்மா
தகர மயானம் முன் குவிந்த
விராட்டிப் படுக்கையில் நீ.
இரட்டை வடம் மார்புச் சங்கிலி மேல்
மூத்தவனுக்கு குறி.
அன்னம் பொங்கி அடுப்படியில் வேந்த
உன் வலதுகரத்தில்
குறடு நுழைத்து வெட்டிய வளையலோ
அடுத்தவனுக்கு.
மகளே உனக்கு என்னம்மா
வேண்டுமென்ற அப்பாவிடம்
கொடிகம்பில் காயும் உன்
நைந்த உள் பாவாடை காட்டி
அழுகிறேன் பெருங்குரலில் .
நானும் நீயும்.......
நாமிருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படங்களில்
நாற்காலியில் அமர்ந்திருப்பேன் நான்
அடக்கமாக எனக்குப் பின்னால்
நின்று கொண்டிருப்பாய் நீ
உன் இனத்து கற்புக்கரசிகளைச் சொல்லி
உன்னை மிரட்டுவேன் நான்
என் இனத்து அயோக்கியர்களின் பட்டியல்
தெரிந்தும்
அமைதியாக இருப்பாய் நீ
நீ எனக்கிருப்பதை பிறர் கேட்டாலொழிய
சொல்லிக் கொள்வதில்லை நான்
நான் உனக்கிருப்பதை ஆதாரங்கள் அணிந்து
பறைசாற்றியாக வேண்டும் நீ
எனக்குப் பிறகு என் நினைவுகளோடு
வாழவைக்கிறார்கள் உன்னை
உனக்குப்பிறகு உன் தங்கையோடு
வாழவைக்கிறார்கள் என்னை.
-ஜெயபாஸ்கரன்
....

