10-01-2005, 04:33 AM
<span style='font-size:25pt;line-height:100%'>கைம்மைக் கொடுமை</span>
கண்கள் நமக்கும் உண்டு - நமக்குத்
கருதும் வன்மையுண்டு
மண்ணிடைத் தேசமெல்லாம் - தினமும்
வாழ்ந்திடும் வாழ்க்கையிலே
எண்ண இயலாத - புதுமை
எதரிற் காணுகின்றோம்
கண்ணிருந்தென்ன பயன்? நமக்குத்
காதிருந்தென்ன பயன்?
வானிடை ஏறுகின்றார் - கடலை
வசப்படுத்துகின்றார்
ஈனப் பொருள்களிலே - உள்ளுறை
இனிமை காணுகின்றார்
மேனிலை கொள்ளுகின்றார் - நாமதை
வேஎக்கை பார்ப்பதல்லால்
ஊன்பதைத்தே அவை போல் - இயற்ற
உணர்ச்சி கொள்வதில்லை
புழுதி குப்பை உமி இவற்றின்
பழரசம் போலே - அவற்றைப்
பயன்படுத்துகின்றார்!
எழுதவும் வேண்டா - நம்நிலை
இயம்பவும் வேண்டா!
அழகிய பெண்கள் - நமக்கோ
அழுகிய பழத்தோல்!
கைம்மை எனக் கூறி - அப்பெரும்
கையினிற் கூர்வேலால்
நம்மினப் பெண்குலத்தின் - இதய
நடுவிற் பாய்ச்சுகின்றோம்
செம்மை நிலையறியோம் பெண்களின்
சிந்தையை வாட்டுகின்றோம்
இம்மை இன்பம் வேண்டல் - உயிரின்
இயற்கை என்றறியோம்
கூண்டிற் கிளி வளர்ப்பர் - இல்லத்தில்
குக்கல் வளர்த்திடுவர் - அவற்றின்
விருப்பத்தையறிந்தே!
மாண்டவன் மாண்டபின்னர் அவனின்
மனைவியின் உளத்தை
ஆண்டையர் காண்பதில்லை ஐயகோ
அடிமைப் பெண்கதியே!
கண்கள் நமக்கும் உண்டு - நமக்குத்
கருதும் வன்மையுண்டு
மண்ணிடைத் தேசமெல்லாம் - தினமும்
வாழ்ந்திடும் வாழ்க்கையிலே
எண்ண இயலாத - புதுமை
எதரிற் காணுகின்றோம்
கண்ணிருந்தென்ன பயன்? நமக்குத்
காதிருந்தென்ன பயன்?
வானிடை ஏறுகின்றார் - கடலை
வசப்படுத்துகின்றார்
ஈனப் பொருள்களிலே - உள்ளுறை
இனிமை காணுகின்றார்
மேனிலை கொள்ளுகின்றார் - நாமதை
வேஎக்கை பார்ப்பதல்லால்
ஊன்பதைத்தே அவை போல் - இயற்ற
உணர்ச்சி கொள்வதில்லை
புழுதி குப்பை உமி இவற்றின்
பழரசம் போலே - அவற்றைப்
பயன்படுத்துகின்றார்!
எழுதவும் வேண்டா - நம்நிலை
இயம்பவும் வேண்டா!
அழகிய பெண்கள் - நமக்கோ
அழுகிய பழத்தோல்!
கைம்மை எனக் கூறி - அப்பெரும்
கையினிற் கூர்வேலால்
நம்மினப் பெண்குலத்தின் - இதய
நடுவிற் பாய்ச்சுகின்றோம்
செம்மை நிலையறியோம் பெண்களின்
சிந்தையை வாட்டுகின்றோம்
இம்மை இன்பம் வேண்டல் - உயிரின்
இயற்கை என்றறியோம்
கூண்டிற் கிளி வளர்ப்பர் - இல்லத்தில்
குக்கல் வளர்த்திடுவர் - அவற்றின்
விருப்பத்தையறிந்தே!
மாண்டவன் மாண்டபின்னர் அவனின்
மனைவியின் உளத்தை
ஆண்டையர் காண்பதில்லை ஐயகோ
அடிமைப் பெண்கதியே!

