Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தட்டிவான்
#25
மதன் அண்ணா எழுதியது: அதிகாலை நேரத்தில் பருத்தித்துறை பேருந்து நிலயத்திற்கு மந்திகை, துன்னாலை, நெல்லியடி போன்ற இடங்களிருந்து வரும் தட்டிவான்கள் அங்கிருந்தே தமது சேவையை ஆரம்பிக்கும். பெண்கள், சிறுவர்கள், முதியவர்கள் மட்டுமே அநேகமாக வாகனத்துள் உட்கார்ந்து பயணஞ்செய்வார்கள். "இளந்தாரிகள் (இளைஞர்கள்) எல்லாரும் பின்னால ஏறுங்கோ", "சாமான்களையெல்லாம் மேல போடுங்கோ", "அப்பு வந்து டிரைவருக்குப் பக்கத்தில இருங்கோவன்" என்று கொண்டக்டர் சத்தம்போட்டு பயணிகளை பொருத்தமான இடங்களில் இருத்துவார். கொண்டக்டர் "அண்ணை றைற்" சொல்ல, தட்டிவான் புறப்படும். தட்டிவான் மந்திகைச்சந்தியில் சிறிதுநேரம் நிறுத்தப்பட மந்திகை ஆசுப்பத்திரியில் (வைத்தியசாலையில்) தங்கியிருந்து சிகிச்சை பெற்றவர்களும், பிள்ளைப்பேற்றிற்கு வந்து கைக்குழந்தைகளுடன் திரும்புபவர்களும், அவர்களின் உறவினர்களும் தலையணை, கூடைகள், பைகளுடன் ஏறிக்கொள்வார்கள். அவர்களுக்கு இருக்கைகளைக் கொடுத்துவிட்டு மற்றவர்கள் எழுந்துகொள்வார்கள். இளைஞர்கள் வாகனத்தில் பின்புறம் சங்கிலியில் தொங்கும் தட்டில் நின்று கூரையிலுள்ள இரும்புச்சட்டத்தைப் பிடித்தபடி புழுதியில் குளித்து வெயிலில் காய்ந்தபடி பயணிப்பார்கள். ஆனாலும் காற்றோட்டத்தால் வெய்யில் உறைப்பதில்லை. தட்டிவானிற்கு ஷொcக்-அப்சொர்பெர் இருப்பதாகவே தெரிவதில்லை (உணர முடிவதில்லை). ஒவ்வொரு கிடங்கையும் வேகம் குறையாது துள்ளிக்குலுங்கி தட்டிவான் கடக்கும்போது பயணிகள் எல்லாரும் பிடைத்தெடுக்கப்படுவார்கள். ஆனாலும் யாருமே டிரைவரில் கோபப்படுவதில்லை. "டிறைவரண்ணை! அந்த சிவத்த கேற்றடியில கொஞ்சம் நிற்பாட்டிறியளே?" என்றால் அந்த வீட்டுவாசலில்கூட பயணியை இறக்கிவிடுவார்கள். வாடிக்கையாக பயணப்படும் தேங்காய் வியாபாரிகளும், நாவல்பழம் விற்கும் ஆச்சிகளும் வாகனத்தின் சத்தத்திற்கு மேலாக சத்தமாக குடும்பக்கதைகளை, ஊர்ப்புதினங்களை அலசிக்கொண்டிருக்க மற்றவர்கள் சுவாரசியமாக கேட்டுக்கொண்டிருப்பார்கள். வழியில் சுட்டிபுரம் அம்மன் கோவில் வாசலில் தட்டிவான் நிறுத்தப்பட்டதும் கொண்டக்டர் ஓடிச்சென்று கற்பூரம் கொழுத்தி உண்டியலில் காசுபோட்டுவிட்டு வருவார். பயணிகள் சிலரும் இறங்கிப்போய் கும்பிட்டுவிட்டு வருவார்கள். இறங்க முடியாத சிலர் செல்பவர்களிடம் உண்டியலில் போடக் காசு அல்லது கற்பூரம் கொடுத்துவிடுவார்கள். கோயிலுக்கு போனவர்கள் வரும்போது கையில் திருநீறு கொண்டுவந்து எல்லோருக்கும் நீட்டுவார்கள். எல்லோரும் மனதாரக்கும்பிட்டு திருநீறு பூசியதும் தட்டிவான் புறப்படும். கொடிகாமத்தைத் தட்டிவான் அடைந்ததும் பயணிகள் இறங்கிக்கொள்ள, சிலர் டிரைவருக்கும் கொண்டக்டருக்கும் "போயிட்டு வாறன்" சொல்லிவிட்டுப் போவார்கள். தட்டிவானை தரிப்பிடத்தில் நிறுத்திவிட்டு டிரைவரும் கொண்டக்டரும் தேத்தண்ணிக்கடையிற்குப் (தேநீர்க்கடை) போய்விடுவார்கள்.

கொடிகாமத்தில், பருத்தித்துறை செல்லும் பயணிகள் வந்து ஏறிக்கொள்ள, தேங்காய் வியாபாரிகள் மூட்டைகளைக் கொண்டுவந்து கூரையில் ஏற்றுவார்கள். வெற்றிலை சப்பியபடி டிரைவர் வந்து ஏறிக்கொள்வார். கொண்டக்ரர் "அண்ணை றைற்" சொன்னதும் மீண்டும் தட்டிவான் உறுமலுடன் பயணத்தை ஆரம்பிக்கும். அதே கலகலப்பு, துள்ளல் குலுக்கல்களுடன் பயணம் தொடரும்.
அந்த நாள் நினைவுகள் மலருதே.....தட்டிவானில் ஏறுவதற்கு ஒரு மிதியடி இருக்குமே அதில் கால் வைக்கப் பயமாய் இருக்கும். நெடுகலும் ஆடியபடிதான் இருக்கும் பலன்ஸ் இல்லாமல். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Reply


Messages In This Thread
தட்டிவான் - by Mathan - 09-29-2005, 02:23 PM
[No subject] - by Mathan - 09-29-2005, 02:30 PM
[No subject] - by narathar - 09-29-2005, 02:52 PM
[No subject] - by ANUMANTHAN - 09-29-2005, 03:04 PM
[No subject] - by ANUMANTHAN - 09-29-2005, 03:05 PM
[No subject] - by Mathan - 09-29-2005, 03:06 PM
[No subject] - by inthirajith - 09-29-2005, 05:19 PM
[No subject] - by KULAKADDAN - 09-29-2005, 05:49 PM
[No subject] - by narathar - 09-29-2005, 05:58 PM
[No subject] - by Mathan - 09-29-2005, 06:00 PM
[No subject] - by kurukaalapoovan - 09-29-2005, 06:06 PM
[No subject] - by sathiri - 09-29-2005, 06:08 PM
[No subject] - by Mathan - 09-29-2005, 06:13 PM
[No subject] - by sathiri - 09-29-2005, 06:17 PM
[No subject] - by narathar - 09-29-2005, 06:20 PM
[No subject] - by Mathan - 09-29-2005, 06:32 PM
[No subject] - by narathar - 09-29-2005, 06:40 PM
[No subject] - by MUGATHTHAR - 09-29-2005, 09:45 PM
[No subject] - by இவோன் - 09-30-2005, 02:58 AM
[No subject] - by inthirajith - 09-30-2005, 03:20 AM
[No subject] - by Birundan - 09-30-2005, 10:36 AM
[No subject] - by இவோன் - 09-30-2005, 10:46 AM
[No subject] - by MUGATHTHAR - 09-30-2005, 01:38 PM
[No subject] - by narathar - 09-30-2005, 01:43 PM
[No subject] - by sankeeth - 09-30-2005, 02:24 PM
[No subject] - by sinnakuddy - 09-30-2005, 02:37 PM
[No subject] - by Rasikai - 09-30-2005, 06:12 PM
[No subject] - by தூயா - 10-16-2005, 10:09 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)