09-28-2005, 01:55 PM
கேட்டார் சேரன், மறுத்தார் கோபிகா
2 முறை கால்ஷீட் கேட்டும் கோபிகா மறுத்து விட்டதால் இயக்குனர் சேரன் வருத்தமாக இருக்கிறாராம். அதைவிட வருதத்தில் கோபிகா இருக்கிறார்.
கேரளத்து கோபிகா வர்மாவை (தமிழில் கோபிகா) தனது ஆட்டோகிராப் படம் மூலம் அறிமுகப்படுத்தி தமிழ் சினிமாவில் வாழ்க்கை கொடுத்தவர் சேரன்.
ஆட்டோகிராப் மூலம் புகழின் உச்சிக்குப் போன அவர் அதிலிருந்து இன்னும் இறங்கவில்லை. நடிப்போடு கிளாமரையும் இப்போது அளவாக கலந்து தமிழிலும் தெலுங்கிலும் கலக்கி வருகிறார்.
<img src='http://img128.imageshack.us/img128/5779/4friends40ay.jpg' border='0' alt='user posted image'>
ஆனால், ஆட்டோகிராப் படத்திற்குப் பிறகு இரண்டு புதிய படங்களில் நடிக்க கோபிகாவின் கால்ஷீட்டை சேரன் கேட்டபோது, கோபிகா படு பிசியாக பல படங்களில் புக் ஆகியிருந்தார். இதனால் சேரன் கேட்ட தேதிகளை அவரால் கொடுக்க முடியவில்லை.
கோபிகா கிடைக்காததால் சோகமாகி வருத்தமாகி விட்டாராம் சேரன். இது கோபிகாவுக்கும் பெரும் வருத்தத்தையும், சங்கடத்தையும் கொடுத்துள்ளதாம். இதுபற்றி நம்மிடம் கோபிகா கிசுகிசுத்ததாவது:
சே, இரண்டு முறை சேரன் சார் கால்ஷீட் கேட்டும் என்னால் தர முடியாமல் போய் விட்டது. இரண்டு படங்களும் அருமையான கதை, எனக்கு ரொம்ப சூட் ஆகும். அதில் நடிக்க முடியாமல் போனது இன்னும் வருத்தமாக உள்ளது.
நான் கால்ஷீட் கொடுக்காததால் சேரன் சார் ரொம்ப வருத்தமாகி விட்டார். அதைப் பார்த்து எனக்கும் ரொம்ப வருத்தம். ஆனாலும் என்னால் கமிட் செய்த படங்களை விட்டு விட்டு வர முடியாத நிலை. இதை சேரன் சார் புரிந்து கொண்டு, பரவாயில்லை, அடுத்த படத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று எனக்கு ஆறுதல் கூறினார் என்று மூக்கை சிந்தினார்.
அதை விடுங்க உங்க ஊரைச் சேர்ந்த நயன்தாரா உங்களை குறி வைத்து வாய்ப்புகளைப் பிடித்து வருகிறாராமே என்று நைஸாக வாயைக் கிண்டினோம். அய்யய்யோ, அப்படியெல்லாம் கிடையாது. இரண்டு பேருமே வெவ்வேறு விதமான ஸ்டைலில் நடித்து வருகிறோம். எனவே எனக்கு அவரோ, அவருக்கு நானோ போட்டியாக இருக்க முடியாது.
எனது பாலிசிப்படிதான் நான் நடிப்பேன். அதேபோல அவருக்கும் ஒரு கொள்கை இருக்கும். எனக்கான படங்கள், எனக்கான கேரக்டர்கள் என்னைத் தேடி வந்தே தீரும்.
<b>ரசிகர்கள் என்னை ஒரு தேவதை போல பார்த்து வருகிறார்கள். அவர்களிடம் எனக்கு உள்ள நல்ல பெயரை கெடுத்துக் கொள்ள மாட்டேன்.</b> கிடைத்துள்ள பெயரை காப்பாற்றிக் கொண்டு, தொடர்ந்து ரசிகர்கள் விரும்பும் விதமான கேரக்டர்களில் நடிப்பேன்.
மற்றபடி, நீங்கள் சொல்வது போல யாரும், எனக்குப் போட்டி இல்லை, போட்டியாகவும் இருக்க முடியாது என்று நிறுத்தினார் கோபிகா.
நல்லதுங்க!. அ..., வணக்கமுங்க[img][/img]
2 முறை கால்ஷீட் கேட்டும் கோபிகா மறுத்து விட்டதால் இயக்குனர் சேரன் வருத்தமாக இருக்கிறாராம். அதைவிட வருதத்தில் கோபிகா இருக்கிறார்.
கேரளத்து கோபிகா வர்மாவை (தமிழில் கோபிகா) தனது ஆட்டோகிராப் படம் மூலம் அறிமுகப்படுத்தி தமிழ் சினிமாவில் வாழ்க்கை கொடுத்தவர் சேரன்.
ஆட்டோகிராப் மூலம் புகழின் உச்சிக்குப் போன அவர் அதிலிருந்து இன்னும் இறங்கவில்லை. நடிப்போடு கிளாமரையும் இப்போது அளவாக கலந்து தமிழிலும் தெலுங்கிலும் கலக்கி வருகிறார்.
<img src='http://img128.imageshack.us/img128/5779/4friends40ay.jpg' border='0' alt='user posted image'>
ஆனால், ஆட்டோகிராப் படத்திற்குப் பிறகு இரண்டு புதிய படங்களில் நடிக்க கோபிகாவின் கால்ஷீட்டை சேரன் கேட்டபோது, கோபிகா படு பிசியாக பல படங்களில் புக் ஆகியிருந்தார். இதனால் சேரன் கேட்ட தேதிகளை அவரால் கொடுக்க முடியவில்லை.
கோபிகா கிடைக்காததால் சோகமாகி வருத்தமாகி விட்டாராம் சேரன். இது கோபிகாவுக்கும் பெரும் வருத்தத்தையும், சங்கடத்தையும் கொடுத்துள்ளதாம். இதுபற்றி நம்மிடம் கோபிகா கிசுகிசுத்ததாவது:
சே, இரண்டு முறை சேரன் சார் கால்ஷீட் கேட்டும் என்னால் தர முடியாமல் போய் விட்டது. இரண்டு படங்களும் அருமையான கதை, எனக்கு ரொம்ப சூட் ஆகும். அதில் நடிக்க முடியாமல் போனது இன்னும் வருத்தமாக உள்ளது.
நான் கால்ஷீட் கொடுக்காததால் சேரன் சார் ரொம்ப வருத்தமாகி விட்டார். அதைப் பார்த்து எனக்கும் ரொம்ப வருத்தம். ஆனாலும் என்னால் கமிட் செய்த படங்களை விட்டு விட்டு வர முடியாத நிலை. இதை சேரன் சார் புரிந்து கொண்டு, பரவாயில்லை, அடுத்த படத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று எனக்கு ஆறுதல் கூறினார் என்று மூக்கை சிந்தினார்.
அதை விடுங்க உங்க ஊரைச் சேர்ந்த நயன்தாரா உங்களை குறி வைத்து வாய்ப்புகளைப் பிடித்து வருகிறாராமே என்று நைஸாக வாயைக் கிண்டினோம். அய்யய்யோ, அப்படியெல்லாம் கிடையாது. இரண்டு பேருமே வெவ்வேறு விதமான ஸ்டைலில் நடித்து வருகிறோம். எனவே எனக்கு அவரோ, அவருக்கு நானோ போட்டியாக இருக்க முடியாது.
எனது பாலிசிப்படிதான் நான் நடிப்பேன். அதேபோல அவருக்கும் ஒரு கொள்கை இருக்கும். எனக்கான படங்கள், எனக்கான கேரக்டர்கள் என்னைத் தேடி வந்தே தீரும்.
<b>ரசிகர்கள் என்னை ஒரு தேவதை போல பார்த்து வருகிறார்கள். அவர்களிடம் எனக்கு உள்ள நல்ல பெயரை கெடுத்துக் கொள்ள மாட்டேன்.</b> கிடைத்துள்ள பெயரை காப்பாற்றிக் கொண்டு, தொடர்ந்து ரசிகர்கள் விரும்பும் விதமான கேரக்டர்களில் நடிப்பேன்.
மற்றபடி, நீங்கள் சொல்வது போல யாரும், எனக்குப் போட்டி இல்லை, போட்டியாகவும் இருக்க முடியாது என்று நிறுத்தினார் கோபிகா.
நல்லதுங்க!. அ..., வணக்கமுங்க[img][/img]
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
</span>

