09-27-2005, 10:10 AM
இங்கிலாந்து குற்றச்சாட்டு: விடுதலைப் புலிகள் நிராகரிப்பு!
[செவ்வாய்க்கிழமை, 27 செப்ரெம்பர் 2005, 15:16 ஈழம்] [ம.சேரமான்]
ஐரோப்பிய ஒன்றியத் தலைமை நாடான இங்கிலாந்து தெரிவித்திருக்கும் குற்றச்சாட்டுகளை தமிழீழ விடுதலைப் புலிகள் நிராகரித்துள்ளனர்.
சர்வதேச செய்தித் ஸ்தாபனமான ஏ.பிக்கு விடுதலைப் புலிகளின் ஊடகப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் தயா மாஸ்டர் கருத்து தெரிவிக்கையில்,
நாங்கள் பயங்கரவாத இயக்கம் அல்ல. தமிழ் மக்களின் உரிமைகளுக்காக நாம் போராடி வருகிறோம். இங்கிலாந்தின் குற்றச்சாட்டுகள் குறித்த விரிவான அறிக்கை வெளியிடப்படும் என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாத இயக்கங்கள் பட்டியலில் இணைத்து தடை செய்யப் போவதாகவும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குள் தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகள் நுழைவது தடை செய்யப்படுவதாகவும் இங்கிலாந்து அரசாங்கம் அறிக்கை வெளியிட்டிருந்ததையடுத்து விடுதலைப் புலிகளின் தரப்பில் இக்கருத்து வெளியிடப்பட்டுள்ளது.
http://www.eelampage.com/?cn=20382
[செவ்வாய்க்கிழமை, 27 செப்ரெம்பர் 2005, 15:16 ஈழம்] [ம.சேரமான்]
ஐரோப்பிய ஒன்றியத் தலைமை நாடான இங்கிலாந்து தெரிவித்திருக்கும் குற்றச்சாட்டுகளை தமிழீழ விடுதலைப் புலிகள் நிராகரித்துள்ளனர்.
சர்வதேச செய்தித் ஸ்தாபனமான ஏ.பிக்கு விடுதலைப் புலிகளின் ஊடகப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் தயா மாஸ்டர் கருத்து தெரிவிக்கையில்,
நாங்கள் பயங்கரவாத இயக்கம் அல்ல. தமிழ் மக்களின் உரிமைகளுக்காக நாம் போராடி வருகிறோம். இங்கிலாந்தின் குற்றச்சாட்டுகள் குறித்த விரிவான அறிக்கை வெளியிடப்படும் என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாத இயக்கங்கள் பட்டியலில் இணைத்து தடை செய்யப் போவதாகவும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குள் தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகள் நுழைவது தடை செய்யப்படுவதாகவும் இங்கிலாந்து அரசாங்கம் அறிக்கை வெளியிட்டிருந்ததையடுத்து விடுதலைப் புலிகளின் தரப்பில் இக்கருத்து வெளியிடப்பட்டுள்ளது.
http://www.eelampage.com/?cn=20382
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
</span>

