Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
படித்ததில் பிடித்தவை.........
#11
அன்பு

அன்பு
என்ற தலைப்பில்
மிகச்சிறிய
கவிதை கேட்டார்கள்......
அம்மா
என்றேன் உடனே !
கேட்டது
அம்மாவாக இருந்தால்
இன்னும் சின்னதாய்
சொல்வேன்
நீ... என்று
-தாஜ்


சந்தர்ப்பங்கள்

எடுப்பதற்குள்
நின்றுவிடும் தொலைபேசி மணி
சற்று வெளியே சென்றபோது
அப்போதுதான் வந்து விட்டுப்போன யாரோ
அந்த முகம்தானா என்று நினைவூட்டிக் கொள்வதற்குள்
சிக்னலில் விழும் பச்சை
வந்து சேர்வதற்கு
சற்று முன் எரியூட்டபட்ட உடல்
எப்போதும்
ஒரு கணம்தான் தாமதமாகிறது
-மனுஷ்ய புத்திரன்


சொல்லாத வார்த்தைகள்

தூக்கு மாட்டிக்
கொள்ளும் போது
உன்னிடம்
சொல்ல நினைத்த
வார்த்தைகள்
உள்ளே சிக்கிக்கொண்டு
வெளியே வர முடியாமல்
நாக்கை மட்டும்
வெளியே தள்ளிக்
கொண்டிருக்கிறது.
- நிலாக்குட்டி

வதை

திருவிழாக் கூட்டத்தில்
குழந்தையைத் தொலைத்துவிட்டு
தவிக்கையில்...
சின்ன வயதில்
வீட்டுத் தொழுவத்தில்
தெரு நாய் ஈன்ற குட்டிகளை
கோணிப்பையில் திணித்து-
ஊருக்கு வெளியே-
கள்ளிக் காட்டில்
கொண்டுபோய் விட்டதெல்லாம்
நினைவுக்கு வருகிறது!
-விஜயலெட்சுமி

துபாய்

கனவுகளில் வந்து கொஞ்சுகிற முகத்தைக்
காணப் போகிற மகிழ்ச்சி
எனக்குள்.
ரசித்து ரசித்து
வாங்கிய பொம்மைகளொடு
காத்திருக்கிறேன் நெடுனேரமாக.
வீடு நுழைந்த முகம் கண்டு
தொட்டுக் கொஞ்சி மகிழ
நெருங்குகையில்
' யாரும்மா... இவங்க?' என்கிறாள்
மழலை மொழியில்
என் மகள்.
-இசாக்


தாஜ்மகால்

நாடு சுடுகாடாய்
இருப்பதால்
உலக அதிசயமாய்
ஒரு கல்லறை
-கபிலன்


வலி

விழுங்கிய மீன்
தொண்டையில் குத்துகையில்
உணருகிறேன்
தூண்டிலின் ரணம்
-விஜய்

திருத்தப்பட்ட வருத்தம்

இறந்தவன்
இறுதிப்பயணத்தில்
எத்தனை பேர் வருகிறார்கள்
என்று
ஒருமுறை கண்களைத்
திறந்து பார்த்தான்..
வாழ்ந்ததற்கு
வருத்தப்பட்டு மறுபடியும்
கண்களை மூடிக்கொண்டான்.
-தமிழன்பன்


முரண்

முரண்டு பிடிக்கும் ஆட்டை
அடிக்க முயன்ற
என்னைத்
தடுத்தவாறு சொன்னாள்
அம்மா
"அடிக்காதேடா..
அது
கருப்பசாமிக்கு நெர்ந்துவிட்டது.."
-மணிகண்டன்


கவனம்

நகரும் தார்ச்சாலை
இருபக்க மரங்கள்
பசுமையான வயல்வெளிகள்
முப்பரிமான மலைகள்
முகத்தில் மோதும் தென்றல்
எதிர்வரிசை இளமை
எதையும் ரசிக்க விடவில்லை
சில்லறைப் பாக்கி...
- சதாசிவம்


எங்கும் எதிலும்..

கள்ளச் சாராயம்
காய்சிய பணத்திலும்
உடலை விலை பேசி
விற்று வந்த பணத்திலும்
ஏழைத் தாலியின்
அடகுப் பணத்திலும்
ஈட்டிக்காரனின்
வட்டிப் பணத்திலும்
அதே புன்னகையுடன்
காந்தி படம் !
- யாரோ
....
Reply


Messages In This Thread
[No subject] - by sakthy - 09-24-2005, 06:01 PM
[No subject] - by sakthy - 09-24-2005, 06:04 PM
[No subject] - by KULAKADDAN - 09-24-2005, 09:18 PM
[No subject] - by KULAKADDAN - 09-26-2005, 02:48 PM
[No subject] - by KULAKADDAN - 09-26-2005, 02:51 PM
[No subject] - by KULAKADDAN - 09-26-2005, 02:54 PM
[No subject] - by RaMa - 09-26-2005, 04:01 PM
[No subject] - by அனிதா - 09-26-2005, 04:16 PM
[No subject] - by sakthy - 09-26-2005, 05:28 PM
[No subject] - by sakthy - 09-26-2005, 06:41 PM
[No subject] - by கீதா - 09-27-2005, 09:27 AM
[No subject] - by அனிதா - 09-27-2005, 09:38 AM
[No subject] - by sakthy - 10-01-2005, 05:48 PM
[No subject] - by selvam - 10-01-2005, 06:27 PM
[No subject] - by கீதா - 10-01-2005, 07:10 PM
[No subject] - by sakthy - 10-01-2005, 07:41 PM
[No subject] - by sakthy - 10-01-2005, 08:22 PM
[No subject] - by sakthy - 10-01-2005, 10:15 PM
[No subject] - by வெண்ணிலா - 10-01-2005, 11:14 PM
[No subject] - by sakthy - 10-02-2005, 04:54 PM
[No subject] - by வெண்ணிலா - 10-03-2005, 06:49 AM
[No subject] - by sakthy - 10-03-2005, 06:52 PM
[No subject] - by sakthy - 10-03-2005, 07:01 PM
[No subject] - by Mathan - 10-03-2005, 07:06 PM
[No subject] - by sakthy - 10-03-2005, 07:09 PM
[No subject] - by sakthy - 10-03-2005, 07:11 PM
[No subject] - by Mathan - 10-03-2005, 07:24 PM
[No subject] - by ப்ரியசகி - 10-04-2005, 03:48 PM
[No subject] - by sayon - 10-05-2005, 07:49 PM
[No subject] - by வெண்ணிலா - 10-06-2005, 04:18 AM
[No subject] - by vasanthan - 10-06-2005, 08:33 AM
[No subject] - by வெண்ணிலா - 10-06-2005, 09:13 AM
[No subject] - by Thala - 10-06-2005, 09:16 AM
[No subject] - by sakthy - 10-06-2005, 06:47 PM
[No subject] - by sakthy - 10-09-2005, 06:01 PM
[No subject] - by sakthy - 10-15-2005, 04:56 PM
[No subject] - by அனிதா - 10-15-2005, 06:13 PM
[No subject] - by ப்ரியசகி - 10-15-2005, 07:27 PM
[No subject] - by sakthy - 10-20-2005, 05:13 PM
[No subject] - by shanmuhi - 10-20-2005, 06:34 PM
[No subject] - by கரிகாலன் - 10-24-2005, 06:07 AM
[No subject] - by ப்ரியசகி - 10-24-2005, 07:34 AM
[No subject] - by கரிகாலன் - 10-24-2005, 01:25 PM
[No subject] - by Mathan - 10-24-2005, 04:09 PM
[No subject] - by KULAKADDAN - 10-24-2005, 05:43 PM
[No subject] - by Rasikai - 10-24-2005, 11:10 PM
[No subject] - by கரிகாலன் - 10-25-2005, 02:17 AM
[No subject] - by அருவி - 10-25-2005, 06:09 AM
[No subject] - by அனிதா - 10-25-2005, 09:42 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)