09-26-2005, 02:48 PM
வலைபதிவில் DJ தமிழன் என அறியப்படும் ஒரு வலைப்பதிவாளர். அவரது கவிதைகள் , சில உங்கள் பார்வைக்கக. குறிப்பக தமிழ்மணம் தளத்துக்கு /வலைப்பூக்களை அதிகம் படிக்க செல்லாத வாசகர்களுக்காக.
[size=18]<b>கணப்பொழுது வாழ்வு </b>
தர்க்கங்களால் நிரம்பிவழியும்
உனது உரையாடல்கள்
கஞ்சாப்புகையின் மிதப்பைப்போல
இன்னொரு உலகுக்கு
அழைத்துச்செல்லும்
விந்தை நிரம்பியவை
நிகழ்காலத்தில் வாழ முயலும்
மனசு கரைந்து
எண்ணற்ற சூத்திரங்களால்
பின்னிப்பிணைக்க்கப்பட்ட தத்துவங்கள்
மூளைமடிப்புக்களில் படிகின்றன
இந்த வலைப்பின்னலுக்குள் நின்று
பத்துவிரல்களையும் நீட்டி
எந்தக்கூச்சமுமின்றி
எவரையும் குற்றஞ்சாட்டமுடிகின்றது
மிக இயல்பாய்
பேசவிடு!
குருதிச்சமுத்திரத்துள்
மிதந்துகொண்டிருக்கும்
எனது தீவுநாட்டில்
மனிதர்கள்
இன்னும் வாழ்வதுபற்றி
உனது தேவருலகக்கனவுகளில்
மூழ்கிவிடாமல்
பலவீனங்களுடன் எனினும்
ஏழு வார்த்தை எழுதவிடு
மழைநாளில்
உதிர்ந்துபோகின்ற பூக்களாய்
நண்பர்கள் காணாமற்போனதை
மீசையரும்பும் வயதில்
காதலை ஆழப்பதித்த பதின்மக்காரி
'நான் நீ நினைக்கும் பெண்ணல்ல' வென
விரல்கள் விலக்கி
களத்துக்கு விரைந்ததை
எனது அழுக்குகளுடன்
தத்துவங்களைவிட கணப்பொழுது வாழ்வே
சாலவும் சிறந்ததெனும் நம்பிக்கையுடன்
புத்தகங்களை விரித்து வைத்து
தேநீர் அருந்தி
தோழியொருத்தியுடன் உரையாடும்
பின்னேரப்பொழுதைப்போல
இயல்பாய்
எழுத...
வேண்டும்;
ஒரு வேனிற்காலம்.
நன்றி
Sep 08/05
http://djthamilan.blogspot.com/2005/09/blo...og-post_08.html
[size=18]<b>கணப்பொழுது வாழ்வு </b>
தர்க்கங்களால் நிரம்பிவழியும்
உனது உரையாடல்கள்
கஞ்சாப்புகையின் மிதப்பைப்போல
இன்னொரு உலகுக்கு
அழைத்துச்செல்லும்
விந்தை நிரம்பியவை
நிகழ்காலத்தில் வாழ முயலும்
மனசு கரைந்து
எண்ணற்ற சூத்திரங்களால்
பின்னிப்பிணைக்க்கப்பட்ட தத்துவங்கள்
மூளைமடிப்புக்களில் படிகின்றன
இந்த வலைப்பின்னலுக்குள் நின்று
பத்துவிரல்களையும் நீட்டி
எந்தக்கூச்சமுமின்றி
எவரையும் குற்றஞ்சாட்டமுடிகின்றது
மிக இயல்பாய்
பேசவிடு!
குருதிச்சமுத்திரத்துள்
மிதந்துகொண்டிருக்கும்
எனது தீவுநாட்டில்
மனிதர்கள்
இன்னும் வாழ்வதுபற்றி
உனது தேவருலகக்கனவுகளில்
மூழ்கிவிடாமல்
பலவீனங்களுடன் எனினும்
ஏழு வார்த்தை எழுதவிடு
மழைநாளில்
உதிர்ந்துபோகின்ற பூக்களாய்
நண்பர்கள் காணாமற்போனதை
மீசையரும்பும் வயதில்
காதலை ஆழப்பதித்த பதின்மக்காரி
'நான் நீ நினைக்கும் பெண்ணல்ல' வென
விரல்கள் விலக்கி
களத்துக்கு விரைந்ததை
எனது அழுக்குகளுடன்
தத்துவங்களைவிட கணப்பொழுது வாழ்வே
சாலவும் சிறந்ததெனும் நம்பிக்கையுடன்
புத்தகங்களை விரித்து வைத்து
தேநீர் அருந்தி
தோழியொருத்தியுடன் உரையாடும்
பின்னேரப்பொழுதைப்போல
இயல்பாய்
எழுத...
வேண்டும்;
ஒரு வேனிற்காலம்.
நன்றி
Sep 08/05
http://djthamilan.blogspot.com/2005/09/blo...og-post_08.html
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>

