11-11-2003, 09:26 PM
முயல் வேகமாக ஓட, அதை ஒரு ஓநாய் துரத்தியது. காடும் மலையும் கடந்து துரத்தி வந்தது. மிக அருகே வந்ததும், அதை தடவிக் கொடுத்தது. முயல் ஆச்சரியப்பட்டபோது, ஓநாய் உடனே அதைக் கடிக்க வந்தது. மறுபடி ஓட வேண்டியிருந்தது. இப்படித் திரும்பத் திரும்ப நடைபெற, முயல் குழம்பிப்போய் ஒரு இடத்தில் நின்று இடுப்பில் முன்னங்கால்களை வைத்துக்கொண்டு ஓநாயை முறைத்துப் பார்த்து,
''ஏ ஓநாயே! நீ நல்லவனா கெட்டவனா சொல்?'' என்றது.
''ஏன் அப்படிக் கேட்கிறாய்?''
''உன் மனசில் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய்? புரியவே இல்லை. ஒரு சமயம் தடவிக் கொடுக்கிறாய், ஒரு சமயம் கடித்து சாப்பிட வருகிறாய். எதையாவது ஒன்றை உருப்படியாகச் செய். இப்படி சித்திரவதை செய்யாதே. ஓடவா? நிற்கவா? ஒன்றுமே புரியவில்லை'' என்றது.
ஓநாய், முயலை கடைசியில் கொன்று தின்றது.
நீதி : - நண்பனாக இரு, இல்லை எதிரியாக இரு, இரண்டும் கெட்டானாக இராதே.
நன்றி: அம்பலம்
''ஏ ஓநாயே! நீ நல்லவனா கெட்டவனா சொல்?'' என்றது.
''ஏன் அப்படிக் கேட்கிறாய்?''
''உன் மனசில் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய்? புரியவே இல்லை. ஒரு சமயம் தடவிக் கொடுக்கிறாய், ஒரு சமயம் கடித்து சாப்பிட வருகிறாய். எதையாவது ஒன்றை உருப்படியாகச் செய். இப்படி சித்திரவதை செய்யாதே. ஓடவா? நிற்கவா? ஒன்றுமே புரியவில்லை'' என்றது.
ஓநாய், முயலை கடைசியில் கொன்று தின்றது.
நீதி : - நண்பனாக இரு, இல்லை எதிரியாக இரு, இரண்டும் கெட்டானாக இராதே.
நன்றி: அம்பலம்
[i][b]
!
!

