11-11-2003, 04:36 AM
Mathivathanan Wrote:நேற்று சினேகிதன் ஒருத்தனைச் சந்திச்சன். ஒருவருஷத்துக்கு முந்தி சிங்கப்புபூர் எண்டு சொன்னவன் நேற்று இஸ்ரேல் எண்டான். எனக்கு விளங்கயில்லை. ஏன் இஸ்ரேல் எண்டு கேட்டன்.. உலகம் முழுவதும் இருக்கிற யூதருக்கு அமெரிக்கன் இஸ்ரேல் குடுத்த மாதிரி புஸ் ரணில் சேர்ந்து உலகம் முழுவதும் இருக்கிற தமிழருக்கு தமிழீழம் குடுக்க ஏற்பாடு செய்தாச்சாம். பிரித்தானிய முறைப்படி சட்டமாம். ஆனால் அதைவிட இறுக்கமான சட்டமாம். இந்தப் பிளான்.. அந்த சிஸ்ரம்.. இப்படிப் பலதும்.
suppiah suthanthararajah Wrote:ஒரு காலத்தில் நசுக்கப்பட்ட யூதர் சமுதாயதிற்காக அமெரிக்கா குரல் கொடுத்து இஸ்ரேல் உருவானது உண்மை.ஆனால் இன்று ஈழத்தமிழருக்காக மனத்தூய்மையுடன் குரல் கொடுக்க எந்த அரசாவது முன் வருமா ?நாடுகளோ வல்லரசுகளோ பூகோள நலன் அல்லது பொருளாதாரநலன் என்பதைத் தான் முதலில் சிந்திக்கின்றன..கிழக்கு தீமோரின் சுதந்திரத்திலே அவுஸ்திரேலியாவுக்கு ஆர்வம் இருந்தது.யூகோஸ்லவியா ஐரோப்பாவிலே இருக்கினறது.ஆனால் நாமோ?
சில செய்திகள் யதார்த்தத்திற்கு எதிராக இருக்கலாம்..அவற்றை வேடிக்கையாகவும் எடுக்கலாம்.கருத்துக்கள் முரணபடலாம்.ஆனால் கருத்தை எழுதுபவர்கள் முரணபடக்கூடாது.ஆகவே அன்பான சீலன்,மதிவதனன் அவர்களே!உங்கள் கருத்துக்களை மட்டும் மோதவிடுங்கள்.இது என வினயமான வேண்டுகோள். சமாதானப் பேச்சு வார்த்தைகள் காலவரையின்றி இடைநிறுத்தம்-ஜ.எல்.பீரிஸ் .என்று, புதினம்(101103 )கூறுகின்றது.பேச்சு வார்த்தைகள் செய்யவே அரசியல் ஸ்திரம் போதவில்லை..இநத அரசு வேறு ஒருஅரசுடன் சேர்ந்து எமக்கு...
Mathivathanan Wrote:ஐயா சுதந்திரன்.. கற்பனைக்கோட்டைகளுக்கு அளவேது.. சமாதானம் என்று தற்போதுதான் ஏதொ நடக்கிறது.. சம்பந்தப்பட்வருக்கு வதிவிட உரிமை கிடைத்துவிட்டது. திரும்பிப்போவதென்பது கனவிலுமில்லை. ஆகவே அவரும் அவர் சார்ந்த பெடிசுகளும் வாங்கிய வக்காளத்துக்கு ஏதாவது சொல்லவேண்டும். அதுதான் அமெரிக்க ரணில் கூட்டு தமிழீழ கொடுப்பனவு.. அறிக்கை என எனது அபிப்பிராயம். எது எப்படியோ.. அவரைப்போல எத்தனையோ குடும்பங்கள் தற்போது.
பேச்சுவார்த்தை நடக்கிறதோ இல்லையோ சமாதானம் இருந்தாலேபோதும். இன்றுகூட அண்மையில் சென்றுவந்தவர் ஒருவரை சந்தித்தேன். சண்டைக்கு ஆதரவு இம்மியளவுமில்லை.. எனவே யார் எந்த அளவு சண்டைக்கு வக்காளத்து வாங்கினாலும்.. யார் கூப்பிட்டுவைத்து பிரகடணம்செய்து சண்டை சண்டை என்று கூக்குரலிட்டாலும் தோற்கப்போவது உண்மை. ஆயுதம் தரித்தவன் ஆயுதம் களைந்தால் அங்கீகாரம்.. வரவேற்பு.. உதவி கிடைக்கும். இல்லையேல் வானம்பார்த்த பூமிதான்.
suppiah suthanthararajah Wrote:நான் கற்பனையான செய்திகளைத் தருதில்லை.புதினம்,தினக்குரல் போன்ற பத்தரிகைகளை ஆதாரமாக வைத்தே கூறுகின்றேன்.வதிவிட அனுமதி போன்ற தனிப்பட்ட விடயங்ளைத் தவிர்த்து ஆரோக்கியமான விடயங்களை தர்க்கிப்பது நல்லதென நினைக்கின்றேன்ஐயா சுதந்திரன்.. கற்பனையில் காலம் ஓட்டுவது நானல்ல. சம்பந்தப்பட்ட நபர்.. அவரது நண்பர்கள். ஒருகாலத்தில் சிங்கப்பூர்போன்ற ஒருநாட்டில் திரும்பப்போயிருப்போம் என்று சொல்லியவர்.. தற்போது இல்ரேலாம். எப்படியாக கதை மாறியது பார்த்தீர்களா. இது யதார்த்தம் கற்பனையல்ல. மேலும் நீங்கள் குறிப்பிட்ட பத்திரிகைகளே பலகருத்து எழுதமுடியாதநிலையில் இயங்கும்போது.. கற்பனைக்கும் நிஜத்துக்கும் வேறுபாடு உண்டு ஒத்துக்கொள்ளுகிறேன். பேச்சுவார்த்தை முறிவுபற்றி ஹைலைற் பண்ணி எழுதியுள்ளீர்கள். அதற்கான பதில் ஏற்கெனவே என்னிடமிருந்து வந்துவிட்டது..
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail

