Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஆயுதக்குழுக்களை களைந்திடுக
#2
துணைப்படைகளின் ஆயுதங்களை களைவது அல்லது வடகிழக்கில் இருந்து வெளியேற்றுவது அரசின் கடமை
இணைத்தலைமை நாடுகள் வலியுறுத்து; உடன்படிக்கையை சீராக அமுல்படுத்தவும் கோரிக்கை

(நமது நிருபர்)

யுத்த நிறுத்த உடன்படிக்கையைச் சீராக அமுல்படுத்தும் வகையில் நடைமுறை சாத்தியக் கூறுகள் தொடர்பாக ஆராயுமாறு அரசாங்கத்தையும், தமிழீழ விடுதலைப் புலிகளையும் இலங்கைக்கு உதவி வழங்கும் டோக்கியோ மாநாட்டில் பங்கு பற்றிய இணைத் தலைமை நாடுகள் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளன

.இராணுவத்துடன் இணைந்து செயற்படும் துணைப் படை யினரின் நடவடிக்கைகள் தொடர்ச்சியான வன்முறைகளுக்கும், அமைதியீனங்களுக்கும் தூபமிடும் வகையில் அமைந்திருப்பது மிகவும் கவலையளிப்பதாகத் தெரிவித்துள்ள மேற்படி நாடுகள், அவர்களின் ஆயுதங்களைக் களையச் செய்வது அல்லது வடக்கு கிழக்கிலிருந்து அவர்களை வேறு இடங்களுக்கு மாற்றுவது யுத்த நிறுத்த உடன்படிக்கையின் படி அரசாங்கத்தின் கடமை என்றும் தெரிவித்துள்ளன.

அத்துடன், அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையே செய்து கொள்ளப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் தற்பொழுது மிகுந்த சவால்களை எதிர்நோக்கியுள்ளதாக தாங்கள் கருதுவதாகவும் இணைத் தலைமை நாடுகள் தெரிவித்துள்ளன
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply


Messages In This Thread
[No subject] - by வினித் - 09-20-2005, 07:03 PM
[No subject] - by kuruvikal - 09-20-2005, 07:07 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)