09-20-2005, 01:12 PM
sakthy Wrote:கோபம்
ஒரு மனிதனை
முட்டளாக்குகிறது
அர்த்தம் தெரியாமல்
கொட்டும் வார்த்தைகள்
பின் யோசிக்கையில்
ரணமாய் வலிக்கிறது.
கோபத்தால் ஒரு மனிதன்
மிருகமாகிறான் -அந்த
நொடிகளில்..........
முடிந்த வரை
உன்னை கட்டுப்படுத்து -இல்லை
இடத்தை விட்டு விலகிவிடு
-இது என் சுய அனுபவத்தில் கண்ட உண்மை
கோபம் பல சமயங்களில் தேவையற்ற மனஸ்தாபங்களை கொண்டு வந்திருக்கின்றது. என்னதான் கோபத்தை வெளிக்காட்ட கூடாது என்று நினைத்தாலும் சில சமயங்களில் அது என்னையும் மீறி வார்த்தைகளில் வெளிவந்து மற்றவர்களை காயப்படுத்தி இருக்கின்றது. அதன் பின்பு எவ்வளவு வருந்தியும் சொன்ன வார்த்தைகளின் தாக்கத்தை குறைக்க முடிந்ததே தவிர முற்றால் இல்லாமல் செய்ய முடிந்ததில்லை, அந்த அனுபவங்களால் இப்போதெல்லாம் முடிந்தவரை கோபம் வரும் சந்தர்ப்பத்தில் மெளனமாக இருக்க முயல்கின்றேன். கோபத்தை சமாளிக்க எனக்கு தெரிந்த ஒரே ஒரு வழி இது தான்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

