09-18-2005, 02:22 PM
உண்மையில் இந்தச் சட்டத்தினால் பெருண்பான்மையாகப் பாதிக்கப்படப்போவது சிங்களச் சிறுமிகளே. ஆனாலும் சிறுமியின் சம்மதமில்லாமல் நடந்ததாக நிருபிக்கப்பட்டால் சம்மந்தப்பட்டவருக்கு தண்டனை கிடைக்கலாம். என்றாலும் பணபலத்தால் சிறுமியின் வாக்குமூலத்தை மாற்றியமைக்க நிறையச் சந்தர்ப்பங்கள் உள்ளன. ஆனால் பொதுஅமைப்புகள் எவையாயினும் நீதிமன்றத்தை நாடி இந்தச் சட்டம் நடைமுறைக்கு வராமல் தடுக்க முடியும் மதன் கூறிய கருத்துக்களையும் எம்மவர் உள்வாங்கி கருத்துக்களை பகிர்வது சாலச்சிறந்தது. சில அரசியல்வாதிகளின் செயல்களுக்காக மொத்த சிங்கள மக்களையும் குறைசொல்வது நியாயமல்ல. எனவே கனவுலகில் வாழாமல் நிஜத்தில் நியாயங்களை பகிர்ந்து கொள்வோமே!!!!!

