09-18-2005, 02:12 AM
இசைத் தமிழ்
மேசை விளக்கேற்ற - நாற்காலி
மீதில் அமர்ந்தே நான்
ஆசைத் தமிழ்படித்தேன் - என்னருமை
அம்மா அருகில் வந்தார்
மீசைத் தமிழ்மன்னர் - தம்பகையை
வென்ற வரலாற்றை
ஓசையுடன் படித்தேன் - அன்னைமகிழ்
வுற்றதை என்ன சொல்வேன்!
செந்தமிழ் நாட்டினிலே - வாழ்கின்ற
சேயிழை யார்எவரும்
வந்த விருந்தோம்பும் - வழக்கத்தை
வாய்விட்டுச் சொல்லுக்கையில்
அந்தத் தமிழ் அன்னையின் - முகத்தினில்
வாய்விட்டுச் சொல்லுகையில்
அந்தத் தமிழ் அன்னையின் - முகத்தினில்
அன்பு பெருகியதை
எந்த வகை உரைப்பேன்! கேட்டபின்பும்
இன்னும் சொல் என்றுரைத்தார்!
கிட்ட நெருங்கிஎனைப் - பிள்ளாய் என்று
கெஞ்சி நறுந்தேனைச்
சொட்டு வதைப்போலே - வாய் திறந்து
சொல்லொரு பாடல் என்றார்.
கட்டிக்கரும்பான - இசைத்தமிழ்
காதினிற் கேட்டவுடன்
எட்டுவகைச் செல்வமும் - தாம்பெற்றார்
என்னைச் சுமந்து பெற்றார்!
மேசை விளக்கேற்ற - நாற்காலி
மீதில் அமர்ந்தே நான்
ஆசைத் தமிழ்படித்தேன் - என்னருமை
அம்மா அருகில் வந்தார்
மீசைத் தமிழ்மன்னர் - தம்பகையை
வென்ற வரலாற்றை
ஓசையுடன் படித்தேன் - அன்னைமகிழ்
வுற்றதை என்ன சொல்வேன்!
செந்தமிழ் நாட்டினிலே - வாழ்கின்ற
சேயிழை யார்எவரும்
வந்த விருந்தோம்பும் - வழக்கத்தை
வாய்விட்டுச் சொல்லுக்கையில்
அந்தத் தமிழ் அன்னையின் - முகத்தினில்
வாய்விட்டுச் சொல்லுகையில்
அந்தத் தமிழ் அன்னையின் - முகத்தினில்
அன்பு பெருகியதை
எந்த வகை உரைப்பேன்! கேட்டபின்பும்
இன்னும் சொல் என்றுரைத்தார்!
கிட்ட நெருங்கிஎனைப் - பிள்ளாய் என்று
கெஞ்சி நறுந்தேனைச்
சொட்டு வதைப்போலே - வாய் திறந்து
சொல்லொரு பாடல் என்றார்.
கட்டிக்கரும்பான - இசைத்தமிழ்
காதினிற் கேட்டவுடன்
எட்டுவகைச் செல்வமும் - தாம்பெற்றார்
என்னைச் சுமந்து பெற்றார்!

