09-18-2005, 12:16 AM
[size=18] பூட்டிய இருப்புக் கூட்டின் கதவு
திறக்கப்பட்டது! சிறுத்தையே வெளியில்வா!
எலிஎன உன்னை இகழ்ந்தவர் நடுங்கப்
புலிஎனச் செயல்செய்யப் புறப்படு வெளியில்!
நம்பினை பகலினை நள்ளிருள் என்றே
சிம்புட் பறவையே! சிறகைவிரி,எழு!
சிங்க இளஞனே திருப்பு முகம்! திறவிழி!
இங்குன் நாட்டுக் கிழிகழுதை ஆட்ச்சியா?
கைவிரித் துவந்த கயவர் நம்மிடைப்
பெய்வி ரித்து நம் புலன்கள் மறைத்துத்
தமிழுக்கு விலங்கிட்டுத் தாயகம் பற்றி
நமக்குள உரிமை தமக்கென் பாரெனில்,
வழிவழி வந்த உன் மறத்தனம் எங்கே?
மொழிப் பற் றெங்கே? விழிப்புற் றெழுக!
இகழ்ச்சி நேர்ந்தால் இறப்போம் என்றும்
புகழ்ச்சி யேஎம் பூணாம் என்றும்
வையம் ஆண்ட வண்டமிழ் மரபே!
கையிருப்பைக் காட்ட எழுந்திரு!
பொன்மொ ழிக்கு நீ புதுமை ஏற்றுவாய்!
மக்களை ஒன்றுசேர்! வாழ்வை யுயர்த்துக!
கைக்குள் திறமை காட்ட எழுந்திரு!
வாழ்க இழஞனே, வாழ் நின்கூட்டம்!
வாழ்க திராவிட நாடு!
வாழ்க நின்வையத்து மாப்புகழ் நன்றே!
திறக்கப்பட்டது! சிறுத்தையே வெளியில்வா!
எலிஎன உன்னை இகழ்ந்தவர் நடுங்கப்
புலிஎனச் செயல்செய்யப் புறப்படு வெளியில்!
நம்பினை பகலினை நள்ளிருள் என்றே
சிம்புட் பறவையே! சிறகைவிரி,எழு!
சிங்க இளஞனே திருப்பு முகம்! திறவிழி!
இங்குன் நாட்டுக் கிழிகழுதை ஆட்ச்சியா?
கைவிரித் துவந்த கயவர் நம்மிடைப்
பெய்வி ரித்து நம் புலன்கள் மறைத்துத்
தமிழுக்கு விலங்கிட்டுத் தாயகம் பற்றி
நமக்குள உரிமை தமக்கென் பாரெனில்,
வழிவழி வந்த உன் மறத்தனம் எங்கே?
மொழிப் பற் றெங்கே? விழிப்புற் றெழுக!
இகழ்ச்சி நேர்ந்தால் இறப்போம் என்றும்
புகழ்ச்சி யேஎம் பூணாம் என்றும்
வையம் ஆண்ட வண்டமிழ் மரபே!
கையிருப்பைக் காட்ட எழுந்திரு!
பொன்மொ ழிக்கு நீ புதுமை ஏற்றுவாய்!
மக்களை ஒன்றுசேர்! வாழ்வை யுயர்த்துக!
கைக்குள் திறமை காட்ட எழுந்திரு!
வாழ்க இழஞனே, வாழ் நின்கூட்டம்!
வாழ்க திராவிட நாடு!
வாழ்க நின்வையத்து மாப்புகழ் நன்றே!

