11-07-2003, 04:17 PM
யாழ்/yarl Wrote:இதிலிருந்து யோசிக்கவேண்டிய விடயம்.தமிழர்கள் காலனித்துவ ஆட்சி வரமுதல் கதிரை மேசை பாவித்தார்களா என....மன்னர்கள் எல்லோரும் கதிரை மேசை இல்லாமலா ஆட்சி செய்தார்கள்.. சிம்மாசனத்தில் இருந்தல்லவா ஆண்டார்கள். சிம்மாசனம் = சிருங்கார ஆசனம். இங்கே ஆசனம் என்பதுதானே கதிரையைக் குறிக்கிறது. நாற்காலி பொதுவான சொல்தானே. அது எவ்வாறு கதிரையைமட்டும் குறிக்கும்.. மேசைக்கு ஏன் பொருந்தாது.. கோர்க்காலி என்றொரு தளபாடம் வீடுகளில் இருந்ததை ஞாபகப் படுத்தலாம். கோர்த்த கால்கள் கோர்க்காலி. கோக்காலி என்றும் சொல்லுவார்கள். மேசை வடிவில் பெரிதாக இருக்கும். நெல் மூட்டைகள்.. வேறு பல பொருட்களை வைக்கப் பயன்படுத்துவார்கள். இவ்வாறு மேசையையும் குறிக்க சொற்கள் இருக்கலாம். எமது தேடல்கள் போதவில்லை.. அல்லது ஆர்வம் போதவில்லை.
அப்படி ஒன்று இல்லபாதபடியால்தான் அவர்கள் சொற்களை அப்படியே எடுத்துக்கொண்டார்கள்???
தேடல்கள் போதாது என்பதற்கு ஒரு உதாரணம்.. lighthause என்பதை நேரடியாக மொழிபெயர்த்து 'வெளிச்சவீடு' என்கிறார்கள். ஆனால் கலத்துக்கு கரைகாட்டும் விளக்கு என்ற அர்த்தத்தில் 'கலங்கரைவிளக்கு' என்ற சொல் ஏற்கெனவே உள்ளதே. இவ்வாறு தேடல்கள் இல்லாவிட்டால் இரவல்கள்தான் உள்நுழையும்.
.

