09-16-2005, 05:52 PM
ANUMANTHAN Wrote:நாரதரே! நான் எந்தவித புள்ளி அடிப்படையிலும் சொல்லவில்லை புள்ளிவிபரம் சேகரிக்க நேரமுமில்லைஇ எமது பகுதியில் தற்போது அங்குள்ளவர்களில் 70 வயதுக்கு மேற்பட்டோரை காண்பது மிக மிக குறைவு எந்த பெரியவர்களை விசாரித்தாலும் அவர்கள் இறந்துவிட்டதாகவே சொல்கிறார்கள். சுனாமிக்கு நாலு நாட்கள் முன்பு ஊருக்குபோனபோது ஏற்பட்ட ஏமாற்றம்தான் எனது அனுபவம் உங்கள் புள்ளிவிபரம் எனக்குதெரியாது!
நோய் சம்மந்தமாக.. நாம் புலம்பெயர்ந்து இங்கும் எங்களுக்கு வருத்தம் வருகிறது அங்குபோனாலும் வருத்தம் வருகிறதே? அப்படியாயின் புலம்பெயர்ந்த எங்களுக்கு எதுவித நோய்எதிர்ப்பு சக்தியுமில்லாமல் போய்விட்டதென்றுகொள்ளலாமா? நான் எழுதியதுஇ சில பழக்கவழக்கங்கள் எம்மை சுத்தமாக வைத்திருந்தால் நோய்கள்அணுகாமல் இருக்கும் என்ற எண்ணத்தில்தான் என்பதே! அதே எனது கருத்து! இதில் சமய சாரம் புூசப்படுவதுதற்கு காரணம் வேறு! உதாரணம் சிறு பிள்ளைகளுக்கு சோறு ஊட்டும்போது பொக்காண்டி பிடிக்கும் என்று சொல்லி பிள்ளையை சாப்பிட வைத்துவிடுவார்கள்.அப்படி சாப்பிட்ட பிள்ளைக்கு இப்போ பொக்காண்டி என்றால் என்னவென்று விளங்கும். முன்னையகாலத்தில் மருந்துகள் இல்லாத நேரத்தில் இவற்றை கடைப்பிடிக்கவேண்டிய கட்டாயத்திற்காக காட்டப்பட்ட பொக்காண்டிதான் சமயசாரம். பொருளாதாரத்தில் அடிமட்டத்தில் இருந்கொண்டு தொற்றுநோய்கள் வந்தால் காப்பாற்ற உண்டாகும் சிரமங்களை தவிர்க்க முன்னோர் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார்கள். இவ்வளவு முன்னேற்றமடைந்தபோதும,; ஏதாவதொரு நல்ல விடயத்தை சொன்னால் யார் இலகுவில் ஏற்றக்கொள்கின்றார்கள்? இப்படியான கஷ்டங்களை போக்கவே எல்லா மதங்களிலும் சில பழக்க வழக்கங்கள் உருவாகின! அதையே இன்றும் கடைப்பிடிக்கின்றார்கள். எல்லா பழக்கவழக்கங்களும் சுத்தமாக இருக்கவும் இயன்றளவு நோய்வராது தடுக்க முனைகின்றனவேயொழய 100வீதம் நோய்வராதுஎன்றுகூறவில்லை! எனவே முற்றுமுழுதாக நோயற்ற வாழ்வு எப்படி வாழலாம் எனமுன்னோக்கி பார்ப்பதுதான் தற்போதய தேவை! அதைவிடுத்து மருந்து இருக்குது நோய்வந்தால் மருந்து சாப்பிடபோய்விடும் (வரும் போது காப்போம்) என்றில்லாமல் விஞ்ஞான வளர்ச்சிற்கேற்ப நாங்களும் வளர முயற்சி செய்யுங்கள். தேவையற்று சமயம் சாரம் என்று ஏன் கவலைப்படுகின்றீர்கள். இன்றும் பிள்ளைகளுக்கு சோறூட்ட பொக்காண்டி சொல்லவில்லையா? சமய சாரம்புூசாதீர்கள் என்று சொல்லிக்கொண்டு "நாரதர் கலகம் நன்மையில் முடியும்" என சமயம் சார்ந்த பெயரில் ஏன் இன்னும்?
பொதுவாக சில சொற்பதங்கள்!
சமயம் - (இதற்குஒருகருத்து) சந்தர்ப்பம்-காலம் (முன்பு)
மார்க்கம் - வழி (அவர்களுக்கு தெரிந்தவழி)
ஆனால் மதம்மட்டும் பிடிக்காதவரை சரி.
இவை யாரையும் நேரடியாகவோ மறைமுகமாகவோ பாதித்தால் மன்னிக்கவும்.
நீங்கள் ஒரு சிலர் இறந்ததை வைத்து ஒரு அனுமானத்திற்கு வந்துள்ளீர்கள் என்பதைச் சுட்டிக்காட்டவே புள்ளிவிபரங்களைப் பற்றிச்சொன்னேன். நாங்கள் ஒரு பொதுவான வியசத்தைப் பற்றிக் கதைக்கும் போது பரந்துபட்ட தரவுகளின் அடிப் படயில் கதைத்தாலே உண்மயான நிலவரம் தெரியும்.
அடுத்தது எனது பெயர் ,இதில் வேறு ஆராச்சியா?எதோ உறுப்பினர் ஆன போது தலைக்குள் வந்த பெயர்,இதப் பெரிய ஆராச்சீ செய்து வைக்கவில்லை,ஆகவே இதற்கும் நான் சொல்லும் கருத்துக்களுக்கும் சம்பந்தம் செய்ய வேண்டாம்.கருத்துக்களுக்கு பதில் கருத்தை முன் வைய்யுங்கள்,பேர் பற்றிய ஆராய்வு தேவயற்றது.
மருத்துவ ரீதியாகச் சிந்தித்து செயற்படுவதே சுகாதாரத்திற்குச் சிறந்தது.மூட நம்பிக்கைகளின் அடிப் படயான கருத்துக்களே தேவயற்றவை என்று கூறினேன்.அடிப் படைச் சுகாதாரம் நோய்கள் வராமல் தடுக்கும்.
மேலே தொற்று நீக்கி சம்பந்தமாகச் சொல்லப்பட்டவை சமய சாரமாக இருந்ததாலேயே அவ்வாறு கூறினேன்.இதில் என்ன தவறு என்று கூறுகிறீர்கள்.

