11-06-2003, 07:41 PM
வற்றுமோ தமிழ்மொழி வாழி!
ஈழத்தை சூழ்ந்ததுவோ ஆழி -அதை
இயக்குவதோ ஒரு நீலி
பாரதத்தில் சகுனி ஒரு மூளி- இதை
படியாதவர் மூளை காலி!
மணாளனை மதிக்காத மங்கைக்கு ஏன் தாலி?-அதை
மாற்றப் போதாதோ சில நாழி
காதலர் வாழ்விலென்ன கேலி-அவர்
கண்ணீரை அள்ளுமோ பல வாளி !
எனக்குப் புரியாத சங்கீதம் ராகமாலி
என்றும் புரிகின்ற இங்கிதம் மாதாவின் தூளி-மச்சு
வீட்டு வாழ்வு வெறும்போலி -என்றும்
குச்சு வீடே வாழும் பல ஊழி!
வழக்கிலுண்டோ மொழி பாளி?.எனறும்
வற்றுமோ தமிழ்மொழி வாழி!
வீசுங் காற்றுக்கென்ன வேலி-நான்
வியம்பும் கவிதைக்கு உண்டோ கூலி?
-சுதந்திரன்-
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

