![]() |
|
வற்றுமோ தமிழ்மொழி வாழி! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: வற்றுமோ தமிழ்மொழி வாழி! (/showthread.php?tid=7853) |
வற்றுமோ தமிழ்மொழி வாழ - suppiah suthanthararajah - 11-06-2003 வற்றுமோ தமிழ்மொழி வாழி! ஈழத்தை சூழ்ந்ததுவோ ஆழி -அதை இயக்குவதோ ஒரு நீலி பாரதத்தில் சகுனி ஒரு மூளி- இதை படியாதவர் மூளை காலி! மணாளனை மதிக்காத மங்கைக்கு ஏன் தாலி?-அதை மாற்றப் போதாதோ சில நாழி காதலர் வாழ்விலென்ன கேலி-அவர் கண்ணீரை அள்ளுமோ பல வாளி ! எனக்குப் புரியாத சங்கீதம் ராகமாலி என்றும் புரிகின்ற இங்கிதம் மாதாவின் தூளி-மச்சு வீட்டு வாழ்வு வெறும்போலி -என்றும் குச்சு வீடே வாழும் பல ஊழி! வழக்கிலுண்டோ மொழி பாளி?.எனறும் வற்றுமோ தமிழ்மொழி வாழி! வீசுங் காற்றுக்கென்ன வேலி-நான் வியம்பும் கவிதைக்கு உண்டோ கூலி? -சுதந்திரன்- <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - sOliyAn - 11-06-2003 எழுதுக எழுதுக தொடர்ந்து ஐயா எழுதியது உங்கள் கையா எல்லாம் அனுபவம் மெய்யா அல்லது சிலது பொய்யா? - sOliyAn - 11-06-2003 மிச்சத்துக்கு T. ராஜேந்தரைக் கூட்டிக்கொண்டு வாறன்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- suppiah suthanthararajah - 11-07-2003 மிச்சத்துக்கு T. ராஜேந்தரைக் கூட்டிக்கொண்டு வாறன்.. _________________ பழையன அறிந்து புதியன புகுவோம். - suppiah suthanthararajah - 11-07-2003 மிச்சத்துக்கு ஜி. ராஜேந்தரைக் கூட்டிக்கொண்டு வாறன்.. _________________ பழையன அறிந்து புதியன புகுவோம். சீர்,தளை சேர்த்து,எதுகை ,மோனை கலந்து,சிறிது சிரமப்பட்டால் ஒரு மரபுக்கவிதை எழுதலாம்..இதுக்கெல்லாம் ராஜேந்தரை கூப்பிடாதேங்கோ! - sOliyAn - 11-08-2003 நன்றி ஐயா! - suppiah suthanthararajah - 11-08-2003 பழயன களைந்து என்று சொல்லாமல் "அறிந்து" என்று சொல்லுறியள்..நல்ல விசயம் - இளைஞன் - 11-12-2003 வணக்கம் ஐயா... உங்கள் கவிதை வாசிக்க நன்றாக இருக்கிறது. தொடர்க. களத்தில் நிறைய எழுதுக. |