09-14-2005, 04:19 AM
5) காணல்
வானும் கனல்சொரியும்! - தரை
மண்ணும் கனல் எழுப்பும்!
கானலில் நான் நடந்தேன் - நிழல்
காணும் விருப்பத்தினால்!
ஊனுடல் அன்றிமற்றோர் - நிழல்
உயிருக்கில்லை அங்கே!
ஆன திசைமுழுவதும் - தணல்
அள்ளும் பெரு வெளியாம்!
ஒட்டும் பொடிதாங்கா - தெடுத்
தூன்றும் அடியும்சுடும்
விட்டுப் புறங்குதித்தால் - அங்கும்
வேகும் ! உளம் துடிக்கும்
சொட்டுப் புணல் அறியேன்! - ஒன்று
சொல்லவும் யாருமில்லை!
கட்டுடல் செந்தணலில் கட்டிக்
கந்தக மாய் எரியும்!
முளைத்த கள்ளியினைக் - கணல்
மொய்த்துக் கரியாக்கி
விளைத்த சாம்பலைப்போய் - இனி
மேலும் உருக்கிடவே
கொளுத்தி டும்காணல்! - உயிர்
கொன்று தின்னும் காணல்!
களைத்த மேனிகண்டும் - புறங்
கழுத்த றுக்கும்வெளி!
திடுக்கென விழித்தேன் - நல்ல
சீதாளப் புஞ்சோலை!
நெடும் பகற்கனவில் - கண்ட
நெஞ்சுநுத் தும்கானல்
தொடர்ந்த தென் நினைவில்! - குளிர்
சோலையும் ஒடையுமே
சுடவ ரும்கனலோ - என்று
தோன்றிய துண்மையிலே.
வானும் கனல்சொரியும்! - தரை
மண்ணும் கனல் எழுப்பும்!
கானலில் நான் நடந்தேன் - நிழல்
காணும் விருப்பத்தினால்!
ஊனுடல் அன்றிமற்றோர் - நிழல்
உயிருக்கில்லை அங்கே!
ஆன திசைமுழுவதும் - தணல்
அள்ளும் பெரு வெளியாம்!
ஒட்டும் பொடிதாங்கா - தெடுத்
தூன்றும் அடியும்சுடும்
விட்டுப் புறங்குதித்தால் - அங்கும்
வேகும் ! உளம் துடிக்கும்
சொட்டுப் புணல் அறியேன்! - ஒன்று
சொல்லவும் யாருமில்லை!
கட்டுடல் செந்தணலில் கட்டிக்
கந்தக மாய் எரியும்!
முளைத்த கள்ளியினைக் - கணல்
மொய்த்துக் கரியாக்கி
விளைத்த சாம்பலைப்போய் - இனி
மேலும் உருக்கிடவே
கொளுத்தி டும்காணல்! - உயிர்
கொன்று தின்னும் காணல்!
களைத்த மேனிகண்டும் - புறங்
கழுத்த றுக்கும்வெளி!
திடுக்கென விழித்தேன் - நல்ல
சீதாளப் புஞ்சோலை!
நெடும் பகற்கனவில் - கண்ட
நெஞ்சுநுத் தும்கானல்
தொடர்ந்த தென் நினைவில்! - குளிர்
சோலையும் ஒடையுமே
சுடவ ரும்கனலோ - என்று
தோன்றிய துண்மையிலே.

