09-14-2005, 03:06 AM
4) காடு (காவடிச் சிந்து மெட்டு)
முட்புதர்கள் மொய்த்ததரை எங்கும்! - எதிர்
முட்டுகருங் கற்களும் நெருங்கும் - மக்கள்
இட்டடி எடுத்தெடுத்து வைக்கையிலே
கால்களில்தடுங்கும் - உள்
நடுங்கும்.
கிட்டிமர வேர்கள் பல கூடும் - அதன்
கீழிருந்து பாம்புவிரைந்தோடும் - மர
மட்டையசை வால்புலியைத்
தேடும் - பின்
வாடும்.
நீள்கிளைகள் ஆல்விழுதி னோடு - கொடி
நெய்துவைத்த நற்சிலந்திக் கூடு - கூர்
வாளெயிற்று வேங்கையெல்லாம்
வால்சுழற்றிப் பாயவருங்
காடு - பள்ளம்!
மேடு!
கேளோடும் கிளம்பிவரும் பன்றி - நிலம்
கீண்டுகிழங் கேஎடுத்த தன்றி - மிகு
தூளி படத் தாவுகையில்
ஊளையிடும் குள்ள நரி
குன்றில் - புகும்
ஒன்றி.
வானிடை ஒர் வானடர்ந்த வாறு - பெரு
வண்கிளை மரங்கள் என்ன வீறு! நல்ல
தேனடை சொரிந்ததுவும்
தென்னைமரம் ஊற்றியதும்
ஆறு - இன்பச்
சாறு!
கானிடைப் பெரும்பறவை நோக்கும் - அது
காலிடையே காலிகளைத் தூக்கும் - மற்றும்
ஆனினம் சுமந்தமடி
ஆறெனவே பால்சுந்து
தீர்க்கும் - அடை
ஆக்கும்
முட்புதர்கள் மொய்த்ததரை எங்கும்! - எதிர்
முட்டுகருங் கற்களும் நெருங்கும் - மக்கள்
இட்டடி எடுத்தெடுத்து வைக்கையிலே
கால்களில்தடுங்கும் - உள்
நடுங்கும்.
கிட்டிமர வேர்கள் பல கூடும் - அதன்
கீழிருந்து பாம்புவிரைந்தோடும் - மர
மட்டையசை வால்புலியைத்
தேடும் - பின்
வாடும்.
நீள்கிளைகள் ஆல்விழுதி னோடு - கொடி
நெய்துவைத்த நற்சிலந்திக் கூடு - கூர்
வாளெயிற்று வேங்கையெல்லாம்
வால்சுழற்றிப் பாயவருங்
காடு - பள்ளம்!
மேடு!
கேளோடும் கிளம்பிவரும் பன்றி - நிலம்
கீண்டுகிழங் கேஎடுத்த தன்றி - மிகு
தூளி படத் தாவுகையில்
ஊளையிடும் குள்ள நரி
குன்றில் - புகும்
ஒன்றி.
வானிடை ஒர் வானடர்ந்த வாறு - பெரு
வண்கிளை மரங்கள் என்ன வீறு! நல்ல
தேனடை சொரிந்ததுவும்
தென்னைமரம் ஊற்றியதும்
ஆறு - இன்பச்
சாறு!
கானிடைப் பெரும்பறவை நோக்கும் - அது
காலிடையே காலிகளைத் தூக்கும் - மற்றும்
ஆனினம் சுமந்தமடி
ஆறெனவே பால்சுந்து
தீர்க்கும் - அடை
ஆக்கும்

