09-12-2005, 11:07 AM
<img src='http://www.wsws.org/articles/2000/feb2000/vann-f29.jpg' border='0' alt='user posted image'>
<span style='font-size:22pt;line-height:100%'><b>புற ஹந்த களுவற (பௌர்ணமி இரவு)
Death on a Full Moon Day
</b>
இத் திரைப்படத்தின் ஆங்கிலத் தலைப்பை விட
சிங்களத் தலைப்பே இத் திரைப்படத்தின்
தன்மையை வெளிப்படுத்துகிறது.
பௌர்ணமி தினம் என்பது இரவை பகலாக்கும் ஒரு புனித நாளாகவே பௌத்தர்கள் கருதுகிறார்கள்.
இந்த ஒளிக்குள் புலப்படாத இருளையும்
புனிதம் (<i>புனிதப் போர்</i>) என்ற பேரால் நடை பெறும்
அநியாயத்தையும் (<i>அநீதி போர்</i>) பாமர மக்களுக்கு எடுத்துச் சொல்கிறது இத் திரைப்படம்.
இத் திரைப்படத்தின் சாயலை சிங்கள மொழி மூலமாக நுகர்வு செய்ய முடிந்தால்
ஆங்கிலத் தலைப்பை விட வெகுவாக உட் புகுந்து
அதன் தாக்கத்தை நுகரலாம்.
கண் தெரியாத வன்னிகாமி என்ற முதியவரது
வேலையற்ற மகன் , கிராமத்தில் விவசாயம் செய்வதற்கு கூட முடியாத வறுமை காரணமாக
ஒரு தொழிலாக இராணுவத்துக்கு செல்கிறான்.
அவனது குறிக்கோள்
ஒரு சிறு வீட்டைக் கட்டி
கண் தெரியாத தன் தந்தையை பராமரிக்க வேண்டும்.
தனது சகோதரிகளை கரை சேர்க்க வேண்டுமென்ற அவாவே தவிர
யுத்த களத்தில் அப்பாவிகளைக் கொல்வதல்ல.
ஆனால் அவன் யுத்த களத்துக்கு செல்ல நிர்ப்பந்திக்கப்படுகிறான்.
இவை தணிக்கைக்குள் அகப்பட்டு விட்டது..................
இருப்பினும் இடையிடையே மெதுவாக அதை சில வார்த்தைகளாலும் காட்சிகளாலும் இயக்குனர் பார்வையாளர்களுக்கு உணர்த்தியிருக்கிறார்.
இந்த யுத்தம் அநியாயமானது..................
மகன் கூட விரைவில் வந்து விடப் போவதாக வரும் மடல் கூட
யுத்தத்தை விட்டு வரப் போவதாகவே சொல்ல வருகிறது.
அதுவே தந்தையின் பழைய நினைவாக வருகிறது.
எனவேதான் தந்தையான வன்னிகாமி மகன் இறக்கவில்லை என்பதில் விடாப்பிடியாக இருக்கிறார்.
மகன் இறந்ததற்காக அரசினால் வழங்கப்படும் பணத்தை வாங்குவதற்கு மறுக்கும் ; அதை எதிர்க்கும் காட்சி கிராமத்து மனிதனின் உண்மையான உள்ளத்தையும். பாவப்பட்ட பணத்தை தொட நான் விரும்பவில்லை எனக் கொடுக்கும் சாட்டை அடிகளும் ஒவ்வொரு மனிதனையும் சிந்திக்க வைக்கிறது.
கொட்டும் மழையில் நனையும் வீட்டில் படும் அவஸ்தை.........
மகள்களின் எதிர்காலம்.................
கடன் தொல்லை...................
இடை நடுவே அரை குறையாக கட்டப்பட்டு நிறுத்தப்பட்டுள்ள வீடு.............
அத்தனைக்கும் நடுவே பொய்யுரைத்து கொடுப்பனவு பணத்தை வாங்குமாறு வரும் நிர்ப்பந்தங்கள்..........................
இத்தனையும் வன்னிகாமி போன்ற அப்பாவிகளுக்கு தேவையில்லை....................
அன்பு-உண்மை-அகிம்சை-அமைதி இவைதான் தேவை.
இதைச் சொல்கிறது வன்னிகாமியின் பாத்திரம்.
தனது மகன் இறந்திருப்பான் என்பதை நம்ப முடியாத அப்புகாமி
அந்த தள்ளாடும் வயதில் போய் புதைகுழியைத் தோண்டும் போது
கூடும் மக்கள் இவருக்கு என்ன பைத்தியமா என வார்த்தைகளைக் கொட்டி அவமதிக்கும் போதும் ,
கிராம சேவகராகக் காட்டப்பட்டிருக்கும் (<i>அரசாக கருத்தில் கொள்ளவும்</i>) ஒருவர் அதைத் தடை செய்ய முயலும் போதும்
வன்னிகாமியின் பைத்தியகாரத்தனத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க சிலர் முனைகிறார்கள்.
ஆனால் புதைக்கப்பட்ட சவப் பெட்டிக்குள்
இருப்பது தனது மகனின் உடலல்ல...............
அது வாழை மரக் குத்தியும் கரும், கல்லொன்றும்தான்..................
இப்படித்தான் இந்த அரசு அனைவரையும் ஏய்க்கிறது.
நாம் அப்பாவிகள்.........................
இவர்கள் பொய் பேசுகிறார்கள்....................
இவர்களை நம்பாதீர்கள்...................
இவை அனைத்தும் பொய்..................
நாம் (நான்) குருடராய் இருக்கிறோம்............
கண் திறவுங்கள் என்று கூறிவிட்டு
ஆற்றங் கரைக்கு செல்லும் வன்னிகாமி
தண்ணீரை குடத்துள் நிரப்புகிறார்.
தூரத்தே தெரிந்தவர்கள் உதவட்டுமா என்று கேட்கிறார்கள்.
வேண்டாம் எனது கண்தான் குருடே தவிர
உடல் இன்னும் ஈடு கொடுக்கிறது எனப் பதில் கூறி விட்டு,
வானத்தை அன்னார்ந்து பார்க்கிறார்.
மழை வரப் போகிறது என்கிறார்.
நிற்பவர்கள் அப்படி ஒன்றும் மழை வராது என்கின்றனர்.
வன்னிகாமி மெதுவாக சிரிக்கிறார்.............
மழை வரும்..................(அமைதி ஒன்று ஒருநாள் வரும்)
மழை தூறலாக விழத் தொடங்குகிறது......................
அவர் நனைந்து கொண்டே வானத்தை அன்னாந்து பார்க்கிறார்.
குருடனாய் இருப்பவனுக்கு புரிவது கூட
விழித்துக் கொண்டிருப்பவர்களுக்கு புரியவில்லையே
என்ற கேள்வியை முன் வைத்து பௌர்ணமி இரவு சிந்தனைத் துளிகளைத் தூவுகிறது....................</span>
- AJeevan
<img src='http://img300.imageshack.us/img300/3448/ajeevanpurahandakaluwara5yq.jpg' border='0' alt='user posted image'>
<span style='font-size:22pt;line-height:100%'><b>புற ஹந்த களுவற (பௌர்ணமி இரவு)
Death on a Full Moon Day
</b>
இத் திரைப்படத்தின் ஆங்கிலத் தலைப்பை விட
சிங்களத் தலைப்பே இத் திரைப்படத்தின்
தன்மையை வெளிப்படுத்துகிறது.
பௌர்ணமி தினம் என்பது இரவை பகலாக்கும் ஒரு புனித நாளாகவே பௌத்தர்கள் கருதுகிறார்கள்.
இந்த ஒளிக்குள் புலப்படாத இருளையும்
புனிதம் (<i>புனிதப் போர்</i>) என்ற பேரால் நடை பெறும்
அநியாயத்தையும் (<i>அநீதி போர்</i>) பாமர மக்களுக்கு எடுத்துச் சொல்கிறது இத் திரைப்படம்.
இத் திரைப்படத்தின் சாயலை சிங்கள மொழி மூலமாக நுகர்வு செய்ய முடிந்தால்
ஆங்கிலத் தலைப்பை விட வெகுவாக உட் புகுந்து
அதன் தாக்கத்தை நுகரலாம்.
கண் தெரியாத வன்னிகாமி என்ற முதியவரது
வேலையற்ற மகன் , கிராமத்தில் விவசாயம் செய்வதற்கு கூட முடியாத வறுமை காரணமாக
ஒரு தொழிலாக இராணுவத்துக்கு செல்கிறான்.
அவனது குறிக்கோள்
ஒரு சிறு வீட்டைக் கட்டி
கண் தெரியாத தன் தந்தையை பராமரிக்க வேண்டும்.
தனது சகோதரிகளை கரை சேர்க்க வேண்டுமென்ற அவாவே தவிர
யுத்த களத்தில் அப்பாவிகளைக் கொல்வதல்ல.
ஆனால் அவன் யுத்த களத்துக்கு செல்ல நிர்ப்பந்திக்கப்படுகிறான்.
இவை தணிக்கைக்குள் அகப்பட்டு விட்டது..................
இருப்பினும் இடையிடையே மெதுவாக அதை சில வார்த்தைகளாலும் காட்சிகளாலும் இயக்குனர் பார்வையாளர்களுக்கு உணர்த்தியிருக்கிறார்.
இந்த யுத்தம் அநியாயமானது..................
மகன் கூட விரைவில் வந்து விடப் போவதாக வரும் மடல் கூட
யுத்தத்தை விட்டு வரப் போவதாகவே சொல்ல வருகிறது.
அதுவே தந்தையின் பழைய நினைவாக வருகிறது.
எனவேதான் தந்தையான வன்னிகாமி மகன் இறக்கவில்லை என்பதில் விடாப்பிடியாக இருக்கிறார்.
மகன் இறந்ததற்காக அரசினால் வழங்கப்படும் பணத்தை வாங்குவதற்கு மறுக்கும் ; அதை எதிர்க்கும் காட்சி கிராமத்து மனிதனின் உண்மையான உள்ளத்தையும். பாவப்பட்ட பணத்தை தொட நான் விரும்பவில்லை எனக் கொடுக்கும் சாட்டை அடிகளும் ஒவ்வொரு மனிதனையும் சிந்திக்க வைக்கிறது.
கொட்டும் மழையில் நனையும் வீட்டில் படும் அவஸ்தை.........
மகள்களின் எதிர்காலம்.................
கடன் தொல்லை...................
இடை நடுவே அரை குறையாக கட்டப்பட்டு நிறுத்தப்பட்டுள்ள வீடு.............
அத்தனைக்கும் நடுவே பொய்யுரைத்து கொடுப்பனவு பணத்தை வாங்குமாறு வரும் நிர்ப்பந்தங்கள்..........................
இத்தனையும் வன்னிகாமி போன்ற அப்பாவிகளுக்கு தேவையில்லை....................
அன்பு-உண்மை-அகிம்சை-அமைதி இவைதான் தேவை.
இதைச் சொல்கிறது வன்னிகாமியின் பாத்திரம்.
தனது மகன் இறந்திருப்பான் என்பதை நம்ப முடியாத அப்புகாமி
அந்த தள்ளாடும் வயதில் போய் புதைகுழியைத் தோண்டும் போது
கூடும் மக்கள் இவருக்கு என்ன பைத்தியமா என வார்த்தைகளைக் கொட்டி அவமதிக்கும் போதும் ,
கிராம சேவகராகக் காட்டப்பட்டிருக்கும் (<i>அரசாக கருத்தில் கொள்ளவும்</i>) ஒருவர் அதைத் தடை செய்ய முயலும் போதும்
வன்னிகாமியின் பைத்தியகாரத்தனத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க சிலர் முனைகிறார்கள்.
ஆனால் புதைக்கப்பட்ட சவப் பெட்டிக்குள்
இருப்பது தனது மகனின் உடலல்ல...............
அது வாழை மரக் குத்தியும் கரும், கல்லொன்றும்தான்..................
இப்படித்தான் இந்த அரசு அனைவரையும் ஏய்க்கிறது.
நாம் அப்பாவிகள்.........................
இவர்கள் பொய் பேசுகிறார்கள்....................
இவர்களை நம்பாதீர்கள்...................
இவை அனைத்தும் பொய்..................
நாம் (நான்) குருடராய் இருக்கிறோம்............
கண் திறவுங்கள் என்று கூறிவிட்டு
ஆற்றங் கரைக்கு செல்லும் வன்னிகாமி
தண்ணீரை குடத்துள் நிரப்புகிறார்.
தூரத்தே தெரிந்தவர்கள் உதவட்டுமா என்று கேட்கிறார்கள்.
வேண்டாம் எனது கண்தான் குருடே தவிர
உடல் இன்னும் ஈடு கொடுக்கிறது எனப் பதில் கூறி விட்டு,
வானத்தை அன்னார்ந்து பார்க்கிறார்.
மழை வரப் போகிறது என்கிறார்.
நிற்பவர்கள் அப்படி ஒன்றும் மழை வராது என்கின்றனர்.
வன்னிகாமி மெதுவாக சிரிக்கிறார்.............
மழை வரும்..................(அமைதி ஒன்று ஒருநாள் வரும்)
மழை தூறலாக விழத் தொடங்குகிறது......................
அவர் நனைந்து கொண்டே வானத்தை அன்னாந்து பார்க்கிறார்.
குருடனாய் இருப்பவனுக்கு புரிவது கூட
விழித்துக் கொண்டிருப்பவர்களுக்கு புரியவில்லையே
என்ற கேள்வியை முன் வைத்து பௌர்ணமி இரவு சிந்தனைத் துளிகளைத் தூவுகிறது....................</span>
- AJeevan
<img src='http://img300.imageshack.us/img300/3448/ajeevanpurahandakaluwara5yq.jpg' border='0' alt='user posted image'>

